Skip to main content

Posts

Showing posts with the label மொழியாக்கம்

பாசிசத்தை நோக்கி இந்தியா: மோடி செய்த மாற்றங்கள் - பிரேம் சங்கர் ஜா

(இந்தியாவை பாசிசத்தை நோக்கி மோடி படிப்படியாக மாற்றிய வரலாற்றை எண்ணற்ற கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் குடியுரிமை, ஜனநாயகப் பாதுகாவலர்கள் விவரமாகப் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் பலரும் , எந்தக் குற்றச்சாட்டும் சொல்லப்படாமல் ஆண்டுக்கணக்கில், பிணையில்லாமல் சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். பாசிசத்துக்கு இந்தியாவை மோடி எவ்வாறு அழைத்துச் சென்றார்? அந்தப் பயணத்தை பெருங்கோடுகளில் இந்தக் கட்டுரை தீட்டுகிறது.)  1. பன்முகத்தன்மை வாய்ந்த, பல்வேறு இனங்கள் வசிக்கும் ஜனநாயகமென்று முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெருமைப்பட்டு குறிப்பிட்ட அம்சங்களை, அவருக்குப் பின்னால் வந்த நரேந்திர மோடி, பிரதமர் பதவியேற்று சில வாரங்களில்,  அகற்றத் தொடங்கிய முதல் நடவடிக்கை இது. மத்திய அமைச்சகங்கள் இயங்கும் இடங்களின் நுழைவாயிலில் முதலில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியதுதான் அந்த முதல் நடவடிக்கை. அத்துடன் பத்திரிகை தகவல் பணியகம்((Press Information Bureau), சிறப்பு செய்தியாளர்கள், மூத்த பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய அடையாள அட்டைகள் வாபஸ் பெறப்பட்டன. பத்திரிகையாளர்கள் எந்த அமைச்சரகத்த...

போவது - ஈயூனிஸ் டி சௌஸா

நீ போகிறாய் என்று அவள் சொன்னாள். அவனது சவப்பெட்டி இடுகாட்டுக்குத் தூக்கிச் செல்லப்பட்ட போது. அவன் பதிலளிக்கவில்லைதான். அவன் என்றும் பதிலளித்ததில்லை. வேர்க்கடலைகளைக் கொறித்தபடி மாலை செய்தித் தாளை மேய்ந்துகொண்டிருந்தான். காலை உணவில் முட்டையின் மஞ்சள் கரு அவனது தாடையின் ஓரத்தில் வழிந்தது. (நன்றி : அகழ் இணைய இதழ்) 

நிலைத்திருப்பது - ஈயூனிஸ் டி சௌஸா

பறந்தோடிச் சென்றவை மூன்று பெண் கிளிகள் தான். ஆண் கிளியோ வீட்டில் நிலைத்துவிட்டது. என்  கையிலும் பாதத்திலும் காத்திருக்க விரும்புபவனைப் போல. அதில் எங்கேயோ ஒரு பாடம் இருக்கிறது. (நன்றி: அகழ் இணைய இதழ்) 

நிலா - ஈயூனிஸ் டி சௌஸா

வடிவம் கம்பீரம் குலைய அறையப்பட்டு வடுபட்டு கூம்பு கோபுரங்களின் பின்னால் தனது முகத்தை மறைத்து நிற்கிறாள் நிலா. மேலெழுந்து உதயமாக அவளுக்கு அவசரமேதும் இல்லை: அவள் கடக்கவேண்டும் ஒரு பாலைவனத்தையும் நொறுங்கிய குன்றுகளின் வரிசையையும். (நன்றி: அகழ் இணைய இதழ்)

பெண்களுக்கு அறிவுரை - ஈயூனிஸ் டி சௌசா

(ஈயூனிஸ் டி சௌசா சமகால இந்திய ஆங்கிலக் கவிஞர்களில், தன் வாழ்நாள் காலத்திலேயே கவனிப்புக்கும் விமர்சனப் பார்வைக்கும் உள்ளானவர். தனி அடையாளத்தையும் உலகையும் கொண்ட கவிஞர். கோவாவைச் சேர்ந்த கத்தோலிக்கக் குடும்பத்தில் 1940-இல் பிறந்து மும்பையில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி, தனியாகவே வாழ்ந்து 2017-இல் மறைந்தவர். சார்லஸ் பூக்கோவ்ஸ்கியின் அப்பட்டமான விமர்சனத் தன்மை, மேரி ஆலிவரின் ஈரத்தன்மையோடு சிறிய கவிதைகளை எழுதியவர். பூனைகள், தெரு நாய்கள், பருந்து, சிறுத்தை, காகம், கிளி என பிராணிகளும் பறவைகளும் ஆண் பால், பெண் பாலாகவே பிரித்து இவர் கவிதைகளில் சுட்டப்படுகின்றன. மூன்று வயதில் தந்தையை இழந்த ஈயுனிஸ் டி சௌஸாவை அந்த மரணம் மிகவும் பாதித்துள்ளது. சுயசரிதைத் தன்மை கொண்ட இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். தோழிகள், தோழர்கள், கணவர்கள், காதலர்கள் கதாபாத்திரங்களாக நேராகவும் மறைமுகமாகவும் உலவுகின்றனர். மற்றமையை, மற்ற உயிர்களுடனான பிணைப்பைக் கொண்டாடுவதோடு மரணத்தையும் விசாரித்தபடி இருக்கும் கவிதைகள் இவருடையவை.) காதலர்களின் மற்றமையோடு சமாளித்துப் போகக் கற்றுக்கொள்வதற்கு பூனைகளை வைத்திருங்கள். மற்றமை என்பத...

யார்க் கடற்கரையில் - சார்லஸ் சிமிக்

  டிசம்பரின் குளிர்ந்த சாயங்காலத்தில் மகிழ்ச்சியற்றுப் போன ஒரு காதல் ஜோடியை மூழ்கடித்ததைப் பற்றி பொருட்டே இல்லாதது போல இந்த முரட்டு அலைகள் கடுமை காட்டுகின்றன.

குட்டி ஆந்தையே, அலறு - சார்லஸ் சிமிக்

நீ அங்கேதான் இருக்கிறாயா? அங்கு என்ற ஒன்று நிஜமாகவே அங்குள்ளதா என்ன? உன் விருப்பப்படி அலறு அல்லது அமைதியாய் இரு. இருள்சூழ்ந்துள்ளது  இரவு இங்கே நாம் இருப்பதைப் பார்த்து பெரும் ஆச்சரியம் கொள்ள தாமதமாக நட்சத்திரங்கள் வரலாம் அங்கே.

பனி – சார்லஸ் சிமிக்

  யாரொருவரையும் எழுப்பிவிடக்கூடாதென்ற நிச்சயத்துடன் ஒவ்வொரு செதில் மீதும் மென்மையாக  அழுந்தி விழும் பனியைவிட வேறெதுவும் இத்தனை அமைதியாக இருக்க இயலாது.

காலையில் முதல் வேலையாய் - சார்லஸ் சிமிக்

காலையின் முதல் வேலையாய் உனது புழக்கடையில் கிசுகிசுத்துக் கொண்டிருக்கும் பறவைகளை நீ ஒட்டுக்கேட்கிறாய். உன்னைப் பற்றி அவை என்ன சொல்கின்றனவென்று தெரிந்துகொள்ளும் ஆசையுடன்.

நான் எதையும் மறப்பதில்லை – சார்லஸ் சிமிக்

  அதுதான் எனது சிக்கல்! நகரத்தின் குப்பைக்குழியில் கிழிந்த புகைப்படங்கள் நிரம்பிய ஷூ டப்பாவை பார்க்க வாய்த்ததைப் போல். ஏதோ ஒரு வெப்பமண்டலக் கடற்கரையில் குளியல் உடையில் பரஸ்பரம் கைகளைப் பிடித்தபடி நிற்கும் ஒரு ஜோடியின் புகைப்படத்தை மட்டும் எனக்கென்று  எடுத்துக்கொண்டேன். அதில் அவர்களது இளமையும் அழகும் எவ்வளவு மிஞ்சியிருக்கிறதென்று அவதானிக்கத் துரிதமாக முயல்கையில் காற்று அவர்களது தலை மற்றும் முகத்தை அடித்துச் சென்றுவிட்டது.

கோடை அந்தி – சார்லஸ் சிமிக்

ஒரு நீண்ட பகலின் முடிவு நியூயார்க் அல்லது ரோம் ஏதோ ஒரு நகரத்தின் கூரைகள் மீது வானில் ஒளி இன்னும் மிஞ்சியிருக்கிறது உஷ்ணத்தால் வீதிகள் காலியாகின்றன மக்கள் குடிவந்த அறைகளிலும் காலி அறைகளிலும் நிழல்கள் நீண்டு இருட்டாக்குகின்றன சிலர் விளக்கை ஏற்றுகின்றனர் ஒவ்வொன்றும் தன் எழிலில் தானே விதிர்த்து நிற்கிறது பலர் விரைந்து நழுவும் இத்தருணத்தை ருசிப்பதற்காக ஜன்னலுக்கு வருகின்றனர். என் வாழ்வின் நேசமாக நீதான் இருந்துகொண்டிருக்கிறாய். 

உஷ்ணமான கோடை இரவு – சார்லஸ் சிமிக்

தூரத்து நட்சத்திரங்களின் சோம்பல் ஒளி கீழே இங்கே பூமியிலோ எக்காளமிடும் ஓடை குண்டு தர்பூசணியை குளிரவைத்துக் கொண்டிருக்கிறது.

சுவர்க்கோழி - சார்லஸ் சிமிக்

கோடை முடிந்து இருள் கவிழ்ந்தபோது உனது வாழ்க்கை  எத்தனை நிஜமோ அத்தனை நிஜம் என் வாழ்க்கை என்றது புதரிலிருந்து சுவர்க்கோழி.

காதலர்கள் இப்போது உலகெங்கும் - சார்லஸ் சிமிக்

காதலரின் உடைகளைக் களையும் காதலர் சின்னதாக , பெரிதாக இருக்கும் பித்தான்களை பாதிக்கு மேல் திறக்காமல் வீம்புசெய்யும் ஜிப்பை வசைபாடிக் கொண்டிருக்கும் காதலர்கள் .

எமது குளிர்காலப் பிற்பகல்கள் – சார்லஸ் சிமிக்

  உஷ்ணமான நீராவி இஸ்திரிப் பெட்டியால் என்னை அவள் மென்மையாக அழுத்தினாள். அல்லது தைத்துச் சீர்செய்ய வேண்டிய காலுறையைப் போல எனக்குள் கையை நழுவவிடுகிறாள். எனது ரத்தத்தின் தாரையைப் போல் அவள் பயன்படுத்துகிற நூல் உள்ளது. ஊசியின் கூர்மையோ ஒட்டுமொத்தமாக அவளுடையது. அவளுடைய அம்மா எச்சரிக்கிறாள். “ஹென்றிட்டா, வெளிச்சம் குறைந்த இடத்தில் உன் கண்களை நீ பாழாக்கிக் கொள்ளப் போகிறாய்”. அவள் சொல்வது சரிதான். உலகத்தின் துவக்கத்திலிருந்து வெளிச்சம், இத்தனை குறைவாக இருக்கவேயில்லை. எமது குளிர்கால பிற்பகல்கள் நூறு ஆண்டுகளுக்கு நீடிப்பதாகச் சில சமயங்களில் அறியப்பட்டிருக்கிறது.

கடைசிப் படைவீரன் – சார்லஸ் சிமிக்

நெப்போலிய காலத்தின் கடைசிப் படைவீரன் நான். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. நான் இன்னமும் மாஸ்கோவிலிருந்து பின்வாங்கிக் கொண்டிருக்கிறேன். வெள்ளை பிர்ச் மரங்கள் ஓரம் கட்டி நிற்கும் சாலை அது. எனது முட்டி வரை சேறு நிரம்பியிருக்கிறது. ஒற்றைக்கண்ணி என்னிடம் ஒரு கோழிக்குஞ்சை விற்க விரும்புகிறாள். என்னைப் போர்த்த உடைகள் கூட இல்லை. ஜெர்மானியர்கள் ஒரு வழியில் போய்க்கொண்டிருக்கின்றனர். நான் இன்னொரு வழியில். ரஷ்யர்களோ வேறு வழியில் கைகளை ஆட்டி விடைகொடுத்தபடி செல்கின்றனர். என்னிடம் சடங்குகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு பட்டாக்கத்தி உள்ளது. அதைக் கொண்டு நான் எனது நான்கடி நீளமுள்ள தலைமயிரை வெட்டிக்கொள்கிறேன்.

செவிட்டுக் காதுகளால் நிறைந்த சொர்க்கம் – சார்லஸ் சிமிக்

கரும்புகையின் பின்னல் சடையாய் இருந்தாள் என் அம்மா. பற்றியெரியும் நகரங்கள்மீது என்னை அவள் துணியால் சுற்றிப் பிரசவித்தாள். ஒரு குழந்தை விளையாடுவதற்கேற்ப விசாலமாகவும் காற்றோட்டமான இடமாகவும் இருந்தது வானம். எங்களைப் போன்று நாங்கள் பலரையும் பார்த்தோம். புகையால் செய்யப்பட்ட ஆயுதங்களை தங்கள் மேலங்கிகளில் பொருத்த முயற்சித்தனர். சொர்க்கங்கள் அனைத்தும் நட்சத்திரங்களால் அல்ல- சுருங்கிய செவிட்டுக் காதுகளால் நிறைந்திருந்தது. 000 நான் ஜிப்சிகளால் திருடப்பட்டேன். எனது பெற்றோர்கள் மீண்டும் என்னைத் திருடி மீட்டனர். ஜிப்சிகள் என்னை மீண்டும் திருடிக்கொண்டு சென்றனர். இப்படியாக சில காலம் கழிந்தது. ஒரு சமயத்தில் நான் கூண்டுவண்டியில் எனது புதிய அம்மாவின் கருத்த காம்பைச் சப்பிக்கொண்டிருந்தேன். இன்னொரு சமயத்திலோ, எனது காலை உணவை நீண்ட சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்து வெள்ளி ஸ்பூனால் அருந்திக்கொண்டிருந்தேன். வசந்தத்தின் முதல் நாள் அது. எனது தந்தைகளில் ஒருவர் குளியல் தொட்டியில் பாடிக்கொண்டிருந்தார்; இன்னொரு தந்தையோ வெப்ப மண்டலப் பறவையின் வண்ணங்களைக் கொண்ட ஒரு குருவியை நேரடியாகப் பார்த்து வரைந்துகொண்டிருந்தார்....

தாமத வருகை – சார்லஸ் சிமிக்

உலகம் இங்கே தன் மகத்துவத்தில் ஏற்கெனவே இருந்து கொண்டிருந்தது . யாருமே உனக்காகக் காத்திருக்காத இடம் எதுவோ அங்கே பின்மதிய ரயிலில் நீ பயணித்து வந்திருக்கிறாய் .   அதன் சலிப்பு காரணமாக யாருமே நினைவில் வைத்துக் கொண்டிருக்காத ஒரு நகரத்தில்தான் தங்குவதற்கான இடத்தைத் தேடும்போது ஒரேமாதிரித் தோன்றும் வீதிகளின் வலைப்பின்னலில் நீ உன்   வழியைத் தொலைத்தாய் .   உன்னைப் போலவே அப்போதுதான் நின்றுபோன தேவாலயக் கடிகாரத்தின்   கீழே முதல்முறையெனத் தோன்ற உனது காலடி ஓசைகளை நீ கேட்டாய் .   பிற்பகலின் மஞ்சள் ஒளியில் சுடரும் இரண்டு காலி வீதிகளுக்கு நடுவே உனது நடையை தொடர்வதற்கு முன்னால் திகைத்து நோக்க பகட்டில்லாத அகாதத்தின்   இரண்டு  நீளும் வழிகள் .

ஒரு பிரார்த்தனை – ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்

ஆயிரம் முறைகள் , எனது அங்கமாக இருக்கும் இரண்டு மொழிகளிலும் , எனது உதடுகள் உச்சரித்தன ; தொடர்ந்து மந்திர ஜெபத்தை எனது உதடுகள் உச்சரித்துக் கொண்டிருக்கவும் செய்யும் ; ஆனாலும் அதில் ஒருபகுதி மட்டுமே எனக்குப் புரிந்தது . இந்த நாளின் காலையில் – ஜூலை 1, 1967 – நான் ஒரு பிரார்த்தனையை முயற்சிக்க ஆசைப்பட்டேன் ; அது அந்தரங்கமானது ; வழிவழியாக வந்தது அல்ல . அப்படியான ஒரு முயற்சி மனிதசக்தியைத் தாண்டிய அர்ப்பணிப்பை வேண்டுவது என்று எனக்குத் தெரிந்திருந்தது . அந்தப் பிரார்த்தனையிலிருந்து எதையும் கோருவதற்கு நான் விலக்கப்பட்டவன் . எனது கண்களை இரவு நிரப்பக்கூடாது என்று வேண்டுவது பைத்தியக்காரத்தனம் ; குறிப்பாக சந்தோஷமாக , நியாயமாக அல்லது ஞானவான்களாக இல்லாத , பார்க்கும் திறனுள்ள ஆயிரம் மனிதர்களை நான் அறிவேன் . காலத்தின் அணிவகுப்பென்பது காரண காரியங்களின் வலையாக இருப்பதால் , கருணையின் பரிசாக எதைக் கேட்டாலும் , அது எத்தனைதான் சிறியதாக இருந்தாலும் , அந்த இரும்புவலையின் கண்ணியை உடைக்கவோ , ஏற்கெனவே உடைந்திருக்க வேண்டுமென்றோ கோருவதுதான் ....

அவனது முடிவு மற்றும் அவனது துவக்கம் – ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்

  இறுதி அல்லாட்டமும் ஓய்ந்துவிட்டது , அவன் தற்போது தனிமையில் கிடக்கிறான் – உடைந்து போனவனாயும் புறக்கணிக்கப்பட்டவனாகவும் . கிடந்தவன் அப்படியே உறக்கத்துக்குள் மூழ்கிவிட்டான் . விழித்தெழுந்து பார்த்தபோது அவனது தினசரி இருப்பினுடைய பழக்கவழக்கங்கள் , இடங்கள் அவனுக்காகக் காத்திருந்தன . முந்தின நாள் இரவு நடைபெற்றது குறித்து அதிகம் யோசிக்கக்கூடாதென்று தனக்குத்தானே உறுதியெடுத்துக் கொண்டான் . அந்த உறுதியால் உற்சாகம் கொண்டு வேலைக்குச் செல்வதற்காக பதற்றமேயின்றி உடைகளை அணிந்தான் . ஏற்கெனவே செய்த வேலையையே திரும்பச் செய்யும் அலுப்பு காரணமான அசௌகரிய உணர்வுடனேயே , அலுவலகத்தில் பணிகளை சிறப்பாகவே மேற்கொண்டான் . அங்கிருந்த மற்றவர்கள் அவனைப் பார்த்தவுடன் கண்களைத் திருப்பிக்கொள்வதை அவன் பார்க்காமல் இல்லை ; அவன் இறந்துவிட்டானென்று அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம் . அந்த இரவில்தான் துர்கனவுகள் தொடங்கின . அந்தக் கனவுகள் எந்த ஞாபகச்சுவடையும் அவனிடம் விட்டுச் செல்லவில்லை – திரும்ப வருமோ என்ற அச்சத்தைத் தவிர . காலத்தில் , அந்த அச்ச...