Skip to main content

Posts

ஒரு கடிதம் - சார்லஸ் சிமிக்

இனிய தத்துவவாதிகளே சிந்திக்கும்போது எனக்கு கவலை வந்துவிடுகிறது அதுவேதான் உங்கள் நிலையுமா? மனிதப் புலன்களால் தொடமுடியாததில் எனது பற்களைப் பதிக்க முயலும்போது பழைய தோழி ஒருத்தி இடையூறு செய்ய வருகிறாள். “அவள் உயிருடனேயே இல்லை!” நான் சொர்க்கத்தைப் பார்த்துக் கத்துகிறேன்.   குளிர்காலத்து வெளிச்சமோ என்னை அலாதியாக்குகிறது. ஒரேவிதமாய்த் தோன்றும் சாம்பல் போர்வைகள் மூடிய படுக்கைகளைப் பார்த்தேன்.   நிர்வாணப் பெண்ணை அணைத்தபடி குளிர்நீரால் குளிப்பாட்டும் இறுக்க முகம்கொண்ட ஆண்களைப் பார்த்தேன். குளிர்நீர் அவளது நரம்புகளை அமைதிப்படுத்தியதா? அல்லது அவளுக்கு அது தண்டனையா?     நான் எனது நண்பன் பாப்பை பார்ப்பதற்காகச் சென்றேன், அவன் என்னிடம் கூறியது: “காட்சிகளின் மயக்கத்தைக் கடப்பதன் மூலம் நாம் மெய்மையை அடைகிறோம்”. அதை விலக்குவது எனக்கு சாத்தியமே அல்ல என்பதை நான் உணரும்வரை புளங்காகிதம் கொண்டிருந்தேன். ஜன்னலுக்கு வெளியே தீவிரமாய் பார்த்துக்கொண்டிருந்த  என்னைக் கண்டேன் .   பாப்பின் தந்தையார் அவர்களது நாயை நடைக்கு வெளியே அழைத்துச் செ

பக்தி - சார்லஸ் சிமிக்

நூறு வயதுள்ள வீட்டுப்பணியாளர்கள் வெள்ளிப் பாத்திரங்களைத் துடைத்து மெருகூட்டுகின்றனர். சிறுமியைப்போல உடையணிந்த குட்டி எஜமான் படுக்கையறை சிறுநீர் கலத்தில் சிறுநீர் கழித்ததை நினைவுகூர்ந்தனர்.   தற்போது குட்டி எஜமான் மேடத்துடன் சேர்ந்து வேட்டைக்குப் போயிருக்கிறார். இன்று மதியம் வீட்டுக்கு வருகைதந்த அருள்திரு ரெவரெண்ட் கனிவாக அவர்களை விசாரித்தார். அவரது இளஞ்சிவப்பு விரல்கள் நெளியும் பன்றிக்குட்டிகளைப் போன்றிருந்தன.   மழைபெய்யும் நாட்களில் கணப்பில் தீ எரிந்துகொண்டிருக்க சயாமீஸ் பூனைகள் கூட ஆசுவாசமாய் அமர்ந்து மெழுகுபூசிய மீசை முனைகளுடன் சிடுசிடுப்பான முகத்துடன் கனத்த படச்சட்டகத்திலிருக்கும் தாத்தாவை வெறித்துக்கொண்டிருக்கவே விரும்புகின்றன.   மரியாதையை அவர்கள் வேகமாகக் கற்றுக்கொண்டனர் அதுவே அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்டது. பண்ணைச் சிறுவர்களாகவும் பண்ணைச் சிறுமிகளாகவும் இருந்தவர்கள் பெரிதாகவும் சிறிதாகவும் வெள்ளிக்கரண்டிகளில் தாங்கள் தெரிவதை ரகசியமாய் நோட்டமிடுகின்றனர். 

கனவுகளின் பேரரசு - சார்லஸ் சிமிக்

எனது கனவுப்புத்தகத்தின் முதல்பக்கத்தில் எப்போதும் சாயங்காலம். ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டில்.   ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னர். தலைநகரிலிருந்து தூரத்திலிருக்கும் ஒரு சிறிய நகரம். இருளடர்ந்த வீடுகள். சூறையாடப்பட்ட கடைகள்.   நான் நிற்கக்கூடாத தெருமுனையில் நிற்கிறேன் தனியாக.   மேல்கோட் இல்லாமல் எனது சீழ்க்கையொலிக்கு ஓடிவரும் ஒரு கருப்புநாயைத் தேடி அங்கே வந்திருக்கிறேன். நான் அணிவதற்கு அச்சப்படும் ஹாலோவீன் முகமூடி என்னிடம் உண்டு. (ஹாலோவீன் தினம் – பேய்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக விதவிதமாக முகமூடிகள் அணியும் தினம்)  

தர்பூசணிகள் - சார்லஸ் சிமிக்

    பழ அலமாரிகளில் பச்சை புத்தர்கள். நாம் புன்னகையை உண்டு பற்களை உமிழ்கிறோம்.

இன்மையின் நிறம் நீலம் – சார்லஸ் சிமிக்

  நான் இங்கிருந்து எழுதும்போது எனது மேஜை மற்றும் நாற்காலி தவிர வேறு எதுவும் உலகத்தினுடையதாய் இல்லையென்பதை நான் கவனித்திருக்கவில்லை.   அதனால் நான் கூறிக்கொண்டேன்: (எனக்கு நான் கேட்பதுபோல்) ஒரு கண்ணாடிக் குவளையோ திராட்சை மதுவோ பரிசாரகரோ இல்லாத மதுவிடுதியா இந்த இடம்? இங்கே வெகுநேரம் எதிர்பார்க்கப்படும் குடிபோதைக்காரனோ நான்?   இன்மையின் நிறமென்பது நீலம்.  அதை  இடதுகையால் தள்ளியபோது கை மறைகிறது.   இருப்பினும் நான் ஏன் அமைதியாகவும் மிகுந்த மகிழ்ச்சியோடும் இருக்கிறேன்?   மேஜை மேல் ஏறுகிறேன் (இருக்கை ஏற்கெனவே இல்லாமலாகிவிட்டது) காலி பீர் புட்டியின் தொண்டை வழியாக நான் பாடுகிறேன்.

பறவை – சார்லஸ் சிமிக்

கனவில் ஒரு பறவை உயரமான மரமொன்றிலிருந்து என்னை அழைக்கிறது. பகல் வெளிச்சத்தின் இளஞ்சிவப்பு சிறுகிளையிலிருந்து ஒவ்வொரு இரவும் என் இதயத்தை அங்குலம் அங்குலமாக நெருங்கும் நெடிய நிழலிலிருந்து உலகத்தின் விளிம்பு முனையிலிருந்து என்னை ஒரு பறவை அழைக்கிறது.   நான் அதற்கு எனது கனவைத் தருகிறேன், செஞ்சாயத்தைப் பூசி வர்ணம் தீட்டுகிறது பறவை. நான் அதற்கு எனது மூச்சைத் தருகிறேன், சரசரக்கும் இலைகளாக்கிவிடுகிறது பறவை.   பறவை என்னை உச்சியிலிருக்கும் மேகத்திலிருந்து அழைக்கிறது. தற்போதுதான் புதைத்துமூடிய சடலமிருக்கும் குழியில்  ஒரு தீக்குச்சி பற்றுவதுபோலிருக்கிறது அதன் கீச்சொலி. • கொட்டாவி விடும் வாயின் வடிவத்தில் பறவை.   பச்சிளம் சிசுவை ஞானஸ்தானம் செய்விக்க அவர்கள் குளிப்பிக்கும் நீரைப்போல விடிகாலையில் வானம் நிர்மலமாக சுடர்கிறது, நான் உன்னை நோக்கி ஏறிவந்தேன்.   கீழே பூமி சிறிதாகிறது ஊளையிடும் வெறுமை எனது பாதத்தைச் சில்லிடச் செய்தது பின்னர் எனது இதயத்தையும். • பிறகு நான் வனத்தின் நடுவிலுள்ள சிறிய திட்டில் ஒ

காதல் உண்ணி - சார்லஸ் சிமிக்

அவளது அக்குளிலிருந்து அவன் ஒரு உண்ணியை எடுத்து அதைப் போற்றி போஷிப்பதற்காக ஒரு தீப்பெட்டியில் வைத்தான். அதற்கு  ரத்தத்துளிகளை வேளாவேளைக்கு உணவாய் கொடுக்க அவன்  விரலை குத்தவும் செய்தான்.