Skip to main content

Posts

Showing posts from November, 2019

அன்புக்கு எத்தனை கால்கள்

இரண்டு கால்கள் நான்கு கால்கள் பதினாறு கால்கள் கொண்ட அன்பை இங்கே நான் எப்படிப் பாதுகாத்துப் பராமரிப்பேன் ? ஒரு முக்காலி போடும் அளவே இடமுள்ள கிரகத்தில் கூட குட்டி இளவரசனால் தனது நேசத்துக்குரிய ரோஜாவை ஒரு ஆட்டின் துர்வாயிலிருந்து காப்பாற்ற முடியவில்லை எனும்போது … நான் எப்படி என் அன்பைப் பாதுகாத்துப் பராமரிக்கப் போகிறேன் ? முந்தின தினத்தின் முடிவில் முளைத்திருந்த களைகளையெல்லாம் புன்னகையுடன் பிய்த்தெறிகிறேன் நீர் ஊற்றிய பிறகு என் விரலின் நுனியால் அதன் தலையைத் தட்டிக் கொடுக்கிறேன் வீட்டுக்கு வெளியே வழிகள் நீள்வது புதிராவது அங்கே மனிதர்கள் அன்னியர்கள் என்பதால் வாசல் கதவை நன்றாகப் சாத்திவைக்கிறேன் காகிதம் பிளாஸ்டிக் குப்பை உலோகங்கள் உணவு எதையும் பிரித்துப் பார்க்க என் அன்பின் நாவுக்குத் தெரியாது குனிந்து குனிந்து தரையில் பொறுக்கியபடியே நடக்கிறேன் காலிடுக்கில் ஒரு உடைந்த பிளேடைப் பார்த்து எடுக்கும்போத

பைரவ பிச்சாடனர்

இரண்டு ஆசாமிகளும் சிவ மூர்த்தங்கள்தான் ஒருவன் துளியிலிருந்து முளைத்தவன் பிந்தையவனோ சிவனையும் துறக்க தோஷம்பிடித்து அலைந்தவன் அதனால் தான் அவன் கையில் துள்ளிய மான் கீழே இறங்கியது பிச்சாடனரின் கை அருகம்புல்லை கவ்வத் துள்ளும்போது பைரவரின் நாயாகி விடுகிறது பைரவரின் நாய் இப்போதும் பிச்சாடனரின் மான் ஆவது சொல்லாமல் விடுபட்டது பைரவர் கை இறைச்சியைத் தொடரத் தொடங்கியபோதுதான் நாயுடன் தொடங்கியிருக்க வேண்டும் எமது சகவாசம் இரைக்குத் துள்ளும் கணத்தில் நாய் மான் மான் நாய் . பைரவர் கையில் அருகம்புல் பிச்சாடனர் கையில் இறைச்சி நாய்கள் மான்கள் உயிர் துள்ளும் அழகு உயிர் துள்ளும் கலை உயிர் துள்ளும் அறிவு உயிர் துள்ளும் விடுதலை பசி என்று பெயர் கொண்டது பசி என்று பெயர் கொண்டது பசி என்று பெயர் கொண்டது . ( ந . ஜயபாஸ்கரனுக்கு )

ஆள் பார்ப்பதில்லை அபாயம்

முல்லா ஆசிரியராகப் பணியாற்றும் பள்ளிக்கூடத்துக்கு  ஒரு பெண்மணி தனது சேட்டைக்காரப் பையனை    அழைத்து வந்தாள். தன் மகனைப் பயமுறுத்தி நல்வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்று முல்லாவிடம் வேண்டினாள். முல்லா முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டார். கண்ணெல்லாம் சிவக்கக் கொடூரமானார். மேலும் கீழும் தங்குதங்கென்று குதிக்கத் தொடங்கினார். திடீரென்று வகுப்பை விட்டு வெளியே ஓடினார். அந்தப் பெண்மணிக்கோ மயக்கம் வந்துவிட்டது. மயக்கம் தெளிந்து எழுந்த அந்தப் பெண்மணி முல்லா வருவதற்காகக் காத்திருந்தார். முல்லா சோர்வுடன் வகுப்பறைக்குத் திரும்பிவந்தார். ‘நான் என் மகனைத்தான் பயமுறுத்தச் சொன்னேன். என்னை அல்ல!’ என்றார். ‘ அம்மணி . நானே எத்தனை பயந்துபோனேன் என்பதை நீங்கள் பார்க்கத் தானே செய்தீர்கள் . ஒன்று நம்மை அச்சுறுத்தும்போது , அது ஆளையா பார்க்கிறது ?’

கற்பனையின் சாத்தியங்களைச் சொல்லும் ஹாக்கிங்

அவன் சிறுவனாக இருந்தபோது, பொருட்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வதில் பேராவல் கொண்டிருந்தான். கையில் கிடைப்பதை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றி அதன் இயக்கத்தைப் பார்ப்பதில் அவனுக்கு விருப்பம் அதிகம். அவன் வளர்ந்தபிறகும் தன் வேலையை மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால் அந்த வேலையின் வீச்சு வேறு. பொம்மை ரயில்களை உடைக்காமல் பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்பதைக் கண்டுபிடிக்க முயன்று வெற்றியும் கண்டான். அவன், ஸ்டீபன் ஹாக்கிங்ஸ். பிரபஞ்சத்தின் தோற்றம், கருந்துளைகள், காலம்-வெளி தொடர்பான சில புதிர்களுக்கு விடையளித்தவர்; அறிவியல் மீது சாமானிய வாசகர்களிடமும் ஈடுபாட்டை ஏற்படுத்தியவர் ஸ்டீபன் ஹாக்கிங். சமீபத்தில் மறைந்துபோன அவரது இறுதி நூல் ‘ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்’. கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? மனிதனைத் தவிர அறிவார்ந்த உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா? ஒரு கருந்துளைக்கு உள்ளே என்ன இருக்கிறது? உள்ளிட்ட பத்து முக்கியமான கேள்விகளுக்கு ஸ்டீபன் ஹாக்கிங் அளித்துள்ள ஆழமான பதில்கள் தான் இந்த நூல். இளம் தலைமுறையினர், மாணவர்கள், குழந்தை

முதல் இந்துக் கடவுளாக ராமன் - சீனிவாச ராமாநுஜம்

இந்தியாவின் முதல் இந்துக் கோயில் உதயமாகப்போகிறது. ராமர்தான் மூலவர். கோயில் என்று நாம் எதை அர்த்தப்படுத்தினாலும் , இந்த இந்துக் கோயில் தெய்விகத்தை அடையாளப்படுத்தவில்லை ; அடையாளப்படுத்தவும் முடியாது.இந்தக் கடவுளான ராமன், நவீன தேசிய – அரசு – மூலதனத்தின் அவதாரம் . மிக நெடுங்காலமாக உருவாக்கத்திலிருந்த கடவுள் இவன். இந்தியா என்று நாம் இப்போது அழைக்கும் நிலத்தில் குறுக்கும் நெடுக்குமாகப் பல நூற்றாண்டுகளாக அலைந்த ராமனிலிருந்து வேறுபட்டவன் இந்த ராமன். அவனைப் பற்றி ஏற்கெனவே இருக்கும் கதைகளுடன் புதிய சேர்க்கையாகச் சேர்பவன் அல்ல இந்தப் புதிய ராமன். இவன் ஒரு புதிய கதையை உருவகிப்பவன்.  இந்து என்று தயாராகிவருகிற ஒரு சமயத்தின் கடவுள் இவன். இவனுக்கு இறந்தகாலமோ எதிர்காலமோ இல்லை. இவனுக்கு நிகழ் மட்டுமே உண்டு. சீதா அல்லது லக்ஷ்மணன் அல்லது அனுமனை இவனது இப்பக்கத்தில் துணைகளாக்க முடியுமா என்று சந்தேகம்கொள்கிறேன். இவன் தசரத மன்னனின் மகனும் அல்ல. இவன் ராமன் ; இறந்த காலமோ எதிர்காலமோ இல்லாத தனி ராமன். விஷ்ணுவின் பதினொன்றாவது அவதாரம் இவன். இன்னமும் அவதரிக்காத பத்தாவது அவதாரமாகவும் இருக்கலாம். அத்துடன் இந

விளையனூர் ராமச்சந்திரன் - நியூரான்களால் நீங்கள் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள்

‘ எல்லாமும் எல்லாவற்றுடனும் தொடர்பில் உள்ளது ’. மூளை நரம்பியலாளர் , நரம்புசார் தத்துவவியலாளர் , நரம்புசார் அழகியலாளர் , கலை விமர்சகர் என்று பல பரிணாமங்கள் கொண்டவரும் நோபல் பரிசு பெறுவதற்கான வாய்ப்புள்ள இந்தியர்களில் ஒருவருமான விளையனூர் எஸ் . ராமச்சந்திரனின் ‘ தி டெல் டேல் ப்ரெய்ன் ’ புத்தகத்தைப் படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட மனப்பதிவு இது ( இந்தப் புத்தகம் தமிழில் ‘ வழிகூறும் மூளை ’ என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது ). ஜனவரி புத்தகக் கண்காட்சியில் தற்செயலாக ஒரு புத்தகக் கடைக்கு முன் விளையனூர் எஸ் . ராமச்சந்திரனைப் பார்த்தபோது அது மேலும் உறுதிப்பட்டது . பரிணாமவியல் அறிஞரும் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளருமான ரிச்சர்ட் டாக்கின்ஸ் இவரை , ‘ நரம்பியலின் மார்க்கோ போலோ ’ என்று குறிப்பிட்டுள்ளார் . சென்னை ஸ்டான்லி கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தவர் ; கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தை நரம்பியல் , உளவியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் விளையனூர் சுப்ரமணியன் ராமச்சந்திரன் அவருடன் மரு