Skip to main content

Posts

Showing posts from January, 2021

அபி ஊர்

  சென்னையில் நான் பார்த்திராத அபூர்வக் காட்சி அது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகான நாள். ப்ரவுனியை சாயங்கால நடைக்கு அழைத்துச் செல்லும் சீதாபதி நகர் பகுதியில் நான்கு சாலைகள் சந்திக்கும் முனையில், ஊரடங்கு காலத்துக்குப் பிறகு இன்றுவரை இயங்காத இஸ்திரி வண்டிக்குப் பக்கவாட்டில் இருக்கும சிமெண்ட் பலகை இருக்கையில் மூன்று மூதாட்டிகள் ஏகாந்தமாக அமர்ந்திருந்தார்கள். யார் வீட்டுக்கும் சொந்தமில்லாமல், வேப்பமரத்தின் நிழலில் அமைந்திருக்கும் இருக்கை அது. மூன்று பாட்டிகளும் வெற்றிலை போட்டு சாயங்காலத்துக்குள் விரைந்து கொண்டிருக்கும் பொழுதில் சன்னமாக ஆசுவாசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். வீடுகளில் பணிசெய்யும் மூதாட்டிகள் அவர்கள். இருக்கையின் ஓரத்தில் பையில் கரும்பு இருந்தது. அவர்கள் முகங்களில் இருந்த சுருக்க ரேகைகளும் மூக்குத்தியும் அசைபோடும் வாயும் வேப்பமரமும் சேர்ந்து அங்கு ஏற்படுத்தியிருந்த அமைதியும் அந்த இடத்தை விச்ராந்தியாக  ஆக்கியிருந்தது. அந்த மூன்று பெண்களும் வேப்பமரமும் அதிலிருந்து உதிர்ந்த இலைகள் படிந்த தெருவும் படர்ந்து கொண்டிருந்த மாலையும் நகரத்துக்கு வெளியே இருப்பதாக எனக்குத் தோன்றியது. அதற்குப

ரோஜாவின் பாதைகள் முடிவற்றது சூர்யா

மொழியின் மாபெரும் ஆரவாரத்துக்கு இடையே பகட்டு ஆபரண சரசரப்புகளுக்கு மத்தியில் ஒரு அமைதி அமர்ந்திருக்கும் உணர்வைத் தருபவை வே. நி. சூர்யாவின் கவிதைள். மிக எளிமையானதும் மிக அபூர்வமானதுமாக இருக்கும், ஆதியிலிருந்து கவிதை அடையத் துடிக்கும் இடங்களில் ஒன்றாக இருக்கும் அந்தப் பிரதேசத்தில் வசிப்பதற்குத் துணிச்சலாக வந்து சேர்ந்திருப்பவர் வே. நி. சூர்யா. அவர் எழுதுபவற்றை எனக்கு உடனுக்குடன் படிக்கும் சந்தர்ப்பத்தையும் வழங்கியிருக்கிறார்.  நேற்று அவரிடம் இருந்து வந்த கவிதையைப் படித்தபோது, கவிதையின் மையப் படிமமாக இருக்கும் ரோஜாவை வேறொன்றாக இடம் மாற்ற முடியுமா என்று திரும்பத் திரும்பப் படித்து யோசித்துப் பார்த்தேன். உலகிலேயே பலவீனமான ரோஜாவாகவே அது சூர்யாவின் கவிதையில் இடம்பிடிக்கிறது.  ஞாபத்தின் துயர் தந்த சுகவீனத்திலிருந்து பலவீனமாக ஆகியிருக்கும் ரோஜா தான் அது. அது பலவீன ரோஜா மட்டுமல்ல. திரும்பத் திரும்ப மொழியில் கவிதையில் பயன்படுத்தப்பட்டு தேய்க்கப்பட்ட ரோஜாவும் கூட.  எனக்கு ரோஜாவை இந்தக் கவிதையிலிருந்து இடம்பெயர்க்க வேண்டுமென்ற ஆவல். ஆனால், பலவீனமாகத் தெரிந்தாலும் இந்தக் கவிதையின் ஆதாரத்திலிருந்து பி

இதயத்தில் எழுந்து இதயத்தில் படியும் தூசுகள்

இயல்பிலிருந்து அதீதம்; சாதாரணத்திலிருந்து பயங்கரம்; எதார்த்தத்திலிருந்து அற்புதம் எனச் சுருக்கமான மூன்று விவரணைகளில் மராத்திய, ஆங்கில எழுத்தாளர் விலாஸ் சாரங்கின் கதைசொல்லும் குணத்தைச் சுட்டிவிடலாம். மராத்திய புதுக்கவிதைகள் இயக்கத்திலும் பங்குபெற்றவர் விலாஸ் சாரங்க். புத்தரின் சரிதையையொட்டி இவர் எழுதி தமிழிலும் ஏற்கெனவே வெளியாகியுள்ள 'தம்மம் தந்தவன்' நாவலை ஒரு கவிஞனின் சாதகமான அம்சங்களை உட்கொண்ட நாவல் என்று சொல்ல முடியும். 'கூண்டுக்குள் பெண்கள்' சிறுகதைகளில் பெரும்பாலானவை பழைய பம்பாயில் நிகழ்பவை. பம்பாயின் யாசகர்கள், பாலியல் தொழிலாளர்கள், கீழ் நடுத்தர வர்க்கத்தினரின் அன்றாடத்தை, ஆசாபாசங்களை, நிராசைகளை, ஏக்கதாபங்களை சாதாரணம் போலத் தொனிக்கும் மொழியில் ஆனால் வன்மையாகச் சொல்வதில் விலாஸ் சாரங் தமிழ் சிறுகதைக் கலைஞர் அசோகமித்திரனை ஞாபகப்படுத்துபவர். மிக எதார்த்தமாகக் கதையை உழுதுகொண்டிருக்கும் போதே மையத்தில் ஒரு அற்புதத்தை, அதிசயத்தை உருவாக்கிவிடுகிறார். அப்படி விலாஸ் சாரங்க் உருவாக்கும் அதிசயம் அல்லது அற்புதம் ஒரு கவித்துவப் படிமமாக ஆகி, வாசிப்பவருக்கு ஒரு புராணக்கதையை வாசிக்க

எனக்கெதற்கு பற்ற ஒரு கரம் எனக்கெதற்கு அள்ள ஒரு முகம்

இருண்ட நெடுஞ்சாலையின் விளக்குகளை சுடரவைக்கும் உனது குரல் ஒரு உறக்கமற்ற இரவில்தான் எனக்குப் பரிச்சயமானது எல்விஸ் பிரஸ்லி ‘உன்னுடன் காதலில் விழுவதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியவில்லை என்பதனால்’.   தனிமை சூழ்ந்தறையும் இருளில் தொலைவில் வெளிச்ச ஜன்னலாய் ஆதுரம் காட்டும் ஒரு மாடி அறை சற்று தூரம் கடந்தால் தொடங்கிவிடக்கூடிய காதலின் ஆதுர நிலப்பரப்பு  அதை நோக்கி  நான் பயணிக்கும் மகிழுந்து  உன் குரல் எல்விஸ் பிரஸ்லி ‘உன்னுடன் காதலில் விழுவதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியவில்லை என்பதனால்’  ‘உன்னுடன் காதலில் விழுவதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியவில்லை என்பதனால்’ தசைகளெங்கும் வலியாய் கனக்கும் தனித்த அந்த இரவில் நேசத்தின் பாடலை ஒற்றையாகவே பராமரிக்கும் ரகசியப் பேழையை உன் குரலிலிருந்து பரிசாகப் பெற்றேன் எல்விஸ் பிரஸ்லி ‘நான் இங்கே தரிக்கலாமா? உன்னுடன் காதலில் விழுவதைத் தவிர வழியில்லாமல் போனால் அது பாவம் ஆகிவிடுமா என்ன?’ ஒரு ராஜகூடலுக்கு இட்டுச்செல்லும் கம்பீர நெடுஞ்சாலை  முயக்கத்தின்போது அவள் முகத்தில் தோன்றும் எண்ணெய் மினுமினுப்பை வானத்திலிருந்து இறங்கும் விளக்குகளாக்கும் உன் பாடலின் விந்தை இருக்கும்போது

இயற்கை வரலாற்றில் செந்தடம் பதித்த ரோமுலஸ்

உயிரின வகைகளிலேயே பாம்புகளும், பிற ஊர்வன வகை உயிரினங்களும்தான் பொதுவாக மக்களிடம் அச்சத்தையும் விலக்கத்தையும் வெறுப்பையும் அதிகம் பெற்றவை. அதனாலேயே அவை அவர்களது அன்றாட எதார்த்தத்தில் இருந்தாலும் கட்டுக்கதைகளாகவும் புராணிகமாகவும் கடவுளர்களாகவும் இன்னொரு தளத்திலும் புழங்குபவை. தெய்வீகமாகவும் தொன்ம அடையாளமாகவும் இருக்கும் அதே வேளையில் அவை மனிதர்களின் வேட்டைக்கும் வன்முறைக்கும் தொடர்ந்து இலக்காகுபவை. பாம்புகள் மீது படிந்திருக்கும் அச்சத்தையும் அமானுஷத்தையும் தகர்த்து அவையும் நம்மைப் போன்ற உயிர்கள்தான் என்ற எண்ணத்தை உருவாக்கியவரே இந்தியாவின் பாம்பு மனிதன் என்றழைக்கப்படும் ரோமுலஸ் விட்டேகர். ஏராளமான முறை பாம்புக்கடி பட்டு, ஒரு கட்டைவிரலின் செயல்பாட்டையே இழந்த ரோமுலஸ் விட்டேகர், தனது உடலையே நஞ்சு எதிர்ப்பு மண்டலமாகப் படிப்படியாக மாற்றிக்கொண்டவர். உலகிலேயே அதிக பயத்தை அளிக்கும் பாம்புகளின் கண்களைப் பார்த்துப் பழகி அதை அன்றாடம் ஆக்கிக்கொண்டிருக்கும் சுவாரசியமான மனிதரின் கதை இந்தப் புத்தகம் வழியாக நம் முன் விரிகிறது. தனது நான்கு வயதிலேயே பாம்புகள் மீது ஈடுபாடு கொண்ட அந்த அமெரிக்கச் சிறுவன் ரோமுலஸ

பிறப்பின் சத்தம் கேட்கவில்லையா நண்பர்களே

காவ்யா வெளியிட்ட ‘நகுலன் கவிதைகள்’ தொகுப்பை மறுபடி மறுபடி புரட்டி முழுக்கவே எத்தனையோ முறை படித்திருக்கிறேன் . வேறு வேறு சூழல்கள் , மனநிலைகளுக்கேற்ப தனித்தனியே சில கவிதைகளையும் அடிக்கடிப் போய்ப் பார்த்திருக்கிறேன் . ஒருகட்டத்தில் நகுல னின் கவிதைகளில் இல்லாத பழமையும் பழக்கத்தின் அலுப்பும் பதிப்பில் தெரியத் தொடங்கியதையடுத்து நகுலன் இருந்தபோது வெளியிட்ட தனித்தனித் தொகுதிகளைப் படித்துப் பார்க்கும் ஆசை ஏற்பட்டது . நண்பர் அழகியசிங்கரைத் தொடர்பு கொண்டு அவர் பதிப்பித்த ‘இரு நீண்ட கவிதைகள்’ நூலைக் கேட்க முடிவுசெய்தேன் . அவரிடம் ‘சுருதி’ தொகுப்பு இருப்பதாகவும் அனுப்பிவைப்பதாகவும் சொல்லி உடனடியாக அனுப்பியும் வைத்தார் . நகுலன் கவிதையைச் சுற்றி உணரும் வெளியைப் பக்கங்களிலும் கொண்டு ஆதிமூலத்தின் அட்டைப்படத்துடன் நேர்த்தியாக வெளிவந்த தொகுதி அது . நகுலனின் கவிதைகளைப் புதிதாகப் படிக்கும் அனுபவத்தை இந்தத் தொகுதியில் உணர்ந்தேன் . தபாலில் வந்த சுருதி புத்தகத்தைத் திறந்தவுடன் வெளிப்பட்ட கவிதை ‘இடையில்’ என்ற தலைப்புடன் கண்ணில் பட்டது . “ ஏன் இப்படிக் குடிக்கிறீர்கள் ?” என்று கேட்டான் “ ஏன் இப்படி வா

ரப்பர் பந்து

கார் டயருக்கடியில்  கிழியவில்லை பிய்யவில்லை ரப்பர் பந்து நசுங்கியிருக்கிறது  இப்படி வசமாய் விடுவிக்க முடியாதவாறு நசுங்கியிருக்கும் பந்தை  நான் இதுவரை பார்த்ததில்லை எனினும் நான் தொட்டபோது பந்திலிருக்கும் விசை நான் இருக்கிறேன் என்றுணர்த்தி என் உச்சந்தலை தீண்டியது.

மறதிக்கு எதிரான நினைவின் கலகம்

  மறதிக்கு எதிராக நினைவின் கலகத்தை ஒத்தது அதிகாரத்துக்கு எதிராக மனிதன் நடத்தும் யுத்தம் என்ற மிலன் குந்தேராவின் கூற்றுக்கு மிகச் சரியாகப் பொருந்தும் ஆக்கம் எலி வீசல் எழுதிய ‘இரவு’ சுயசரிதை. 1928-ம் ஆண்டு தற்போது ருமேனியாவாக இருக்கும் நாட்டில் சிகெட் என்னும் சிறுநகரத்தில் பிறந்த எலி வீஸல் சிறுவனாக இருந்தபோதே யூத வதைமுகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பெற்றோரையும் சகோதரியையும் அங்கேயே பலிகொடுத்தவர். சென்ற நூற்றாண்டில் யூதர்கள் மீது ஹிட்லரின் படைகள் நடத்திய கொடூரங்களுக்கு சாட்சியாக இருக்கும் காத்திரமான ஆவணங்களில் ஒன்று ‘இரவு’. எலி வீஸல் எழுதி உலகப்புகழ் பெற்ற இந்த ஆக்கம் அவரது மனைவி மரியன் வீஸலால் பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்தில் புதிதாக மொழிபெயர்க்கப்பட்டு, நூலாசிரியரின் புதிய முன்னுரையுடன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். ‘இரவு’ என்ற தலைப்பிலிருந்தே ஆசிரியர் தனது நோக்கைத் தெளிவுபடுத்திவிடுகிறார். வாழ்வின் மீதிருந்த நம்பிக்கை வெளிச்சம் அத்தனையையும் சூறையாடிய இருட்டாக, சிகெட் நகரத்துக்குள் ஹிட்லரின் துணைநிலைக் கொலைப்படைகள் வந்து சூழ்வதற்குச் சற்று முன்னாலிருந்து சிறுவனா

தார்மிகமும் தன்னிறைவும் சேர்ந்த விவசாயிகளின் போராட்டம்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பெண்களும் நாடெங்கும் திரண்டு மாதக்கணக்கில் நடத்திய அமைதிப் போராட்டங்கள், அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் ஜனநாயக நம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம் இந்து மதவாதிகள் இஸ்லாமிய மக்கள் மீது தலைநகரிலேயே ஏவிய கலவரம், ஊடகங்கள் கண்திறந்து மௌனித்திருக்க அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளைக் கண்டும் காணாமல் இருந்த மத்திய அரசின் பாரபட்சம் என நெருக்கடிகள் தொடர்ந்து கொண்டேயிருந்த வருடம் 2020. இத்தகைய சூழ்நிலையில் சென்ற ஆண்டின் முடிவில் பிறப்பிக்கப்பட்ட மூன்று வேளாண்மைச் சட்டங்களை எதிர்த்து டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் புகைப்படங்களாகவும் படித்தும் பார்த்தும் எனது கொதிப்பு உயர்ந்துகொண்டிருந்தது, உயர்ந்து கொண்டிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் ஆளும் மத்திய அரசின் எதேச்சதிகாரம், மக்களின் ஒரு பிரிவினரிடத்தில் காட்டும் பாரபட்சம், ஏவிவிடும் ஜனநாயக விரோதச் செயல்களையே பெரும்பான்மை ஊடகங்களும் பிரதிபலித்து ஆதரிக்கும் நிலையில் இத

வலியிலிருந்து கிடைக்கும் முத்து சுதந்திரம்

இந்தியாவின் தென்கோடியில் மன்னார் வளைகுடாப் பகுதியில் எடுக்கப்படும் சங்குகள், இந்தியாவில் இன்னொரு மூலையில் இருக்கும் வங்கத்தில் மட்டுமே விலைபோகிறது. வங்கக் கைவினைக் கலைஞர்கள்தான் தூத்துக்குடி சங்கில் நகைகள் செய்வதற்குப் பெயர்போனவர்கள். தென்தமிழகத்தின் மூலையில் ஆழ்கடலில் கிடைக்கும் சங்கு, தேசத்தின் இன்னொரு மூலையில் நகையாகும் விந்தைக்கு இணையான நாவல் படைப்புதான் ‘சிப்பியின் வயிற்றில் முத்து’. இந்தியச் சுதந்திரத்துக்கு முன்னும் பின்னுமான காலகட்டத்தை மையமாக வைத்து, பாரம்பரியம் மிக்க தூத்துக்குடி மீனவர்களின் தொன்மையான வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் வங்க எழுத்தாளர் போதிசத்வ மைத்ரேய, அந்நியத்தன்மை தெரியாமல் இந்தப் படைப்பில் பிரதிபலித்துள்ளார். நவீன வங்க நாவல்களின் செவ்வியல் தன்மை ஏறிய, தமிழ் நாவல்களிலேயே இடம்பெறாத அபூர்வ தமிழ்ப் பண்பாட்டு அம்சங்களைக் கொண்ட நாவல் இது என்பதுதான் இதன் தனித்துவம். 1959-ல் மீன்வளத் துறை அதிகாரியாக கல்கத்தாவிலிருந்து தூத்துக்குடிக்குப் பணிமாற்றத்துக்குள்ளான நூலாசிரியர் போதிசத்வ மைத்ரேய, ஆழ்கடலில் மீன்களைத் தேடுவதுதான் தன் பணி என்று முன்னுரையில் கூறுகிறார். இலக்கிய

ஆழ்கடல் வேண்டாமா குருவிகளே

பெசண்ட் நகர் மெய்ஞான சபையின் புழக்கடை வாயிற்கதவை நோக்கி கரம்குவித்தாற் போல்  கடற்கரையில் இறந்து கிடக்கிறது பங்குனி கடலாமை  ஓட்டுக்குக் கீழே காயம்பட்டிருக்கும் அதன் பின்புறத்தை  காலை உணவுக்காகச் சூழ்ந்திருந்தன நாய்கள் அங்கே கடலுக்கும் சொந்தமின்றி  சற்றே அமர்வதற்கு மட்டுமே கரையென நீரும் நிலமும் தொடும் புள்ளியில் பறப்பதும் தரிப்பதுமாகத் திரிந்தது  சிறுகுருவிகளின் கூட்டம் அலைகளின் தலையைத் தொடுவது போல பரவளைவாகச் சுற்றி  கரையில் படர்ந்திருக்கும் அடப்பங் கொடிகளுக்குள் வந்து மீண்டும் நிற்கின்றன விருந்துண்ண வந்த நாய்களுக்கோ குருவிகளோடு ஓயாத ஊடல் துரத்தி வரும் குரைப்பைச் சீண்டுவதுபோல  மீண்டும் உயர்ந்தேகி நம் தலைக்குச் சற்று மேலே பறந்து கடல் வாயிலுக்குள் நுழைகின்றன  நாய்களை அலைகளை கடலை என்னை எதையும் கடப்பதுமில்லை எதையும் தொடுவதுமில்லை குருவிகள் சூரியன் பட்டு  மினுங்கி மடியும் அலையில் ஒருகணத்தில் விழுங்கப்படுவது போல மறைந்துவிடுகின்றன  மீண்டும் என் விம்மலில்  அந்தக் குருவிகளின் கருத்த உயிர்த்தீற்றல்கள் கடலுக்கு மேல் மடிந்தெழுந்து அணிவகுத்து  நாய்களோடு விளையாட கரைக்குத் திரும்பிவருகின்றன குருவிகளே 

விழிக்கச் செய் - ரவீந்திரநாத் தாகூர்

  எங்கே மனம் அச்சமின்றி தரிக்கிறதோ எங்கே சிரம் உயர்ந்து நிற்கிறதோ எங்கே அறிவு சுதந்திரமாக உலவுகிறதோ குறுகிய உள்விவகாரச் சுவர்களால்  துண்டுகளாக உடையாமல் உலகம் எங்கே திகழ்கிறதோ சத்தியத்தின் ஆழத்திலிருந்து எங்கே சொற்கள் வருகின்றனவோ களைப்புறாத முயற்சி, தனது புஜங்களை பரிபூரணத்தை நோக்கி எங்கே விரிக்கிறதோ செத்த பழக்கத்தின் அசமந்தப் பாலை மணலில் பகுத்தறிவின் தெள்ளிய ஓடை எங்கே தன் வழியைத் தொலைக்காமல் பாய்கிறதோ எப்போதும் விரியும் சிந்தனை, செயலுடன்  உன்னை உன் மனம் எங்கே வழிநடத்துகிறதோ விடுதலையின் அந்தச் சொர்க்கத்துக்குள்  என் தேசம் விழிக்கட்டும் தந்தையே.  ( கீதாஞ்சலி 35-வது பாடல்)