Skip to main content

Posts

Showing posts from April, 2013

புரோட்டா-ஒரு பண்பாட்டுக் குறிப்பு

ஷங்கர்ராமசுப்ரமணியன் (சிறுவயதிலிருந்து எனது கனவு உணவாகவும், நிறைவேறாத எத்தனையோ ஆசைகளின் எளிய வடிகாலாகவும் இன்றும் இருக்கும் புரோட்டா குறித்த சில குறிப்புகள் இவை. புரோட்டா குறித்து விரிவான ஆய்வைச் செய்யவேண்டும் என்பதும், புரோட்டா குறித்த ஒரு ஆவணப்படத்தை எடுக்கவேண்டும் என்பதும் எனது நிறைவேறாத திட்டங்கள். நான் தான் தமிழ் புரோட்டா என்ற என்னுடைய கவிதையில், புரோட்டா எனது ஆசைப்படி ஒரு படிமமாக மாற்றப்பட்டது. இந்தக் கட்டுரையின் சற்று பெரிய வடிவம், 2000 ஆவது ஆண்டில் குமுதம் இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது. அதன் பிரதி என்னிடம் தொலைந்து போய்விட்டது. 2009 ஆம் ஆண்டு பேராசிரியர் பக்தவத்சல பாரதி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஞாபகத்திலிருந்து மீண்டும் எழுதப்பட்டது. ஆனால் அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விரிவான ஆய்வுக்கட்டுரையாக அமையவில்லை. அதற்குப் பின்னர் இது என்னிடமே தங்கிவிட்டது. இப்போது இங்கே வெளியாகிறது. என் அப்பா குறித்து  எத்தனையோ புகார்கள் உண்டு. ஆனால் புரோட்டாவையும், பிரியாணியையும் அவர் அறிமுகப்படுத்தியிருக்காவிட்டால் எனது வாழ்க்கையில் அவற்றின் ருசி தெரியாமலேயே போயிருக்க வாய்ப்ப

மதியத் தூக்கம்

ஷங்கர்ராமசுப்ரமணியன் அந்த மலைமண்டபக் கல்முற்றத்தின் குளிர்ச்சியில் நதியென பண்டிகைக்கால ஸ்படிக ஒளி நால்திசையிலும் படர உனக்காக காத்திருந்தேன். அண்மை அறையிலிருந்து உணவின் நறுமணம் காற்றில் ரகசியமாய் நீ பிரவேசித்தது எனக்குத் தெரியும் உன் நிழல் என் உடல் படரும்வரை நான் திரும்பவேயில்லை என் இதழ்பெற்ற நீ குனிகையில் கொலுசொலியுடன் சிறுபாவாடை குழந்தைகள் ஆரவாரத்துடன் நம் இடம் கடந்தனர் முற்றம் கடந்தபின் அவர்கள் நினைவில் நாம் இல்லை மலைமுகப்பில் உடை பரபரக்க உன் கரம் பற்றினேன் மண்டபம் திரும்புகையில்தான் நீ மறைந்துபோனாயோ கிருஷ்ணா எல்லாம் கனவு போல் இருக்கிறது அறை மூலையில் உன் காலணி இருந்தது உன் இருப்பின் அதிர்வை என்னுடன் அரூபமாய் காட்டித்தந்த்து இருப்பினும் என் தலைகோதி சிரம்பற்ற நீ இல்லை அந்தி கவிழும் ஆற்றாமையில் நிலைக்கண்ணாடி வந்தடைந்தேன் கண்ணாடி நீலச்சொரூபமாய் தளும்ப ஆரம்பித்திருந்தது.   (மிதக்கும் இருக்கைகளின் நகரம்-2001 தொகுதியிலிருந்து)