Skip to main content

Posts

Showing posts from 2022

கொஞ்சம் நக்கித் தின்னக் கிடைத்தால் போதும் அன்றே முடிகிறது இந்தியப் புரட்சி

வேதாகமம் தொடங்கி ஆட்டோவின் முதுகு வரை நுண்மொழிகளும் பொன்மொழிகளும் நமக்கு இன்றைக்கும் அன்றாடத் தேவையாகவே உள்ளது. க்ஷணப் பொழுது உண்மைகள், நித்திய உண்மைகள், அவரவர் தொடர்புடைய, அவரவரின் அவ்வப்போதுடன் தொடர்புடைய அனுபவத்தைச் சார்ந்த உண்மைகளைப் பிரதிபலிப்பதாக இந்த நுண்மொழிகள் இயங்குகின்றன. ‘சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும். கர்த்தரைத் தேடுகிறவருகளுககோ ஒரு நன்மையும் குறைவுபடாது.’ பாளையங்கோட்டைக்குள் நுழையும்போது, தேவாலயச் சுவரில் பேருந்து கடக்கும்போதெல்லாம், சிறுவயதில் என் மீது தாக்கம் செலுத்திய இந்த வரிகள் இப்போது ஒன்றும் செய்யாது. அப்படியா என்று கேட்டுவிட்டுக் கடந்துவிடுவேன். எனது கருத்துலகம், படைப்புலகத்தை வடிவமைத்த ஆசிரியர்களில் ஒருவரான காஃப்காவின் நுண்மொழிகள் புத்தகத்தை வாசித்து முடித்தபோது, பல நுண்மொழிகள் அந்தரங்கத் தன்மை கொண்டவை. எனக்கு அவை எதையும் தொடர்புறுத்தவில்லை. ஆனால், காஃப்காவின் உலகில் உள்ள வஸ்துகள், தொடர்ந்து அவரைப் பாதிக்கும் விஷயங்கள் உண்டு. காகம் தென்படுகிறது.  காஃப்காவின் வாழ்க்கையிலேயே அமைதியும் மகிழ்ச்சியும் நிலவிய காலத்தில் எழுதப்பட்டது என

அநித்யச் சிவப்பு

    செம்மை ஏறியிருந்த அந்தச் சாயங்காலம் விரைவாக அந்திக்கருமை நோக்கி சைதாப்பேட்டை பாலத்தில் விசுக்கென போய்க்கொண்டிருந்தது அதன் செம்மையால் கூடுதல் சிவப்பாகியிருந்த இரண்டு செவலை நாய்கள் பாலத்தின் பக்கவாட்டு நடைபாதையில் அவற்றின் ஓட்டத்திலேயே சாயங்காலத்தைச் சந்தித்தன சிகப்புச் சேலை அணிந்து மார்க்கெட்டிலிருந்து திரும்பி எங்கள் முன்னால் போகும் நடுவயதுக்காரிதான் எங்கள் எஜமானி என்று சாயங்காலத்திடம் அறிமுகப்படுத்திக் கொண்டன அந்தியே நீ இப்போது சிவப்பு கிழக்கும் மேற்குமாக எதன்பொருட்டும் இல்லாமல் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும்  நாய்கள் சிவப்பு அவை தமது எஜமானி என்று கருதும் அவளும் சிவப்பு.

சி. மோகன் 70 - அதல பாதாளத்தில் வீழ்தலின் வசீகரம்

    ரெய்னர் மரியா ரில்கேயின் தி டூயினோ எலிஜீஸ் காவியத்தின் ஏழாம் பகுதியில் இருந்து சி.   மோகனுக்கான இந்தக் கட்டுரையைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும்.   உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மணித்துளி உள்ளது அது ஒருமணித்துளியாகக் கூட இல்லாமல் இருக்கலாம், காலத்தின் விதிகளால் அளக்கப்படாத ஒருவெளி அது இரண்டு தருணங்களுக்கு இடைப்பட்டது- அங்கேதான் நீ இருந்தாய். முழுமையாக. இருப்பால் நிறைந்திருக்கிறது ரத்தநாளங்கள்.   சி. மோகனின் உலகநோக்கு, இலக்கியப் பார்வை, விமர்சனங்கள், படைப்புகளுடன் ஓரளவு நெருங்கிய பரிச்சயமுள்ளவன் என்ற வகையில் அவரது ஒட்டுமொத்த ஆளுமையையும் அதலபாதாளத்தில் வீழ்தலின் வசீகரத்தால் தாக்கமுற்றது என்று வரையறுக்க முயல்கிறேன். அவரைச் சிறுவயதில் பாதித்த இலக்கிய ஆளுமையான ஜிநாகராஜன், பின்னர் தாக்கமுற்று நாவலாக எழுதிப் பார்த்த ஓவிய மேதை ராமானுஜம் ஆகியோரைப் பரிசீலிக்கும்போது, அவர்களது கலைப்படைப்புகள் மட்டுமின்றி பின்விளைவுகளோ பலன்களோ கருதாத அவர்களது சாகசமும், பித்தும் சி. மோகனைப் பெரிதாக ஈர்த்துள்ளது.   சி. மோகன் தனக்காகத் தேர்ந்து கொண்ட வாழ்க்கையிலும் நாகராஜன் போன்ற கலைஞர்களின் ச

கவிஞர் நாரணோ ஜெயராமனுக்கு அஞ்சலி

  வேளச்சேரி  காமாட்சி மருத்துவமனை தாண்டி நாரணோ ஜெயராமன் குடியிருக்கும் நன்மங்கலத்தில் உள்ள இல்லத்துக்கு எப்போதும் தொலைபேசியில் கேட்டுக் கேட்டுச் செல்லும் நான் இன்று கேட்கவில்லை. துக்கம், துல்லியத்தைக் கொடுக்கிறது போல. பல்லாவரம் போகும் சிக்னலில் இடதுபக்கம் திரும்பி, நேரே பயணித்து வலதுபக்கம் திரும்பி நீலவர்ணப் பெருமாள் கோயிலைத் தாண்டும்போது நம்பிக்கை வந்தது. நாரணோ ஜெயராமனின் மகனிடம் ஒருமுறை தொலைபேசியில் கேட்டு உறுதிப்படுத்தி அவர் உடல் இருக்கும் வீட்டை அடைந்தேன். குற்றாலம் தர்மராஜன் தான் வேலி மீறிய கிளை தொகுதியை மேற்கு மாம்பலத்தில் உள்ள பழைய புத்தக கடையிலிருந்து 2003-ம் ஆண்டு வாக்கில் வாங்கித்தந்தார் என்று ஞாபகம். சிகப்புத் துணி அட்டையில், மிக எளிமையான சித்திரத்துடன் ஒல்லியாக, மிக மேன்மையும் ஆரோக்கியமும் கொண்ட கவிதைகளின் தொகுப்பு அது. கலாப்ரியாவும் நாரணோ ஜெயராமனும் ஒரு காலகட்டத்தின் புதுக்குரல்கள். உரையாடல் மொழியிலிருந்து உயரும் சமத்காரம் அவரது குரல்.  பிரமிளின் முன்னுரை இன்னமும் படிப்பதற்கு தீட்சண்யத்தை இழக்காதது. கசடதபற குழுவினருக்கு மிக நெருக்கமாக இருந்தவர். க்ரியா ராமகிருஷ்ணன், ஞானக

டெஸர்ட் ரோஸ் -2

  அவள் ஏன் போனாள் எனக்குத் தெரியவில்லை அன்றிலிருந்து எனது டெசர்ட் ரோஸ் செடி பூக்காத மர்மம் புரியவில்லை ஒரு மரத்தைப் போல அடர்வாக்கி ஒரு வனத்தைப் போல நிறையாக்கி தேன்சிட்டு ஒன்று பூக்காத எனது செடியின் கிளையில் அமர்ந்து நேற்று கொத்தி உலுக்கிக் கொண்டிருந்தது பூக்காத அதன் மேலிருந்த கோபம் எனக்கு ஏனோ தணிந்துவிட்டது என் கோபத்தைத் தணித்தது தெரியாமல் அந்தத் தேன்சிட்டு செடியிலிருந்து விருட்டென்று தவ்வி குடியிருப்பு வீடுகளின் மேல் பறந்து வானமேகி மேகத்தில் நீலத்தில் மறைந்த காட்சியை கழுத்தை உயர்த்தி மடக்கி பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமே எனக்குத் தெரிகிறது.

நீர் உயிரியாக அலையும் எஸ். சண்முகத்தின் ‘ஈர்ப்பின் பெருமலர்’

     கவிஞரும், விமர்சகருமான எஸ். சண்முகத்தின் ‘ஈர்ப்பின் பெருமலர்’ கவிதைகளைப் படித்துக் கொண்டிருக்கும்போது, அந்தக் கவிதைகளின் சொல்லி, மொழிப் பிரக்ஞையையும் கொண்ட ஒரு கடல்வாழ் நீர் உயிர் அலையும் காட்சியைக் கண்டேன். உடலின் எல்லைகள் மலரிதழ்களைப் போல எல்லையில்லாமல் மடங்கிச் சுருங்கும் செதில்கள், சிறகுகள் கொண்ட நீர் உயிர் அது. பரிணாமம் எடுக்காத கண்களின் வழியாக அதியுணர்ச்சியுடன் அந்த நீர் உயிர் தனது, பிறிது எது என்று பிரிந்தும் பிரியாமலும் ஒரு முன்னிலையுடன் கலந்தும் பிரிந்தும் அது மொழியில் அலைகிற கவிதைகள் இவை. அந்த நீர் உயிரியிலிருந்து விடுபட்ட குமிழ், அந்த நீர் உயிரியுடையதா? பிரிதா? எப்போதும் பிரிந்தே மிதந்துகொண்டிருக்கிற நாம் எல்லாரும் இணைவது சண்முகம் சொல்லும் அந்த ஒற்றைப் பொதுக்கணத்தில் தான் போலும். அந்த ஒற்றைப் பொதுக்கணத்தில் தான் எப்போதும் கோடையில் இருக்கும் கடலில் பலவண்ண சமிக்ஞைகள் உயிர்க்கின்றன. இந்த உலகத்தில் அந்த ஒற்றைப் பொதுக்கணம்தான் திரும்பத் திரும்பப் பிறந்துகொண்டிருக்கிறது. அங்கேதான் அந்தக் கடல், பல்லுயிர்கள், தாவரங்களின் ஒளிக்கோளத் தீபாவளியைக் கொள்கிறது. எதிரே முடிவில

ஜெயமோகனின் இன்னொரு நேர்காணல் - தி இந்து, ஞாயிறு இணைப்பு, 2014, நவம்பர் மாதம்

எழுத்தாளர் ஜெயமோகன், வெண்முரசு நாவல் தொடரை எழுத ஆரம்பித்திருந்த போது, 2014-ம் ஆண்டு, தி இந்துவின் இணைப்பிதழ் பணியில் இருந்த நான் அதன் தீபாவளி மலருக்காக, இணைப்பிதழ் ஆசிரியர் அரவிந்தனின் அனுமதி பெற்று செய்த நேர்காணல் இது.  மகாபாரத ம் குறித்த விரிவான நேர்காணலாக தீபாவளி மலரிலும், ஒரு பொது நேர்காணலாக கலை இலக்கிய இணைப்பிலும் இரண்டு பேட்டிகள் வெளிவந்தன. இது நடந்த உண்மை. இணைய வெளியில் இரண்டு நேர்காணல்களும் வாசகர்களின் பார்வைக்கு உள்ளன. மகாபாரதம் தொடர்பிலான இந்த நேர்காணல் ஜெயமோகன் இணையத்தளத்திலேயே உள்ளது. ரஷோமான் சினிமாவைப் போல இந்தப் பிரச்சினை வேறு வேறு வடிவங்கள், வேறு வேறு கதைகளாக, கடந்த சில ஆண்டுகளில் சர்ச்சிக்கப்படும் நிலையில் அந்த இரண்டாவது நேர்காணலைப் பகிரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பிலான சில மின்னஞ்சல் தொடர்புகளும் எனக்கும் ஜெயமோகனுக்கும் நடைபெற்றுள்ளது. இந்த நேர்காணலை நான் எனது தளத்தில் இப்போதாவது வைத்துவிடுவது நல்லது என்று நினைக்கிறேன்.  நேர்காணல் செய்த துல்லியமான தேதி எனக்கு ஞாபகமில்லை. 2014-ம் வருடம் முதல் பாதியாக இருக்கலாம். நேர்காணல் செய்த ஸ்தலம், நாகர்கோவிலில் உள்ள

வெண்முரசு குறித்த ஜெயமோகனின் நேர்காணல் - தி இந்து தீபாவளி மலர், 2014

எழுத்தாளர் ஜெயமோகன், வெண்முரசு நாவல் தொடரை எழுத ஆரம்பித்திருந்த போது, 2014-ம் ஆண்டு, தி இந்துவின் இணைப்பிதழ் பணியில் இருந்த நான் அதன் தீபாவளி மலருக்காக, இணைப்பிதழ் ஆசிரியர் அரவிந்தனின் அனுமதி பெற்று செய்த நேர்காணல் இது.  மகாபாரத ம் குறித்த விரிவான நேர்காணலாக தீபாவளி மலரிலும், ஒரு பொது நேர்காணலாக கலை இலக்கிய இணைப்பிலும் இரண்டு பேட்டிகள் வெளிவந்தன; அந்தப் பொது நேர்காணலிலும்  மகாபாரத ம் தொடர்பான கேள்வி இருந்தது. கிட்டத்தட்ட  மகாபாரத ம் தொடர்பில் தமிழில், இந்திய அளவில் வந்திருக்கும் ஏனைய நூல்கள் வரை அறிமுகம் செய்யும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டு முழுமையாக மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் இது என்று கருதுகிறேன். இது நடந்த உண்மை. இணைய வெளியில் இரண்டு நேர்காணல்களும் வாசகர்களின் பார்வைக்கு உள்ளன. மகாபாரதம் தொடர்பிலான இந்த நேர்காணல் ஜெயமோகன் இணையத்தளத்திலேயே உள்ளது. ரஷோமான் சினிமாவைப் போல இந்தப் பிரச்சினை வேறு வேறு வடிவங்கள், வேறு வேறு கதைகளாக, கடந்த சில ஆண்டுகளில் சர்ச்சிக்கப்படும் நிலையில் அந்த நேர்காணலைப் பகிரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பிலான சில மின்னஞ்சல் தொடர்புகளும் எனக்கும் ஜெ