Skip to main content

Posts

Showing posts from May, 2023

கவிதை என்னை ஏன் ஈர்க்கிறதென்றால்… – சார்லஸ் சிமிக்

சிந்திப்பதென்றால் என்னவென்பதை நாம் புரிந்துகொள்ளும்வரை கவிதை என்றால் என்னவென்பதையும் நாம் புரிந்துகொள்ளவே போவதில்லை என்கிறார் ஹைடக்கர் . அவர் மேலும் சொல்கிறார் . மிக சுவாரஸ்மான விஷயம் என்னவெனில் , சிந்திப்பது இயற்கையாகவே சிந்திப்பதிலிருந்து வேறுபட்ட ஒன்று , விரும்புவதிலிருந்து வேறுபட்ட ஒன்று . இந்த வேறுபட்ட ஒன்றைப் பிடிக்கவே பொறிவைக்கிறது கவிதை .   000 நமது ஆழ் அனுபவங்கள் அனைத்தும் மொழியற்றது என்றே எனது உள்ளுணர்வு கூறுகிறது . காட்சிகள் இருந்தாலும் பார்ப்பதற்கும் சொல்வதற்குமிடையில் வார்த்தைகளால் விவரிப்பதற்குமான இடைவெளியை விவரிப்பதற்கு வார்த்தைகள் இருக்காது , உதாரணத்துக்கு . வார்த்தைகளுக்குள் இடமுடியாததைக் குறிப்பதற்கு மொழிவழியாகக் கண்டுபிடிக்கும் பாதைகளில்தான் கவிதையின் வேலையாக உள்ளது . 000 ஒவ்வொரு புதிய உருவகமும் ஒரு புதிய சிந்தனை , மெய்மை சார்ந்த புராணிகத்தின் ஒரு விள்ளல் . கலையின் அறியாத அம்சத்தின் ஒரு பகுதி உருவகம் , எனினும் சத்தியத்தைத் தேடும் மகத்தான வழி அதுதான் என்பதில் நான் நிச்சயமாக இருக்கிறேன்

தங்கப்பூண் போட்டிருந்தாலும் பொய் பொய்தான்

அன்றாட எதார்த்தமே புனைவின் இதழ் இதழான அடுக்குகளையும் மாய உருவையும் கொள்ளும்போது, கற்பனை மற்றும் சிருஷ்டித்துவம் தனது விதைகளை இழந்து மலட்டுத்தனம் கொள்கிறது. நம் கால சமூக அரசியலின் உருவகம் இதுதான். சோழரின் செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவப்போகிறார்கள் ; திருவாவடுதுறை ஆதீனம் தயாரித்துக் கொடுத்து, மவுண்ட்பேட்டன் அதிகார பரிமாற்றத்தின் அடையாளமாக நேருவுக்கு அளித்த செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவப்போகிறார்கள்; நேருவுக்கு அளித்த செங்கோலின் மாதிரி ஒன்று நாடாளுமன்றத்தில் நிறுவப்படுகிறது ; குருமூர்த்தியும் பத்மா சுப்ரமணியனும் சொன்னார்கள்; மோடி கேட்டார். ரமேஷ் பிரேதன், தஞ்சைப் பெரியகோயில் கட்டப்படுவதற்கு முன்னால் பாம்பாகப் பிறந்த ஒரு பெண் பல்வேறு பிறவிகளை எடுக்கும் கதையாக எழுதிய ‘நல்லபாம்பு நீல அணங்கின் கதை’யை விட மிக சுவாரசியமான மேஜிக்கல் ரியலிசக் கதையை நம் தமிழ்மக்கள் கடந்த சில நாட்களாக நுகர்ந்துவருகிறோம். சோழனின் செங்கோல் நமதுடலின் எல்லா துளைகளிலும் செய்தியாக இறங்கிக் கொண்டிருக்கிறது. புராணிகங்களின் மீது நம்பிக்கையிழந்து அறிவியலிலும் கணிதத்திலும் தொழில்நுட்பத்திலும் மீட்சிதேடி இந்த உலகின

பின்....மலர்

என்னைச் சிதையிலிட்டு எரித்தனர் என் மூளை களிம்பென வெண்பழுப்பாய் சாம்பல் மேட்டின் மீது திரண்டது நோயில் நான் உறங்கிய போர்வையில் மிச்ச எலும்புகளைப் பொறுக்கி ஆற்றில் விட்டனர் அப்போது ஆறும் ஆற்றின் கரையிலிருந்த மரங்களும் எப்போதுமான ஒரு அந்தியில் உறைந்தன நான் எரிந்த குழியில் நீரூற்றி தானியம் உதிர்த்தனர் நான் முளைப்பேன் காற்றிலாடும் கதிராவேன் நான் சூரியன் ஆவேன் சுதந்திரமும் அழகும் மேனியில் பூரிக்கும் சின்னஞ்சிறு குருவியாவேன் நான் குதிரை ஆவேன்

என் வாழ்வின் நடுவில் – ததௌஸ் ரோசவிச்

    இரண்டாம் உலகப்போர் வெடித்து 60 ஆண்டுகளாகிவிட்டது இப்போது. நான் ஒரு கவிஞன். எனக்கு 77, 78 வயதாகிறது. ஒருநாள் கவிஞன் ஆவேன் என்ற அற்புதத்தில், பயணத்தைத் தொடங்கியபோது எனக்கு நம்பிக்கை கொள்ள முடிந்ததேயில்லை. துர்க்கனவுகள் மற்றும் ஆவிகளால் எழுப்பப்பட்டு இரவுகளில் எப்போதாவது விழிக்கும்போது “நான் கவிஞன் ஆகலாம்” என்ற எண்ணத்தால் பீடிக்கப்பட்டேன்…நான் ஆவிகளை இருட்டை மரணத்தை விரட்டுவேன்…நான் கவிதையின் வெளிச்சத்துக்குள் புகுவேன், கவிதையின் இசைக்கு, கவிதையின் நிசப்தத்துக்கு. நான் இந்த வார்த்தைகளை எழுதும்போது, அம்மாவின் அமைதியான மனம்நிறைந்த கண்கள் என்மீதுள்ளன. மறுமையிலிருந்து அவள் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள், நான் நம்பாத மறுபக்கத்திலிலிருந்து. இவ்வுலகிலோ இன்னொரு போர் மூண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் முடிவுக்கப்புறம் இன்றுவரை தொடர்ந்து மூண்ட நூற்றுக்கணக்கான போர்களில் ஒன்று அது. அரை நூற்றாண்டாக நான் கட்டியெழுப்ப முயன்ற உலகம் வீடுகள் மருத்துவமனைகள் மற்றும் ஆலயங்களின் கட்டிடக் குவியலுக்கிடையே நொறுங்கிவிழுந்துகொண்டிருக்கிறது…மனிதனும் கடவுளும் செத்துகொண்டிருக்கிறார்கள், மனிதனும் நம்

நான் ஒரு கவிஞன் - ததௌஸ் ரோசவிச்

    இப்போது , இந்த வார்த்தைகளை நான் எழுதும்போது , என் அம்மாவின் கண்கள் என்மீது நிலைத்திருக்கின்றன . அந்தக் கண்கள் , மனம்நிறை கவனத்துடனும் கனிவுடனும் என்னைக் கேட்காமல் கேட்கின்றன . “ எனது செல்லமே , உன்னை எது தொந்தரவு செய்கிறது … ?” ஒரு புன்னகையுடன் நான் பதிலளிக்கிறேன் . “ ஒன்றும் இல்லை ... நல்லபடியாகவே சென்றுகொண்டிருக்கிறது , அம்மா ” . “ ஆனாலும் , என்ன விஷயமென்று சொல்லேன் ” என்று அம்மா கேட்கிறாள் . நான் என் தலையை திருப்பி , ஜன்னல்வழியாகப் பார்க்கத் தொடங்குகிறேன் . அம்மாவின் கண்களால் எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது பிறப்பைப் பார்க்க முடிகிறது வாழ்க்கை முழுக்கவும் ‘ மறு உலகத்திலிருந்து ’ சாவுக்குப் பிறகும் அவள் எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது . அவளது மகனை அவர்கள் ஒரு கொலை எந்திரமாகவோ அல்லது ஒரு விலங்காகவோ மாற்றிவிட்டாலும் , ஒரு கொலைகாரனுடைய தாயின் கண்கள் அவனை நேசத்தோடுதான் பார்த்துக் கொண்டிருக்கிறது … பார்த்துக் கொண்டிருக்கிறது .   எப்போது ஒரு அம்மா தனது கண்களை எடுக்கிறாளோ , அவளது குழந்தை திரியத் தொடங்குகிறது