ஞானக்கூத்தனின் ‘அழிவுப் பாதை’கவிதையில் வரும் காட்சி இன்று பலருக்கும் பரிச்சயம் இல்லாதது. அதுகுறித்த எனது ஞாபகத்தை முதலில் சொல்லவேண்டும்.தென்காசியில் மேட்னி ஷோ பார்ப்பதற்காக கீழப்பாளையத் தெரு வீட்டிலிருந்து கிளம்பி உலகம்மன் கோயிலைக் கடந்தபோதுதான் அக்காட்சியை முதல்முறை பார்த்தேன் – 12 வயதுச் சிறுவனாக. ஒரு பாம்பாட்டி. பக்கத்தில் பாம்புகளோடு சில கூடைகள். ஒரு கூடை மட்டும் லேசாகத் திறக்கப்பட்டு, கருப்பு நிறத்தில் பாம்பு சுருண்டிருந்தது.பாம்பின் வாயிலிருந்து நூலிழையாக இரட்டை நாக்கு அவ்வப்போது தென்பட, பாம்பாட்டி பேசிக்கொண்டிருந்தார். பத்து நிமிடத்துக்கு மேல் பேசிவிட்டு, சுற்றி நின்றிருந்தவர்களை, முட்டியைக் கட்டாமல் குந்தி உட்காரச் சொன்னார். முட்டியைக் கட்டினால் ரத்தம் கக்கிவிடுவீர்கள் என்று சொல்லி வட்டத்தை நெருக்கினார். ஞானக்கூத்தனின் அழிவுப் பாதை கவிதையில் வருவதுபோலவே பாம்பாட்டி பேசியதும், மகுடிநாதனுக்குக் கட்டுப்பட்டது போல எட்டுப்புறமும் திறந்திருந்த பஜாரில், சொற்கள் வழியாக உருவான சிறையில்நாங்கள் மயங்கிக் கட்டுண்டோம்.பிறகு, கூட்டத்தில் ஓரு பையனை எழும்பி வரச் செய்தார். அவனை மயக்கித் தரைய...