Skip to main content

Posts

Showing posts from May, 2024

பிரிவின் சாம்பல், கூடலின் அரும்புகள் – பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

  இன்று மீண்டும் வலி, பிரிவாற்றாமையின்  சரடைக் கொண்டு உன் நினைவின் அரும்புகளைத் தொடுத்தேன் நேசத்தைத் துறந்ததால் உண்டான பாழ் நிலத்திலிருந்து சேகரிக்கப்பட்டவை.   நாம் காதலித்த பருவங்களின் மலர்களையும் சேர்த்து உனது வாயிற்படியை அலங்கரித்தேன் அதுவும் போதாது இன்னொரு புனிதமான படையலையும் செய்தேன். பிரிவின் சாம்பல்,  ஆசையின் விளிம்பில் கட்டப்பட்ட கூடலின் மலர்கள்.

வ. உ. சி. செலுத்திய சுதேசிக் கப்பலின் தீர, துயர சரிதம்

காலனிய வரலாற்றாய்வாளர்களில் தெற்காசிய அளவில் மதிக்கப்படும்  அறிஞர்களில் ஒருவர் ஆ. இரா. வேங்கடாசலபதி. இவர் நாற்பதாண்டுகள் ஆய்வுசெய்து ஆங்கிலத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ள நூல் ‘சுதேசி கப்பல் – வ. உ. சிதம்பரம் பிள்ளையும் பிரிட்டிஷ் கடல் வர்த்தக சாம்ராஜ்யத்துக்கு எதிராக நடத்திய போராட்டமும்’ (‘SWADESHI STEAM: V.O. Chidmbaram Pillai and the Battle against the British Maritime Empire’). தென்னிந்தியாவின் திலகர் என்று போற்றப்பட்ட வ. உ. சி. தலைமையேற்று நடத்திய சுதேசி இயக்கத்தின் எழுச்சி, அது சந்தித்த ஒடுக்குமுறையின் நுணுக்கமான வரலாறு இது. ஆட்சி அதிகாரமும் கொடுங்கோன்மையும் வல்லமையும் கொண்டிருந்த பிரிட்டிஷாரின் அரசியல் ஆதிக்கம், வர்த்தக ஆதிக்கம் இரண்டையும் நேருக்கு நேராகச் சந்தித்து மோதுவதற்குத் தமிழ்நாட்டின் தென்கோடி ஊரொன்றில், சாதாரண வழக்கறிஞர் ஒருவர் மேற்கொண்ட முயற்சிதான் ’சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் நிறுவனம்’. தென்னிந்தியாவின் கலாசார, வர்த்தக, ஊடகத் தலைநகரமாக இருந்த மெட்ராஸிலிருந்து அல்ல, இன்றைக்கும் அன்றாடத்தின் மந்தகதியில் பெரிய சம்பவங்களின்றி வரலாற்று நிசப்தத்தில் தென்னகத்தின் மூலையிலிருக்கும்

து ஆ – பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

  வாருங்கள் பிரார்த்தனைக்கு நமது கரங்களை உயர்த்துவோம் சடங்கு சாங்கியங்களை மறந்துபோனோம் நாம். நேசத்தின் இதத்தைத் தவிர கடவுள் உருவங்களில் நம்பிக்கை இல்லாது போனவர்கள் நாம். வாழ்க்கையென்னும் நேசத்துக்குரியவளை யாம் பிரார்த்திப்போம் இன்றின் நஞ்சிலிருந்து நாளையின் அமிழ்தை நிரப்பட்டும் ஒற்றை நாள் தரும் வலியைக்கூட தாங்கவியலாதவர்களின் கண்கள் பகல் இரவுகளிலிருந்து விடுதலை பெறட்டும். விடியலின் முகத்தையே காண்பதற்குப் பலமில்லாத விழியுடையோரின் இரவுகளில் எவராவது விளக்குகளை ஏற்றட்டும் நடக்கத் திராணியில்லாதவர்களுக்கு யாராவது பயணத்திசை காட்டட்டும் யாரையெல்லாம் அவரவர் மதங்கள் பொய்சொல்லி வஞ்சித்தனவோ அவற்றைப் புறக்கணித்து  சத்தியத்தை நாடும் தைரியத்தை அவர்கள் பெறட்டும் ஒடுக்குமுறையின் வாள்கள் தலையில் இறங்குவதற்காக காத்திருப்பவர்கள் தண்டனையின் கரங்களைத் தடுக்கும் ஆற்றலைப் பெறட்டும். யாருக்கெல்லாம் அவர் மறைத்துவைத்த ரகசிய அன்பின் ஆன்மா எரிந்துகொண்டிருக்கிறதோ அவர்களது வாட்டம் குறைய நாம் உறுதிமொழியேற்போம்.   சத்தியத்தின் வார்த்தை இத

இதயமே, எனது சக யாத்ரீகனே - பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

  என் இதயமே, என் சக யாத்ரீகனே மீண்டும் உத்தரவு வந்துவிட்டது நாம் நாடுகடத்தப்பட்டிருக்கிறோம். நம் நேசத்துக்குரியவளின் தூதுவன் அவன் தடம் தேடி அவன் பற்றிய குறிப்புகளைத் தேடி பார்ப்பவர் ஒவ்வொருவரிடமும் கேட்டபடி தெருத்தெருவாக நகரம் நகரமாக அலைந்துதான் நமது இல்லத்துக்கு திரும்ப வேண்டும்.   பரிச்சயமற்ற மக்கள் நிறைந்த இந்நகரத்தில் இரவை நோக்கி பகலைச் சுமந்திழுக்க வேண்டியிருக்கிறது இவர் அவர் என்றில்லாமல் எல்லாரிடமும் பேச்சுகொடுக்கும் நிலைமைதான் என்ன?   வாதை மற்றும் துயரின் இரவு பேரிடர் கொடுப்பது. அதைச் சமாளித்தாலும் அதற்கு எது எல்லை? வரம்புதான் என்ன? ஒரேயொருமுறைதான் வருமெனில் சாவதொன்றும் கொடூரம் அல்ல.

இங்கிருந்து நகரத்தை அவதானிப்பது - பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

    இங்கிருந்து நகரத்தை அவதானிக்கிறேன் சகல திசைகளிலும் விரிந்திருக்கும் சிறைபோல வட்டங்களிடையே வட்டமாக நகரத்தின் சுவர்கள் நீள்கின்றன ஒவ்வொரு தெருவிலும் சிறைவாசிகள் நடக்கிறார்கள் சுற்றித் திரிகிறார்கள் மைல் கல் இல்லை சேருமிடம் தெரியாது விடுதலையாகிச் செல்ல வழியும் இல்லை யாராவது ஒருவர் வேகமாக நடந்துசென்றால் அவரை ஏன் ஒரு ஆணைக்கூச்சல் நிறுத்தவில்லையென்று ஆச்சரியப்படுகிறீர்கள் யாரோ ஒருவர் முஷ்டியை உயர்த்தினால் சங்கிலிகள் குலுங்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள் அங்கே கௌரவத்துடன் இருப்பவர் ஒருவர் கூட இல்லை யாரும் தம் உணர்வுகளின் கட்டுப்பாட்டிலும் இல்லை. ஒவ்வொரு இளைஞனும் குற்றவாளியின் முத்திரையைச் சுமக்கிறான் ஒவ்வொரு யுவதியும் அடிமையின் சின்னமாய் இருக்கிறாள் அவர்கள் கூடிக் கும்மாளமிடுகிறார்களா? துக்கம் அனுஷ்டிக்கிறார்களா? உங்களால் சொல்லவே முடியாது. தூரத்து விளக்குகளைச் சுற்றி ஆடும் நிழல்களைப் பற்றி இங்கேயிருந்து எதுவும் உரைக்கவியலாது. சுவர்களிலிருந்து வண்ணங்கள் வழிந்தோடுகிறதா அது ரத்தமா அல்லது ரோஜாக்களா?  

உனது அழகுக்கு வந்தனம் - பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

  உன் அழகுக்கான வந்தனங்களாக பண்களை அமைக்கிறான்  கவிஞன் மொட்டை மாடியில் உனது  உடை  வண்ணங்களாக தெளிக்கப்பட்டுள்ளது சிலவேளைகளில் காலை ஒளிர்கிறது அல்லது  பிற்பகல்  ஒளிர்கிறது அல்லது  மாலை ஒளிர்கிறது அத்துடன் உன்  கம்பீரத்தை அந்த உடை  அழகுபடுத்தும்போது தோட்டத்தில் சைப்ரஸ், பைன் மரங்கள் புது நளினம் கொள்கின்றன உனது அதரங்கள் மற்றும் முகத்தின் பிரதிபலிப்பில் இதயம் மதுக்குவளையில் அமிழும்போது கஜல் பாடலின் கம்பளச்சுருள் அவிழ்கிறது. உனது உள்ளங்கைகளில் மருதாணியின் வண்ணம் பிரகாசத்தை இழக்காதிருக்கும்வரை கவிதை என்னும் புதுப்பெண்ணை நேசிக்கும் கலை இந்த உலகத்தில் இருக்கும்வரை உன் அழகு தன் இளமையின் ஆற்றலை இழக்காதிருக்கும்வரை இந்த உலகம் என்மேல் கனிவுடன் இருக்கும்வரை நீ மூச்சை இழுத்துக்கொண்டிருக்கும்வரை தோழமை கொண்டிருக்கிறது ந ம் நிலத்தின் காற்று . காலம் கடுமையாகலாம் அதீதமான துரதிர்ஷ்ட வேளைகள் வரலாம் அந்த வேளைகளின் கசப்பை உனது நினைவு இனிமையாக்கிக் கொண்டிருக்கிறது.

இரவின் சுவர் - பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

என் முன்னால் இரவின் சுவர் நேசத்துக்குரியவளின் முகபிம்பம் இதயத்தின் ஆடியிலிருந்து ரத்தம் மீண்டும்  சொட்டத்தொடங்குகிறது வெளியே  விடாமல் எனக்கேயான வழியில் ஒடுக்கிக்கொள்ளும்போது என் பார்வை மீண்டும் மங்குகிறது மிதித்துத் துவைத்தெடுக்கப்பட்ட எனது வேட்கையால் நொறுக்கப்பட்டு என் உடல் முழுவதும் மீண்டும் நோவெடுக்கத் தொடங்குகிறது.

எனது வலிக்கு வார்த்தைகள் அளிக்கப்பட்டால் - பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

எனது வலி, சத்தமில்லாத இசை எனது இருப்பு, பெயரற்ற ஓர் அணு எனது வலிக்கு வார்த்தைகள் அளிக்கப்பட்டால் எனது பெயரை நான் அறிந்துகொள்வேன் நான் இருக்கும் இடங்களை தெரிந்துகொள்வேன் எனதிந்த இருப்புதான் என்ன? இந்த பூமியைச் சுற்றவைப்பது எதுவென்று ஒரு குறிப்புகொடுங்கள் போதும் தெரிந்துகொள்வேன் அந்த ரகசியத்தை நானே தோண்டினால் எனது மௌனத்துக்கு உச்சரிப்பு கிடைக்கும் நான்  பிரபஞ்சத்தை இயக்கும் இறைவன் ஆவேன் ஈருலகின் செல்வங்களையும் அடைவேன்.

ஓவியர் ஜெயராஜ் – தமிழ் வாழ்க்கையின் மைக்கேல் ஆஞ்சலோ

தமிழ்நாட்டில் சில ஆயிரங்கள் கணக்கில் வாசகர்களிடம் புழங்கி, அதிகார, ஆட்சி செல்வாக்கு இல்லாத மணிக்கொடி, எழுத்து, கசடதபற சிறுபத்திரிகைகளும் அதில் வந்த படைப்புகளும் ஆவணமாக்கத்துக்கும் விரிவான ஆய்வுகளுக்கும் உள்ளாகியிருக்கின்றன. ஆனால், வெகுஜன அரசியலும் வெகுஜன சினிமாவும் வெகுஜனப் பத்திரிகைகளும் அன்றாட உணவாகவும் பேச்சாகவும் மூச்சாகவும் இருந்த ஒரு நூற்றாண்டு தமிழ் வாழ்க்கையில் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ஒரு சினிமா போஸ்டர் கூட ஆவணப்படுத்தப்படவில்லை. குமுதம், ஆனந்த விகடன் தொடங்கி சரோஜாதேவி வரை சென்ற நூற்றாண்டில் நம் தமிழ் சமூகம் நவீனமடைந்த வரலாற்றைக் காட்டும் வெகுஜன பத்திரிகை எழுத்து, சித்திரங்கள் ஆகியவற்றுக்கு பதிவே இல்லாமல் பெரும் மறதியின் புதைசேற்றில் உள்ளன. சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் ஆண்கள், தமிழ் பெண்கள், அணிந்த ஆடைகள், புழங்கிய வீடுகள், பயணித்த வாகனங்கள் ஆகியவற்றுக்கு நம்மிடம் இருக்கும் அரிதான ஆவணங்களில் ஒன்றான ஓவியர் ஜெயராஜின் சித்திரங்களும் அப்படித்தான் நமது மறதிக்குள் போய்விட்டன. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் 86 வயதில் மனைவி ரெஜினாவுடன் சென்னை சூளைமேட்டில் உள்ள வீட்டி