Skip to main content

Posts

Showing posts from April, 2014

பழங்களை நறுக்கும்போது

ஷங்கர்ராமசுப்ரமணியன் வீட்டிலேயே ஒரு பகுதியை ஒதுக்கி, ஐஸ்க்ரீம் மற்றும் பழச்சாறுகளைத் தயாரித்து விற்கும் வயோதிகர் ஒருவர் எங்கள் பகுதியில் இருக்கிறார். அவர் மங்களூரைச் சேர்ந்தவர். முதுமையிலும் உயிர்ப்பு ததும்பும் கொங்கணி முகம். கண்களும் சிரிக்கும். ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சாயல். ஒவ்வொரு கோடையிலும் எங்கள் நட்பு அவருடன் துளிர்விடத் தொடங்கும். அவரிடம் ஷுகர் ஃப்ப்ரீ ஐஸ்கிரீம் கிடையாது. ஆனாலும் அதையும் தயாரியுங்கள் என்று ஒவ்வொரு ஆண்டும் சொல்கிறேன். விட்டேத்தியாகச் சிரிப்பார். வெண்ணிலா ஐஸ்கிரீம் மேல் சூடான ஹாட் சாக்லேட் பாகை ஊற்றிச் சாப்பிட்டபடியே, வாடிக்கையாளர் அதிகம் இல்லாத சமயத்தில் எங்களுக்குள் உரையாடலும் நடக்கும். வீட்டின் பிரதான அறையில் தனது கடையை அவர் அமைத்துள்ளார். அவருக்கு மனைவியும், திருமணமாகாத முதிர்கன்னி மகளும் உண்டு. எல்லாருக்கும் கொங்கணி முகங்கள். பிரியத்துடன் சிரிப்பார்கள். சில காலைகளில் அப்பாவும் மகளுமாக நடைப்பயிற்சியும் செய்யும்போது நாங்கள் கைகளை உயர்த்திக் கொள்வோம். அன்றாட வியாபாரம் குறித்தும் பேசியிருக்கிறோம். அவருடைய ஒரே மகன் தனது குடும்பத்தோடு வேறெங

குழந்தை ஏற்கனவே புலியைப் பார்த்திருக்கிறது

ஹோர்ஹெ லூயி போர்ஹெஸ் தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்                               ஒரு சின்னஞ்சிறு குழந்தை முதல்முறையாக மிருகக்காட்சி சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. அந்தக் குழந்தை நம்மில் ஒருவராய் இருக்கலாம், இன்னொரு வகையில் பார்த்தால் அது நாமாகவே இருந்து நாம் அதை மறந்துபோயிருக்கலாம். இந்தப் பின்னணியில் - இந்த வினோத மான பின்னணியில்- அந்தக் குழந்தை இதுவரை பார்த்திராத விலங்குகளைப் பார்க்கிறது .   சிறுத்தைப் புலிகள், ராஜாளி, காட்டெருமைக ள்… இன்னும் வினோதமாக, ஒட்டகச்சிவிங்கிகளையும் பார்க்கிறது. திகைக்கச் செய்யும் அளவுக்கு வகைமை கொண்ட விலங்குக ளின் ரா ஜ்ஜி யத்தை பார்க்கும் வாய்ப்பு முதல் முறையாக அந்தக் குழந்தைக்குக் கிடைக்கிறது. இந்தக் காட்சி எச்சரிக்கையூட்டவோ அச்சமூட்டவோ செய்தாலும் அந்தக் குழந்தை அதை ரசிக்கிறது. விலங்குக் காட்சி சாலைக்குப் போவதை க் குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சிகளில் ஒன்று என்று குதூகலம் அடை கிறது. அன்றாட ம் நிக ழ்ந்தாலும் புதிராகவே இருக்கும் இந்த நிகழ்வை நாம் எப்படி விளக்க முடியும்? நாம் அதை மறுக்க லாம். மிருகக்காட்சி ச் சாலைக்கு

கிங்பிஷர்

ஷங்கர்ராமசுப்ரமணியன் அந்த மீன்கொத்திப் பறவைக்கு தன் இன்னொரு பெயர் கிங்பிஷர் என்று தெரியாது தன் பெயரில் விமானங்கள் பறப்பதை அது அறியாது பேரழகிகளின் கவர்ச்சிப்படங்கள் கொண்ட காலண்டர் ஆண்டுதோறும் அதன் முத்திரையுடன் வெளிவரும் செய்தியை அதற்கு யாரும் சொல்லவேயில்லை கிங்பிஷர் நிறுவனத்தின் முதலாளி பூலோகத்தில் சொர்க்கத்தின் உல்லாசங்களையெல்லாம் அனுபவிப்பதையும் தன் இலச்சினை பொறித்த சீருடைப் பணியாளர்கள் மாதச்சம்பளமின்றி போராடும் செய்திகளையும் கிங்பிஷர் வாசித்ததே இல்லை தன்னைப் பற்றி உலகில் மிதக்கும் இத்தனை தகவல்களின் கனமேதுமின்றி அந்த நீலநிற குட்டிப்பறவை ஏப்ரல் வெயிலில் நான் பயணிக்கும் பறக்கும் ரயில்தடத்திற்கும் நகர்ப்புறச் சேரிக்கும் இடையில் மீன்கள் அற்று சாக்கடையாய் நிற்கும் கூவ நதியின் மரக்கிளையில் இறங்கி அமர்கிறது அதன் பெயர் கிங்பிஷர்.