Skip to main content

Posts

Showing posts with the label ரோமுலஸ் விட்டேகர்

மனிதனின் மூளை கொஞ்சம் வேகமாகத் தனது நலனுக்காக வளர்ந்திருக்கிறது - ரோமுலஸ் விட்டேகர்

சென்னையின் பெருமிதங்களில் ஒருவர் ரோமுலஸ் விட்டேகர். பிறப்பால் அமெரிக்கர்; மனதால் தமிழர். தனது நான்கு வயதிலேயே பாம்புகள் மீது ஈடுபாடு கொண்ட ரோமுலஸ், சென்னை கிண்டியில் உள்ள பாம்புப் பண்ணை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப் பண்ணை, ராஜநாகங்களை ஆராயும் ஆகும்பே மழைக்காடுகள் ஆராய்ச்சி மையம், இருளர் கூட்டுறவு அமைப்பு போன்ற முக்கியமான அமைப்புகளை உருவாக்கியவர். 77 வயதில் சென்னைக்கு வெளியே செங்கல்பட்டில் ஒரு சிறிய வனம் சூழ்ந்த வீட்டில் இருளர் குடியிருப்பு மக்களுக்கு நெருக்கமாக வாழ்ந்துவருகிறார். இவரது மனைவி ஜானகி லெனின், கானுயிர்கள் பற்றி சுவாரஸ்யமான கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதியவர். மனிதர்கள் ஆதிகாலம் தொட்டு அச்சத்துடனேயே பார்க்கும் பாம்புகளுடனான நட்பு உங்களுக்குக் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது. அதற்கான பின்னணி என்ன? அதிர்ஷ்டவசமாக எனக்குக் கிடைத்த அம்மா டோரிஸ் நோர்டன் சட்டோபாத்யாய, எனது ஆர்வத்தை ஊக்குவித்தார். பெரும்பாலான அம்மாக்கள் அப்படிக் கிடையாது. நியூயார்க்கில் நாங்கள் வசித்தபோது, விஷமில்லா அமெரிக்க கார்டன் வகை பாம்பை வீட்டுக்குக் கொண்டுவந்தேன். ‘வாவ், எவ்வளவு அழகு’ ...

இயற்கை வரலாற்றில் செந்தடம் பதித்த ரோமுலஸ்

உயிரின வகைகளிலேயே பாம்புகளும், பிற ஊர்வன வகை உயிரினங்களும்தான் பொதுவாக மக்களிடம் அச்சத்தையும் விலக்கத்தையும் வெறுப்பையும் அதிகம் பெற்றவை. அதனாலேயே அவை அவர்களது அன்றாட எதார்த்தத்தில் இருந்தாலும் கட்டுக்கதைகளாகவும் புராணிகமாகவும் கடவுளர்களாகவும் இன்னொரு தளத்திலும் புழங்குபவை. தெய்வீகமாகவும் தொன்ம அடையாளமாகவும் இருக்கும் அதே வேளையில் அவை மனிதர்களின் வேட்டைக்கும் வன்முறைக்கும் தொடர்ந்து இலக்காகுபவை. பாம்புகள் மீது படிந்திருக்கும் அச்சத்தையும் அமானுஷத்தையும் தகர்த்து அவையும் நம்மைப் போன்ற உயிர்கள்தான் என்ற எண்ணத்தை உருவாக்கியவரே இந்தியாவின் பாம்பு மனிதன் என்றழைக்கப்படும் ரோமுலஸ் விட்டேகர். ஏராளமான முறை பாம்புக்கடி பட்டு, ஒரு கட்டைவிரலின் செயல்பாட்டையே இழந்த ரோமுலஸ் விட்டேகர், தனது உடலையே நஞ்சு எதிர்ப்பு மண்டலமாகப் படிப்படியாக மாற்றிக்கொண்டவர். உலகிலேயே அதிக பயத்தை அளிக்கும் பாம்புகளின் கண்களைப் பார்த்துப் பழகி அதை அன்றாடம் ஆக்கிக்கொண்டிருக்கும் சுவாரசியமான மனிதரின் கதை இந்தப் புத்தகம் வழியாக நம் முன் விரிகிறது. தனது நான்கு வயதிலேயே பாம்புகள் மீது ஈடுபாடு கொண்ட அந்த அமெரிக்கச் சிறுவன் ரோமுலஸ...