Skip to main content

Posts

Showing posts from December, 2018

அமிதவ் கோஷூக்கு ஞானபீட விருது

வரலாற்று நிகழ்ச்சிகள் தனிமனிதர்கள் மேல் ஏவப்படும் அபத்தத்துக்கு சாதத் ஹசன் மண்டோ எழுதிய டோபா டேக் சிங் கதை சிறந்த உதாரணம். இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு பிரிக்கப்பட்ட இந்திய , பாகிஸ்தான் அரசுகள் தங்கள் மனநலகாப்பகங்களிலுள்ள முஸ்லிம் , சீக்கிய , இந்து நோயாளிகளை பரிவர்த்தனை செய்துகொள்ள முடிவெடுக்கிறது. இந்தப் பரிமாற்றத்தின் பின்னணியில் பிஷன் சிங் என்ற மனநோயாளி , இந்தியாவுக்கு போலீஸ் காவலுடன் அனுப்பப்படுகிறார். தனது ஊரான டோபா டேக் சிங் , பாகிஸ்தானில் தான் உள்ளதாக அவருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அவரை சகநோயாளிகள் அனைவரும் டோபா டேக் சிங் என்றே அழைக்கிறார்கள். அதனால் அவர் இந்தியாவுக்குப் போக மறுக்கிறார். இந்தியா , பாகிஸ்தானுக்கிடையே போடப்பட்ட இரண்டு முள்வேலிகளுக்கிடையே போய் அவர் படுத்துக்கொள்கிறார். இரண்டு தேசங்களுக்கும் சொந்தமில்லாத அந்த நிலத்தில் அந்த மனிதன் படுத்திருக்கும் இடத்தில் தான் டோபா டேக் சிங் இருக்கிறது என்று முடிக்கிறார் மண்டோ. வரலாறு தனிநபர்களின் துயரங்களையும் ஆசாபாசங்களையும் பொருட்படுத்துவதே இல்லை. பெரும் வரலாற்றுச் சுழிப்புகள் , உலகைப் பாதித்த நிகழ்வுகளின் பின்னணி

பப்பா பானோவ் பார்த்த கிறிஸ்து

கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்ட பின்மதிய வேளை அது . அந்தச் சிறிய ரஷ்ய கிராமத்தின் வீடுகள் , கடைகளில் விளக்குகள் ஏற்றப்பட்டு விட்டன . பண்டிகையின் சந்தோஷத்தால் குழந்தைகள் வெளிப்படுத்தும் எக்களிப்பும் அரட்டைகளும் வீடுகளின் மூடப்பட்ட ஜன்னல்களிலிருந்து கசிந்து கொண்டிருந்தன . அந்தக் கிராமத்தின் செருப்பு தைப்பவரான கிழவர் பப்பா பானோவ் , தன் கடைக்கு வெளியே இறங்கிவந்து கடைசியாக ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்தார் . மகிழ்ச்சியின் ஆரவாரச் சத்தங்கள் , ஒளிமின்னும் விளக்குகள் , காற்றில் வரும் கிறிஸ்துமஸ் உணவுகளின் சமையல் மணம் எல்லாம் அவருக்குத் தனது மனைவியோடும் குழந்தைகளோடும் கழித்த கிறிஸ்துமஸை ஞாபகப்படுத்தியது . சிரிப்பால் சுருங்கும் அவரது வழக்கமான உற்சாக முகம் , அவரது மூக்குக் கண்ணாடிகளுக்குப் பின்னால் தற்போது சோகமாகத் தெரிந்தது . ஆனாலும் , அவர் வீட்டுக்குள் புகுந்து ஜன்னலின் ஷட்டர்களை உயர்த்திவிட்டு , கரி அடுப்பில் காபிக் குடுவையை ஏற்றினார் . ஒரு முனகலுடன் தனது பெரிய சாய்வு நாற்காலியில் அமர்ந