Skip to main content

Posts

Showing posts from June, 2012

என்று கருதும்

ஷங்கர்ராமசுப்ரமணியன் எனது கவிதை ஒரு குட்டிநாயாக வடிவெடுக்கிறது கருதிக்கொள்ளலாம் எனது கவிதை ஒரு முட்டையாக இடப்படுகிறது வைத்துக்கொள்ளலாம் எனது கவிதை ஒரு குழந்தையாகப் பிறக்கிறது எண்ணிக்கொள்ளலாம் எனது கவிதை ஒரு நட்சத்திர மீன் ஆக்கிக்கொள்ளலாம் ஆனால் அந்தக் குட்டிநாயைச் சுற்றி அந்த முட்டையைச் சுற்றி அந்தக் குழந்தையைச் சுற்றி அந்த நட்சத்திர மீனைச் சுற்றி வடிவம் கொண்டது தவிர மீந்த பிறிதொன்று  எதுவும் இல்லை என்று கருதும் என் கவிதையின் நியாயம் மட்டும் புரியாத துக்கம் எனக்கு .

வணக்கம் தமிழகம்

காலை எழுந்தவுடன் யூட்யூப்பில் எம்.எஸ்.சுப்புலட்சுமியி ன் குறையொன்றுமில்லை அருணாவின் கதிரவன் குணதிசையும் கேட்கலாம் .. மதுரை சோமுவைக் கேட்டபிறகு அருணா கசக்கத் தொடங்கிவிட்டாள் பிறகு ஜெயமோகன் . இன் சாருஆன்லைன் வழியாக முகநூல் டாடாவுக்கு படம் எடுத்த லீனா என்ன சொல்லப்போகிறாள் ? அடுத்து இளையராஜாவின் குரலில் ஜனனி .. ஜனனி எஸ் . ராமகிருஷ்ணன் . காமில் இன்றைக்குப் புதிய பதிவு இல்லை கனடா பயணம் இயல் விருதுவாங்க ... என்னதான் செய்வது ... அலுவலகம் விநாயகர் காரிய சித்திமாலை வேர்ட் பைலில் படித்துமுடித்து அழியாச்சுடரில் புகுந்தால் போதும் கு . அழகிரிசாமியின் ஒரு சிறுகதை படித்துவிட்டால் கங்கையில் குளித்த ஒரு பேரமைதி ராம்பிரசாத் இன்னொரு சி . சு . செல்லப்பா ஆகிவிடுவானா குனா அழகிரிசாமியின் குழந்தைகள் பாக்கியம் செய்தவர்கள் என்று முகநூலில் ஒரு நிலைச்செய்தி போட்டுவிட்டேன் யார் சுவரில் போய் டேக் செய்வது .. எத்தனை லைக் இன்று வரும் .. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த ஜெயமோகன் அடிக்சன் தான் .. பெரி ...... ய் ... ய ரைட்டர் இல்லையா .. என்ன அநிய

சி.மோகன் - 60

தமிழ்நூல் உலகில் இன்று நடந்துகொண்டிருக்கும் ஆஃப்செட் புரட்சியுடன் ஒப்பிடும்போது சி . மோகன் எழுதியுள்ள நூல்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமானது . நவீனத்துவம் களைப்பையும் , அதிகாரப் பகிர்வையும் பெற்று அரசின் ஒரு பகுதியாகி வரும் காலகட்டத்தில் எதிர்நவீனத்துவவாதியாய்த் தன்னை அடையாளம் கண்டவர் . அந்த அடையாளங்கள் தாங்கிய தனித்துவமான 33 கவிதைகள் கொண்ட தொகுதியாக தண்ணீர் சிற்பம் வெளியானது . இத்தொகுப்பு , மோகனின் பிரக்ஞை மேற்கொண்டிருந்த பயணத்தொலைவைக் காட்டுகிறது . மோகனின் சிறுகதைகள் , விமர்சனங்கள் , மொழி பெயர்ப்புகளைத் தொடர்ச்சியாகப் பின்தொடரும் வாசகன் என்ற முறையில் பொதுவில் விலக்கப்பட்ட இரவுப் பிராந்தியத்தின் சாத்தியங்கள் குறித்துப் பேசுவதாய் அவரது உலகம் உள்ளது . சாப்ளினின் ' சிட்டி லைட்ஸ் ' படத்தில் ஒரு பணக்காரச் சீமான் இரவில் குடிபோதையில் இருக்கும்போது தெருவில் அலைந்து கொண்டிருக்கும் சாப்ளினைப் பார்த்துத் தனது மாளிகைக்கு அழைத்துச் செல்வார் . காலையானவுடன் தன்போதம் வந்து சாப்ளினைப் பணியாளர்களை வைத்துத் துரத்திவிடுவார் . விலங்குகளின் உலகமும் உதிரி ஒருவனின் இடமும் , கலை சார்ந்தவ

குழந்தை காணாமல் போகும் கனவு

ஷங்கர்ராமசுப்ரமணியன் வழுக்கும் ஈரமண் பாதை அது .  கிடுகிடு பள்ளங்களூடாக தடுமாறியபடி நான் நடக்கிறேன் . நான் அந்தக் குழந்தையை என் கையிடுக்கில் பிடித்திருக்கிறேன் . அவள் ஒரு பொம்மையின் அளவு இருக்கிறாள் . அவள் உடலுக்குள் இருதயம் மட்டுமே இருப்பது போலத் துடிக்கிறது . அந்தத் துடிப்பு மட்டுமே அதை உயிரென்று உணரச்செய்கிறது . அந்தக் குழந்தையை அபாயகரமான இந்த இடத்துக்கு ஏன் கொண்டுவந்தேன் என்று ஒரு குறிப்பும் இல்லை . எனது பராமரிப்பில் விடப்பட்ட குழந்தை அது . அதன் பெற்றோர்களுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான் . திரும்ப அந்தக் குழந்தையை நான் பத்திரமாக அதன் வீட்டில் சேர்க்கவேண்டும் . நான் சேற்றில் வழுக்கி வழுக்கி நடக்கிறேன் . என் கையிலிருந்து நழுவி பாதாளத்தில் அடிக்கடி துடித்து விழுந்துவிடுகிறது குழந்தை . நான் பதறி இறங்கி எடுக்கிறேன் . குழந்தை மண்ணில் விழுந்தவுடன் ' அவ்வளவுதான் ' என்று முனகிப் புரண்டுவிடுகிறது . குழந்தையின் மெல்லிய சருமத்தில் சிறுசிறு ரத்தக்காயங்கள் கூடிக்கொண்டே போகின்றன . குழந்தை என்னிலிருந்து துள்ளி மீண்டும் மீண்டும் விழுகிறது . வீட்டுக்குத் திரும்ப இயலாத குற்ற

அழகு சுந்தரம் திரிபுரசுந்தரி

ஷங்கர்ராமசுப்ரமணியன் நரியும் , கொக்கும் பரஸ்பரம் விருந்துவைத்த கதை தெரிந்திருக்கும் உங்களுக்கு . அது ஒரு நீதிக்கதை . ஆனால் அந்தக்கதை குறிப்பிடும் நீதியை மட்டும் கொஞ்சம் விலக்கி வைத்துவிடலாம் இப்போது . நரியின் பெயர் அழகு சுந்தரம் . கொக்கின் பெயர் திரிபுரசுந்தரி . அழகு சுந்தரம் எட்டாத திராட்சைக் கொடிகள் இருக்கும் தோட்டத்துக்கு வயல் வரப்பொன்றின் வழியாக , நாக்கை நீட்டியபடி போய்க்கொண்டிருந்தது . சட்டென்று ஒரு கணத்தில் வெண்கொக்கு ஒன்று வயலுக்கு நடுவில் எழுந்து பறக்க , பச்சைக்கும் , வெள்ளைக்கும் ஏற்பட்ட தீவிரமுரணில் வரப்பில் மயங்கி விழுந்தது அழகுசுந்தரம் . பிறகு தெளிந்த நரி நண்பர்களிடம் பேசி , தான் பார்த்த கொக்கின் பெயர் திரிபுரசுந்தரி என்று அறிந்துகொண்டது . அதிலிருந்து தந்திரநரி என்று அழைக்கப்பட்ட அழகுசுந்தரம் , அன்றாடம் விரக தாபத்துடன் வயல்வெளிகளில் ஒற்றைக்காலில் தவம் இருக்கத் தொடங்கியது . திரிபுரசுந்தரியும் , தன்னை காதலிக்கும் நரியின் பெயர் அழகுசுந்தரம் என்று கேள்விப்பட்டவுடன் உடனே காதலில் விழுந்தது . சுந்தரம் - சுந்தரி என்று தரையில் தனது கூரலகால் எழுதிப் பார்த்தது திரிபு