Skip to main content

Posts

Showing posts with the label இளங்கோ கிருஷ்ணன்

எஞ்சிய நஞ்சை ருத்திரனுக்கு அளிக்கிறார் இளங்கோ. அதுதானே நியாயமும்

  பாம்பு, பூனை, மரணம் இந்த மூன்றும் கவிதைக்குள் தென்பட்டாலே போதும், கவிதை துடியோ, வசீகரமோ கொண்டுவிடும். இந்த மூன்றையும் தொட்டும் செய்யுள்களாகிப் போகும் வசவச கவிதைகளையும் துரதிர்ஷ்டமாகப் பார்க்க நேர்கிறது. மரணத்தை அவ்வளவு எளிதாக, கலையாக இருந்தாலும் புனைவாக இருந்தாலும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதே எனது தரப்பு. மரணம் சார்ந்த அச்சமோ, பொது சமூகத்தில் உள்ள விலக்கம், அமங்கல உணர்விலிருந்து இதைச் சொல்லவில்லை. சகலத்தையும் விட மரணத்தை மிகவும் பொறுப்பாக அணுகவேண்டியிருக்கிறது; சிவதனுஷை எடுப்பதைப் போல; சிறுவர்கள் எடுத்தால் தலையில் கூட விழுந்துவிடலாம். இளங்கோ கிருஷ்ணனின் 'வியனுலகு வதியும் பெருமலர்' கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் உள்ள துடி மற்றும் சரள அம்சத்தில் விலக்க இயலாமல் மரணத்தின் போக்குவரத்து உள்ளது. மரணபோதத்தின் போதை ஏறிய இந்தக் கவிதைகளோ பிறப்பின் உக்கிர ஆற்றலைக் கொண்டிருப்பதுதான் இதன் விசேஷ அம்சம்.   கலாப்ரியா வழியாக, ‘இன்னும் கிளிகள்' கவிதையில் உணரமுடியும் 'சாவின் நெடி' வாயிலாக வன்முறையும் துடியும் தமிழ் புதுக்கவிதைக்குக் கிடைக்கிறது. இன்னும் கிளிகள் பாகவதர் கிராப்ப...

இந்தியாவை இணைக்கும் மெய்யான சாலை

இந்தியாவை இணைக்கும் வெவ்வேறு சாலைகள் அகத்திலும் புறத்திலும் இங்கே இன்னமும் உள்ளன. வளர்ச்சி, அபிவிருத்தி என்ற பெயரில் பக்கவாட்டு இருட்டைக் காணாமல், விழுங்கிய கிராமங்களை, சிதைத்த குடியானவர்களின் உடல்களைக் காணாமல், நீளும் சாலைகள் இந்தியாவை இணைக்கின்றன. சுயத்தின் அச்சம் சுயத்தின் வெறுப்பு சுயத்தின் ஆற்றமுடியாத புண்ணை அதிலிருந்து வரும் வலியை புண்பட்ட பண்பாடாக மாற்றி, இறந்தகால மகத்துவத்துக்கும் இறந்தகாலத்தில் நடந்த இழப்புகளுக்கும் இன்று பழிதீர்க்க புறப்பட்டவர்களின் சாலையும் உண்டு. அரசியல், வரலாறு என்ற பெயரில் அந்தச் சாலை வளர்ச்சி, அபிவிருத்தி என்ற பெயரில் நீளும் தேசிய நெடுஞ்சாலையோடு தலைநகரத்தில் இணைகின்றன. கலை, இலக்கியம், பண்பாட்டு வெளிகளிலும், அந்த அரதப்பழசான ஆறாத சனாதன ரணத்தின் குரல்கள், தமிழ் சூழலிலும் ஆதிக்கம் பெற்றுள்ள நிலையில் ‘மதம் அரசியலின் குறுவாள் கலையோ மதத்தின் குறுவாள்’ என்று கவிதை வழியாக ஒலிக்கும் இளங்கோவின் குரல் அத்தியாவசியமானது. தரம்பால் போன்ற பெரும் அறிஞரையே இந்தப் புண்பட்ட பண்பாட்டின் வலி, பாபர் மசூதி இடிப்பு நியாயமானதென்றும், காயப்பட்ட பண்பாடு கொடுக்கும் வலியை அனுபவிக்கும்...

இளங்கோ கிருஷ்ணன் கடக்கும் எல்லை

தமிழ் நவீன கவிதையின் இயல்பில், அதை விசேஷம் என்ற அர்த்தத்திலேயே சொல்கிறேன், சிறந்த கவிகள் தமிழ்த் தன்மையுடன், உலகளாவிய உணர்வுநிலையைத் தொடுபவர்களாகப் பெரும்பாலும் இருக்கிறார்கள். நகுலன், பிரமிள், அபி, தேவதச்சன், விக்கிரமாதித்யன், கலாப்ரியா  என வேறு வேறு தளங்கள், உள்ளடக்கங்களைச் சேர்ந்தவர்களும் பிரத்யேகமாக தமிழ்த்தன்மையைக் கொண்டிருப்பவர்கள்தான். சுந்தர ராமசாமி, ஒருமுறை பிரமிளைப் பற்றி தனிப்பட்ட பேச்சில், தமிழ் மனம் என்ற ஒன்றை அவரிடத்தில் பார்க்கமுடிகிறது என்று சொன்னார். அவர் சொன்ன குணத்தை எனக்குத் தாமதமாக இப்போது அடையாளம் காணமுடிகிறது. இந்தப் பின்னணியில் மராத்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதிய கவிஞரான அருண் கொலாட்கரின் கவிதைகளைப் படித்து, சில கவிதைகளை மொழிபெயர்க்கவும் முயற்சித்தபோதும், சுகுமாரன் மொழிபெயர்ப்பில் மலையாளக் கவிஞர் பி. ரவிக்குமாரின் நசிகேதன் நீள்கவிதையைப் படித்தபோதும் அவர்களிடம் அவர்கள் புழங்கும் மொழி, பிராந்தியப் பண்பு தாண்டியும் ஓர் இந்தியத் தன்மை இருப்பதாக கருதினேன்; கருதுகிறேன். அருண் கொலாட்கர் மும்பை என்ற பெருநகரத்தைப் பற்றிப் பேசும்போதும் நாசிக்கின் அருகில் உள்ள குக்கிரா...

இளங்கோ கிருஷ்ணனும் ஆனந்தும் சந்திக்கும் அகாலம்

 'பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்' தொகுதியை ஒப்பிடும்போது, எண்ணிக்கை அடிப்படையிலேயே வெளிப்படையாக வளமையையும், வெளிப்பாட்டில் சிருஷ்டிகரத்தை சிந்திவிட்டுப் போய்விடாத சரளத்தையும் கொண்டிருக்கும் புதிய தொகுதியான இளங்கோ கிருஷ்ணனின் 'வியனுலகு வதியும் பெருமலர்' -ஐப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். அகம் - புறம், அந்தரங்கம் - பொது, தனியியல்- அரசியல், உடல் - மனம் என்று எதிரெதிரான திசையில் புதுக்கவிதையில் சென்று கொண்டிருந்த குதிரைகள், நவீன கவிதையில் நேர்த்தியாகப் பூட்டப்பட்டு, கவிதையின் முழுமையான செல்நெறியில் இயல்பாகப் பயணிப்பதைப் பார்க்கமுடிகிறது. இதற்குத்தான் எத்தனை ரத்தமும் பலிகளும் இங்கே தேவைப்பட்டிருக்கின்றன. இளங்கோவில் கலாப்ரியாவும் யவனிகா ஸ்ரீராமும் ஒரு மரபாக, ஒரு சாயலாகத் தெரிகிறார்கள். வீடு, வெளியைப் பிரிக்கும் சுவர்களை, நிலைகளை உடைத்துப் போட்டு அமர்ந்திருக்கிறார் இளங்கோ கிருஷ்ணன். கரோனா ஊரடங்கின் பெயரால் மக்கள் மீது, குறிப்பாக வறிய மக்கள் மீது ஏவப்பட்ட அரச கொடுங்கோன்மைக்கான வன்மையான எதிர்வினை இந்த தொகுப்பில் 'பசியின் கதை' கவிதைத் தொடர் ஆகியுள்ளன. 'பசியின் கதை...