உயிரின வகைகளிலேயே பாம்புகளும், பிற ஊர்வன வகை உயிரினங்களும்தான் பொதுவாக மக்களிடம் அச்சத்தையும் விலக்கத்தையும் வெறுப்பையும் அதிகம் பெற்றவை. அதனாலேயே அவை அவர்களது அன்றாட எதார்த்தத்தில் இருந்தாலும் கட்டுக்கதைகளாகவும் புராணிகமாகவும் கடவுளர்களாகவும் இன்னொரு தளத்திலும் புழங்குபவை. தெய்வீகமாகவும் தொன்ம அடையாளமாகவும் இருக்கும் அதே வேளையில் அவை மனிதர்களின் வேட்டைக்கும் வன்முறைக்கும் தொடர்ந்து இலக்காகுபவை. பாம்புகள் மீது படிந்திருக்கும் அச்சத்தையும் அமானுஷத்தையும் தகர்த்து அவையும் நம்மைப் போன்ற உயிர்கள்தான் என்ற எண்ணத்தை உருவாக்கியவரே இந்தியாவின் பாம்பு மனிதன் என்றழைக்கப்படும் ரோமுலஸ் விட்டேகர். ஏராளமான முறை பாம்புக்கடி பட்டு, ஒரு கட்டைவிரலின் செயல்பாட்டையே இழந்த ரோமுலஸ் விட்டேகர், தனது உடலையே நஞ்சு எதிர்ப்பு மண்டலமாகப் படிப்படியாக மாற்றிக்கொண்டவர். உலகிலேயே அதிக பயத்தை அளிக்கும் பாம்புகளின் கண்களைப் பார்த்துப் பழகி அதை அன்றாடம் ஆக்கிக்கொண்டிருக்கும் சுவாரசியமான மனிதரின் கதை இந்தப் புத்தகம் வழியாக நம் முன் விரிகிறது. தனது நான்கு வயதிலேயே பாம்புகள் மீது ஈடுபாடு கொண்ட அந்த அமெரிக்கச் சிறுவன் ரோமுலஸ
காவ்யா வெளியிட்ட ‘நகுலன் கவிதைகள்’ தொகுப்பை மறுபடி மறுபடி புரட்டி முழுக்கவே எத்தனையோ முறை படித்திருக்கிறேன் . வேறு வேறு சூழல்கள் , மனநிலைகளுக்கேற்ப தனித்தனியே சில கவிதைகளையும் அடிக்கடிப் போய்ப் பார்த்திருக்கிறேன் . ஒருகட்டத்தில் நகுல னின் கவிதைகளில் இல்லாத பழமையும் பழக்கத்தின் அலுப்பும் பதிப்பில் தெரியத் தொடங்கியதையடுத்து நகுலன் இருந்தபோது வெளியிட்ட தனித்தனித் தொகுதிகளைப் படித்துப் பார்க்கும் ஆசை ஏற்பட்டது . நண்பர் அழகியசிங்கரைத் தொடர்பு கொண்டு அவர் பதிப்பித்த ‘இரு நீண்ட கவிதைகள்’ நூலைக் கேட்க முடிவுசெய்தேன் . அவரிடம் ‘சுருதி’ தொகுப்பு இருப்பதாகவும் அனுப்பிவைப்பதாகவும் சொல்லி உடனடியாக அனுப்பியும் வைத்தார் . நகுலன் கவிதையைச் சுற்றி உணரும் வெளியைப் பக்கங்களிலும் கொண்டு ஆதிமூலத்தின் அட்டைப்படத்துடன் நேர்த்தியாக வெளிவந்த தொகுதி அது . நகுலனின் கவிதைகளைப் புதிதாகப் படிக்கும் அனுபவத்தை இந்தத் தொகுதியில் உணர்ந்தேன் . தபாலில் வந்த சுருதி புத்தகத்தைத் திறந்தவுடன் வெளிப்பட்ட கவிதை ‘இடையில்’ என்ற தலைப்புடன் கண்ணில் பட்டது . “ ஏன் இப்படிக் குடிக்கிறீர்கள் ?” என்று கேட்டான் “ ஏன் இப்படி வா