Skip to main content

Posts

Showing posts from September, 2015

தாய் அறியாத புரட்சி எது?

                               ஷங்கர்ராமசுப்ரமணியன் மக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலில், ‘தாய்மார்கள் இரக்கத்துக்கு உள்ளானதேயில்லை’என்று ஒரு வரி வரும். ‘லட்சுமி என்னும் பயணி’ சுயசரிதையை எழுதியிருக்கும் லட்சுமி அம்மாவின் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது. தாய், தந்தையரின் அரவணைப்பிலான, சரியான குழந்தைப் பருவத்தைக்கூட அனுபவிக்காத ஏழைச் சிறுமி லட்சுமி. அடிப்படைத் தேவைகளுக்காகச் சிறு வயதிலேயே வேலைக்குச் செல்ல நேர்ந்தவர். அங்கே தொழிற்சங்கத்தில் சேர்ந்தவர். தொழிற்சங்கம் வழியாக முழு நேர அரசியலுக்குத் திருமணம் வழியாகவும் பிணைக்கப்பட்டவர். லட்சுமி அம்மாவின் வாழ்க்கையைப் பொறுத்தவரை அவரது வாழ்க்கை, அரசியல், சூழ்நிலைகள் அனைத்தும் அவரது தேர்வு அல்ல. ஆனால், துரும்பளவுகூட மீட்சிக்கு வாய்ப்பில்லாத சூழலில் தனக்கும் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்துக்காகவும் சகமனிதர்களின் தன்னிறைவுக்காகவும் போராடும் நித்தியப் போராளியாக லட்சுமி அம்மா இந்த சுயசரிதை வழியாக வெளிப்படுகிறார். மேல்நிலைக் கல்வி, மார்க்சியம், பெண்ணியம் சார்ந்த கோட்பாடுகளின் அடிப்படை எதுவுமின்றி, சமூகத்தின் அடித்தளத்திலிருந்து வந

துருவிப் பார்க்கும் கண்களுக்குச் சற்று ஓய்வுகொடுங்கள் சுகுமாரன்

ஷங்கர்ராமசுப்ரமணியன்  நகுலன் மது குடிப்பார். ஆனால் அவரது கவிதைகளில் மது போதை சார்ந்த அனுபவமே இல்லையென்று தமிழின் பெருங்கவிஞர்களான சுகுமாரனும், எம்.யுவனும் நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுதியின் பின்பகுதியில் வெளியாகியிருக்கும் உரையாடலில் கற்பூரம் கொளுத்திச் சத்தியம் செய்திருக்கின்றனர்.  (குடித்த மனத்திலிருந்து ஒரு வரிகூட எழுதப்படவேயில்லை. அல்லது குடித்த அவஸ்தையைக் கூட அவர் எழுதியதேயில்லை-சுகுமாரன் சொல்கிறார். இப்படிப் புரிந்துகொள்ளலாமா, ஒரு கவிதையில் ஒரு கட்டு வெற்றிலையும் சீவலும் எனக் குறிப்பிடுகிறார். அவரைப் பொறுத்தவரை இதற்கும் பிராந்திக் குப்பிக்கும் ஒரு வித்தியாசமும் இல்லையெனக் கொள்ளலாமா?- யுவன் கேட்கிறார். சுகுமாரன் கடைசியாக ஒரு போடு போடுகிறார்:  ஆமாம்! அப்படித்தான். -  நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள்- பக்கம் 90- காலச்சுவடு பதிப்பகம்)   மதுவையும், நண்பர்களுடனான உரையாடலையும், போதையையும் நான் என்பது கரைந்து,  லேசாக  அடிநிலைக்குச் செல்லும் எத்தனமாகவே சித்தரிக்கிறார் நகுலன். அவர் பாஷையில் அது ஒரு சொரூப நிலை.   தன் போதத்தை, தன் சுமையைக் கழற்றிக் கொள்வதற்க