Skip to main content

Posts

Showing posts with the label காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்

லவ் இன் தி டைம் ஆஃப் காலரா

காதலின் அளவற்ற ஆற்றலையும் அதன் வசீகர ஈர்ப்பையும் சொல்லும் மகத்தான நவீன செவ்வியல் படைப்பு, காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸின் ‘லவ் இன் தி டைம் ஆஃப் காலரா’. அவர் ஒரு பியானோ இசைஞனாக அளவற்ற காதலை நறுமண இசையாகப் பரப்பிய பிரத்யேகப் படைப்புதான் இந்நாவல். கவித்துவத்தின் இசைமையும் எந்தக் கலாச்சாரத்தவரும் உணரும் அன்றாடத் தருணங்களின் மீதான கூர்மையான அவதானிப்பும் கொண்டது. காதல் என்ற உணர்வுநிலை தரும் நோய்த்தன்மை, ஆறாத ரண உணர்வு ஆகியவற்றோடு அதன் வீண்தன்மையையும் ஆழமாகப் பேசுவது. காதலில் இருக்கும், காதல்கொள்ளப்போகும் ஆண், பெண் இருவரும் சேர்ந்து படிக்க வேண்டியது. இந்த நாவலின் தொடக்கமே இப்படி இருக்கிறது. ‘அது தவிர்க்க முடியாதது: கசந்த வாதுமைகளின் வீச்சம் எப்போதும் நிறைவேறாத காதலுக்கு நேரும் விதியைத்தான் அவனுக்கு ஞாபகப்படுத்தும்.’ பிராயத்தில் பித்துப் பிடித்ததைப் போலத் தொடங்குகிறது நாயகன் ப்ளோரென்டினா அரிஸாவின் காதல். நாயகி பெர்மினா டாசா அவளது தந்தையால் வேறு ஊருக்கு அழைத்துச்செல்லப்பட்ட பிறகும், கவித்துவமான கடிதங்களால் பற்றியெரிகிறது. ஒருகட்டத்தில் பிள்ளைப் பருவக் கனவுதான் தனது காதல் என்ற முடிவுக்கு நாயகி ...

அழகியை ஏன் உறங்க வைத்தார் மார்க்வெஸ்?

ஆமாம். இந்த உலகிலேயே அழகானவற்றில் ஒன்று பெண்ணின் கண்கள் என்று நானும் கருதுகிறேன். காப்ரியேல் கார்சியா மார்க்வெஸின் ‘ The Airplane of the Sleeping Beauty ’ சிறுகதையில் பக்கத்து இருக்கையில் உறங்கும் அழகியின் கண்களை கதைசொல்லி பார்த்து ரசிப்பது போன்ற அனுபவத்தை நானும் விரும்பிப் பெற்றிருக்கிறேன். நான் உபாசித்த சில பெண்கள் உறங்கும்போது, அந்தப் பூரித்துப் பருத்த கண்கள் இமைகளால் மூடியிருப்பதைப் பார்த்து நிறைந்திருக்கிறேன். பசிய வாதுமைகள் போல பக்கவாட்டு இருக்கையில் உறங்கும் அழகியின் கண்கள் இருந்ததாக வர்ணிக்கிறார் மார்க்வெஸ். ஓர் அழகிய பெண்ணைவிட இயற்கையில் அதிக அழகானதென்று நான் வேறெதையும் நம்பவில்லை என்று இந்தக் கதையில் மார்க்வெஸ் விவரிக்கிறார். இந்தக் கதை முழுவதும் கதைசொல்லியைச் சந்திக்கவே செய்யாத அந்த அழகியை கதை முழுவதும் வர்ணித்துத் தீரவில்லை மார்க்வெஸுக்கு. கதைக்கு வெளியே உறங்கும் பெண்ணை அப்படி வெறித்துப் பார்க்க யாருக்கும் அனுமதி கிடையாது. கதாசிரியனுக்கு அந்த அனுமதி இருக்கிறது. அன்றாட எதார்த்தத்தில் வலுவாக நின்று அற்புதங்களின் நறுமணப் புகையை அவ்வப்போது பரவவிடும் மார்க்வெசின் முத்திரைத் தன்ம...

தந்தையிடமிருந்து நாவலைப் பறித்த மார்க்வெஸ்

காப்ரியேல் கார்சியா மார்கவெஸின் சுயசரிதையான 'லிவிங் டு டெல் தி டேல்' -ல் அவரது அப்பாவுக்கும் அம்மாவுக்குமான காதல் கதையைப் படிக்கத் தொடங்கும்போதே, 'லவ் இன் தி டைம் ஆப் காலரா' கதையின் நாயகனும் நாயகியும் எனக்குத் தெரியத் தொடங்கிவிட்டார்கள். மார்க்வெஸின் பாட்டி அவரது 14 வயதில், ஒரு பள்ளி ஆசிரியருடன் ஏற்பட்ட உறவின் விளைவாகப் பெற்ற குழந்தைதான் மார்க்வெசின் தந்தையார். மார்க்வெசின் அம்மாவைப் பெற்றவர்கள் இந்தக் காரணத்தாலேயே அவரது தந்தையுடனான காதலைக் கடுமையாக எதிர்த்திருக்கின்றனர். 'லவ் இன் தி டைம் ஆப் காலரா' நாவலின் கதாநாயகனும், தந்தை பெயரை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய நிலைமையில் இருப்பவன்தான். மார்க்வெஸ், தனது தந்தையைப் பெற்ற பாட்டி பற்றி மிகச் சுதந்திர மனம்படைத்த வெள்ளைப் பெண் என்று பெருமையுடன் கூறுகிறார். மூன்று ஆண்களுடன் குடும்பமாக வாழாமல் ஐந்து மகன்கள், இரண்டு மகள்களைப் பெற்றெடுத்தவர் என்றும் சொல்லிச் செல்கிறார். தந்தையின் காதல் களியாட்டங்களையும் மார்க்வெஸ் விட்டுவைக்கவில்லை. தந்தை வழிப் பாட்டியிடமிருந்தே மார்க்வெஸ் லஜ்ஜையற்ற நடையையும் கண்களையும் பெற்றிருக்க வேண்டும...

காப்ரியேல் கார்சியா மார்க்வேஸின் அம்மா

காப்ரியேல் கார்சியா மார்க்வெஸின் படைப்புலகத்துக்குள் அறிமுகமாக விரும்பும் ஒரு தமிழ் வாசகனுக்கு சரியான நுழைவாயிலென அவர் எழுதிய ‘செவ்வாய்கிழமை மதியத் தூக்கம்’ கதையைச் சொல்வேன். அதனால்தான் போலும், அக்கதை தமிழில் நிறைய பேரால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆளையே கிறங்கடித்து மயங்க வைக்கும் தென்தமிழகத்து வேனல் பிரதேசத்தின் சுடும் வெக்கை, மனிதர்களின் அகத்திலும் ஆளுமையிலும் பரவியிருக்கும் தன்மையோடு அடையாளம் காணக்கூடிய கதை அது.  வறுமை காரணமாக ஊருக்குள் திருடவந்து, ஒரு விதவையின் வீட்டுக்கதவை இரவில் திறக்க முயலும்போது, தற்காப்புக்காக அந்த விதவையால் சுடப்பட்டு இறந்துபோய், புதைக்கப்பட்ட திருடனைத் தேடி அவனது தாயும் தங்கையும் அந்த ஊருக்கு அடுத்த வாரம் வருவதுதான் கதை. அவர்கள் கையில் புதைக்கப்பட்ட மகனுக்கும், அண்ணனுக்கும் வைப்பதற்கு தண்ணீர் தெளிக்கப்பட்ட மலர்க்கொத்து இருக்கிறது. அடுமனை அடுப்புகள் போல வீடுகள் கொதித்துக் கொண்டிருக்கும் செவ்வாய்கிழமை மதியநேரத்தில் அவர்கள் அந்த ஊருக்கு ரயிலில் வருகிறார்கள். ரயில் பயணம் சிறுகதையின் முன்பகுதியில் விவரிக்கப்படுகிறது. இறங்கவேண்டிய ரயில் நிலையத்தில் அம்மா த...

மார்க்வெஸ்ஸின் லஜ்ஜையற்ற கண்கள்

ஷங்கர்ராமசுப்ரமணியன் காதலின் அளவற்ற ஆற்றலையும் அதன் வசீகர ஈர்ப்பையும் சொல்லும் மகத்தான நவீன செவ்வியல் படைப்பு , காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸின் ‘ லவ் இன் தி டைம் ஆஃப் காலரா ’. அவர் ஒரு பியானோ இசைஞனாக அளவற்ற காதலை நறுமண இசையாகப் பரப்பிய பிரத்யேகப் படைப்புதான் இந்நாவல் . கவித்துவத்தின் இசைமையும் எந்தக் கலாச்சாரத்தவரும் உணரும் அன்றாடத் தருணங்களின் மீதான கூர்மையான அவதானிப்பும் கொண்டது . காதல் என்ற உணர்வுநிலை தரும் நோய்த்தன்மை , ஆறாத ரண உணர்வு ஆகியவற்றோடு அதன் வீண்தன்மையையும் ஆழமாகப் பேசுவது . காதலில் இருக்கும் , காதல்கொள்ளப்போகும் ஆண் , பெண் இருவரும் சேர்ந்து படிக்க வேண்டியது . இந்த நாவலின் தொடக்கமே இப்படி இருக்கிறது . ‘ அது தவிர்க்க முடியாதது : கசந்த வாதுமைகளின் வீச்சம் எப்போதும் நிறைவேறாத காதலுக்கு நேரும் விதியைத்தான் அவனுக்கு ஞாபகப்படுத்தும் .’ பிராயத்தில் பித்துப் பிடித்ததைப் போலத் தொடங்குகிறது நாயகன் ப்ளோரென்டினா அரிஸாவின் காதல் . நாயகி பெர்மினா டாசா அவளது தந்தையால் வேறு ஊருக்கு அழைத்...