Skip to main content

Posts

Showing posts from September, 2021

மழை நின்றபின் போயேன் என்றாள் மறுபடியும் அம்மா

  நன்றி : விகடன் இணையத்தளம் தஸ்தயவெஸ்கியின் 'கரமசோவ் சகோதரர்கள்' நாவலின் இறுதிப்பகுதியில் சிறுவன் இல்யூஷாவின் மரண ஊர்வலத்தில் அவனது சவப்பெட்டியின் மீது இடப்பட்ட மலர்களில் ஒன்று சாலையில் விழுந்துவிடும்.  அந்த ஒற்றை மலர் உதிர்ந்த நிகழ்வு கடவுளுக்குத் தெரியுமா என்று ஆசிரியக்கூற்று கேட்கும்.  எனது காலை நடைகளில் விரல் சைஸ் கூட இல்லாத தேன் சிட்டுக்களைப் பார்க்கும்போதும், தலை முதல் வால் வரையில் இயற்கை அதற்கு வரைந்திருக்கும் உயிர்த்துடிப்பைக் காணும்போதும், இந்தக் குட்டிப்பறவையின் இருப்பு கடவுளுக்குத் தெரியுமா என்ற கேள்வி, தஸ்தயவெஸ்கியின் பிரதிபலிப்பாக என்னுள் எழும். கடவுள் என்று குறிப்பிடப்படப்படுவது எதன் பொருண்மை? இந்த உலகம் ஒரு நியதியில், ஒரு ஒழுங்கில், ஒரு பொறுப்பில் நிகழ்கிறது என்ற கருதுகோளிலிருந்து அந்த ஒழுங்கின் உருவகமாக கடவுள் கருதப்படுகிறார் போலும். கடவுள் இருக்கிறாரோ இல்லையோ, ஒழுங்கு இருக்கிறதோ இல்லையோ ஒழுங்கு என்ற நம்பிக்கையின் எலும்பைப் போர்த்துவதற்குக் கடவுள், தஸ்தயவெஸ்கி போன்ற மாபெரும் கலைஞனுக்கும் தேவையாக இருக்கிறார். கடவுளுக்கு இணையாக இங்கே நிலத்தில் மாறாத மூலப்படிவமாக அ

இனி வாதைகள் உன்னை அணுகாது பிரான்சிஸ்

ஒருவரின் மரணத்தை ஏற்கமுடியாத நிலையில், அவர் செத்து நாம் இருப்பதின் வினோதத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் தான் அந்த மரணத்தைச் சுற்றி காரண, காரியங்களை வைத்துப் பேசுவதற்குத் தொடங்குகிறோம். ஆனால், பகுத்துப் பகுத்துப் பார்த்தாலும் எஞ்சும் ஒரு ரகசியம் மரணத்தைச் சுற்றி இருக்கிறது; அதனால்தான் தொன்றுதொட்டு பயங்கரமாக இருக்கிறது. நேற்றிரவு கோவை ரயிலில் 10.10 மணிக்கு ஏறி ரயில் கிளம்பியவுடன் வண்டியின் அசைவில் கண்ணயர்ந்திருந்த போது, கவின்மலர் தொலைபேசியில் அழைத்தபோதே மிகத் துயரகரமான சம்பவம் ஒன்று என்று தெரிந்துவிட்டது. ‘பிரான்சிஸ் போயிட்டார்' என்று சொல்லிவிட்டு ஏதோ சில வார்த்தைகள் பேசிவிட்டு, இன்னொரு தொலைபேசி வருவதாகச் சொல்லிவிட்டு, துண்டித்துவிட்டார். சில மாதங்களுக்கு முன்னர் கவினை அழைத்துக் கொண்டு வடபழனி நூறடி ரோட்டில் பிரான்சிஸ் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்ததுதான் கடைசிமுறை. கொஞ்சம் உடல்நலம் தேறிய, குடிக்காத பிரான்சிஸுடன் சில மணிநேரங்கள் பேசிவிட்டு வந்தது ஆறுதலான ஞாபகமாக இருக்கிறது. சென்னையில் பிரான்சிஸ் கிருபாவை, காமராஜர் திரைப்படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் அலுவலகத்தில் சந்தித்தது தான் மு

இருந்தும் மறைந்தும் இருக்கும் வரிக்குதிரை நகுலன்

ஓவியம் : மருது நள்ளிரவிலே நிர்வாணமாக நிலைகுலைந்து நிறைசரியாமல் நிற்கும் ஒரு நங்கை நல்லாளைக் கண்டு மனம் மருண்டு மதிவிண்டு நிற்பவருண்டோ கூத்தனே. உன் சாம்பல் மேனிப் பூச்சும் சவச்சிரிப்பும் சுடலை நாற்றமும் சுழித்துப் பொங்கும் நச்சரவும் என்ன குறித்தன? என்ன குறித்தன? வேடனடிக்க மாயன் இறந்தான் இராமனும் செத்தான் நானிலத்தே காலக் கணத்தே நல்லவரும் மாய்ந்து சாய மண்ணிற் மக்கட் பயிர் சூல் முதிரும். 000 சவச்சிரிப்பும் சுடலை நாற்றமும் சுழித்துப் பொங்கும் நச்சரவும் என்ன குறித்தன? என்ன குறித்தன?” 000 கிருஸ்துவப் பாதிரிமார்கள் சாவுச் சடங்குகளில் சம்பந்தப்படும் போது கருப்பு அங்கி அணிந்து கொள்கிறார்கள் ஹிந்துக் கல்யாணச் சடங்குகளில் அவனும் அவளும் அக்னிசாட்சியாக தங்களை வரிக்கிறார்கள் மந்திரம் ஓதும்போது சுவாஹா! சுவாஹா! என்கிறார்கள்.. 000 இப்படியான வெளிப்பாட்டின் வழியாக நகுலன், வசீகரத்துக்குள் உள்ள பயங்கரத்தன்மையை மொழி மற்றும் சப்தத்தின் வழியாகச் காட்டிவிடுகிறார். நகுலனது மொத்தக் கவிதைகளையும் ‘வேடிக்கை பார்ப்பது’ என்ற ஒரு தொடருக்குள் அடக்கிவிடலாம். நகுலனில் நிகழ்வது தீவிரமான வேடிக்கை. குளம் போன்ற சாவதானமான சூரல

நகுலனின் 'ஸ்டேஷன்'

அனைத்தும் மாறிக் கொண்டேயிருக்கின்றன; ஒரு பொருள் இன்னொரு பொருளாகிறது; ஒரு உயிர் இன்னொரு உயிராக மயங்குகிறது; உயிர் உயிரற்றது என்று சொல்லப்படும் எல்லைகள் குழம்புகின்றன; பொழுதுகளும் பருவங்களும் மயங்குகின்றன; உரையாடலின்போதும் உறவின்போதும் தனித்தனிச் சுயங்கள் கரைகின்றன. தமிழின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவரான நகுலன் இந்த உருமாற்றங்களையும் மயக்கத்தையும் பிரதிபலிப்புகளையும் ஒரு ‘சொரூப’ நிலையாகத் தன் கவிதைகளிலும் உரைநடையிலும் தொடர்ந்து உருவாக்கியிருக்கிறார். இயற்கையும் மனிதனும் வேறு வேறு என்று நவீன மனிதன் பாவிக்கிறான். ‘சுயம்’ என்றும் ‘தான்’ என்றும் தனித்து அவன் கொள்ளும் லட்சியங்களும் கனவுகளும் கனத்துச் சலிக்கின்றன. இதைத் தன் படைப்புகளில் தொடர்ந்து தெரியப்படுத்தியவர் நகுலன். தந்தை, அதிகாரி, கணவன், வியாபாரி, நிர்வாகி, ஆட்சியாளன் என லௌகீக வாழ்வில் தான் வகிக்கும் பாத்திரங்களையே திடமான சுயங்களாக வரித்துக்கொள்ளும் மனிதன், அவற்றாலேயே விழுங்கப்படுகிறான். இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது எல்லாம் நகர்ந்துகொண்டு இருக்கின்றன. முந்தைய உருவை இல்லாமலாக்கிக்கொண்டு போய்க்கொண்டிருக்கின்றன. இப்பின்ன

தாவோ தேஜிங்கின் உண்மை

காலியாக இருக்கிறதென்பதால் தாவோ பயன்படுத்தப்படும்போது அது நிரப்பப்படுகிற சாத்தியமில்லை. தன் நுண்மையின் நுண்மையில் அது அனைத்தின் மூலாதாரமாகத் தோன்றுகிறது. அதன் ஆழத்தைப் பார்க்கும்போது அது எப்போதும் இருப்பதாகவே தோன்றுகிறது. எனவே, தாவோ யார் குழந்தை என்று எனக்குத் தெரியாது; ஆனால், அது இயற்கையின் மூதாதைபோலத் தோன்றுகிறது. (தாவோ தேஜிங்) தமிழ் கவிதையில் கொக்கு போல, குருவி போல, மாக்கள் போல என்று திருக்குறளிலிருந்து தவிர்க்க முடியாததாக 'போல' உள்ளது ... ஆனால் இந்தக் கவிதையின் கடைசி வரியில் தொனிக்கும் 'போல' உணர்த்தலின் நிச்சயத்தன்மையைத் தவிர்க்கிறது. இயற்கையின் மூதாதை போலத் தோன்றுகிறது என்று என்று சொல்லும் போது நிச்சயத்தன்மைக்கு மாறாக ஒரு இறகுத்தன்மை வந்துவிடுகிறது. ஆனால் உண்மையாகவும் இருக்கிறது. உண்மை போல.... இந்தக் கவிதையில் இருக்கும் 'போல' -வைப் போல நாம், இறகு போல எதையும் அழுத்தாத உண்மையாக வேண்டும்.

அபியின் பாழ் பிரமிளின் பாழ்

இரைச்சலின்மை, மோனம், நிசப்தத்தின் அச்சைச் சுற்றிச் சுழலும் வார்த்தைகள் அரிய எளிமையையும் சுருக்கத்தையும் அதேவேளையில் அர்த்த நிறையையும் கொண்டுவிடுகின்றன. பேச்சு மொழி, எழுத்து மொழி இரண்டை அபி பயன்படுத்தும்போதும், நம் அனுபவப் பள்ளத்தாக்குக்குள் தொடர்ந்த எதிரொலிகளை உருவாக்கும் ஆழமான, அதேவேளையில் மிகச் சிறிய வார்த்தைகளைக் கவிதைகளுக்குள் பதித்துவிடுகிறவர் அபி. கூரிய ஓசை போல நம்மைக் குத்தி செருகித் தூக்கிச் சுழற்ற வல்லது .       அபியின் 'அந்தர நடை' தொகுப்பில் உள்ள 'குருட்டுச் சந்து' கவிதை, ‘மாலை - பாழ்'-ல் திரும்ப இன்னொரு முனையிலிருந்து பிரதிபலிக்கிறது. பாழும் வீட்டினுள் நுழைந்து முடங்கிக் கொண்ட பாழும் தெரு, கவிதை சொல்லியிடம் 'என்னைப் போலத்தான் நீ' என்கிறது. பாழ் என்ற சொல்லை, பாழும் கிணற்றின் உள்விட்டத்துக்குள் தட்டித் தட்டி அடிநோக்கிச் சுழன்று  வீழ்வதைப் போல இந்தக் கவிதையின் இறுதியில் பயன்படுத்துகிறார் அபி. மாலை -- பாழ் சீட்டி போன்ற அந்தக் கூரிய ஓசை குத்திச் செருகித் தூக்கிச் சுழற்றியது என்னை விர்ரென்று வாடைக்காற்றும் கொஞ்சம் சதையோடு போயிற்று தெருவில் யாரும் இல்லை

நகுலனை இரண்டாவது முறை சந்தித்த போது

அந்தரத்தில் பறந்ததொரு பறவை ஒரு முறை பார்த்த பின்னர் இருமுறை கண்டேன் என்று சொல்வதுண்டா?                      - நகுலன் நகுலனை இருமுறைதான் நான் பார்த்திருக்கிறேன். மூன்று முறை பார்த்ததாக மனம் சொல்லச் சொல்கிறது. நகுலனின் விஷயத்தில் அந்தப் பிறழ்ச்சி அழகானதும்கூட.  மனிதன் ஒரு சாராம்சம், அவனது அத்தனை செயல்களுக்கும் அவனே பொறுப்பு என்ற நவீனத்துவ நம்பிக்கைகளைக் குலைத்துப்போட்டவர் அவர். மனிதனை ஒரு வகையில் இயற்கையின் மங்கிய சாயலாக, சலித்து உதிர்ந்து விரையும் பிராணிகள், பறவைகளாக அதன் வழியே நிழல்கள் பிரதிபலித்துச் செல்லும் நகல்களின் நினைவு ஆறாகப் புத்தகங்களையும் எழுத்துப்பிரதிகளையும் கூடக் கலைத்துப் போட்டு விடுவித்தவர் அவர்தான். வெளியில் உள்ள பொதுவாழ்வு கோரும் செயலுக்கு எதிராக இயங்கும் மனம், செயல் அற்ற பாவத்தில் நகுலனின் படைப்பில் தோற்றம் அளிக்கிறது. சுரீரெனும் விபரீத அழகுடன், காமத்தின் உயிர்த்தன்மை பரபரக்க இந்த உலகம் ஏற்கெனவே இறந்துவிட்டதை அறிவிக்கும் படைப்புகள் அவை. இந்தக் கோணத்திலிருந்துதான் செயல் என்பதன் மீதும் வெற்றி என்பதன் மீதும் அவை தம் பெரும் கண்டனத்தை எழுதிச்சென்றுள்ளன. வாழ்வு என்ற செயல்ரூ