Skip to main content

Posts

Showing posts with the label தத்துவம்

அறிவின் தோற்றம் பற்றிய விசாரணை

  நவீன இந்திய சமூக உருவாக்கத்தில் பங்களிப்பு செய்த சீர்திருத்தவாதிகளில் ஒருவரும் துறவியும் கல்வியாளருமான நாராயண குரு, கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லும் விதமாக சம்வாத வடிவில் 15 பாடல்களாக எழுதிய நூல் ‘அறிவு’. மேற்கில் அறிவின் தோற்றம் குறித்து அறியும் ஆய்வுப்புலம் ‘அறிவுத்தோற்றப்பாட்டியல்’ (epistomology) என்ற பெயரில் உள்ளது. இந்தியாவில் வேதாந்த மரபின் ஒரு பகுதியாக அறிவு மற்றும் பிரக்ஞையின் தோற்றமும் அவற்றின் செயல்பாடுகளும் பிரச்சினைகளும் ஆராயப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் 1887 முதல் 1897 வரையிலான காலகட்டத்தில் நாராயண குரு, நவீன மனிதர்களின் மனப்போக்குக்குப் பதில் அளிக்கும் விதமாக, வேதாந்தத்தின் அடிப்படையில் எழுதிய பிரக்ஞையின் அறிவியலாக இந்த நூல் முக்கியமானது. நாராயண குருவின் வழிவந்த துறவியும் கேரளத்தின்  முன்னணி அறிஞர்களில் ஒருவருமான நித்ய சைதன்ய யதி, நாராயண குருவின் 15 பாடல்களுக்கும் ஆங்கிலத்தில் எழுதியுள்ள தெளிவுரை ‘அறிவு - ஞானத்தின் ஆய்வியல் - நாராயண குரு’ என்ற நூலாகத் தமிழில் வெளிவந்திருப்பது முக்கியமான நிகழ்ச்சியாகும். திரும்பத் திரும்பப் படித்தும் விவாதித்தும் தெரிந்துகொள...

யதிக்குத் துணையாக நடராஜ குரு விட்டுச்சென்ற குரங்குகள்

எனது இலக்கிய ஆசிரியர்களோடு ஆசிரியராக நித்ய சைதன்ய யதி தொடர்ந்து என்னுடன் வந்துகொண்டிருக்கிறார். மனுஷ்ய புத்திரன், லக்ஷ்மி மணிவண்ணன், கண்ணன் சேர்ந்து நடத்திய காலச்சுவடு பத்திரிகையில் ஜெயமோகன் எடுத்த நேர்காணல் வழியாக நுழைந்தவர் நித்ய சைதன்ய யதி. நல்ல அவியல் வைக்கத் தெரியாதவன் துறவியாக முடியாது என்ற கூற்று ஞாபகத்தில் இன்னமும் இருப்பது; நண்பர்களிடம் அதைத் தொடர்ந்து பகிர்கிறேன். அத்துடன் 16 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நல்ல அவியலைச் சமைப்பதில் படிப்படியாக முன்னேறியும் வருகிறேன். நித்ய சைதன்ய யதியை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசை இருந்தும், ஓரிரண்டு முறை செய்த பலவீனமான முயற்சிகளுக்கப்பால், அதற்கான சூழல்கள் அமையவில்லை. பிரமிளும் யதியும் இப்படித்தான் தவறியது.   நித்ய சைதன்ய யதி இறந்தபிறகு வேறேதோ சந்தர்ப்பத்தில் எனது திருமணத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரது சுயசரிதை நூலான Love and Blessings எனக்கு வந்து சேர்ந்தது.  அந்த நூலில் அவர் தீட்டியிருந்த குழந்தைப் பருவத்தைப் பற்றிய காட்சிகள் தான் யதி என்னுடைய உலகத்தைச் சேர்ந்தவர் என்ற நெருக்கத்தை எனக்கு அளித்தது. குழந்தைப் பருவத்தை விவரிக...

ஐயா, எது ஆகவும் முயற்சிக்காதீர்கள்

ஜே. கிருஷ்ணமூர்த்தி முழுநிலவு நதியின் மேல் அப்போதுதான் எழுந்துகொண்டிருந்தது; புழுதித் திரை நிலவைச் சிவப்பாக்கியிருந்தது. குளிருக்காக எழுப்பப்பட்ட நெருப்பு பல கிராமங்களிலிருந்து புகையாக எழும்பிக் கொண்டிருந்தது. நதியில் ஒரு சலனமும் இல்லை. ஆனால் ஆழ்ந்து வலுவாக மறைந்து அதன் ஓட்டம் இருந்தது. தகைவிலான் பறவைகள் தாழ்ந்து பறந்து கொண்டிருந்தன. அதன் சிறகின் நுனிகள் தண்ணீரைத் தீண்டியபோது, அமைதியாக இருக்கும் நீரின் மேல்பரப்பைக் கொஞ்சமே தொந்தரவு செய்யமுடிந்தது. நதியின் மேலே, மாலை நட்சத்திரம் தூரத்திலுள்ள சந்தடி மிக்க நகரத்தின் மசூதி மேல் அப்போதுதான் துலங்கத் தொடங்கியது. கிளிகள் மனிதர்கள் வசிக்குமிடத்துக்கு அருகே வந்து சேர்ந்துகொண்டிருந்தன, அவற்றின் பறத்தலோ ஒருபோதும் நேர்கோட்டில் இல்லை. கிரீச்சிட்டபடி அவை இறங்குகின்றன. ஒரு தானியத்தை எடுத்துக் கொண்டு பக்கவாட்டாகப் பறக்கின்றன. ஆனால் அவை பசிய மரத்தைத் தேடி முன்னே பறந்துகொண்டே இருக்கின்றன. அங்கே அவை நூற்றுக்கணக்கில் கூடுகின்றன. அடைக்கலாகும் மரத்துக்குப் போய் சேருவதற்காக மீண்டும் பறக்கின்றன. இருள் வரும்போது அங்கே மௌனம் இருக்கிறது. மரங்களின...

அனுபவம் அனுபவிப்பது அனுபவிப்பவர் - ஜே. கிருஷ்ணமூர்த்தி

அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் தீண்டின ; மலைகளைப் பூசியிருக்கும் சாயங்காலத்தின் மினுமினுப்பு அவற்றின் உள்ளிருந்து வருவதுபோலத் தோற்றம் தருகிறது . நீண்ட சாலையின் வடக்கில் , மலைகள் தீக்குள்ளாகி மொட்டைத் தரிசாய்க் காட்சிதருகின்றன ; தெற்கிலிருக்கும் மலைகளோ பசுமையாகவும் புதர்கள் , மரங்கள் அடர்ந்தும் உள்ளன .  நெடிதாகப் போகும் சாலை , பிரமாண்டமும் எழிலும் கொண்ட இந்தப் பள்ளத்தாக்கை இரண்டாகப் பிரிக்கிறது . குறிப்பாக , இந்த மாலையில் மலைகள் மிகவும் நெருக்கமாக , மாயத்தன்மையுடன் , இலேசாகவும் மிருதுத்தன்மையுடனும் தெரிகின்றன் . பெரிய பறவைகள் உயர சொர்க்கங்களில் சாவதானமாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றன . தரையில் அணில்கள் மந்தமாக சாலையைக் கடக்கின்றன . அத்துடன் எங்கோ தூரத்தில் விமானத்தின் ரீங்காரம் கேட்கிறது . சாலையின் இரண்டு பக்கங்களும் ஆரஞ்சு தோட்டங்கள் , சீரான ஒழுங்கில் வரிசையாக உள்ளன . உஷ்ணமான ஒரு நாளென்பதால் பர்ப்பிள் சேஜ் மலர்களிலிருந்து வரும் வீச்சம் ...