Skip to main content

Posts

Showing posts from April, 2017

இன்னொரு வாசல்

ஷங்கர்ராமசுப்ரமணியன் குகையின் நீளம் கொண்ட புதிய அட்டைப்பெட்டியில் வீட்டுக்கு வரும் பூனைக்கு பால் கிண்ணத்தை வைத்தாள் எங்கள் பாப்பா அட்டைப் பெட்டிக்குள் புகுந்து பாலைக் குடித்தது பூனை உள்ளே இருப்பதாகவும் அதை வளர்க்கப் போவதாகவும் பாப்பா சொன்னாள் குனிந்துபார்த்தேன் காலியாக இருந்தது அட்டைப் பெட்டிக்கு இன்னொரு வாசல் உண்டு அத்துடன் அது பூனை வளர்ந்ததும் கூட நாளையும் வரும் என்றேன் அந்தக் கொழுத்த அழகிய பூனை இன்றும் வந்தது. 

இடையில் பிரிக்கும் நதி

ஷங்கர்ராமசுப்ரமணியன் ஞானக்கூத்தனின் மறைவுக்குப் பிறகு வெளியாகியுள்ள ‘இம்பர் உலகம்’கவிதைத் தொகுதி அவரது நீடித்த தரத்தையும் உள்ளடக்கத்தின் வளமையையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஒரு வடிவத்தில் நீண்ட காலம் புழங்கியவர்கள் என்ற கவுரவம், பணிமூப்புத் தகுதி மட்டுமே கோராத புதுமையும் வளர்ச்சியும் கொண்டது ஞானக்கூத்தனின் கவிதை உலகம். இப்படித் தங்களையும் தங்கள் மொழியையும் உள்ளடக்கத்தையும் புதுப்பித்தபடி இளம் கவிஞர்களின் மொழியையும் பாதிப்பவர்கள் என்று ஞானக்கூத்தனையும் தேவதச்சனையும் சொல்ல முடியும். இம்பர் உலகம் என்றால் இந்த உலகம் என்று பொருள். இந்த உலகத்தைப் பற்றி மட்டுமே எழுதிக்கொண்டிருந்தவர் ஞானக்கூத்தன். இத்தொகுதியில் வரும் ஏழாவது கவிதையான ‘குருதியின் குரல்’எதிர்வினைகளே எதிர்ப்புகளாக மயங்கித் தெரியும் இக்காலகட்டத்துக்குப் பொருத்தமானதாகத் தோன்றுகிறது. நாயை, அதன் குரைப்பைப் பரிசீலனை செய்யும் கவிதை குருதியின் குரல். எனக்கு சமீபத்தில் நாய்களை, குறிப்பாக, தெருநாய்களைப் பார்க்கும் போது, நேசமும் அவற்றுடனான அடையாள உணர்ச்சியும் பெருகி வருகிறது. நாய்கள் மழையையும் கோடை யையும் வயோதிகத்

ஹம்சா பரமஹம்சா

 ஷங்கர்ராமசுப்ரமணியன் ஞானிகள் என் இதயத்திடம் கிசுகிசுக்கின்றனர் பிரபஞ்சம் எனக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது சென்ற கோடைக் காலத்தை துயரத்தில் தொலைத்துவிட்டேன் இந்தக் கோடைக்காலம் அவிந்த இலைகளின் வீச்சமாக  மெல் ஈரக்காற்றாக பளிச்சென்று உதிர்த்து நிற்கும் மரங்களாக நினைவுகளின் கனமின்றி  என் புலன்களை நிரப்பிப் புதுப்பிக்கிறது தேவதச்சனுக்குக் கோவில்பட்டியில் கோடையை உரைக்கும் முதல் குயில் பெருங்குடி ரயில் நிலையத்தில் மனமொழிந்த ஒரு நொடித் துளைக்குள்  என்னிடம்  பாடியது ஹம்சா  பரமஹம்சா

துயரத்தைத் தவிர்ப்பது அல்ல; அர்த்தமுள்ளதாக்குவதுதான் வாழ்க்கை

லிசா ஓ கெல்லி | தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் குடியேறிய தமிழ் பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தவர் பால் கலாநிதி. நரம்பியல் விஞ்ஞானியாக வேண்டும் என்ற பெரிய லட்சியத்துடன் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அறுவை சிகிச்சைப் பயிற்சி, ஆராய்ச்சிப் படிப்பு முடித்திருந்த அவருக்கு, 36 வயதில் அரிதான நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. புற்றுநோய் கண்டறியப்பட்ட பின்னரும் உடல் மோசமாகத் தளர்ந்துபோகும்வரை சிக்கலான அறுவைசிகிச்சைகளைச் செய்த அவர், சக்கர நாற்காலியில் இருந்தபடி தன் நினைவுக்குறிப்புகளை நூலாகவும் எழுதத் தொடங்கினார். மரணத்தை எப்படிப்பட்ட நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு ஓர் அரிய உதாரணம் அந்த நூல். 37 வயதில் காலமான பால் கலாநிதியின் மனைவி லூசி கலாநிதியின் நேர்காணல் இது… பால் கலாநிதியினுடைய புத்தகத்தின் வெற்றி உங்களை ஆச்சரியமடைய வைத்ததா? நினைத்தே பார்க்கமுடியாத வரவேற்பு கிடைத்தது. அது முறைப்படி வெளியாவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர், விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால் இறக்கும்