Skip to main content

Posts

Showing posts from July, 2013

பாலத்தின் மீது காதலர்கள்

ஷங்கர்ராமசுப்ரமணியன் அவன் ஏரியை நோக்கி வெளியே அந்தரத்தில் கால்களை சேர்த்து தொங்கவிட்டிருந்தான் அவள்  அவனது தோளில் சாய்ந்திருந்தாள் ஒரு உடைந்த பாலத்தின் கல்நுனிதான் ஆனால் பெரியதொரு மஞ்சள் சிகப்பு பூக்களாக அவர்கள் அங்கே ஒரு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தனர் அவர்களின் அந்த சாய்மானம் போதும் அந்த மெல்லிய கோட்டுச்சித்திரம் போதும் சீக்கிரத்தில் மறைய இருக்கும் அந்த சாயங்காலம் போதும் அவர்கள் அமர்ந்திருக்கும் உடைந்த பாலத்தின் சிறுநுனி போதும்.

பறக்கும் அனுபவம்

ஷங்கர்ராமசுப்ரமணியன் அந்த அபாய சவாரியில் சிறுவர்கள், பெரியவர்கள் அனைவருமே மரணக்கூச்சலை இட்டனர். அந்த தீம்பார்க் முழுவதுமே எழும் கூச்சலின் பின்னணி இப்போது எனக்குப் புரிந்துபோனது. அவர்கள் எல்லாருக்கும் மரண சந்தர்ப்பத்தைப் போன்ற ஒரு சந்தர்ப்பம் தேவையாக இருக்கிறது. முற்றிலும்  மனித இயற்கைக்கும், புவிஈர்ப்பு விசைக்கும் எதிரான ஒரு சவாரி அது. அடுக்கடுக்காக வளைந்து, பின்னி சுற்றிச் சுழலும்   தண்டவாளப் பாதையில் இருக்கும் ஒரு சிறு பொம்மை வண்டியில் ஏறி, வேகம் முடுக்கப்பட்டு நம் உடலை பக்கவாட்டாக, தலைகீழாக, முன் பின்னாக கவிழ்க்கும் அந்தச் சவாரியை நடுவில் நாம் நடுவில் நிறுத்த நினைத்தாலும் முடியாது. நம்மோடு சிறுவர் சிறுமியரும் இருக்கிறார்கள் என்ற கூச்சத்தைக் கூட மறந்து, அந்த ரோலர் கோஸ்டரை இயக்குபவரைப் பார்த்து சத்தமாக கூவி நிறுத்தச் சொன்னேன்.   கீழே இருக்கும் அவர் அதையும் ரோலர் கோஸ்டர் சவாரி அனுபவத்தின் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டார். பின்னர் சவாரியின் ஒரு புள்ளியில் உடலைப் பிணைத்திருக்கும் கம்பியை இறுக்கமாகப் பிடித்து, கால்பாதத்தை நான் உட்கார்ந்திருக்கும் சீட்டுக்கு முன் நீட்டி, வண்டியின் முன