Skip to main content

Posts

Showing posts from February, 2016

எனது ஞாபக சீதா முன்னுரை

  ஒளி ஏறவேண்டும் வார்த்தைகள்  எனது கவிதைகளில் சுபாவமாகப் புழங்கும் விலங்குகள் குறித்து நான் அதிகம் யோசித்துப் பார்த்ததில்லை. அது எனது உலகில் உள்ள எதார்த்தம் என்பதாக மட்டுமே நான் எண்ணியிருந்திருக்கலாம். கவிஞர் ச.முத்துவேல் தனது முகநூல் குறிப்பு ஒன்றில் என் கவிதைகளில் வரும் மிருகங்கள் குறித்துக் கவனப்படுத்தி எழுதியிருந்தார். எனக்கு அவரது குறிப்பு, விசேஷமான உற்சாகத்தைச் சில நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தது. எனது பிரஜைகளுக்குக் கவனம் கிடைக்கிறதென்ற சந்தோஷம் அது. எனது கவிதைகளில் இத்தனை பிராணிகளுக்கு ஏன் இடம் கொடுத்திருக்கிறேன் என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கான பதிலை நான் நகுலனின் ‘வீடணன் தனிமொழி’ கவிதையிலிருந்து தான் யோசிக்கத் தொடங்கியிருக்க வேண்டும்.  ராவணன் தன் தம்பி வீடணனைப் பார்த்து, ‘ ஒரு எறும்பைக் கூட இத்தனை சிரத்தையாக வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பாயோ? ’ என்று கேட்பான். தன்னைத் தவிர பிற உயிர்களை வேடிக்கை பார்ப்பதில் பிறிதின் விஷயங்களுடன் ஈடுபடுவதில் தோல்வியுற்ற துரியோதனனின் அகந்தை களையும் என்று எனது மகாபாரதக் கவிதை ஒன்றில் எழுதியும் இருக்கிறேன். ( சுயபோதை தெளி

சி.மோகன்- விளக்கு விருது கட்டுரை

                                                                                                          நற்செய்கை தீச்செய்கை துறந்தவன்  ஷங்கர்ராமசுப்ரமணியன் சமீப நாட்களாக மகாகவி பாரதியின் கீதை விளக்கத்தில் வரும் தொடக்க வாக்கியங்களை மனம் ஜெபித்துக் கொண்டு இருக்கிறது.  பாரதியின்  அந்த வரிகள் இருட்டைப் பிளக்கும் ஒளியின் தன்மையைக் கொண்டது. “புத்தியில் சார்பு எய்தியவன் இங்கே, நற்செய்கை, தீச்செய்கை இரண்டையும் துறந்துவிடுகிறான்.” சி.மோகனின் ஆளுமையை ஓரளவு வரையறுப்பதற்கு ‘புத்தியில் சார்பெய்த முயல்பவர்’, புத்தியில் சார்பு எய்துவதற்கான விழிப்புணர்வைத் தூண்டும் ஆசிரியர் என்றும் சொல்லலாம். புத்தியில் சார்புடைய நிலையும், தன்னை முழுக்க இயற்கையிடமோ கடவுளிடமோ சரணாகதி செய்யும் நிலை இரண்டும் ஒன்றுதான். ஒருவன் முழுமையான பொறுப்பைத் தன்னிடமே வைத்துக் கொள்கிறான். தனது நன்மைக்கும் தனது களங்கங்களுக்கும் எவரொருவரையும் புத்தியில் சார்புடையவன் பொறுப்பாக்குவதில்லை.  மற்றவனோ தன்னை முழுமையாகப் பிரம்மத்திடம் ஒப்படைத்துவிட்டவன்; தனது சந்தோஷ துக்கங்கள் உட்பட அனைத்தும் ஈஸ்வர லீலை என்றே நினைத்த