Skip to main content

Posts

Showing posts from February, 2021

காட்டைப் பிரிந்த யானை நான் - ரமேஷ் - பிரேதன் நேர்காணல்

  மேற்கத்தியத் தத்துவமும் இந்தியத் தத்துவ மரபுகளும் ஊடாடும் பின்நவீனத்துவப் புனைவுகள், கட்டுரைகள் வழியாகத் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அறிமுகமாகி, சிறுபத்திரிகை வெளியில் காத்திரமாகத் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவர்களில் ஒருவர் ரமேஷ் பிரேதன். எழுத்தாளர் பிரேமுடன் தொடக்கத்தில் இணைந்து இயங்கிய இவர் தற்போது ரமேஷ் பிரேதன் என்ற பெயரில் தனியாக இயங்கிவருகிறார். கவிதை, காவியம், சிறுகதை, நாவல், கட்டுரைகள், நாடகம் எனச் செயல்பட்ட எல்லாத் தளங்களிலும் முத்திரை பதித்த அரிதான கலைஞர். சாதிதான் எல்லா இந்தியர்களையும் தமிழர்களையும் பிரிப்பதாகவும் இணைப்பதாகவும் உள்ளது என்ற கருத்தோட்டப் புள்ளியில் நின்று, ஒரு தமிழ்ப் பொது மனிதனையும் அவனுக்கான விடுதலையையும் கனவுகாணும் மூன்று நாவல்கள் ‘அவன் பெயர் சொல்’, ‘ஐந்தவித்தான்’, ‘நல்ல பாம்பு: நீல அணங்கின் கதை’. மீபுனைவாக இவர் எழுதிய ‘ஆண் எழுத்து பெண் எழுத்து = ஆபெண் எழுத்து’ எனும் நூலும் தனித்துவமானது. உங்கள் கவிதைகளுக்கான மரபாக பாரதி, பாரதிதாசன் இரண்டு பேரையும் குறிப்பிடுகிறீர்கள். பாரதி, பாரதிதாசன் இருவரும் உங்கள் படைப்புகளில் செலுத்தும் செல்வாக்கைப் பற்றி விரிவா

கவிதை நம்பிக்கை ஒரு குறிப்பு

கவிதையும் கவிதையைச் சுற்றிப் பேசுவதும் எனக்கு நிறைவையும் உயிர்ப்பையும் தரும் ஆதாரமான காரியமாக இருக்கிறது. பெரும்பாலும் நண்பர்களுடனான உரையாடல்கள் வழியாகவே எனது கருத்துகள், உருவகங்களை அடைகிறேன். அதனால் எதையும் எனக்கென்று சொந்தம் கொண்டாடிவிட முடியாது. தளவாய் சுந்தரம், லக்ஷ்மி மணிவண்ணன், சுந்தர ராமசாமி, சி. மோகன், விக்ரமாதித்யன், தேவதச்சன், ந. ஜயபாஸ்கரன், சாம்ராஜ், இசை, ரஃபீக், வரதன், விஷால், ஏ. வி. மணிகண்டன், சபரிநாதன், பச்சோந்தி என்று அந்த உரையாடல் நீண்டுகொண்டிருக்கிறது. எல்லா உறவுகளையும் விட கவிதையுடனான உறவு மிகுந்த விசுவாசமும் நம்பிக்கையும் கொண்டது, என்னிடம் நம்பிக்கையை வைத்திருக்கும் வளர்ப்புப் பிராணி ப்ரவுனியைப் போல.  பரிபூரண நம்பிக்கை என்பது தொடர்பில் நாம் ஒரு கருத்தைத் தான் வைத்திருக்கிறோம். ப்ரவுனிக்கு நம்பிக்கை என்பது கருத்து அல்ல. கருத்தாக இல்லாத பரிபூரண நம்பிக்கையின் மேல்தான் ப்ரவுனி, சொர்க்க நரகங்களை சந்தோஷ துயரங்களை விளக்குவதற்கு முயலாமல் எதிர்கொண்டு சலித்துச் சலித்துக் கடக்கிறது. ஏக்கம், நிறைவேற்றம், வறட்சி, செழிப்பு எனப் பல பருவங்களைக் கடந்து கொண்டிருக்கிறோம் நானும் கவிதையு

மரபறிவின் மீதான அலட்சியம் மாறியிருக்கிறது - தாணு பிச்சையா நேர்காணல்

கட்டிடக் கலை, சிற்பவியல், இசை எனத் தமிழன் ஆழ்ந்த தடங்களைப் பதித்த தொன்மையான கலைகளில் ஆபரணக்கலையும் ஒன்று. தொன்மை வாய்ந்த அந்த அறிவுமரபின் தொடர்ச்சியை வைத்திருக்கும் புராதன குந்தன ஆபரணத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் கலைஞர்கள் தமிழகத்தில் இன்று அருகிவருகின்றனர்.  அவர்களில் ஒருவர் தாணு பிச்சையா. நகை ஆபரணத் தொழிலோடு இணைந்திருக்கும் நுட்பத்தை, கவித்துவத்தை, ஆபரணத்தை உருவாக்கும் தருணங்களை சிறந்த கவிதைகளாக ‘உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்’ நூலில் வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் தென்கோடிப்பகுதியான நாகர்கோயிலில் உள்ள வடசேரியைச் சேர்ந்த இவர், தொழில் சார்ந்து சென்னையில் இருக்கிறார். புராதன குந்தன ஆபரணத் தொழிலின் தொன்மை, தனித்துவம், தொடர்ச்சி, சவால்கள் குறித்து நம்மிடம் பேசுகிறார். பொற்கொல்லர் சமூகம் குறித்த வரலாற்று நாவல்  ஒன்றை எழுதுவதில்  தற்போது  ஈடுபட்டிருக்கிறார்.  புராதன நகைத்தொழில் எந்தெந்த தேவைகளுக்காக தற்போது நீடித்திருக்கிறது...  புகழ்பெற்ற நடனக்கலைஞர்களுக்கு,  பரதநாட்டியம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு, திரைப்பட நடிகையர்களுக்கு, பெருஞ்செல்வந்தர்களுக்கு, திருத்தல கோயில்களுக்கு, ஏற்றுமதிக்கு என

நகுலனின் உலகத்துக்குள் மரணம்

நகுலனின் திரண்ட உலகத்தின் சிற்றண்டத்தைக் காண்பிக்கும் சிறுகதையாக 'ஜிம்மி' உள்ளது. 'அவள்' வருகிறாள். அவள் சுசீலாவாக இருக்கலாம். இந்தக் கதையைப் பொருத்தவரை சுசீலா இன்னமும் தன் முடிவை அவனுக்குச் சொல்லவில்லை. தனியாக இருக்கத் தெரியாத யாரும் எழுத்தாளனாக முடியாது என்று தனிமையின் மகத்தான மந்திரத்தைச் சொல்லிவிட்டு சுசீலா இன்னும் பிரிந்து போகவில்லை.  நகுலனின் உலகத்தில் தொடரந்து நிகழும் 'மரணம்' இந்தக் கதையில் அதே சுரீர் தன்மையுடன் வருகிறது. செம்பருத்திச் செடியின் கீழே சாவின் வழியாகவே நமக்கு ஜிம்மி அறிமுகமாகிறது. சாவை கதைசொல்லியின் தந்தை நெம்பிக் காண்பிக்கிறார். நகுலன் படைப்பில் தான் சாவு அத்தனை துடிப்புடன் உள்ளது. ஜிம்மி கதையிலும் கதைசொல்லி எழுத்தாளனாகவே இருக்கிறான். மௌனி, லா ச ராவின் கதையெழுத்தைப் பற்றிச் சிந்திக்கிறார். விட்ஜென்ஸ்டினின் இலக்கியக் கோட்பாடு சர்ச்சிக்கப்படுகிறது.  கதையின் கடைசியில் அம்மாவும் அப்பாவும் உள்ளே போகிறார்கள். கதைசொல்லி வெளியே போகிறான். கதை சொல்லி மட்டுமல்ல ஜிம்மியும் வெளியே தான் போகிறார்கள்.  நகுலனின் உலகத்தில் உள்ளே போவதும் வெளியே போவதும் வேறு மா

ஜிம்மி - நகுலன்

( கவிஞரும் நண்பருமான ந. ஜயபாஸ்கரன் தபாலில் அனுப்பிவைத்த நகுலனின் சிறுகதை   இது.  காவ்யா வெளியிட்ட நகுலனின் கதைத் தொகுப்பில் இடம்பெறாத கதை. நகுலனின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. ‘ஜிம்மி’ என்ற பெயரில் 1966-ம் ஆண்டு ஜூன் மாதம் தாமரை இதழில் வந்துள்ளது. நகுலனின் நூற்றாண்டையொட்டி இந்தக் கதை எனக்குக் கிடைத்துள்ளது. நகுலனின் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள் ஆகியவை இந்த நூற்றாண்டுத் தருணத்தை ஒட்டியாவது சிறப்பாகப் பதிப்பிக்கப்பட வேண்டும்.  நண்பர் ஜயபாஸ்கரன் பல ஆண்டுகளுக்கு முன்னர் நகுலன் ஆங்கிலத்தில் எழுதிய ‘முகமது இப்ராகிம்’(https://www.shankarwritings.com/2013/08/blog-post_30.html) கதையை அனுப்பி அதை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். நகுலன் இந்தக் கதை தொடர்பில் கட்டுரை ஒன்றையும் எழுதியிருக்கிறார். அதையும் பின்னர் பகிர்கிறேன். இந்தக் கதை தொடர்பிலான எனது குறிப்பை அடுத்தாற்போலப் பகிர்கிறேன். )   அவன் கல்லூரியிலிருந்து திரும்பி வந்துவிட்டான்- 10.30க்கே. அன்று கல்லூரி மாணவர்கள் கோட்டயம், ஆழப்புழை, பிறகு கொல்லம் முதலிய இடங்களில் நடந்த நான்கு ஐந்து விளையாட்டுப் பந்தயங்களில் வெற்றி பெற்றதால் எ

லக்ஷ்மி மணிவண்ணனின் கடலொரு பக்கம் வீடொருபக்கம்

லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள் புதிய பருவம், புதிய வெளிப்பாட்டுக்குள் வெற்றிகரமாகப் புகுந்து புறப்பட்டுள்ளதை, அவரது புதிய தொகுதியான 'கடலொரு பக்கம் வீடொரு பக்கம்' துலக்கமாகத் தெரிவிக்கிறது. கிராமம்,  சிறு நகரம், பெருநகரத்திலிருந்து மீண்டும் சிறுநகரத்தைக் கடந்து கிராமத்தை அடைந்திருக்கின்றன அவரது கவிதைகள். தனது கவிதைகளில் முன்பிருந்த நகரத்தின் சாயல்களைச் சுற்றிலும் துடைந்தெறியும் சவாலை மொழியிலும் பார்வையிலும் ஏற்று வெற்றியும் கண்டுள்ளார். மாறாத ஒன்றின் மேல் கொண்ட பிரியமாக தனது கிராமத்தை, அம்மாவைப் பற்றியிருக்கும் குழந்தைபோல மணிவண்ணன் பற்றியிருப்பது தெரிகிறது.  காட்டில் அண்டை கூட்டிப் பொங்கிக் கலைந்த இடத்தில் தெய்வங்கள் வந்துகூடி கலைந்தது போலும் தெரிகிறது வீட்டின் பின்புறத்தில் விறகடுப்பில் பொங்கிக் கலைந்த பின்னர் காடு வந்து சற்று நேரம்  அமர்ந்து  ஓய்வெடுக்கிறது. வீட்டின் புறக்கடையில் விறகடுப்பில் பொங்கிக் கலைந்த பின்னர் சற்று நேரம் அமர்ந்து ஓய்வெடுக்கும் காட்டைப் போன்ற ஒரு கிராமத்தில் லக்ஷ்மி மணிவண்ணனின் கண்கள் அமர்ந்திருக்கின்றன.  ‘சங்கருக்கு கதவற்ற வீடு' தொகுதி முதல் 'கேட்பவ

டாஃபடில்ஸ் விடுதிக்குள் கண்ணாடி பார்க்கும் டாஃபடில்கள்

எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு ஒருபுறத்தில் இருக்கும் சுவர் இடுப்பளவு உயரமே கொண்டது அந்தச் சுவருக்கு அப்பால் கட்டப்பட்ட புதுக்கட்டிடம் டாஃபடில்ஸ் என்ற பெயரில் பெண்கள் விடுதியானது ஒரு நாள் வசந்த காலத்தை அறிவிக்க  முந்திக்கொண்டு பூக்கும் பூ குத்திய குளிர் போய்விட்டதை அறிவிக்கும் பூ மறுபிறப்பையும் புதிய தொடக்கத்தையும் உருவகிக்கும் மஞ்சள் பூ டாஃபடில்ஸ்  என்று தெரிந்துகொண்டேன் டாஃபடில்ஸ், நார்சிசஸ் என்றும் அழைக்கப்படுகிறது ஆமாம் உண்மைதான் 39 வயதிலிருந்து வழுக்கிச் சரிந்துகொண்டிருந்த நான் ஒரு காதலின் குறுகிய வசந்த காலத்தை அப்போது ரகசியமாய் சுவைத்துக் கொண்டிருந்தேன் இடுப்பளவே உயரத்தில் பிரித்தும் பிரிக்காமலும் இருக்கும்  அந்தக் கட்டைச் சுவரை விரல்களால் தீண்டியபடி டாஃபடில்ஸ் விடுதி சமையலறைக்கு அருகில் தொங்கும் கண்ணாடி முன்நின்று வரிசை கட்டியதுபோல் ஒப்பனை செய்துவிட்டு கல்லூரிக்கும் அலுவலகத்துக்கும் செல்லும்  யுவதிகளின் சாயல்களும் சேர்ந்த மதுரத்தை எனக்கேயுரியதாக நினைத்த அவளுக்கு தொலைபேசியில் பகிர்ந்துகொண்டிருந்தேன். ஒருநாள்  விடிந்தும் விடியாத பொழுதில்    டாஃபடில்ஸ் விடுதிக்கு வந்துபோன தி

அபியின் மலைக்கு வேர் உண்டு

பொருட்கள், உறவுகள் தமது கனப்பரிமாணம், நிறங்கள், வாசனைகளைப் படிப்படியாக என்னிடத்தில் இழக்க ஆரம்பிக்கும் போதே, பரிச்சயம் கூடக் கிட்டாமல் ஆழத்து மூலையில் கிடந்த அபியின் கவிதைகள், வெகுகாலம் கழித்து, என்னை அணுகி நெருங்கத் தொடங்குகின்றன. எனக்குத் தெரிந்த உலகத்தின் மறுபுறத்தை, அந்த உலகில் நிகழும் வேறு அனுபவங்களை அதையெல்லாம் விட அங்கேத் துள்ளித் துடிக்கும் உயிர்த்தன்மையைப் பரிச்சயம் கொள்வதற்கு எனக்கு இத்தனை நாட்கள் தேவையாக இருந்திருக்கின்றன.  அபியின் கவிதைகளைப் புரிந்துகொள்வதற்கும் நகுலனின் கவிதையையே துணைக்கு அழைத்துக் கொள்கிறேன். எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது நகுலனின் யாருமற்ற இடத்தில். அபியின் இடமோ யாரும் இருக்க முடியாத இடம்; என்ன நடக்கிறது என்று இருப்பாக இருந்து பார்க்க முடியாத அளவு நுண்ணிய இடம் அபியின் இடமாகத் தோன்றுகிறது. இங்கு நடப்பது எல்லாம் அங்கும் நடக்கிறது. இங்கு நடப்பதின் பிரமாண்டம் அங்கும் இருக்கிறது. ஆனால் பிறப்பு - இறப்பு, குணம் - குற்றம், வெற்றி- தோல்வி ஆகிய பிரிவினைகள் இன்றி அந்த உலகத்தில் நடக்கும் செயல்கள் அபியின் சாயங்காலத்தில் மயங்குகின்றன.  அந்தச் சாயுங்காலம் தொடங்கும் போது

அழகியை ஏன் உறங்க வைத்தார் மார்க்வெஸ்?

ஆமாம். இந்த உலகிலேயே அழகானவற்றில் ஒன்று பெண்ணின் கண்கள் என்று நானும் கருதுகிறேன். காப்ரியேல் கார்சியா மார்க்வெஸின் ‘ஸ்லீப்பிங் ப்யூட்டி அண்ட் தி ஏரோப்ளேன்’ சிறுகதையில் பக்கத்து இருக்கையில் உறங்கும் அழகியின் கண்களை கதைசொல்லி பார்த்து ரசிப்பது போன்ற அனுபவத்தை நானும் விரும்பிப் பெற்றிருக்கிறேன். நான் உபாசித்த சில பெண்கள் உறங்கும்போது, அந்தப் பூரித்துப் பருத்த கண்கள் இமைகளால் மூடியிருப்பதைப் பார்த்து நிறைந்திருக்கிறேன். பசிய வாதுமைகள் போல பக்கவாட்டு இருக்கையில் உறங்கும் அழகியின் கண்கள் இருந்ததாக வர்ணிக்கிறார் மார்க்வெஸ். ஓர் அழகிய பெண்ணைவிட இயற்கையில் அதிக அழகானதென்று நான் வேறெதையும் நம்பவில்லை என்று இந்தக் கதையில் மார்க்வெஸ் விவரிக்கிறார். இந்தக் கதை முழுவதும் கதைசொல்லியைச் சந்திக்கவே செய்யாத அந்த அழகியை கதை முழுவதும் வர்ணித்துத் தீரவில்லை மார்க்வெஸுக்கு. கதைக்கு வெளியே உறங்கும் பெண்ணை அப்படி வெறித்துப் பார்க்க யாருக்கும் அனுமதி கிடையாது. கதாசிரியனுக்கு அந்த அனுமதி இருக்கிறது. அன்றாட எதார்த்தத்தில் வலுவாக நின்று அற்புதங்களின் நறுமணப் புகையை அவ்வப்போது பரவவிடும் மார்க்வெசின் முத்திரைத் தன்

இருந்தும் மறைந்தும் இருக்கும் வரிக்குதிரை நகுலன்

தமிழ் புதுக்கவிதையுலகில் தமிழ் இலக்கிய மரபை அறிந்து கவிஞரானவர்கள் என்று க.நா.சுப்பிரமணியன், பிரமிள், நகுலன், சி.மணி, ஞானக்கூத்தன், விக்ரமாதித்யன், ந.ஜயபாஸ்கரன் ஆகியோர்.  நகுலன் என்ற டி.கே.துரைஸ்வாமி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுகலையும்,  வெர்ஜினியா வுல்ஃபின் படைப்புகளை ஆராய்ந்து டாக்டர் பட்டமும் பெற்றவர்.  இருபதாம் நூற்றாண்டு தமிழ் நவீன இலக்கியத்தைப் பொருத்தவரை மேற்கத்திய இலக்கிய அறிவும், தமிழ் மரபும் சரியாக முயங்கும் ஒரு சாத்தியமாக நகுலனது படைப்புகள் உள்ளன.  ‘எழுத்து’ பத்திரிகையில் 1950-களில் நகுலன் எழுதிய கவிதைகளைப் பார்க்கும் போது, அவரது கவிதைகள் பழங்கவிதைகளின் ஓசையை விடாமலேயே எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது. ஆனால் இன்றும் அந்தக் கவிதைகளில் பழமை படியவில்லை என்பதே ஆச்சரியகரமானது. கம்பராமாயணம், திருவாசகம், காரைக்கால் அம்மையாரின் பாடல்கள், திருமந்திரம் , திருக்குறள், தாயுமானவர் பாடல்கள், கைவல்ய நவநீதம், சித்தர் பாடல்களின் ஓசைப்பண்பை மட்டும் அல்ல, சில தொடர்களையே தனது கவிதைகளுக்குள் நகுலன் சேர்த்து வைத்துவிடுவார்.  மலையாளக் கவி குஞ்சுண்ணியின் குறுங்கவிதை இயல்புகளான அதிர்ச்சி, பயங

இளங்கோவை பூதம் விழுங்கட்டும்

வேளச்சேரியில் யாவரும் பதிப்பகத்துக்கான கடை திறக்கப்பட்ட பின்னர் பழக்கமான நண்பர் கவிதைக்காரன் இளங்கோ. அவரது  நாவல் படைப்பான ‘ஏழு பூட்டுகள்’-ஐ முழுமையாக மதிப்பிடுவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். திடமான, உள் இணைப்புகள் கொண்ட கதை, கதாபாத்திரங்கள், மனித இருப்பின் அறியப்படாத அம்சங்கள் புலப்படும் ஓர் மையம் என்று நாவல் வாசிப்பு சார்ந்து நான் வகுத்திருக்கும் குணங்களைச் சோதனைக்குள்ளாக்கும் படைப்பு இது. அத்துடன் தமிழின் தற்காலப் புனைவில், சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் புதுமைப்பித்தன் தொடங்கி வைத்து முக்கியமான சாதனைகளோடு நிலைநிறுத்தப்பட்ட நவீன தமிழ் புனைகதை எழுத்து மரபின் சாயல்களே இல்லாத அபூர்வக் கதையினம் ஒன்று தோன்றியிருப்பதையும் ‘ஏழு பூட்டுக்கள்’ நாவல் வழியாக தெரிந்துகொள்ள முடிந்தது. கவிதைக்காரன் இளங்கோவின் எழுத்து மரபென்று பார்த்தால் சுஜாதா மட்டுமே தெரிகிறார். சென்ற நூற்றாண்டின் இறுதி இருபது ஆண்டுகளில் உருவான வெகுஜன பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளின் மொழி, உரையாடல் பாணியை இளங்கோ சுவீகரித்திருக்கிறார். ஆனால், அவரது தளத்தை வெகுஜன எழுத்துத் தளமென்று சொல்லிவிட

எம் வி வெங்கட்ராமின் இலக்கிய நண்பர்கள்

முழுமையாக எழுத்து வாழ்க்கையைத் தேர்வது என்பது அபாயகரமானது என்று இந்திய வாழ்க்கை நிரூபித்திருந்தும் எம். வி. வெங்கட்ராம், இளம் வயதிலேயே இலக்கியப் பித்துக்கு ஆளானவர் என்று இப்புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பில் சுந்தர ராமசாமி கூறுகிறார். தாய்மொழி தமிழாக இல்லாத சௌராஷ்டிர பட்டு நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் எம். வி. வி. தமிழ் இலக்கியத்தில் தீவிரமாக ஈடுபாடு ஏற்பட்டு    பள்ளிப்படிப்பு முடிவதற்கு முன்னரே நிறைய கதைகளை எழுதிப் பயின்று, தமிழில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய லட்சியப் பத்திரிகையான ‘மணிக்கொடி’யில் 16 வயதில் முதல் கதை பிரசுரத்தைப் பார்த்தவர். புதுமைப்பித்தன், மௌனி, கு. ப. ரா, ந. பிச்சமூர்த்தி என நட்சத்திர எழுத்தாளர்கள் அலங்கரித்த  ‘மணிக்கொடி’ பக்கங்களில் மீசை அரும்பாத வயதில் இணையாக அமர்ந்தவர். முதிரா வயதில் அந்த இளைஞன் எழுத்தில் நடத்திய சாதனைக்கு, அற்புதத்துக்கு லௌகீக வாழ்க்கையில் மிகப்பெரிய பலியைக் கொடுக்க வேண்டியிருந்தது. பெரியவனான பிறகும் உணவூட்டுவதற்கு, ஒப்பனை செய்வதற்கு உதவியாளர்கள் இருந்த செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்த எம். வி. வெங்கட்ராம், குடும்ப வியாபாரத்தில் படிப்

தொடர்ந்து கைப்பற்றி வெல்லப்படும் நிலையில் ஒரு தேசம் நிர்வகிக்கப்படுவதில்லை

ஓவியம் : பொன்வண்ணன் துஷ்யந்த் தவே அடிப்படை உரிமைகள் கமிட்டி சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசியல் சாசன சபையில் 1948-ம் ஆண்டு டிசம்பர் ஒன்று மற்றும் இரண்டாம் தேதிகளில் நடைபெற்ற விவாதத்தில் கே எம் முன்ஷி மிகத் தெளிவான ஒரு கூற்றை வெளிப்படுத்தினார். “உண்மையில், ஜனநாயகத்தின் சாராம்சம் என்பதே அரசு தொடர்பிலான விமர்சனம்தான்.” இந்திய அரசியல் சாசனம் அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகளை, பேச்சு மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகள் உட்பட வழங்கியிருக்கிறது. அமைதியான முறையில் ஆயுதங்கள் இல்லாமல் கூட்டமாகக் கூடுவதற்கும் இந்தியப் பிராந்தியம் முழுக்க சுதந்திரமாக உலவுவதற்கும். இந்த உரிமைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலான கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டத்துக்கு உட்பட்டவைதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், அரசின் பாதுகாப்புக்கும், பொது ஒழுங்குப் பாதுகாப்புக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் தேவையாக இருக்கின்றன.  அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவு இந்தியாவின் அனைத்துக் குடிமக்களின் உயிர், தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது. தனிப்பட்ட சுதந்திரம்

‘கோலி மாரோ’ தூரத்தில் கேட்கும் முழக்கம் அல்ல

அறுபது நாட்களுக்கு மேல் தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் அமைதியாகப் போராட்டம் நடத்தியும் அவர்களது கோரிக்கைகளுக்கு உரிய கவனம் கொடுக்காத மத்திய அரசு, குடியரசு நாளில் நடந்த சில அசம்பாவிதங்களைக் காரணம் காட்டி, விவசாயிகள் போராட்டம் தொடரும் எல்லைப் பகுதி சாலைகளில் கான்கிரீட் கலவையிட்டு சுவர்களை எழுப்பி சிறைகளை அமைத்துவருகிறது. அத்துடன் ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கியபோது செய்ததைப் போன்றே போராட்டப் பகுதிகளில் இணையத் தொடர்பையும் துண்டித்துள்ளது. தடுப்புச் சுவர்களும் இரும்புக் கம்பி வேலிகளும் போதாது என்று சாலைகளைக் குழிசெய்து சிமெண்ட் கலவையிட்டு அதில் ஆணிகளையும் ஊன்றியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசு தான், தனது மக்களுக்கு எதிராக இந்த ஆணிகளை நட்டுவைத்திருக்கிறது. போராடுவதற்காக மக்கள் திரள்வதையும் கருத்துவெளிப்பாட்டையும் அடிப்படை உரிமையாக  உறுதிசெய்திருக்கும் அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவதறாக வாக்குறுதி எடுத்திருக்கும் அரசுதான் குறைந்தபட்ச செய்திப்பரவலையே அபாயமாகப் பார்க்கிறது. இந்தக் காரியங்கள் எதுவும் நாட்டின் மூலையில் நடைபெறவில்லை.  சர்வதேசங்களாலும் காணக்கூட