Skip to main content

Posts

Showing posts from July, 2023

எனது புதிய நூல் 'நான் பிறந்த கவிதை' முன்னுரை - என் கவிதைக்கான மூல உருவகம் நோக்கி

பள்ளிப்பருவத்திலிருந்து எனது முதல் தொகுதி வருவதற்கு முந்தைய காலம் வரையில் என்னைப் பாதித்த கவிதைகளை, அது பாதித்திருந்த போது இருந்த உணர்வுகளைச் சென்று பார்ப்பதுதான் 'நான் பிறந்த க-வி-தை' தொடரின் நோக்கம். அத்துடன் குறிப்பிட்ட கவிதை, கவிஞர் சார்ந்து இப்போதிருக்கும் எனது எண்ணங்களையும் ஒவ்வொரு கட்டுரையிலும் பகிர்ந்துகொள்வதாகவும் திட்டமிருந்தது. குறுந்தொகை கவிதை பற்றி முதல் கட்டுரையை எழுதி முடித்திருந்த நிலையில், நண்பர் சி. மோகன், பாதித்த கவிதையைப் பற்றி எழுதுவதை விட, பாதித்த கவிதைகளை வாசித்தபோது இருந்த மனநிலையையும் மூட்டத்தையும் சூழலையும் சென்று பார்த்து, மொழிக்குள் இழுத்துவர முடிந்தால் வித்தியாசமானதாக அமையும் என்று குறிப்பிடத்தக்க அளவிலான ஒரு தலையீட்டை நிகழ்த்தினார். தலைப்பில் ‘நான் பிறந்த கவிதை’யை ‘நான் பிறந்த க-வி-தை’ என்று மாற்றியவர் கவிஞர் தேவதச்சன். சி. மோகன் சொன்ன அடிப்படையை மனத்தில் கொண்டு அடுத்தடுத்த கட்டுரைகள் எழுதப்பட்டன. குறுந்தொகையிலிருந்து இத்தொடரை அம்ருதா மாத இதழில் பெருந்தொற்றுக்குச் சற்று முன்னர் தொடங்கினேன்.  இரண்டாவது அலைக்குப் பிறகு முடித்தேன். நவீன கவிதைகளை வாசிக

எம் டி வாசுதேவன் நாயரின் விமலா, ஜானகிராமனின் யமுனா அல்ல, கல்பற்றா நாராயணனின் சுமித்ரா அல்ல

எம் டி வாசுதேவன் நாயர் 90 வயதைக் கடக்கிறார் இன்று என்ற செய்தியைப் படித்தபோது ஒரு புரியாத கிளர்ச்சி எனக்குள் எழுந்தது. அட்சரமாகக்கூடத் தெரியாத மொழியில் எழுதும் ஒருவனின் பிறந்த தினம் எனக்கு ஏன் இப்படி ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது என்ற விசாரணையும் தொடங்கியது. மகாபாரதக் கதையில் அதுவரை ஈர்ப்பு ஏற்படுத்தியிராத கதாபாத்திரமான பீமனை ஒரு விளிம்புநிலைக் குரலாக, பிரமாண்டமான அளவில் எனக்குள் ‘இரண்டாம் இடம்’ நாவல் வழியாக நிலைநிறுத்தியவன் அவன் என்று எனக்குள் உறுதிப்படுத்திக் கொண்டேன். கவிதையின் மினிமலிஸ்ட் வெளிப்பாட்டை பரிபூர்ணமாகப் பயன்படுத்தி, கிட்டத்தட்ட மஞ்சு என்ற பெயரைப் போலவே புகைமூட்டமாக மறைந்துவிடும் மூடுபனியின் தன்மையிலேயே எழுதிய அந்தப் படைப்பை இன்று மீண்டும் படிக்கவேண்டுமென்று மனம் கேவியது. எம் டி வியின் மிக அளவில் சிறிய நாவலான ‘மஞ்சு’-வை மனத்தின் முணுமுணுப்புகள் என்றே ஒருவர் சொல்லிவிட முடியும். ஆனால் அதைக் கடந்துவிட முடியாது என்பதே அதன் சாதனை. ஒரு மலையில் ஏறுவதைப் போன்று சுயம் விசுவிசுக்கத்தான் இந்த நாவலைப்படிக்க முடியும். அல்லது அந்த விசுவிசுப்பு இருக்கும்போதுதான் இந்த நாவலை நாம

ஓவியர் நம்பூதிரி மறைந்தார்

மெட்ராஸ் கலை இயக்கம் உலகுக்கு வழங்கிய முதன்மையான ஓவியர்களில் ஒருவர் கருவாட்டு மனை வாசுதேவன் நம்பூதிரி ஆவார். கே. சி. எஸ் பணிக்கர் உருவாக்கிய சோழமண்டலம் ஓவியர் கிராமத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருந்தவர். தகழி சிவசங்கரன் பிள்ளை, வைக்கம் முகம்மது பஷீர், எம். டி. வாசுதேவன் நாயர் எழுதிய கதைகளுக்கும் அதில் வரும் கதாபாத்திரங்களுக்கும் அழியாத படிமங்களை அளித்தவை இவர் வரைந்த சித்திரங்கள். நம்பூதிரி என்ற கையெழுத்து ஒரு மலையாளியின் ஆழ்நினைவில் பதிந்த ஒன்றாக இன்றுவரை திகழ்கிறது. தற்போது 96 வயதாகும் ஓவியர் நம்பூதிரிக்கும் மலையாள நடிகர் மோகன்லாலுக்கும் உள்ள உறவைச் சொல்கிறது ‘கந்தர்வன் - டூ லெஜண்ட்ஸ்’ என்ற பெயரில் அகில் சத்யன் உருவாக்கிய குறும் ஆவணப்படம். மோகன்லால் நடிகராகப் புகழ்பெறத் தொடங்கியதிலிருந்தே அவருடனான உறவையும் சோழமண்டலம் ஓவியர் கிராமத்தில் மோகன்லால் தன் வீட்டுக்கு வந்தபோது முதல் முறை சந்தித்ததையும் நினைவுகூர்கிறார் நம்பூதிரி. ஓவியத்தில் தனக்கு இருக்கும் ஈடுபாட்டையும் முக்கியமான தருணங்களில் கோட்டுச் சித்திரங்களைக் கிறுக்குவதையும் பகிரும் மோகன்லால், நம்பூதிரியின் பல ஓவியங்களைப் பாதுகாத்து வர

சத்யா எப்படி உருவானான் - ராம் கோபால் வர்மா

ஐதராபாத்திலிருந்து மும்பைக்கு முதல் முறை வந்தபோது ரயிலிலிருந்து பார்த்த தாராவி சேரி என் கண்களைவிட்டு அகலவேயில்லை. அது ஒற்றைக்கூரை போல் நீண்டு இருந்தது. அங்கே மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதே அதிசயமாக இருந்தது. ரயில்கள் குறுக்கும் நெடுக்குமாக போய்கொண்டிருக்கும் பாதையில் தண்டவாளத்தில் இருந்து மூன்றடி இடைவெளியில் சின்னஞ்சிறு குழந்தைகள் தவழ்ந்து கொண்டிருப்பார்கள். இதுபோன்ற விஷயங்கள்தான் மும்பை என்ற நகரத்தின் இயல்பு என்னவென்பதை எனக்குப் புரியவைத்தன. ரங்கீலா திரைப்படத்தை எடுக்கத்தொடங்கியதிலிருந்தே மும்பையின் பொதுவான சூழ்நிலை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அவ்வப்போது நிழல் உலகம்(அண்டர்வேர்ல்ட்) என்ற பதம் எனது காதுகளில் விழும். செய்தித்தாள்களில் எழுதப்படுவதிலிருந்து அந்தப்பதம் தாவூத் இப்ராகிம் மற்றும் இன்னபிறரைக் குறிக்கிறது என்று தெரிந்திருந்தது. ஆனால் நிழல்உலகம் என்பது என்னவாக இருக்கும் என்பதை நான் யோசித்துப்பார்த்தது இல்லை. ஒரு தயாரிப்பாளரின் அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தபோது, அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஏதோ ஒரு கோஷ்டியினரால் பிரபலம் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதுதா