Skip to main content

Posts

Showing posts from July, 2017

மரணம் என்னும் தொகுப்பாளர்

க லாச்சாரங்கள், வாழ்க்கை முறைகள், பார்வைகள் வேறுபட்டிருந்தாலும், ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பல்வேறு இடர்பாடுகளுக்கிடையிலும் வாழ்ந்து கனிவது என்பது எல்லோரும் விரும்பும் கனவாகவே இருக்கிறது. உராய்வுகள், கசப்புகள், விரிசல்கள், துரோகங்களைத் தாண்டி நீடிக்கும் தாம்பத்தியத்துக்குள் இருக்கும் அமரத்தன்மையையும் இனிப்பையும் இந்தச் சிறிய படைப்பு மௌனமாக நமக்குள் படரவிடுகிறது. தற்போது 71 வயதாகும் பெண் நாவலாசிரியர் டயன் ப்ரோகோவன் ஃப்ளெமிஷ் மொழியில் எழுதிய இப்படைப்பின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு மட்டுமே ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது. முதுமையைக் கடந்துகொண்டிருக்கும் ஆலிஸ், வழக்கமாகத் தன் கணவர் ஜூல்ஸ் சமையலறையில் தயார் செய்யும் காபியின் நறுமணத்தில் கண் விழிக்கிறாள். ஆனால், காபித் தூளை வடிகட்டியில் தயார் செய்துவிட்டு, சோபாவில் உட்கார்ந்தபடியே ஜூல்ஸ் இந்த உலகைத் துறந்துவிட்டதை எழுந்த பிறகே ஆலிஸ் பார்க்கிறாள். காலையில் நம் எல்லாரையும் போலவே எழுவதற்குச் சோம்பி, சுகமாய் ஆலிஸ் உறங்கும் அற்புத அரை மணி நேரத்தில், ஜூல்ஸ் மரணமடைந்துவிட்டதை முதலில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்குப் பிறகு அவள

கிளியும் குரங்கும் அல்லது என்ன முட்டாள்தனமான விளையாட்டு இது?

ஒரு கப்பல் பயணத்தின் போது நடந்த சம்பவம் இது. கப்பலில் இருந்த கிளி மிகவும் சலிப்புற்றுப் போயிருந்த சமயத்தில் அங்கு ஒரு குரங்கும் இருப்பதைக் கண்டு சந்தோஷப்பட்டது. பொழுதைப் போக்கும் எண்ணத்துடன் குரங்கிடம், “ ஒளிந்து விளையாடு விளையாட்டில் ஈடுபடலாமா? ”  என்று கிளி கேட்டது. அதற்கு குரங்கு,  “ அந்த ஆட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது எப்படி விளையாடுவது? ”  என்றது. கிளி விளக்கிச் சொன்னது.  “ மிகவும் எளிய விஷயம் அது. கண்களை மூடிக்கொண்டு சுவரைப் பார்த்தபடி நின்று நூறுவரை எண்ண வேண்டும். அந்த நேரத்தில் நான் எங்காவது சென்று ஒளிந்து கொள்வேன். எண்ணி முடித்த பிறகு நீ என்னைத் தேடிப்பிடிக்க வேண்டும். அவர்கள் விளையாட்டில் ஈடுபட்ட சமயம் கப்பல் வெடித்து விட்டது. குரங்கு நூறு என்று எண்ணி முடித்தபோது கப்பல் வெடித்தது. கடலில் மிதந்த ஒரு மரப்பலகையில் சென்று கிளி அமர்ந்து கொண்டது. குரங்கு அந்தப் பலகையை நோக்கி நீந்தி வருவதற்கு முயன்று சோர்ந்து போனதைக் கிளி கவனித்தது. பலகை மீது ஏறிய குரங்கு கிளியைப் பார்த்து, “ என்ன முட்டாள்தனமான விளையாட்டு இது?   ”  என்று சீறியது. நாம் வாழும் வாழ்க்கை

தவளைப்போர் வீரர்களே

மழை பெய்த தெருவில் கூழாங்கற்கள் தவளைகளாக மாறின. வட்டமாய் அணிவகுத்து துள்ளி தொடங்கின தங்கள் இலக்கில்லாத முற்றுகையை தவளைப்   போர்   வீரர்களே தவளைப்   போர்   வீரர்களே உங்கள் பிறப்பின் உற்சாகத் துள்ளலை வீட்டுத்திண்ணையில் படுத்திருக்கும் நாய் பார்த்துக் கொண்டிருக்கிறது நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 000

நான் அசந்தர்ப்பம்

நான் பணக்காரனுமல்ல ஏழையுமல்ல ஒரு அசந்தர்ப்பம் என்றுதான் சொல்லமுடியும். என் அலுவலகப்பையின் ஜிப் ஒருநாள் வாய்பிளந்து விட்டது அன்று நான் போன இடத்திலெல்லாம் அந்தப் பை என் போதாமைகளை எல்லாம் இளித்துச் சொல்லி கந்தல் சிறுவனைப் போல நாணவைத்தது மூடிப் போர்த்தித்தான் நான் வீடுதிரும்பினேன். நான் அப்போதுதான் நினைத்துப் பார்த்தேன் அவளது பை கிழிந்திருந்தால் ஆகியிருக்கும் இரட்டைத் துயரம். வாய்பிளந்தது என் பை தானே.