Skip to main content

Posts

Showing posts from February, 2012

தமிழக முதலமைச்சருக்கு சுப.உதயகுமாரின் பகிரங்க கடிதம்

அன்புள்ள அம்மா , வணக்கம் . தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து தாங்கள் நடத்திவரும் நல்லாட்சிக்கும் எனது மனமார்ந்த நன்றியினை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன் . கூடங்குளம் அணுமின்நிலையப் பிரச்னையில் 2001, செப்டம்பர் மாதம் எங்களை அழைத்து , நேரில் சந்தித்து , எங்கள் கருத்துகளை கரிசனத்தோடு கேட்டு , எங்கள் மக்களின் அச்சங்கள் , பயங்களை அகற்றும்வரை , அணு மின்நிலைய வேலைகளை நிறுத்திவைக்கச் சொல்லி அமைச்சரவையைக் கூட்டி ஒரு தீர்மானமும் நிறைவேற்றி , உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என்றும் உள்ளூர் மக்களின் திருப்தி எனக்கும் எனது அரசுக்கும் முக்கியம் என்றும் உறுதியளித்தீர்கள் . எங்கள் மக்கள் தங்கள் கருத்துகளை சனநாயக முறையில் அறவழியில் பதிவுசெய்ய அனுமதித்தீர்கள் . இவற்றுக்கெல்லாம் நாங்கள் எங்கள் ஆழமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் . கூடங்குளம் அணுமின் திட்டம் மத்திய அரசின் திட்டமென்பதும் , எங்கள் போராட்டம் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்பதும் அனைவருக்கும் தெரியும் . அணுசக்தி பிரச்சனையில் தங்களின் தெளிவான நிலைப்பாட்டை நாடறியும் . 2007 சூன் 26 அன்று அமெரிக்க அணுசக்தி கப்

மாக்கல் நந்தி

புகைப்படம்: எம்.கண்ணன் நெல்லையப்பர் கோவில் மாக்கல் நந்தியை நினைவுதெரிந்த நாளிலிருந்து எனக்குப் பரிச்சயம். அப்படித்தான் இதுவரை எல்லாவற்றையும் பற்றி எனக்கு எண்ணம் வருஷம் தோறும் மாக்கல் நந்தி வளர்வதாகவும், நந்தியின் வளர்த்தி கூரையைத் தொடும்போது உலகம் அழிந்துவிடும் என்றும் ஒரு பரம்பரைக் கதை உண்டு வெள்ளைத்துணி பந்தல் சதுரமாய் விரிந்திருக்க மாக்கல் நந்தி, எழுந்து நின்றால் இப்போதே கூரையைத் தொட்டுவிடுவேன் என்பது போல நாக்கை மூக்கிற்குள் துழாவியபடி கம்பீரமாக இப்போதும் - நான் நெல்லையப்பரை விட அழகு என்று சொல்லியபடி- உட்கார்ந்திருக்கிறது எனது சிறுவயதில் மாக்கல் நந்தி கருப்புவெள்ளையாக இருந்தது,  இப்போது அதன் ஆபரணங்கள் அனைத்தும் பொன்னும் வண்ணமுமாக மினுங்குகின்றன. வண்ணத்தில் கூடுதல் அழகுடன் திருநெல்வேலிக்காரனின் அக்குறும்பையெல்லாம் கண்ணில்காட்டி கருப்பன்துறைக்கு பின்புறம் காட்டி அமர்ந்திருக்கிறது மாக்கல் நந்தி கூரையின் நிர்வாணம் தெரியும்படி யார் நீக்கினார் அந்த வெள்ளைப்பந்தலை? அது எழுந்து நின்றால் பிரளயம் நிகழும் என்ற பயத்தையும் யார் அகற்றினார்கள்?  (கருப்பன்துறை- திருநெல்வேலியில் உள்ள பிரதான ச

மறதிக்குள் தொலைந்தவள்

ஷங்கர்ராமசுப்ரமணியன் சமீபத்தில் மீன்களைப் பற்றிப் படித்த ஒரு விநோதச் செய்தி என்னை ஆச்சரியப்படுத்தது . வீடுகளில் கண்ணாடித் தொட்டிகளில் வளர்க்கப்படும் தங்க மீன்கள் பற்றியது அச்செய்தி . தங்க மீன்கள் அதிகபட்ச ஞாபகமறதி கொண்டவை . சுற்றி வரும்போது புதிதாக சந்தித்துக்கொள்ளும் இரண்டு தங்க மீன்கள் , அடுத்தமுறை சந்திக்கும் போது பரஸ்பரம் மீண்டும் அறிமுகப்படுத்திக் கொள்ளுமாம் . இதைப் படிக்கும்போது அச்செய்தியின் துல்லியம் என்னை மிகவும் நம்பவைத்தது . தங்க மீனின் மறதியுடன் ஒப்பிடும்போது நாம் பயணிக்கும் சுற்று மிகப்பெரியது . நாம் அலைவது பெரிய வட்டமுடைய மேல்நிலை நீர்தேக்க தொட்டியாய் இருக்கலாம் . ஒரு நாளில் எத்தனை விஷயங்களை மறதிக்குள் விடுகிறோம் . ஞாபகத்தோடு மறதியும் நம்முடன் பயணித்துக் கொண்டிருக்கிறது . இந்த தகவல் யுகத்தில் நாம் நிறைய மறப்பது செய்திகளையும்தான் . க்ரைம் செய்தியாளனாக நான் வேலை செய்வதற்கு முன்புவரை குற்றமும் , மரணங்களும் வேறொரு உலகத்தில் நடக்கின்றன என்ற எண்ணமே எனக்கு இருந்தது . நான் க்ரைம் ரிப்போர்டராகவும் இருந்தேன் என்று சொல்லிக்கொள்ளும்படியான குறுகிய காலப்பணியில் சேகரித்த , எல்லாரும

சூழலின் கனி

                                    லக்ஷ்மி மணிவண்ணன் பாறைகளைக் கண்ணிவெடி வைத்துத் தகர்ப்பவன் உளியின் மீது அடிக்கும் சுத்தியின் கந்தகச் சிறுதுவாரப் பெரு ஓலம் பச்சைவெயில் மேகங்களில் எதிரொலிக்கிறது. திரியிட்டுக் கொளுத்திய வெடிச் சத்தத்தில் மனிதர்களை வெளியேறச் சொல்லும் ஊழ் கற்களை நகரங்களை நோக்கியும் பள்ளங்களை நோக்கியும் பாரமேற்றுகிறது. கட்டிடங்கள் உயர உயர கடற்கரைகள் உயர உயர சாலைகள் அகலமாக மாக உச்சிமலையில் நடக்கிறது தவ நடனம் அடுத்த கண்ணி வெடிக்கு உடும்புப் பாறையில் உடல் பிடித்து யானைப் பாதக் கரங்களால் அவன் பற்றியேறுவதை வினோத விலங்கின் விஸ்ரூபமெனக் கண்டு நகைக்கும் பெருநகரத்து மேல்தளத்துக் குழந்தைக்குத் திரும்பும் அவனது பார்வை கடுமை நிறைந்த தொரு உளியின் சீற்றம் ஒவ்வொரு உளிச்சத்தமும் சிதறிக் கிடக்கும் ஒரு கருங்கற்துண்டு பசிக்கும் குழந்தைக்கான சில பருக்கை நாணயம் வார இறுதி நாளில் ஏராளமான உளிச் சத்தங்களோடும் சோற்றுப்பருக்கைகளோடும் அவன் சாராயக் கடையில் நுழையும்போது அஞ்சி கடை பின் வாங்குகிறது போதை தயக்கம் காட்டுகிறது தின் பண்டங்கள் தங்களை ஒளிக்க முற

புலி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது

அல்போன்ஸ்ராய் நேர்காணல் : ஷங்கர்ராமசுப்ரமணியன்  புகைப்படம் : பேஜர் கிருஷ்ணமூர்த்தி புகைப்படக்கலையில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி ? உங்கள் தந்தை உங்களை ஊக்குவித்தாரா ? எனது அப்பா தென்னக ரயில்வேயின் முதல் புகைப்படக்காரராக பணியாற்றியவர் . அவர் புகைப்படம் எடுப்பதைப் பார்த்து எனக்கு ஆர்வம் உருவானது . நான் டாக்டராக வேண்டும் என்ற ஆசை எனது அம்மாவுக்கு இருந்தது . எனக்கு பெங்களூர் செயிண்ட் ஜான்ஸ் மருத்துவக்கல்லூரியில் இடமும் கிடைத்தது . புனே திரைப்படக்கல்லூரியிலும் இடம் கிடைத்தது . ஆனால் நான் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன் . அப்பாவுக்கு வனஉயிர்கள் , காடுகளை படமெடுப்பதில் இயற்கையான விருப்பம் இருந்தது . அவர் ரயில்வேயில் வேலை பார்த்ததால் அதிகம் செயல்படமுடியவில்லை . ஆனால் விடுமுறைகளில் குடும்பத்தோடு கிளம்பிவிடுவோம் . எங்களுக்கு இந்தியா முழுவதும் ரயிலில் பயணம் செய்ய இலவச பாஸ் இருந்ததால் அது சுலபமாகவும் இருந்தது . கல்கத்தா மிருகக்காட்சி சாலையில் ஒரு புலி குட்டிப் போட்டிருக்கும் தகவல் வந்தால் அங்கே போய்விடுவோம் . கிண்டி தேசிய வனஉயிர்பூங்காவில் அப்போது வனஉயிர்கள் தொடர்பான திர