Skip to main content

Posts

Showing posts from December, 2014

ஞானக்கூத்தன் நேர்காணல் இடிபாடுகளுக்கிடையே எனது கவிதை இருக்கிறது

எள்ளல் மற்றும் சிரிப்பை தமிழ் புதுக்கவிதைக்குத் தந்தவர் அரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் ஞானக்கூத்தன். புதுக்கவிதை வடிவத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடனும், உற்சாகத்துடனும் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவருபவர். விஷ்ணுபுரம் விருது   அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் இது.. தி இந்து கலை இலக்கியம் இணைப்பிதழில் வெளியான நேர்காணலின் எடிட் செய்யப்படாத வடிவம் இது.. உங்களது சமீபத்திய பென்சில் படங்கள் கவிதை நூலில் உங்களது குழந்தைப்பருவம் மற்றும் இளம்பிராயத்து சித்திரங்கள் நிறைய இடம்பெறுகின்றன.. ஆறு, கடல், மரங்கள், விலங்குகள், கோவில்கள் எல்லாமே ஒரு குழந்தைக்கு முதல் முறையாக அறிமுகமாகிறது. அவைதான் மனதில் ஆழமாகப் பதிகிறது. அதிலிருந்து தான் உலகத்தை ஒரு குழந்தை புரிந்துகொள்கிறது. வளர வளர இன்னொரு உலகம் அந்தக் குழந்தைக்கு அறிமுகமாகிறது. ஏற்கனவே மனதில் இருக்கும் உலகத்தை ஒப்பிட்டுப் பார்த்து அது இன்னொரு உலகத்தைப் புரிந்துகொள்கிறது. வாலிப வயதில்  எதிர்பாலினம்,குடும்பம், அதைக் கட்டுப்படுத்தற சமூகம், சமூகத்தைக் கட்டுப்படுத்தற நாடு,மொழி எல்லாம் பற்றிய அறிவு ஏற

மிச்சம் உள்ள ஆவி

 ஷங்கர்ராமசுப்ரமணியன்  திருநெல்வேலி   டவுணில்   சந்திப்பிள்ளையார் முக்கின்   இடதுபுறம்  உள்ளடங்கி இருக்கும்   கல்லூர் பிள்ளைக் கடையில்   பின்னரவில்   பரிமாறப்படும்   இட்லியை விள்ளும்போது   ஆவி இப்போதும் வெளியேறுகிறது   இட்லியில் ஆவியைப் பார்த்து   ரொம்ப நாளாகி விட்டது   ஆவிகள் என்று சொன்னால்   அர்த்தம் விபரீதமாகி விடும்   இருந்தும்   திருநெல்வேலியின்   ஆவி   இட்லியில் மிச்சம் இருப்பதாகச்   சொல்லிக் கொள்ளலாம்.