Skip to main content

Posts

ஓவியர் ஜெயராஜ் – தமிழ் வாழ்க்கையின் மைக்கேல் ஆஞ்சலோ

தமிழ்நாட்டில் சில ஆயிரங்கள் கணக்கில் வாசகர்களிடம் புழங்கி, அதிகார, ஆட்சி செல்வாக்கு இல்லாத மணிக்கொடி, எழுத்து, கசடதபற சிறுபத்திரிகைகளும் அதில் வந்த படைப்புகளும் ஆவணமாக்கத்துக்கும் விரிவான ஆய்வுகளுக்கும் உள்ளாகியிருக்கின்றன. ஆனால், வெகுஜன அரசியலும் வெகுஜன சினிமாவும் வெகுஜனப் பத்திரிகைகளும் அன்றாட உணவாகவும் பேச்சாகவும் மூச்சாகவும் இருந்த ஒரு நூற்றாண்டு தமிழ் வாழ்க்கையில் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ஒரு சினிமா போஸ்டர் கூட ஆவணப்படுத்தப்படவில்லை. குமுதம், ஆனந்த விகடன் தொடங்கி சரோஜாதேவி வரை சென்ற நூற்றாண்டில் நம் தமிழ் சமூகம் நவீனமடைந்த வரலாற்றைக் காட்டும் வெகுஜன பத்திரிகை எழுத்து, சித்திரங்கள் ஆகியவற்றுக்கு பதிவே இல்லாமல் பெரும் மறதியின் புதைசேற்றில் உள்ளன. சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் ஆண்கள், தமிழ் பெண்கள், அணிந்த ஆடைகள், புழங்கிய வீடுகள், பயணித்த வாகனங்கள் ஆகியவற்றுக்கு நம்மிடம் இருக்கும் அரிதான ஆவணங்களில் ஒன்றான ஓவியர் ஜெயராஜின் சித்திரங்களும் அப்படித்தான் நமது மறதிக்குள் போய்விட்டன. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் 86 வயதில் மனைவி ரெஜினாவுடன் சென்னை சூளைமேட்டில் உள்ள வீட்டி

இருப்பின் சித்தார் – பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

கதவுகள், ஜன்னல்கள், கூரைகள் மௌனத்தின் சுமைதாளாமல் நொறுங்கிவிட்டன. வலியின் நீரோட்டம் வானிலிருந்து வழிகிறது. துயரம், பிரிவாற்றாமையால் நிரம்பி நிலவொளி கூறும் கதை நெடுஞ்சாலைகளின் புழுதியில் உழன்றுள்ளது . படுக்கையறைகளில் மங்கிய இருள். பலவீனமான சுருதியில் ஒலிக்கும் இருப்பின் சித்தார் மென்மையான தொனிகளில் இரங்கற்பாக்களைப் பாடுகிறது.

போர்க்களமான பெய்ரூட்டுக்கு ஒரு பாடல் - பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

பெய்ரூட், நம் உலகின் ஆபரணம் சொர்க்கத்தின் தோட்டமென   அலங்கரிக்கப்பட்டது   அந்தச் சிதறடிக்கப்பட்ட கண்ணாடிகள்   குழந்தைகளின் சிரிக்கும் கண்களாய் இருந்தன ஒருகாலத்தில்   இப்போது நட்சத்திரங்களால் சுடரூட்டப்பட்டிருக்கின்றன. இந்த நகரத்தின் இரவுகள் பிரகாசமானவை பொலிவுற்று ஒளிர்வது லெபனான். பெய்ரூட், நம் உலகின் ஆபரணம். ரத்தம்  அலங்கரித்த முகங்கள் அழகுக்கும் அப்பால் திகைப்பூட்டூபவை. அவர்களின் கம்பீர எழில் பெய்ரூட் நகரத்தின் பாதைகளில் ஒளியேற்றுகிறது   லெபனான் ஒளிபடைத்தது. பெய்ரூத் நம் உலகின் ஆபரணம். சாம்பலாக்கப்பட்ட இல்லம் சிதிலங்கள் ஒவ்வொன்றும் டேரிஸ் பேரரசின் கோட்டைகள்.   ஒவ்வொரு போர்வீரனும் அலக்சாண்டருக்கு பொறாமையை ஊட்டுபவன் ஒவ்வொரு மகளும் லைலாவைப் போன்றவள். படைக்கப்பட்ட காலத்திலிருந்து பெய்ரூட் நகரம் நீடிக்கிறது காலத்தின் அந்தத்திலும் பெய்ரூட் நிலைத்து நிற்கும்.       பெய்ரூட், லெபனானின் இதயம்   பெய்ரூட், நம் உலகின் ஆபரணம்   பெய்ரூட்,   அலங்கரிக்கப்பட்டது   சொர்க்கத்தின் தோட்டமென.   (1982-ம் ஆண்டு இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலுக்கும் ஆக்கிரமிப்புக்கும் உள்ளான பெய்ரூட் நகரம் பற்றி எழுதப்பட்ட கவி

தனிமையின் சிறைவைப்பு - பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

அத்துவானத்தில் ஒளியின் சிறு மினுமினுப்பு என் இதயம் அல்லலின் நகரம் கனவிலிருந்து விழித்தெழுந்தது தனிமையின்  காலி இல்லத்தில்  காலை விடிகிறது இன்னும் கனவிலிருந்து விழிக்காத எனது கண்கள் பதற்றத்துக்குள்ளாகிறது   என் இதயத்து மதுக்கோப்பையில் இறந்த காலத்தின் கசப்பையும் நிகழின் நஞ்சையும் கலந்து என்னுடைய காலை மதுவை ஊற்றுகிறேன்   அத்துவானத்தில் ஒளியின் சிறு மினுமினுப்பு கண்ணுக்கு எட்டாத தொலைவில் ஏதோ ஒரு காலையை ஒரு பாடலை ஒரு நறுமணத்தை நம்பவே இயலாத ஒரு அழகிய வதனத்தை முன்னறிவித்துவிட்டு அழுத்தம் நிறைந்த நம்பிக்கையைச் சுமந்தபடி வந்தது தெரியாமல் மறைந்துபோனது பார்வையாளர் தினமான இன்று வருகைதரும் ஏக்கங்களுக்கு முன்னால் இறந்தகாலத்தின் கசப்பைக் கலந்து நிகழின் நஞ்சைச் சேர்த்த மதுக்கோப்பையை உயர்த்துகிறேன்   எனது தாயகம் அதற்கும் அப்பாலுள்ள சக குடிகாரர்களே உங்களுக்கு சலாம் லோகாதி லோகங்களின் அழகுக்கு சலாம் அன்புக்குரியவளின் நயமான அதரத்துக்கும் கன்னத்துக்கும் சலாம்.   (லாகூர் கோட்டை சிறையிலிருந்து எழுதியது)    

தனிமைவாசம் – பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

துயருறு இதயமே?  யாராவது வந்தார்களா மீண்டும் இல்லை, யாரும் வரவில்லை ஒரு வழிப்போக்கர் எங்கிருந்தோ வந்திருக்கலாம் அவரும் போய்விடுவார் இரவு கடந்துவிட்டது நட்சத்திரத் தூசிகள் விலகத் தொடங்குகின்றன கனவுபடர்ந்த மாளிகை விளக்குகளின் தீபங்கள் மெலிந்து மங்கத் தொடங்குகின்றன காத்திருப்பில் சோர்ந்த சாலைகள் அனைத்தும் தற்போது ஆழ்ந்த உறக்கத்தில். அனுதாபமே இல்லாத புழுதிபடர்ந்த தெரு எண்ணற்ற காலடித்தடங்களால் போர்த்தப்பட்டுள்ளது   விளக்குகளை ஊதியணைத்துவிடு கோப்பையிலிருந்தும் ஜாடிகளிலிருந்தும் திராட்சை ரசத்தைக் கொட்டி அகற்றிவிடு அந்தி வந்துவிட்டது உறங்காத உன் கண்களை இமைகளால் மூடு இப்போது இங்கே யாரும் வரப்போவதில்லை.

இலையுதிர்காலம் வந்தது – பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

இப்படித்தான் மரங்களிடம் இலையுதிர்காலம் வருகிறது: அவற்றின் எலும்புடல்கள் வெறிக்கத் தோலுரித்துவிடுகிறது. இதயங்களை உலுக்கிய உலுக்கில் மரங்கள் பழுப்பிலைகளைத் தரையெங்கும் சிதறடித்துவிடுகின்றன. எதிர்ப்பின் சிறுமுனகலும் இல்லாமல் யாரும் அவற்றை உதைத்து உருக்குலைத்துவிட முடியும். கனவுகளை முன்னறிவித்த பறவைகளின் தொண்டையிலிருந்தெழும் ஒவ்வொரு குரலும் கிழிக்கப்பட்டு தங்கள் பாடலிலிருந்து நாடுகடத்தப்பட்டு வேடன் நாணை ஏற்றுவதற்கு முன்பே புழுதிக்குள் வீசப்பட்டுள்ளன மே மாதத்தின் கடவுளே, இரக்கம் காட்டு. உனது புத்துயிர்ப்பு வேட்கையினால் இந்த மரங்களின் இறந்த நாளங்களுக்குள் மீண்டும் ரத்தம் பாயச்செய்து அதன் உலர்ந்துதிர்ந்த உடம்புகளை ஆசிர்வதி. உனது பசுமையின் பரிசை இந்த மரங்களில் கொஞ்சத்துக்காவது கொடு ஒரு பறவை பாடட்டும்.

கடந்த இரவு - பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

  கடந்த இரவில் மங்கித் தேய்ந்த உனது நினைவு வந்தது காட்டில் வசந்தம் அமைதியாக நுழைவதைப் போல் பாலையில் ஊர்ந்துசெல்லும் பனிக்காற்றைப் போல் நோயுற்றிப்பவனிடம் காரணமேயின்றி அமைதி வந்தமர்வதைப் போல். ( ஆங்கிலத்தில் : விக்ரம் சேத்)