Skip to main content

Posts

Showing posts from 2024

ஒரு கடிதம் - சார்லஸ் சிமிக்

இனிய தத்துவவாதிகளே சிந்திக்கும்போது எனக்கு கவலை வந்துவிடுகிறது அதுவேதான் உங்கள் நிலையுமா? மனிதப் புலன்களால் தொடமுடியாததில் எனது பற்களைப் பதிக்க முயலும்போது பழைய தோழி ஒருத்தி இடையூறு செய்ய வருகிறாள். “அவள் உயிருடனேயே இல்லை!” நான் சொர்க்கத்தைப் பார்த்துக் கத்துகிறேன்.   குளிர்காலத்து வெளிச்சமோ என்னை அலாதியாக்குகிறது. ஒரேவிதமாய்த் தோன்றும் சாம்பல் போர்வைகள் மூடிய படுக்கைகளைப் பார்த்தேன்.   நிர்வாணப் பெண்ணை அணைத்தபடி குளிர்நீரால் குளிப்பாட்டும் இறுக்க முகம்கொண்ட ஆண்களைப் பார்த்தேன். குளிர்நீர் அவளது நரம்புகளை அமைதிப்படுத்தியதா? அல்லது அவளுக்கு அது தண்டனையா?     நான் எனது நண்பன் பாப்பை பார்ப்பதற்காகச் சென்றேன், அவன் என்னிடம் கூறியது: “காட்சிகளின் மயக்கத்தைக் கடப்பதன் மூலம் நாம் மெய்மையை அடைகிறோம்”. அதை விலக்குவது எனக்கு சாத்தியமே அல்ல என்பதை நான் உணரும்வரை புளங்காகிதம் கொண்டிருந்தேன். ஜன்னலுக்கு வெளியே தீவிரமாய் பார்த்துக்கொண்டிருந்த  என்னைக் கண்டேன் .   பாப்பின் தந்தையார் அவர்களது நாயை நடைக்கு வெளியே அழைத்துச் செ

பக்தி - சார்லஸ் சிமிக்

நூறு வயதுள்ள வீட்டுப்பணியாளர்கள் வெள்ளிப் பாத்திரங்களைத் துடைத்து மெருகூட்டுகின்றனர். சிறுமியைப்போல உடையணிந்த குட்டி எஜமான் படுக்கையறை சிறுநீர் கலத்தில் சிறுநீர் கழித்ததை நினைவுகூர்ந்தனர்.   தற்போது குட்டி எஜமான் மேடத்துடன் சேர்ந்து வேட்டைக்குப் போயிருக்கிறார். இன்று மதியம் வீட்டுக்கு வருகைதந்த அருள்திரு ரெவரெண்ட் கனிவாக அவர்களை விசாரித்தார். அவரது இளஞ்சிவப்பு விரல்கள் நெளியும் பன்றிக்குட்டிகளைப் போன்றிருந்தன.   மழைபெய்யும் நாட்களில் கணப்பில் தீ எரிந்துகொண்டிருக்க சயாமீஸ் பூனைகள் கூட ஆசுவாசமாய் அமர்ந்து மெழுகுபூசிய மீசை முனைகளுடன் சிடுசிடுப்பான முகத்துடன் கனத்த படச்சட்டகத்திலிருக்கும் தாத்தாவை வெறித்துக்கொண்டிருக்கவே விரும்புகின்றன.   மரியாதையை அவர்கள் வேகமாகக் கற்றுக்கொண்டனர் அதுவே அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்டது. பண்ணைச் சிறுவர்களாகவும் பண்ணைச் சிறுமிகளாகவும் இருந்தவர்கள் பெரிதாகவும் சிறிதாகவும் வெள்ளிக்கரண்டிகளில் தாங்கள் தெரிவதை ரகசியமாய் நோட்டமிடுகின்றனர். 

கனவுகளின் பேரரசு - சார்லஸ் சிமிக்

எனது கனவுப்புத்தகத்தின் முதல்பக்கத்தில் எப்போதும் சாயங்காலம். ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டில்.   ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னர். தலைநகரிலிருந்து தூரத்திலிருக்கும் ஒரு சிறிய நகரம். இருளடர்ந்த வீடுகள். சூறையாடப்பட்ட கடைகள்.   நான் நிற்கக்கூடாத தெருமுனையில் நிற்கிறேன் தனியாக.   மேல்கோட் இல்லாமல் எனது சீழ்க்கையொலிக்கு ஓடிவரும் ஒரு கருப்புநாயைத் தேடி அங்கே வந்திருக்கிறேன். நான் அணிவதற்கு அச்சப்படும் ஹாலோவீன் முகமூடி என்னிடம் உண்டு. (ஹாலோவீன் தினம் – பேய்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக விதவிதமாக முகமூடிகள் அணியும் தினம்)  

தர்பூசணிகள் - சார்லஸ் சிமிக்

    பழ அலமாரிகளில் பச்சை புத்தர்கள். நாம் புன்னகையை உண்டு பற்களை உமிழ்கிறோம்.

இன்மையின் நிறம் நீலம் – சார்லஸ் சிமிக்

  நான் இங்கிருந்து எழுதும்போது எனது மேஜை மற்றும் நாற்காலி தவிர வேறு எதுவும் உலகத்தினுடையதாய் இல்லையென்பதை நான் கவனித்திருக்கவில்லை.   அதனால் நான் கூறிக்கொண்டேன்: (எனக்கு நான் கேட்பதுபோல்) ஒரு கண்ணாடிக் குவளையோ திராட்சை மதுவோ பரிசாரகரோ இல்லாத மதுவிடுதியா இந்த இடம்? இங்கே வெகுநேரம் எதிர்பார்க்கப்படும் குடிபோதைக்காரனோ நான்?   இன்மையின் நிறமென்பது நீலம்.  அதை  இடதுகையால் தள்ளியபோது கை மறைகிறது.   இருப்பினும் நான் ஏன் அமைதியாகவும் மிகுந்த மகிழ்ச்சியோடும் இருக்கிறேன்?   மேஜை மேல் ஏறுகிறேன் (இருக்கை ஏற்கெனவே இல்லாமலாகிவிட்டது) காலி பீர் புட்டியின் தொண்டை வழியாக நான் பாடுகிறேன்.

பறவை – சார்லஸ் சிமிக்

கனவில் ஒரு பறவை உயரமான மரமொன்றிலிருந்து என்னை அழைக்கிறது. பகல் வெளிச்சத்தின் இளஞ்சிவப்பு சிறுகிளையிலிருந்து ஒவ்வொரு இரவும் என் இதயத்தை அங்குலம் அங்குலமாக நெருங்கும் நெடிய நிழலிலிருந்து உலகத்தின் விளிம்பு முனையிலிருந்து என்னை ஒரு பறவை அழைக்கிறது.   நான் அதற்கு எனது கனவைத் தருகிறேன், செஞ்சாயத்தைப் பூசி வர்ணம் தீட்டுகிறது பறவை. நான் அதற்கு எனது மூச்சைத் தருகிறேன், சரசரக்கும் இலைகளாக்கிவிடுகிறது பறவை.   பறவை என்னை உச்சியிலிருக்கும் மேகத்திலிருந்து அழைக்கிறது. தற்போதுதான் புதைத்துமூடிய சடலமிருக்கும் குழியில்  ஒரு தீக்குச்சி பற்றுவதுபோலிருக்கிறது அதன் கீச்சொலி. • கொட்டாவி விடும் வாயின் வடிவத்தில் பறவை.   பச்சிளம் சிசுவை ஞானஸ்தானம் செய்விக்க அவர்கள் குளிப்பிக்கும் நீரைப்போல விடிகாலையில் வானம் நிர்மலமாக சுடர்கிறது, நான் உன்னை நோக்கி ஏறிவந்தேன்.   கீழே பூமி சிறிதாகிறது ஊளையிடும் வெறுமை எனது பாதத்தைச் சில்லிடச் செய்தது பின்னர் எனது இதயத்தையும். • பிறகு நான் வனத்தின் நடுவிலுள்ள சிறிய திட்டில் ஒ

காதல் உண்ணி - சார்லஸ் சிமிக்

அவளது அக்குளிலிருந்து அவன் ஒரு உண்ணியை எடுத்து அதைப் போற்றி போஷிப்பதற்காக ஒரு தீப்பெட்டியில் வைத்தான். அதற்கு  ரத்தத்துளிகளை வேளாவேளைக்கு உணவாய் கொடுக்க அவன்  விரலை குத்தவும் செய்தான்.

இருண்ட ஜன்னல் - சார்லஸ் சிமிக்

இருண்ட ஜன்னலில் நின்று அழுதுகொண்டிருக்கும் பெண்ணின் கண்ணீர் துளிகள் சிறுகணம் சுடர்கின்றன மெதுவாகக் கடக்கும் காரின் வெளிச்சத்தால். 

சர்க்கஸ் – சார்லஸ் சிமிக்

இரவு வானில் கரடியும் சிங்கமும் தோன்றிவிட்டது.   நெருப்பு விழுங்குபவர்கள் தீவட்டி வித்தைக்காரர்கள் பின்னணியில்.   சாதாரண கண்களுக்கு அவர்கள் செய்யும் சாகசங்கள் தெரியவில்லை.   வானியலாளர்களுக்குத் தெரிகிறது எங்கள் அண்டைவீட்டு நாய்க்கும். படுக்கையிலிருப்பவர்களிடம் நள்ளிரவுக் காட்சி துவங்கிவிட்டதென்று அது அறிவிக்கிறது.

எனது உடைமைகள் - சார்லஸ் சிமிக்

  இறந்த நண்பர்கள் பலர் எனக்கு. கண்களைத் திறந்துவைத்தோ மூடிக்கொண்டோ அவர்களை முட்டலாமென்ற நம்பிக்கையுடன் நான் எப்போதும் அலையும் தெருக்கள். அடித்தல் குறியிட்ட பெயர்களுடன் என்னிடமுள்ள முகவரிப் புத்தகங்கள் பல. ஆண்டுக்கணக்கில் சத்தமே இல்லாத இரண்டு கடிகாரங்கள் ஒரு டஜன் கைக்கடிகாரங்கள். பெரிய கருப்பு குடை ஒன்று என்னிடம் உண்டு வீட்டுக்குள்ளேயும் வீட்டைவிட்டு வெளியே கிளம்பும்போதும் எவ்வளவு மழைபெய்தாலும் அதை விரிப்பதற்கு அச்சப்படுவேன். ஒரு செருப்பு தைப்பவர் ஷூவை பழுதுபார்ப்பதில் தன்னை தொலைத்துவிட்டவனைப் போல நானும் என் செய்கையைவிட்டு தலையுயர்த்திப் பார்ப்பதேயில்லை. எனது ஒரு கால் இடுகாட்டுக்குழியில் இருப்பினும்.

ஞாயிறு பிரார்த்தனை - சார்லஸ் சிமிக்

  அந்தச் சேவல்  பிஷப்பின் கிரீடத்தை அணிந்திருக்கிறது. அதன் காலைநேர போதனையை ஏற்றுக்கொண்டது போல் தங்கள் தலைகளை அசைத்துக்கொண்டே கொக்கரித்தபடி நான்கு கோழிகள் சேவலுக்குப் பின்னால் அணிவகுத்துச் செல்கின்றன. புழக்கடை மரத்தின் உச்சியிலுள்ள பூனையைப் பார்த்து சைத்தானைப் பார்த்தது போல குரைக்கும் கருப்பு - வெள்ளை நாய்கூட தனக்கான மதத்தைக் கண்டுபிடித்துவிட்டது.   பின்மதியத்தில் கட்டிலில் படுத்திருக்கும்போதுதான் தெகார்த்தேவுக்கு தத்துவக் கருத்துகள் நன்கு உதிக்குமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். நான் அப்படி அல்ல. தேவாலயத்துக்குப் போகும் அண்டைவீட்டாருக்கு கையசைத்தபடி குப்பைக்கூளத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். 

பொம்மை தொழிற்சாலை - சார்லஸ் சிமிக்

என் அம்மா இங்கே வேலைசெய்கிறாள் எனது அப்பாவும் இங்கேதான் பணியாற்றுகிறார். இது இரவுப்பணி. பாகங்களை இணைக்கும்  வரிசையில் பொம்மைகளின் சுருள்வில்லை பரிசோதிக்க அவர்கள் சாவிகொடுக்கின்றனர்.   துப்பாக்கி வீரர் படையில் ஏழு பொம்மை உறுப்பினர்கள் தங்கள் ரைஃபிள்களை நிமிர்த்தி சுட்டு அவசரமாய் கீழே இறக்குகின்றனர்.   கீழே விழுந்த நபர் எழுகிறார் மீண்டும் விழுந்து எழுகிறார். அவரது கண்கட்டு வெறுமனே வண்ணம்தீற்றியது.   இடுகாட்டுக் குழியை வெட்டுபவர்கள் சரியாக வேலை செய்யவில்லை. அவர்களது மண்வெட்டிகள் கனக்கின்றன, மிக அதீதமான கனம்.   அப்படித்தானே அது இருக்கவும் இயலும்?

தலைப்பில்லாத கவிதை – சார்லஸ் சிமிக்

  நான் ஈயத்திடம் கேட்கிறேன். “ஏன் தோட்டாவாக வார்க்கப்பட உன்னை விட்டாய்? ரசவாதிகளை நீ மறந்துவிட்டாயா? பொன்னாக மாறும் நம்பிக்கையை கைவிட்டு விட்டாயா?”   பதிலே இல்லை. ஈயம். தோட்டா.   இப்படியான பெயர்களில் உறக்கம் ஆழமானது நெடியது.

கொடும் பருவநிலை - சார்லஸ் சிமிக்

மூளை அது கபாலத்துக்குள்ளே சில்லென்று உள்ளது: என்கிறார் ஆல்பெர்டஸ் மேக்னஸ்.   பிரபஞ்சத்தின் நெடும்பரப்பில் ஒரு தூந்திரப் பரப்பு போல்.   நட்சத்திரப் புயல். பிரமாண்ட பனிப்பாறைகள் தொலைவில். துருவப்பகுதியில் இரவு.   பனியில் மாட்டிக்கொண்ட ஒரு பெரும்கப்பல். அதன் மேல்தளத்தில் இன்னும் சில விளக்குகள் எரிந்துகொண்டிருக்கின்றன. அமைதி மற்றும் கடும்குளிர்.

விலங்கு சாகசங்கள் - சார்லஸ் சிமிக்

    ஒரு கரடி வெள்ளிக் கரண்டி கொண்டு சாப்பிடுகிறது இரண்டு குரங்குகள் இடுகாட்டுக் குழியைத் தோண்டுவதில் கைதேர்ந்துவிட்டன. நுண்கணிதம் போடும் எலிகள். பெண்ணிடம் புணர்ச்சியில் ஈடுபடும் ஒரு போலீஸ் நாய் வெட்டியானைப் போல உடலை அளவெடுத்துக் கொண்டிருக்கிறது.   தனது இருப்பு பற்றிய சந்தேகங்களால் ஒரு மூட்டைப்பூச்சி அவதிப்படுகிறது. சிரிக்கும் புறா அதிசயம். பில்லியர்ட்ஸ் விளையாடும் ஆயிரம் வயதான ஆமை. தன் தொண்டையை தானே அறுத்துக்கொண்டு ரத்தம் வழியும் ஒரு கோழி.   சாயங்காலங்களில் அவை எல்லாம் கூண்டில் நெருக்கியடிக்க விலங்குகளைப் பயிற்றுவிப்பவனோ சவுக்குடன் சர்க்கரைக்கட்டிகளோடு தனது இருக்கையில். மலிவான சுருட்டுகளைப் புகைத்துக்கொண்டு புதிய சீட்டுக்கட்டில் உள்ள சீட்டுகளை அடையாளமிட்டுக் கொண்டிருக்கிறான்.

பா. அகிலன் - நிசப்தம், சாவை அரற்றிப் பெருக்கும் குயில்

  ஆஹா சாகித் அலி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெய்ஸ் அஹ்மது பெய்ஸ் கவிதை ஒன்றைத் தொடர்ந்து சமீபத்தில் பெய்ஸ் அஹ்மது பெய்ஸின் பத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை அனிச்சையாக மொழிபெயர்த்தேன் . பெய்ஸ் அஹ்மது பெய்ஸ் கவிதைகளை நான் தொடர்ந்து மொழிபெயர்க்கக் காரணம் என்னவென்று என்னிடம் கேட்டுக்கொண்டேன் . ஏனெனில் அவர் நவீன கவிதை என்று நான் நம்பும் ஒன்றின் உலகத்தைச் சேர்ந்தவர் அல்ல . அவரது ஏக்கம் புராதன ஒன்றின் மீதானது – அது பழையதும் அல்ல . அந்தப் புராதனத்துடன் எனக்கென்ன தொடர்பு ?  அந்தக் கவிதைகளை நான் ஏன் செய்கிறேன் ? அவர் சொல்லும் இடங்கள் எல்லாம் தெரிந்தவை போலத் தோன்றி தெரியாமல் ஏன் ஆகிவிடுகின்றன? என்பது போன்ற கேள்விகள் இன்னும் வலுவாக மேலெழும்பியது .  அவரை நான் தொடர்ந்து மொழிபெயர்த்ததற்குக் காரணம் , அதில் ரீங்கரிக்கும் ஒரு சோகம் , ஒரு புதிர்மை எனத்தோன்றியது . நேசத்துக்குரியவள் , நேசத்துக்குரியது என்று சொல்வது எல்லாம் பரிச்சயமானது போலத் தெரிகிறது . ஆனால் கவிதையை முடிக்கும்போது அது பரிச்சயமானதல்ல என்றாகிவிடுகிறது . மது , கோப்ப