Skip to main content

Posts

Showing posts from November, 2014

அந்த மனிதர்கள்

ஷங்கர்ராமசுப்ரமணியன் ஏன் அவர்கள் ரயிலடிகளில் பொதுக்கழிப்பறைகளில் நடைபாதைகளில் சாலைகளில் சுவர் மூலைகளில் புகையிலை எச்சிலைத் துப்பித் துப்பி இந்த அழகிய மாநகரத்தை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் உங்கள் ஆசுவாசமான பயணத்தின் நடுவில் சிக்னல் முனையில் காத்திருக்கும் போது ஏன் அவர்களின் குழந்தைகள் கிடைக்கும் சிறு அவகாசத்தில் அல்பப் பொருட்களின் பயன்பாட்டை உங்களுக்குக் காட்டி விற்று யாசகம் கேட்டு உங்கள் மென்மையான மனதைப் பிசைந்தெடுக்கிறார்கள் அவர்கள் ஏன் சாலையோரத்தில் உறங்கும்போது காவல் நிலையத்தில் மோதல்சாவுகளில் செத்துத் தொலைக்கிறார்கள்