Skip to main content

Posts

Showing posts from September, 2018

பறக்கும் ரயில் தடங்களும், அதி யதார்த்தத்தின் வேலைத்தொகுதியாகி வரும் என் நகரமும்

ஜாக்கிரதை: கண்ணாடியில் தெரியும் பொருட்கள் , தோன்றுவதை விட அருகில் இருக்கலாம். ( ழான் போத்ரியாரின் ' அமெரிக்கா ' எனும் நூலிலிருந்து தூண்டுதலாகவும் எதிர்வினையாகவும் எழுதப்பட்ட கட்டுரை இது. பின்நவீனத்துவ தத்துவ ஆசிரியரான போத்ரியார் தனது பிரெஞ்ச் பின்னணியிலிருந்து அமெரிக்கா என்னும் நில-மனவெளியில் பயணித்த அனுபவத்தை இந்நூலில் எழுதிச்செல்கிறார். ' அமெரிக்கா ' சம்பிரதாயமான பயணநூல் அல்ல. கனவு முடிவுற்ற நிலமாக. ஒரு பேரரசு மற்றும் அதிகார நிலைமையின் உச்சநிலையில் உணரப்படும் வெறுமைநிலையில் அமெரிக்காவைப் பார்க்கிறார் போத்ரியார். அமெரிக்காவின் நிலவெளி , கட்டடங்கள் , பாலைவனச் சாலைகள் வழியாக அமெரிக்க மனவரைபடத்தைத் தொடும் நூல் இது. சாலையில் அதிவேகத்தில் பயணிக்கும் பிரக்ஞைநிலையிலேயே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. உண்மையில் உலகம் என்ற ஒன்றே இல்லாமல் இன்னொரு உலகத்துக்கு வெறுமனே காண்பித்து நிற்கும் வெறும் விளம்பரப் பிம்பம்தானோ அமெரிக்கா எனவும் சந்தேகம் எழுப்புகிறார். அமெரிக்கா என்னும் மன--நில வரைபடத்தை ஆராய்வதற்கு ஒளிஇயற்பியல் கருத்தாக்கத்தைப் பயன்படுத்துகிறார் - ஒளிஇயற்பியலோடு தொட

காஃப்காவின் எண்ணற்ற ஜன்னல்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த ஃப்ரன்ஸ் காஃப்கா, நவீனமாகி வரும் உலகில் வாழ நேரந்த மனிதனின் துயரங்களை இலக்கியம் வழியாக மிக நுட்பமாக பரிசீலனை செய்தவர். மாறிவரும் மனித உறவுகள், அவனின் தனிமை, தனிமனிதனுக்கும் அமைப்புகளுக்கும் இடையிலான மோதல்கள், அமைப்புகள் முன் மனிதன் சின்னஞ்சிறிய பரிதாபகரமான உயிராக மாறிநிற்பது ஆகியவற்றை காஃப்கா துல்லியமாக விசாரணை செய்துள்ளார். மனிதனை ‘ஆரோக்கியமாகவும்’ ‘அகிம்சை’ முறையிலும் சிறைப்படுத்திய, அவர்களை வளர்ப்பு மிருகங்களாகச் சுருக்கிய அலுவலகம் என்னும் தீங்கைப்   பற்றி தனது உருவகக் கதைகள் வழியாக பல்வேறு சித்திரங்களை காஃப்கா உருவாக்கியுள்ளார்.   விசாரணை நாவலில் கண்ணுக்குப் புலப்படாத காவல் அமைப்பின் கீழ்நிலை ஊழியர்களால் யோசப் க. ஒரு நாள் காலை, எந்தக் காரணமும் இல்லாமல் அவன் அறையில் படுக்கையிலிருந்து எழும்முன்பாகவே கைது செய்யப்படுகிறான். அதைத் தொடர்ந்து தன்னை எப்படியாவது குற்றத்தின் பிடியிலிருந்து விடுவிக்க தொடர்ந்து போராடுகிறான். நீதி அமைப்பின் குளறுபடிகளை தன் மீது தவறாக போடப்பட்ட வழக்கின் வழியாக சரிசெய்யவும், எதிர்த்துப் போராடவும் துணிபவன்

எரியும் நகரத்திலிருந்து மண்டோ

ஷங்கர்ராமசுப்ரமணியன் ஒரு சில மாதங்களுக்கு முன் பம்பாயில் கடல்நீர் இனிப்புச் சுவையடைந்ததை செய்தித்தாள் படிப்பவர்கள் நினைவில் வைத்திருக்கக்கூடும். அன்று மும்பையின் கடல் நீர் திடீரென இனிப்பாகிவிட்ட அற்புதத்தைப் பருக , அற்புதங்கள் அருகி , கரிப்புச் சுவையையே நாள்தோறும் சுவைக்கும் மும்பையின் வெகுமக்கள் இனிப்பான கடலை நோக்கித் திரண்டனர். கடல் நீரின் வேதிச்சமநிலை குறைந்திருப்பதால் நீரின் ருசி மாறியுள்ளது என்றும் , இனிப்பான குடிநீர் பருகுவதற்கு உகந்ததல்ல என்றும் விஞ்ஞான அறிவிப்புகள் உடனே வெளியாயின. இருப்பினும் காலி கோக் பாட்டில்களில் கடல் நீர் எடுக்கப்பட்டு மும்பையின் வெகு மக்களால் புனித நீரெனப் பருகப்பட்டது , விற்கப்பட்டது. மும்பையில் கடல் இனிப்பான பிறகு இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் உள்ள கடல்களும் இனிப்பானது. குஜராத்திலும் கடல் இனிப்பானது. குஜராத்தில் கடல் இனிப்பானதில் நமக்கு ஒன்றும் ஆச்சரியம் இருக்காது. ரத்தமே அவ்வப்போது தித்திக்கும் நிலம் தானே இது. மேலே சொல்லப்பட்ட சம்பவம் வெகுமக்களின் கூட்டுணர்வு செயல்படும் முறைக்குச் சிறந்த உதாரணம். இதை ஒரு ம