Skip to main content

Posts

Showing posts from August, 2019

பத்திரிகையாளர் மார்க்வெஸ்

உலகம் கொண்டாடிய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல் வழியாகவோ, நோபல் பரிசின் வழியாக அறியப்படுவதை விடவோ பத்திரிகையாளனாக அறியப்படுவதையே கூடுதல் பெருமையாகக் கருதிய காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் எழுதிய இதழியல் கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு ‘தி ஸ்காண்டல் ஆஃப் தி செஞ்சுரி அண்டு அதர் ரைடிங்க்ஸ்’. 1982-ல் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலுக்காக நோபல் பரிசை வாங்கி மாய யதார்த்தம் என்பதை உலகம் முழுக்கப் பிரபலமாக்கிய மார்க்வெஸ், அற்புதமான விஷயங்களையும் சாதாரண தொனியில் சொல்லக்கூடிய புனைகதைத் திறனை அவரது பாட்டியிடமிருந்து எடுத்துக்கொண்டதாகச் சொல்பவர். இந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது அந்தத் திறனை அவருடைய பத்திரிகைப் பணியும் சேர்ந்தே அவரிடம் மேம்படுத்தியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு செய்திக் கட்டுரையும் ஒரு சிறுகதையும் எந்த இடத்தில் பிரிகின்றன என்பதையும் பத்திரிகையாளராக மறுவரையறை செய்திருக்கிறார் மார்க்வெஸ். எண்கள், துல்லியமான அவதானிப்பு, விவரங்கள், அன்றாட எதார்த்தத்தினூடான இயல்பான ஊடாட்டம், நகைச்சுவை, மனத்தடையின்மையோடு தன் பத்திரிகை கட்டுரைகளைச் சிறந்த இலக்கிய அனுபவமாக

மனங்களின் பேரிடர் தண்ணீர்

தலைக்கு மேல் அகன்றிருக்கும் பேரிடரின் குடையின் கீழ், யாருடைய தனிப்பட்ட துயரங்களுக்கும் பெரிய இடமேயில்லை. ஆனாலும், ஒவ்வொரு அத்தியாயத்திலும் இன்னும் மோசமானவொன்று ஏதோ வரவுள்ளது என்ற உணர்வை ஏற்படுத்துகிறது! ஒரு பொருள் எல்லாரும் பங்கிடும் அளவுக்கு இல்லாமல் போகும்போதுதான் அதன் அரிய தன்மையை அனைவரும் உணர்கிறோம் . இருபதாண்டுகளுக்கு முன்னர் சென்னையில் வறட்சி ஏற்பட்டபோது , ஓய்வேயற்றுப் பணியாற்றிய ஓட்டுனர்களைக் கொண்டு ஓட்டப்பட்டு , விபத்துகளுக்குக் காரணமாகவும் அடையாளமாகவும் இருந்த தண்ணீர் லாரிகள் மீண்டும் சென்னையின் குறுகிய தெருக்களையெல்லாம் ஆக்கிரமித்துள்ளன . ஒரு குடும்பத்துக்கு 15 நாட்களுக்குத் தேவைப்படும் 9,000 லிட்டர் தண்ணீரை வாங்குவதற்கு 700 ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்கும் நிலை உள்ளது . சாலையில் லாரிகளிலிருந்து வழிந்த நீரெல்லாம் சேர்ந்த சின்னக் குட்டைகள் , அண்ணா சாலையின் நடுவே நீண்டிருக்கும் நீர்க்கோடுகளைப் பார்க்கும்போது சமீப காலமாக மனம் பதைக்கத் தொடங்கியுள்ளது . சேர்ந்து வாழ்வதற்கான அனுசரணையும் சக

கல் முதலை ஆமைகள்

(   எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதிய முன்னுரை இது. ‘தொலைந்தவற்றின் தோட்டம்’ என்ற தலைப்பில் புத்தகத்தில் உள்ளது.இதற்கு அட்டைப்பட ஓவியத்தை வரைந்திருப்பவர் பெனிட்டா பெர்சியாள்.) பழைய குற்றாலம் அருவியை ஒரு சாயங்கால வேளையில் , வெளிச்சத்திலேயே பார்த்து அனுபவித்து குளித்துவர நானும் எனது மருமகனும் தென்காசியிலிருந்து வேகமாக பைக்கில் கிளம்பினோம் . போகும்போதே ஒரு சுற்றுலா வேனைக் கடக்கும்போது , ஒரு கன்றுக்குட்டியை உரசிச் சென்றோம் . அது பரபரப்பை உடலில் ஏற்படுத்தியிருந்தது . அவன் ஒரு குளியலை முடித்துவிட்டுப் பத்திரமாகத் திரும்பிய பிறகு , பத்திரம் பத்திரம் என்று நினைத்துக் கொண்டே தான் அவனிடம் எனது மணிபர்சையும் பைக் சாவியையும் என் சட்டையில் பொதிந்து கொடுத்தேன் . ஆனால் அருவிக்குள் போகும்போதே , ஏதோ பதற்றம் இருந்தது . சிமிண்ட் மேடையில் ஈரத்தில் நிற்கும் அவனைப் பார்த்தபடியே தான் குளித்தேன் . நிதானமாக மனம் இல்லை . திரும்பிவந்து , பத்திரமா