Skip to main content

Posts

பொய்ச்செய்திகள், பிரசாரங்களே ஊடக எதார்த்தமாகிவிட்ட காலத்தில் ‘WHILE WE WATCHED”

பொய்களும் பிரசாரமும் துருவமயப்படுத்தப்பட்ட கருத்து தரப்புகளுமே இன்றைய, வெகுஜன இந்தியச் செய்தி ஊடகங்களின் எதார்த்தம்; அறிவு, நேர்மை, உண்மை பேசும் துணிச்சல் படிப்படியாகக் கழுவித் துடைக்கப்பட்ட பகட்டான இடங்கள்தான் இன்றைய செய்தி அறைகள். அதிகாரத்துக்கு முன்னால் குறைந்தபட்சம் உண்மைகளை எடுத்துப் பேசும் நேர்மை , அரசு அதிகாரம் சொல்லும் தரவுகளுக்கு மாறான எதார்த்தங்களைத் தரவுகளாக வைக்கும் அறம் அல்லது சாகசம் எல்லாம் பழைய மதிப்பீடுகளாக சீக்கிரமே ஒரு பாழ்படியும் இருட்டுக்குள் போன இடத்துக்குள் உரையாடுவதற்கு யாருமில்லாத தனிமையில், என்டிடிவியிலிருந்து வெளியேறிய செய்தியாளர் ரவீஷ் குமாரை, இந்த ஆவணப்படத்தில் பார்க்கிறோம். “நீங்கள் தனிமையாக உணரும் நிலையில், யார் உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்” என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறது ‘WHILE WE WATCHED” ஆவணப்படம். அருந்ததி ராய் உரைப்பது போல ஒரு பெரும்பான்மைவாத சர்வாதிகாரமாக இந்தியாவை சீரழிவுக்குப் படிப்படியாக அவர்கள் அழைத்துச் சென்றுகொண்டிருக்கும் நடவடிக்கையில் ஒரு ஊடக நிறுவனமும் ஒரு செய்தியாளனும் எப்படி படிப்படியாக கழுத்து நெரிக்கப்படுகிறான் என்பதைச் ச

போலந்து கவிஞர் செஸ்லா மிலோஸுடன் ஒரு நேர்காணல்

  நேர்காணல் செய்தவர் : நதன் கார்டல்ஸ்     இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கவிஞர்களில் ஒருவர் செஸ்லோ மிலோஸ் . நோபல் பரிசு பெற்றவர் . தீவிரமான மோதல்கள் கொண்ட உலகத்தில் வாழ விதிக்கப்பட்ட மனிதனின் குரல் என்று நோபல் பரிசுக் கமிட்டியின் குறிப்பு இவரது கவிதைகளைப் பற்றித் தெரிவிக்கிறது . மனம்நிறை கவனம்தான் இவரது சமயத்துவம் என்பதை இந்த நேர்காணல் மூலம் தெரியப்படுத்துகிறார் .   கேள்வி : உங்கள் கவிதைத் தொகுப்பில் கதேயின் மேற்கோள் ஒன்றைத் தந்திருக்கிறீர்கள் . “ நலிவின் காலகட்டங்களில் , எல்லா மனப்போக்குகளும் தன்னிலை சார்ந்ததாக இருக்கும் ; ஒரு புதிய சகாப்தத்துக்கான கனிதல் ஏற்படும்போது அனைத்து மனப்போக்குகளும் புறநிலையில் இருக்கும் ” . உங்களைப் போன்றே கதேயும் புறநிலைக் கலையைப் பாராட்டுகிறார் . கற்பனாவாதப் போக்குக்கு செவ்வியல் காலம் வழிவிட்ட கதேயின் காலகட்டத்திலேயே இசையில் புறநிலை ஒழுங்கு குலைந்தது என்றும் நீங்கள் கருத்து தெரிவித்திருக்கிறீர்கள் . புறநிலைக் கலை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதை விவரிக்க இயலுமா ?