Skip to main content

Posts

Showing posts from April, 2022

கண்டராதித்தனின் ‘பாடிகூடாரம்’

புராதனம், புராணிகம், வரலாற்றின் இடிபாடுகளுக்குள், சமகால வாழ்வின் இடிபாடுகளை ஒளித்துவைத்து எழுதும் தொனியையும் உள்ளடக்கத்தையும் கொண்ட கண்டராதித்தன், செவ்வியல் குணத்திலிருந்து எதார்த்தத்தை நோக்கி ‘பாடிகூடாரம்’ கவிதைத் தொகுதியில் மிக மெதுவாக நகர்ந்திருக்கிறார். பாடிகூடாரத்தில் உள்ள கவிதைகளில் சுயசரிதையெனத் தோன்று அந்தரங்க மொழிகொண்டு அன்றாட உலகத்துக்கு அவர் கவிதைகள் தரையிரங்கியிருக்கின்றன. கலாப்ரியாவின் சாயலையும் நகுலனின் சாயலையும் முந்தைய கவிதைத் தொகுதிகளில் மிகச் சன்னமாக உணர முடிந்திருக்கிறது. இத்தொகுதியில் உள்ள கண்டராதித்தனின் ‘தாழ்வாரம்’ கவிதையில் உள்ள சித்திரத்தன்மை கலாப்ரியாவை வெளிப்படையாகவே ஞாபகப்படுத்தியது. தாழ்வாரம் கவிதையைப் படிக்கும்போது திண்ணையுள்ள பழைய ஓட்டுவீடு தோற்றம் கொள்கிறது. தாழ்வாரத்தை நோக்கிப் பணிந்து வாழத்தெரியவில்லை என்று கவிதை சொல்லி சொன்னாலும், ‘பாடிகூடாரம்’ தொகுதி கவிதைகளில் மொழி, அந்தரங்கத்தை நோக்கியும் அன்றாடத்தை நோக்கியும் சன்னம் கொண்டிருக்கிறது. தாழ்வாரம் பணியிலிருந்து எப்போது வீடு திரும்பினாலும் நீங்கள் துக்கமாக இருப்பதாக பிள்ளைகள் புகார் சொல்கிறார்கள் எவ

புதுமைப்பித்தனின் செல்லம்மாள் மற்றும் டி எச் லாரன்சின் ‘Odour of Chrysanthemums’

எல்லாத் திக்கிலும் மூச்சை அழுத்தும் இருட்டு கொப்பளிக்கும் புதுமைப்பித்தனின் மொழிக்குள், இன்னும் கூடுதல் துல்லியத்துடன் பிரமநாயகம் பிள்ளையையும் செல்லம்மாவையும் அவர்கள் வசிக்கும் மெட்ராஸின் ஏதோ ஒரு மூலையில் உள்ள வீட்டையும் பார்க்க முடிந்தது. நோயில் வீழ்ந்து நடைபிணமான மனையாள் செல்லம்மாளுக்கும் அவளைப் பராமரிப்பதற்காகவே பட்டணத்தில் ஜீவித்துவரும் மனித எந்திரமான கணவன் பிரமநாயகம் பிள்ளைக்கும் இடையிலான அழியாத காதல் தான் ‘செல்லம்மாள்’. காமம் சிறிதும் இல்லாத அபூர்வமான ‘காதல்’ கதை என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். மினுக்கட்டான் பூச்சி போல, அந்த வீட்டின் இருளைத் திரட்டித் திரட்டிக் காட்டும் மெல் வெளிச்சம் அந்தக் காதல் தான். நடைபிணமாக நமக்கு அறிமுகமாகும் செல்லம்மாள் பிணமாகிவிடுகிறாள். அவள் உடம்பில் மூச்சு, மெல்லிய இழைபோல ஓடியபோது மூக்கின் மேல் உட்காரும் அதே ஈ தான், அவள் இறந்த பிறகும் அவளைச் சுற்றியதா என்று தெரியவில்லை. அவளது வாழ்வின் இறுதிநாட்களிலும் அவள் இறந்தபிறகு பிரமநாயகம் அவளுடலை நடத்துவதிலும், செல்லம்மாளின் அன்பும் குணமும் புலப்பட்டுவிடுகிறது. மரணத்துக்கு முன்னால் செல்லம்மாள் சற்று தேறுவது

கன்னிமை கலைஞன் கபாடபுரம்

புதுமைப்பித்தனின் கபாடபுரத்திலும் லா. ச. ரா-வின் அபிதாவிலும் காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்சின் ‘லவ் இன் தி டைம் ஆப் காலரா’ நாவலிலும் கன்னிமை என்ற கருத்து ஏன் தொடர்ந்து கலைஞர்களை ஈர்ப்பதாக உள்ளது. கன்னியும், கலைஞனும் ஏன் ஒருவரையொருவர் ஆகர்ஷித்துத் திரும்பித் திரும்பி விழுங்கியபடி இருக்கிறார்கள். நகுலனின் சுசீலா, நகுலனை விட்டுச் செல்லும்போது, நகுலனுக்கு ஒரு சுசீலாவை அவர் வாழ்க்கை முழுக்க அவருக்கே அவருக்கென்று பரிசளித்துச் செல்கிறாள். அவரை விட்டுச் சென்ற சுசீலாவின் பிரிவுக் குறிப்புகள் அவளது கன்னிமையை முன்வைத்தே எழுதப்படுகிறது. ‘கண்ணனிருக்கும் குருவாயூரில் கண்மணியவள் கன்னிமை தவிர்ந்தாள்.’ என்றும் ‘அவள் சூலுற்றாள் தன்னைப் போல் ஒரு பெண்ணைப் பெற்றாள் நான் தனியிருந்தேன்; மிகநன்று.’ என்பதைப் போன்ற பிரிவுக் குறிப்புகளாக வருகிறது. வில்லெடுத்து நாண்பூட்டி அவளை வென்ற அர்ஜூனன் அல்லாத தன்னை, வந்து வந்து போகும் அர்ஜூனன் என்று குறிப்பிடும் நகுலன் திரௌபதியை தூய்மையின் ஊற்று என்கிறார். கன்னிமை என்பது படைப்புகளில் எவ்வாறெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது? ஒரு அனுபவத்தை, அறிதலை அடைவதற்கு முந்தைய நிலை

புதுமைப்பித்தனின் கபாடபுரத்துக்குள் இன்னும்

தேவதச்சன் குறித்து நான் எழுதிய கட்டுரை ஒன்றில் அறிவும் விமர்சனமும் அழகும் உணர்ச்சியும் சேர்ந்த புதுமைப்பித்தனின் மரபு புதுக்கவிதையிலும் இருப்பதாக எழுதியிருப்பேன். புதுமைப்பித்தன் கன்னியாகுமரி ஆலயத்தின் கிழக்கு வாசலிலிருந்து இறங்கிப் போய் கபாடபுரக்குள் போன ஒரு பயணத்தின் இன்னொரு பிரதி தேவதச்சன் கவிதையாக உள்ளது. புதுமைப்பித்தனின் பிரமாண்ட உலகம் தேவதச்சனில் சிறு வீடாக மாறியுள்ளது. வெளிக்கதவு திறந்து உள்கதவைத் திறந்து அறைக்கதவைத் திறந்து பீரோ திறந்து ரகசியச் சிற்றறை திறந்து பெட்டியை எடுத்தேன் மணம் வீசிக்கொண்டிருக்கிறது கருநாவல் பழம் ஒன்று பிசுபிசுவென்று. கபாடபுரத்தின் சுடுகாட்டு மரத்தில் பறிக்கையில் ஒட்டிய தூசு தும்பட்டையுடன் காலத்தின் எத்தனையோ மடிப்புகளுக்கப்பால், எத்தனையோ மாற்றங்களுக்குப் பிறகும் கபாடபுரத்தின் சுடுகாட்டு மரத்தில் பறிக்கும்போது ஒட்டியிருந்த அதே தூசு தும்பட்டையுடன் பிசுபிசுவென்ற கருநாவல் பழம் இருக்கும் பெட்டி ஒன்று திறக்கப்படுகிறது. புதுமைப்பித்தனும் தேவதச்சனும் தமிழ் என்ற ஆதி உணர்வை, அறிவை, நினைவை கபாடபுரம் என்ற சொல், இடம் வழியாகத் திறக்கிறார்களா? சுடு

புதுமைப்பித்தன் பிறந்த நாள் ஏப்ரல் 25 - புதுமைப்பித்தனின் கபாடபுரம்

கன்னியாகுமரிக்குப் போய் சில வருடங்களாகிவிட்டன. அந்த ஏக்கத்தை பகத் பாசில் நடித்த ‘டிரான்ஸ்’ திரைப்படத்தைப் பார்த்தபோது உணர்ந்தேன். படத்தில் நாயகன் பகத் பாசிலும் அவனது தம்பியும் படத்தின் ஆரம்பத்தில் கன்னியாகுமரியில் வசிப்பதாகக் கதை. தமிழ் சினிமாவில் கன்னியாகுமரி கோயிலின் தெற்குப் பகுதியில் உள்ள பிரதான மண்டபத்தையும் கடற்கரையையும் இப்படிக் காட்டியிருக்கவில்லை. நூற்றாண்டு காலமாக சுற்றுலாப் பயணிகளின் கண்களால் பார்க்கப்பட்டு சலித்து சிறுத்துப் போன சிறுநகரமாகத் தோன்றும் கன்னியாகுமரி, ஒரு பெரும் புராணிகத்தின் நினைவை ரகசியத்தை எழிலை மறைத்துவைத்திருக்கிறது. புறத்தில் எத்தனையோ கண்களால் பார்க்கப்பட்டு பார்க்கப்பட்டு சலித்துப் போன கன்னியாகுமரியின் கரையை, சிதறிக்கிடக்கும் பாறைகளை, மோதிக் கொண்டிருக்கும் அலைகளின் பேரோல இரைச்சலுக்குள், அந்தப் புராதனமும் மர்மமும் இரவுகளில் நம்மிடம் வேறொரு கதையைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அவை தூண்டிய ஞாபகத்திலிருந்துதான் புதுமைப்பித்தனின் கபாடபுரத்தை மீண்டும் படிக்க வேண்டுமென்று நினைத்தது. கன்னியாகுமரி கோயிலின் கிழக்கு வாசலில் அசந்தர்ப்பமாக மாட்டிக் கொண்ட ஒருவன்

மினாரெட் புதைக்கப்பட்ட நாடு

  இடைவெளி காஷ்மீர் சிறப்பிதழ் இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு டில்லியில் பிறந்து காஷ்மீரில் இளம்பருவத்தைச் செலவழித்து, பின்னர் அமெரிக்காவில் குடியேறிய இந்திய – அமெரிக்கக் கவிஞரான ஆஹா சாகித் அலி, உணர்வுநிலை அடிப்படையில் தன்னை நாடுகடத்தப்பட்டவன்(exile) என்று அடையாளப்படுத்திக் கொள்பவர். மேற்கத்திய இலக்கியம், தாராளவாத கலாசாரத்தின் தாக்கத்துடன் அனைத்துப் பண்பாடுகளையும் தன்னுள் பிரதிபலிக்க அனுமதித்த ஆஹா சாகித் அலி, காஷ்மீரை, எப்போதைக்குமான அகமாகவும், கருப்பையாகவும் மூலாதாரமாகவும் மூலப்படிமமாகவும் ஆக்கிக் கொண்டவர். கல்வியாளர்களும் புகழ்பெற்ற மருத்துவர்களும் புழங்கும் உயர்வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவர். இந்தியாவில் காலம் காலமாக நீடித்த இந்து – இஸ்லாமியப் பண்பாட்டு உறவுகளின் சாரம் தான் ஆஹா சாகித் அலியின் உள்ளடக்கம். சிறுகுழந்தையாக இருந்தபோது கிருஷ்ணன் வேடத்தில் அவர் பெற்றோர் இவரைப் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். கிருஷ்ணனுக்கு தனது வீட்டின் வளாகத்தில் ஒரு ஆலயம் கட்டவேண்டுமென்று சிறுபிள்ளையாக இருந்தபோது அவர் தனது அப்பா, அம்மாவிடம் அனுமதி கேட்க அவர்கள் அதற்கு சம்மதமும் தெரிவித்தார்கள் என்று

இசபெல் அயந்தேயின் ‘இரண்டு வார்த்தைகள்’

  மார்க்வெஸின் ‘களங்கமற்ற எரிந்திரா’ குறுநாவலையும், ‘கனவுகளை விற்கிறேன்’ சிறுகதையையும் ஞாபகப்படுத்தும் இசபெல் அயந்தேவின் ‘இரண்டு வார்த்தைகள்’ சிறுகதையை ஆர். சிவகுமார் மொழிபெயர்ப்பில் வாசித்தேன். அற்புத அனுபவத்தை நறுமணத்தைப் போல கதை சொல்லல் வழியாகக் கடத்தும் இன்னொரு வல்லமை இசபெல் அயந்தே. நாயகி பெலிசா க்ரெபுஸ்குலேரியா, வார்த்தைகளை விற்பதைத் தனது ஜீவனமாக ஆக்கிக்கொண்டவளாக அறிமுகமாகிறாள். கொடுத்த காசுக்கு செய்யுள்கள் முதல் ‘உண்மைக் கதைகள்’ வரை பஜார்களில் கூடாரம் போட்டு விற்பவள். ஒருவருக்குக் கொடுக்கும் வார்த்தையை இன்னொருவருக்குத் தரமாட்டாள். கிட்டத்தட்ட கடவுச்சொற்களைப் போல பிரத்யேகமான வார்த்தைகளை அவரவர் தேவைக்கு ஏற்ப கட்டுப்படியாகும் விலையில் விற்றுக்கொண்டிருப்பவள் பெலிசா க்ரெபுஸ்குலேரியா. குழந்தைகளுக்குப் பெயர் கூட சூட்டமுடியாத வறிய குடும்பத்தில் பிறந்தவளாக பெலிசா க்ரெபுஸ்குலேரியா என்று அவள் அறிமுகப்படுத்தப்படும் போதே இந்தக் கதை வேறு ஒரு எதார்த்தத்தை, மிகத் தீவிரமான தொனியில் உரைக்கிறது என்று தோன்றிவிடுகிறது. நான்கு தம்பி தங்கைகளையும் வறட்சிக்கும் பஞ்சத்துக்கும் பலிகொடுத்துவிட்டு, உயி

ஸ்ரீநேசனின் சொல் சில்பங்களான கவிதைகள்

  ஸ்ரீநேசனின் மொழி ஏரிக்கு அருகில் செல்லும்போதும், மலையில் ஏறும்போதும் பாடலின் சந்தத்தையும் தாளகதியையும் அடைகிறது. அந்த அடிப்படையில் சொல் சில்பங்களென அனுபவங்காணும் கவிதைகளாக ஓர் இலைச்சருகு, காணாமல் போகும் மலைகள், சொல், சொல் சில்பம், இயற்கைப் புணர்ச்சி, வெயிற்சுவை, சூரியனுடன் வருவேன் ஆகிய கவிதைகளைச் சொல்வேன். பொருளெல்லாம் நிழலாவதும், நிழலே அடுத்து வந்து குந்தும் பொருளாகவும் ‘சொல் சில்பம்’ கவிதையில் மாறுகிறது. நிழலோடு கல் இருப்பது போல பொருளோடு இருளையும் வைத்திருக்கும் கல்லாக சொல் இங்கே தொனிக்கிறது. சிலையுமாக மலையுமாக அதன் ஆதியடக்கத்தில் கல்லாகவும் சொல்லாகவும் இருப்பதை முதலில் தொட்டுப் பார்க்கும் பூர்வகுடியைப் போலத் தொட்டு இந்தக் கவிதைகளை எழுதியுள்ளதால் ஸ்ரீநேசனின் இந்தக் கவிதைகள் மொழியின் அபூர்வ எழில் சூடியவை. அந்த அலாதி கதியில் தான் ‘ஒரு துண்டு சிவந்த வெயிலை மிளகோயோடு’ வாயிலிடும் சிறுவனாக மாறுகிறான் கவிஞன். ஒளி, மொழியில் சுவையான பருப்பொருளாக மாற்றப்படுகிறது. ஸ்ரீநேசனிடன் தொழிற்பட்ட சொல்சில்பக் கவிதைகளில் உச்சமும் இழைவும் கொள்ளும் கவிதையென இறுதிக் கவிதை ‘சூரியனோடு வருவேன்’ கவிதையைச் சொ

தோன்றாத பறவையை என்ன பெயர் சொல்லி அழைப்பது நக்கீராஆஆஆஆஆஆஆ?

  ஸ்ரீநேசனின் ‘மூன்று பாட்டிகள்’ தொகுதியில் உள்ள ‘பட்சி கானம்’ கவிதை, கவிஞனுக்கு ஐம்பதாண்டுகளாகியும் தெரியவராத ஒரு பட்சியின் கானத்தைப் பற்றிப் பேசுகிறது. தமிழ் வாழ்க்கையும் தமிழறிவும் சேகரித்த பறவைகளின் பெயர்களை எல்லாம் ஒப்பிட்டு, அதுவல்ல அதுவல்ல என்று விலக்கி விலக்கி கவிஞன், காணாத முகத்தை, காணாத உடலைக் கொண்ட அந்தப் பறவையை நெருங்கி அந்தத் தோன்றாத பறவையின் குரல் இனிப்பை வியக்கிறான். கவிஞர் இசையின் சமீபத்திய தொகுப்பான 'உடைந்து எழும் நறுமணம்' தொகுதியில் 'ஒரு பாடலில் பாடுவது எது' என்று நுஸ்ரத் பதே அலிகான் பாடலை முன்வைத்து எழுதியிருப்பார். எது பாடுகிறது என்று விசாரித்து சலித்துக் கொண்டே போகும். நஸ்ரத் அலிகான்  தன் ஒற்றைக் கரத்தால்  வானத்தை அளாவிக் கொண்டிருக்கும் படம் வெகு பிரசித்தம்   எனக்குத் தெரியும்  அந்த வானம்தான் பாடுகிறது  ஒருவர் காலியிடமொன்றை  உற்றுப்பார்த்தபடி பாடிக் கொண்டிருக்கிறார் .   அங்கு என்னென்னவோ  தோன்றித் தோன்றி மறைகின்றன . எனக்குத் தெரியும்  காலியில் நிரம்பி வழிபவை எவையோ  அவைதான் பாடுகின்றன .   தோன்றாத பறவை பற்றிப் பேசும் போது, அது க

ஸ்ரீநேசனின் பெருமாத்தம்மாள், கன்னியம்மாள், ஜடசியம்மாள்

  ஸ்ரீநேசனின் ஏரிக்கரையில் வசிப்பவன் தொகுதியில் உள்ள முதல் கவிதையில் வரும் இளந்துடி கொண்ட ‘ஏரிக்கரை அம்மன்’ தான் ஸ்ரீநேசனின் புதிய இத்தொகுதியில் ‘மூன்று பாட்டிகள்’ ஆக மாறியுள்ளனர். பெருமாத்தம்மாள், கன்னியம்மாள், ஜடசியம்மாள் மூவரும் அம்மாவை ஏந்தியிருக்கிறார்கள். பண்பாட்டின் நிழலும் இருட்டும் சுரந்துகொண்டிருக்கும் அம்மைகள் அவர்கள். கன்னியம்மாள் என்ற பெயர் மட்டும் வடதமிழகத்தில் புழங்கும் பெயர். பெருமாத்தம்மாள், ஜடசியம்மாள் இருவர் பெயரும் புனைந்தவையாக இருக்கலாம். ஆனால் இந்தப் பெயர்களை உச்சரிக்கும் போது ஒரு நிலம் அதிர்கிறது. இந்தப் பெயர்கள் கவிதையில் வரும் பாட்டிகளின் பெயர்கள் அல்ல. ஸ்ரீநேசன் என்ற கவி, தனது கவிதைக்குள் வந்த அம்மாள்களுக்குச் சூட்டியிருக்கும் பெயர்கள் அவை. மூன்று பேரும் பேருந்தில் வேறு வேறு சூழல்களில் பயணிப்பவர்கள். பாட்டி ஒன்று : பெருமாத்தம்மாள்    படிக்கட்டோர இருக்கையில் ஒரு பாட்டி  எதையோ தவறவிட்டதான முகபாவம்  சுமக்க முடியாத புத்தக மூட்டையை  யாரோ ஒரு சிறுமி  அவள் மடியில் இறக்குகிறாள்  என்னவொரு மிடுக்கு கிழவிக்கு இப்போது  தானே பள்ளிக்குச் சென்று கொண்டிருப்பதைப்போல.

ஸ்ரீநேசனின் ‘ஆண்டன் செக்காவ்வை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாசிப்பது’

  அரிய, அபூர்வ தமிழ்க்குணம் கொண்ட கவிதைகளைப் படைத்த ஸ்ரீநேசனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘மூன்று பாட்டிகள்’. மொழியை வதைக்கும் போது வரும் ரத்த வாடையும் வெற்றுப்பூடகத்தின் புகைமூட்டமும் மலிந்திருக்கும் நவீன கவிதைச் சூழலில், ஒரு கவிதைத் தொகுப்புக்கு ‘மூன்று பாட்டிகள்’ என்ற தலைப்பு இருப்பதே ஆசுவாசத்தைத் தருகிறது. தன்னியல்பின் கம்பீரத்துடன் சுயமுகத்துடன் திகழும் ஸ்ரீ நேசனின் கவிதைகள் மூலிகை இலைகளை வாயில் சுவைக்கும் போது உணரும் குணமூட்டுதலைத் தருபவை. மிக நீண்ட இடைவெளிகளில் வெளிவந்த காலத்தின் முன் ஒரு செடி, ஏரிக்கரையில் வசிப்பவன் தொகுப்புகளுக்குப் பிறகு மூன்று பாட்டிகளை வாசிக்கும் போது, ஸ்ரீ நேசன், தனது புராதனத் தன்மையைத் தக்கவைத்துக் கொண்டே இரண்டாம் பருவத்துக்குள் நுழைந்துவிட்டிருக்கிறான் என்ற முதல்பதிவு என்னுள் ஏற்பட்டது. அப்புறம் ஒரு சுயசரிதைத் தன்மை இந்த ‘மூன்று பாட்டிகள்’ கவிதைகளில் கூடியிருக்கிறது. ஏரிக்கரையில் வசிப்பவனில் தென்பட்ட ஒரு விரைப்பும், விமர்சனக் கூர்மையும் இலகுவாகி ஒரு கனிவை அடைந்திருக்கிறார் ஸ்ரீநேசன். கனிவு, வண்ணதாசன் வகையறா சேதாரங்களையும் ஸ்ரீநேசனுக்கு அளித்துள்ளது. &