Skip to main content

Posts

Showing posts from March, 2012

ஷங்கரின் திரைப்படத்தில் கதாநாயகியின் மரணம்

நண்பனை முன்வைத்து சில ஆய்வுக்(!) குறிப்புகள் உறங்காப்புலி நண்பன் படம் பார்த்து முடித்தபோது சமச்சீர் கல்வி , கும்பகோணம் பள்ளி தீ விபத்து முதல் படிப்பின் அழுத்தம் தாளாமல் சமீபத்தில் ஆசிரியையைக் கொலை செய்த மாணவனைப் பற்றிய செய்தி கள்   எல்லாம் எனக்கு ஞாபகத்தில் வந்துபோனது. இந்தியாவில் குழந்தைகளின் பிரத்யேக படைப்பூக்கத்தை ஊக்குவிக்காத கல்வி அமைப்பு , எல்கேஜி முதல் உயர்கல்வி வரை மனப்பாட இயந்திரங்களாக மாணவர்களை மாற்றுவது வரை எல்லாவற்றையும் சிறப்பாக நண்பன் பட மே பேசிவிட்டது. ஆனால் நண்பனை முன்னிட்டு எனக்கு ஏற்பட்ட ஏமாற்ற அம்சம் குறித்து மட்டும் இங்கே பேசலாம் என்று இருக்கிறேன்.   ஜெண்டில்மேன் படத்திலிருந்து ஷங்கரின் சினிமா என்னும் பிரமாண்டமான விருந்துச் சாப்பாட்டைச் சுவைத்தவர்களுக்கு   அவரது கதாநாயகிகள் மற்றும் தனிப் பாடல் நாயகிகளின் முக்கியத்துவம் என்னவென்று நன்றாகவே உணர்வார்கள். ஜெண்டில்மேனில் தேசலான , இழுத்துப் போர்த்திக் கொள்ளும் கட்டுப்பெட்டி நாயகியாக மதுபாலா வந்தாலும் , டெல்லியிலிருந்து வரும் பெண்ணும் , சிக்குபுக்கு கௌதமியும் தீபாவளிப் பட்டாசாக காமத்துய்ப்பை வழங் கத் தவறவில்லை .

யாக்கைத்திரி காதல் சுடர்

ஷங்கர்ராமசுப்ரமணியன் சமீபத்தில் மதுரையில் தேவதச்சனுக்கு நடைபெற்ற விளக்கு விருது விழாவில் தேவதச்சனின் கவிதைகள் குறித்து சுந்தர்காளி பேசும்போது, இந்த நூற்றாண்டில் தற்காலிக மகிழ்ச்சிகள் உண்டு, விடுதலை கிடையாது என்று கூறினார். அவர் அப்படிச் சொன்னது என்னைத் தொடர்ந்து கிளர்த்தியது. எல்லாக் காலமுமே சின்னச் சின்ன மகிழ்ச்சிகளும் நெடிய சிறையுமாகத் தான் வாழ்வு, மனிதனுக்குத் தோற்றம் தந்திருக்கும் என்றே எண்ணத் துணிகிறேன். வாழ்வென்னும் நெடிய சிறையிருப்பை வாழ உகந்ததாக மாற்றுவதில் காதலுக்கும், காமார்த்தத்திற்கும் பிரதானப் பங்கிருக்கிறது. ஒருவகையில் படைப்புகளுக்கு உந்துதலாக இருப்பதும் காமார்த்தமாகவே உள்ளது. மற்றதின் துணை இருப்பில் மகிழ்ச்சி கொள்வது, மற்றதின் புதிரை அறிய விழைவது, புதிரான மற்றதோடு ஈடுபடுவதும் முரண்படுவதும், மற்றதை வரையறுக்க முயல்வது, மற்றதை வெறுப்பது, மற்றதுக்காக தன்னையோ, மற்றதையோ அழிக்கவிழைவது என அனைத்தையும்ம் காதலின் வழியாக மனித உயிர்கள் காலம் காலமாக சலிக்காமல் அரங்கேற்றி வருகின்றன.   இந்த சலிக்காத விளையாட்டையே 'காதலில் சொதப்புவது எப்படி' சினிமா, நவீன கால தகவல் தொடர்புசாதன

பூபேன் கக்கர் எழுதிய போரன் சோப் என்னும் கதை உயிர் குறித்து...

ஷங்கர்ராமசுப்ரமணியன் பயமும் , வன்மமும் , கழிவிரக்கமும் , தனிமையும் , அதனால் அதிகாரத்தாலும் கொலைத்திட்டங்களாலும் மூடுண்டுள்ளது நமது காமம் . வரலாற்றில் நெடுங்காலமாய் அது தீண்டாமைக்கும் , ஒதுக்கலுக்கும் உள்ளாகி வருகிறது . நாளும் பொழுதும் தன் இருப்பைத் தெரிவித்துக் கொண்டேயிருக்கும் தோல் நோயைப்போல் சதா நச்சரித்து தன் இருப்பைத் தெரிவித்தபடி நம் உறக்கத்திலும் தொடர்வதாய் இருக்கிறது . மண்ணுளிப் பாம்பை ஒத்த அதன் குருட்டுக் கண்களுக்கு நம்மை ஜீவிக்கச் செய்யும் சக்தியும் உண்டு . அதனால் அதை ஒருபோதும் குற்ற விசாரணைக்குட்படுத்த இயலாது . ஆனாலும் , அதற்கு தணிக்கையின் விஷத்தை எத்தனை நாள் தான் உணவாகத் தந்து போஷித்துக் கொண்டிருக்கப்போகிறோம் . போரன் சோப் கதை வீடுகளுக்கு இடையே தண்டனையின் அச்சப் பனிக்குள் மறைந்திருந்த என் குறியை குற்றநீக்கம் செய்கிறது முதலில் . விரைப்பும் தளர்வுமான அதன் மாறாத அன்றாடத்தின் அலுப்பை நீக்கி எனது ஆசையின் விறைப்பை காலாதீதத்துக்குள் காதலாய் செய்கின்ற வித்தையைச் செய்கிறது போரன் சோப் . எனது குறியின் விரைப்பு உள்திரும்பி ஒரு பாடலாய் ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்குப் பரப்பும் ச