லிசா ஓ கெல்லி | தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் குடியேறிய தமிழ் பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தவர் பால் கலாநிதி. நரம்பியல் விஞ்ஞானியாக வேண்டும் என்ற பெரிய லட்சியத்துடன் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அறுவை சிகிச்சைப் பயிற்சி, ஆராய்ச்சிப் படிப்பு முடித்திருந்த அவருக்கு, 36 வயதில் அரிதான நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. புற்றுநோய் கண்டறியப்பட்ட பின்னரும் உடல் மோசமாகத் தளர்ந்துபோகும்வரை சிக்கலான அறுவைசிகிச்சைகளைச் செய்த அவர், சக்கர நாற்காலியில் இருந்தபடி தன் நினைவுக்குறிப்புகளை நூலாகவும் எழுதத் தொடங்கினார். மரணத்தை எப்படிப்பட்ட நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு ஓர் அரிய உதாரணம் அந்த நூல். 37 வயதில் காலமான பால் கலாநிதியின் மனைவி லூசி கலாநிதியின் நேர்காணல் இது… பால் கலாநிதியினுடைய புத்தகத்தின் வெற்றி உங்களை ஆச்சரியமடைய வைத்ததா? நினைத்தே பார்க்கமுடியாத வரவேற்பு கிடைத்தது. அது முறைப்படி வெளியாவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர், விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால் இறக்கும் ...