Skip to main content

Posts

Showing posts from October, 2022

தூத்துக்குடியின் நினைவாக இருந்த ஒரு முகம்

  தபால் தந்தி அலுவலர்களுக்கான ஆஸ்பத்திரியில் தாதியாகப் பணியிலிருந்து, டெலிபோன் ஆபரேட்டராக மாறிய என் அம்மாவுக்கு முதல் பணிமாறுதல் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடிக்குக் கிடைத்தது. 1983-ம் ஆண்டு அது. மூன்றாவது வகுப்பு கோடை விடுமுறையில் ரயிலில் நாங்கள் தூத்துக்குடிக்கு இடம்மாறினோம். அப்போது அந்த டிரான்ஸ்பரே மிகப்பெரிய மாறுதலாகப் பார்க்கப்பட்டது. அம்மா, அப்போது என் தங்கையைத் தனது வயிற்றில் சுமந்திருந்தாள். தங்கைதான் பிறக்கப் போகிறது என்று நிச்சயமாகவும் இருந்தாள். என்னை பாசமலர் படம் எல்லாம் பார்க்க வைத்துத் தயார் செய்திருந்தாள். நாங்கள் தூத்துக்குடிக்குக் குடியேறிய பின்னர், காய்கறிக் கடை, பலசரக்குக் கடை, சலூன், பாத்திரக்கடை, பேக்கரி, மின் பொருட்கள் விற்கும் கடை என எல்லா சின்ன, பெரிய கடைகளிலும் கல்லாவில் உட்கார்ந்திருப்பவர் மேல் டி. ஆறுமுகம் பிள்ளை என்ற பெயரில் மாலையிட்ட சதுர கருப்பு வெள்ளைப் புகைப்பட சட்டகத்தில் ஒரு முகத்தை எல்லா இடங்களிலும் பார்த்தேன். இவர் யாரு? எல்லா இடத்திலும் இவர் போட்டோ மாட்டியிருக்காங்களே? என்று அம்மாவிடம் கேட்டேன். அவர் டி. ஏ என்னும் தூத்துக்குடியின் புகழ்பெற

அகழ் இணையத்தளத்தில் வந்த எனது நேர்காணல் - விஷால் ராஜா

  புகைப்படம் : குட்டி ரேவதி கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனோடு கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக உரையாடல்களில் ஈடுபட்டு வருகிறேன் . இசைந்தும் முரண்பட்டும் அணுகியும் விலகியும் சிரித்தும் கசந்தும் பல்வேறு உரையாடல்கள் . கருத்துப் பரிமாற்றங்கள் .   அவரோடு நேரடிப் பரிச்சயம் ஏற்படுவதற்கு வெகு முன்னரே அவர் கவிதைகளோடு எனக்கு அறிமுகமும் நெருக்கமும் அமைந்துவிட்டன . எனவே “ அகழ் ” இதழ் சார்பாக அனோஜன் என்னிடம் , “ ஷங்கரை நேர்காணல் செய்ய முடியுமா ?” என்று கேட்டபோது மறுயோசனை ஏதும் தோன்றவில்லை . ஷங்கரிடம் இதை தெரிவித்தபோது அவரும் உடனே ஒப்புக் கொண்டார் .   இந்த நேர்காணல் சம்பந்தமாக எனக்கு பெரிய திட்டங்கள் இல்லை . ஆனால் நோக்கம் இருந்தது . இருபத்தியைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்தில் காத்திரமாக செயல்பட்டு வரும் ஷங்கர் எனும் ஆளுமை , வாசகர்களுக்கு முழுமையாக அறிமுகமாக வேண்டும் என விரும்பினேன் . அது சாத்தியமாகியிருப்பதாகவே படுகிறது . ஷங்கருடைய கவிதைகள் மட்டுமில்லாமல் கட்டுரை , மொழிபெயர்ப்பு முதலிய அவர் பிற ஆர்வங்களையும் தொடர