Skip to main content

Posts

உலகின் முதல் ருசி

திருநெல்வேலியில் நான் அதுவரை போயும் குளித்துமிராத சிந்துபூந்துறை படித்துறைக்கு அருகே என் அம்மாவின் சாம்பலை தாமிரபரணியில் கரைத்து முங்கி எழுந்தபோதுதான் உணர்ந்தேன்; எனக்குத் தெரிந்த வடிவத்தில் இருந்த அம்மா, இந்த உலகத்தில் இனி இல்லை என்பது. மழிக்கப்பட்ட தலையில் கக்கத்தில் தண்ணீர் நனைத்து உணர்ந்த குளிர் அதைச் சொல்லியது. என் தங்கை தெய்வானையிடம் இப்படித்தான் சொன்னேன். ஆறுதலுக்காக அவளுக்கோ எனக்கோ சொல்லிக் கொள்ளவில்லை. இந்த உலகத்துக்குள் வந்தவர்கள் யாரும் முற்றிலுமாக இல்லாமல் ஆகிவிடமுடியாதென்று. ஆமாம் என் அம்மாவின் உடன்பிறந்த அக்காளும் பெரியம்மாவும் இறந்தபிறகு, அவியலை எப்போதெல்லாம் சமைக்கிறேனோ உண்கிறேனோ அப்போதெல்லாம் அந்த அவியலில் அவள் இருக்கிறாள் என்பதை உணர்வேன். எங்கள் வீட்டிலேயே நாகர்கோயில் அவியலை அதன் முழுமையான ருசியில் சமைப்பவள் அவள்தான். அந்த அவியல் தொடர்பான நினைவு என்னில் இல்லாமல் ஆகும்வரை என் பெரியம்மா உண்மையில் இருக்கிறாள். என் அம்மாவும் அப்படித்தான்; அவள் எனக்குச் சிறுவயதிலிருந்து அறிமுகப்படுத்திய உணவுகள், அழைத்துச் சென்ற சினிமாக்கள், இடங்கள் இருக்கும்வரை அவள் வேறு வடிவங்களில் இருந்த

விக்ரமாதித்யனின் நவபாஷாணம்

நவபாஷாணம் நெடுங்கவிதையை வாசிக்க  "சைதாபேட்ட கிரோம்பேட்ட ராணிபேட்ட பேட்டராப் இன்று என்ன நாளை என்ன தினசரி அதே காலை என்ன மாலை என்ன மாற்றம் இல்லையே மறந்திருப்போமே கவலை மறந்திருப்போமே அட கெட் அப் அண்ட் டான்ஸ் இதுதான் உன் சான்ஸ் முதல்ல யார் முதல்ல யார் பேட்ட ராப் பேட்ட ராப் அம்மாபேட்ட ஐயம்பேட்ட தேனாம்பேட்ட தேங்காமட்ட”. 1994-ல் வெளியான காதலன் திரைப்படத்தில் அதன் இயக்குனர் ஷங்கர் எழுதிய “பேட்ட ராப்” பாடல்  மிகப் பிரபலமானது. அக்காலத்துக்குப் புதுமையான பாப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியிருந்தார். “விடிய விடிய பேட்ட ராப் வாடக கரன்ட்டு மொரவாசல் பாக்கெட் பாலு புள்ள குட்டி ஸ்கூல் பீஸு நல்லெண்ண மண்ணெண்ன ரவ ரேஷன் பாமாயிலு பச்சரிசி கோதும பத்தல பத்தல காசு கொஞ்சங்கூட பத்தலயே” என்று அப்பாடல் தமிழ் வெகுஜனப் பேச்சு, பொது ஏக்கம், ஆசாபாசம், பொன்மொழி, கழிவிரக்கம், நம்பிக்கை எல்லாவற்றையும் மெட்ராஸ் பேச்சுவழக்கில் வெளிப்படுத்தும். “பேட்டராப்” பாடல் ஆரம்பித்து வைத்த வகைமையில் தமிழ் சினிமாவில் “நாக்கு முக்க நாக்கு முக்க” மாதிரி நிறைய வந்துபோய்விட்டன. “பேட்டராப்” தமிழ் வெகுஜன கலாச்சாரத்தை உள்ளடக்கிய பாப் பாடல

ஒற்றை இருதயத்தின் வாசனை

சென்ற நூற்றாண்டு பிறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னர் நான் யார் என்று கேட்டு வெங்கட்ராமன் என்னும் சிறுவன் வந்து நின்ற அதே கோயிலுக்குள் தான் அன்றிரவு வந்து நின்றேன். அவன் நுழையும்போது, வெளியில் உள்ள பித்தளைப் பாத்திரக் கடைகள் இருந்திருக்காது. நான் உள்ளே நுழைந்த பிறகும் வெளியில் உள்ள உலகமும் காலமும் மறைந்துபோய்விட்டது. கரையான்களும் எறும்புகளும் கடித்து மண்ணோடு மண்ணாக ஒட்டி அழுகிய தசையோடு, நிஷ்டையில் அந்தச் சிறுவன் இருந்த பாதாள லிங்கம் இருக்கும் ஆயிரம்கால் மண்டபம்  தெரிகிறது. நான் பிரம்ம தீர்த்தக் குளத்தின் அருகே உள்ள மண்டபத்தின் முன்னர் நின்றேன். உள்ளே நுழைந்ததும் தென்பட்ட முருகனின் சந்நிதியில் விபூதியை நெற்றி முழுக்கப் பூசி எனது நோய் இங்கே இப்போதே குணமாகிவிட வேண்டுமென்ற உன்மத்த வெறியுடன் தான் இந்தக் கோயிலுக்குள்ளும் நுழைந்திருந்தேன்.  பிரிவு நேரும் என்று அறிந்தே வந்த உறவென்றாலும், உறவின் போது சந்தோஷமும் குற்றவுணர்வும் ரகசியமும் சுமையும் சேர்ந்து மூச்சு முட்டினாலும் அவளைப் பிரியும் கணத்தில் தான் பிரிந்தவளின் மகத்துவம் எனக்குத் தெரியத் தொடங்கியது. பிரிவு நோயாகியது. சேர்ந்திருந்த போது வெள

கும்பலின் மேதைமை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

துரோகம், வெறுப்பு, வன்முறை போதுமெனும் அளவுக்கு உள்ளது குறிக்கப்பட்ட நாளன்று ஒரு ராணுவத்துக்கு  வழங்கும் அளவுக்கு   சராசரி மனிதனில் அபத்தம் உள்ளது அத்துடன் கொலைக்கு எதிராகப் போதிப்பவர்கள் எவரோ அவர்களே அதில் தேர்ந்தவர்களாக உளர் அத்துடன் நேசத்தைப் போதிப்பவர்கள் யாரோ அவர்களே வெறுப்பதில் சிறந்தவர்களாய் உளர் அத்துடன்  போரிடுவதில் சிறந்தவர்கள் யாரோ அவர்களே  இறுதியில் சமாதானத்தைப் பிரசங்கிக்கிறார்கள் கடவுளைப் போதிப்பவர்களுக்கு கடவுள் தேவை அமைதியைப் போதிப்பவர்களிடம் அமைதி இல்லை நேசத்தைப் போதிப்பவர்களிடம் நேசம் இல்லை போதிப்பவர்களிடம் ஜாக்கிரதை அறிந்தவர்களிடம் ஜாக்கிரதை புத்தகங்களை வாசித்தபடி இருப்பவர்களிடம் ஜாக்கிரதையாய் இருங்கள். வறுமையைப் பழிப்பவர்கள் எவரோ வறுமையில் பெருமிதம் கொள்பவர்கள் எவரோ அவர்களிடம் ஜாக்கிரதையாய் இருங்கள் உடனடியாகப் புகழ்பவர்களிடம் ஜாக்கிரதை தேவை அவர்களுக்கு திரும்பப் புகழ்வது அவசியமாக உள்ளது உடனடியாக எதிர்ப்பு தெரிப்பவரிடம் கவனம் தேவை தமக்கு தெரியாதது குறித்து அவர்கள் அச்சப்படுகிறார்கள் தொடர்ந்து கூட்டத்தைத் தேடிக்கொண்டிருப்பவரிடம் எச்சரிக்கையாய் இருங்கள் தனிமை உணர்வைத் த

அதிகமாக விற்கும் நாவலாசிரியனின் நேர்காணலைப் படித்தபோது - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

  அவன் எழுதுவதைப் போன்று பேசுகிறான் அவனது முகம் புறாவைப் போன்றது, வெளிவிவகாரங்களால் தீண்டப்படாதது. அவனது சௌகரியமான உறுதியான வெற்றியை வாசிக்கும்போது  பயங்கரத்தின் சின்ன நடுக்கம் என்னில் பாய்கிறது. “அடுத்த வருடம் ஒரு முக்கியமான நாவலை எழுதப் போகிறேன்” என்று உரைக்கிறான். சில பத்திகளை விட்டுத் தாவுகிறேன் ஆனால் அந்த நேர்காணல் இரண்டரை பக்கங்களுக்கும் அதிகமாக நீள்கிறது. ஒரு மேஜை விரிப்பில் பால் சிந்தியதைப் போல டால்கம் பவுடரின் மிருதுவை ஒப்ப சாப்பிட்ட மீனின் எலும்புகளைப் போல வெளிறிய கழுத்து டையில் ஈரமான கறையைப் போல அதிகரிக்கும் முணுமுணுப்பு போல. இந்த மனிதன் மிகவும் அதிர்ஷ்டசாலி அவன் சூப் கிச்சனில் வரிசையில் நிற்கவேண்டியதில்லை. இந்த மனிதனுக்குத் தோல்வி என்ற கருதுகோளே தெரியாது அதற்காக அவனுக்கு அதிக ஊதியம் தரப்படுகிறது. நான் படுக்கையில் கிடந்து நேர்காணலை வாசிக்கிறேன். தரையில் செய்தித்தாளை நழுவவிடுகிறேன். அப்போது ஒரு சத்தம் கேட்கிறது. ஒரு சிறிய ஈ ரீங்கரிக்கிறது.  அது பறப்பதை அறையை ஒழுங்கற்றுச் சுற்றுவதை கவனிக்கிறேன். இறுதியாக வாழ்க்கை.  (சூப் கிச்சன் - இலவச உணவு விடுதி)

ஹிட்லரிலிருந்து மோடி வரை மக்களை மயக்கி இறுக்கும் பிம்பங்கள்

  ஜார்ஜ் ஆர்வெல் நினைவு தினத்தையொட்டி, ஹிட்லரின் மெய்ன் காம்புக்கு அவர் எழுதிய மதிப்புரையை ‘தி வயர்’ உள்ளிட்ட இணையத்தளங்கள் கவனப்படுத்தியிருந்தன. ஹிட்லர், ஸ்டாலின் ஆகியோர் மேற்கொண்ட சர்வாதிகார நடைமுறைகளை, அவை உச்சபட்ச துயரங்களைத் தந்தாலும் ‘மேலான நன்மை’ என்ற பெயரால், கடவுளர்களின் சோதனையாக விரும்பி, வெகுமக்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்பதை ஜார்ஜ் ஆர்வெல் இந்த மதிப்புரையில் ஆராய்கிறார். ஹிட்லரின் ஆளுமையும் அவர் ஏற்படுத்திய பிம்பமும், வலிய விதியை எதிர்த்துப் போராடும் துயர நாயகனின் சாயலைக் கொண்டது என்கிறார். ஒரு எலியை எதிர்த்துக் கொல்வதாக இருந்தாலும் ஹிட்லர் போன்றவர்கள், அந்த எலியை முதலில் ஒரு டிராகன் போன்று பிரமாண்டமான எதிரியாக கதையாகக் கட்டமைத்து விடுவார்கள் என்கிறார் ஜார்ஜ் ஆர்வெல். கரோனோ போன்ற வைரசை, கருப்புப் பணத்தை, சிறுபான்மையினரை, எதிர்கட்சியினரை, பாகிஸ்தானை, போராடும் விவசாயிகளை பிரமாண்டமான எதிரிகளாகச் சித்தரித்துவிடும் மோடி ஞாபகத்துக்கு வருகிறார். ‘அச்சே தின்’ என்ற பெயரால் நல்ல தினங்கள் வரப்போகின்றன என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த மோடி மக்கள் மேல் சுமத்திய அடுக்கடுக்கான துய

தி க்ராண்ட் இன்க்விஸிட்டர் - மானுட நிலைமை குறித்த மாபெரும் ஆவணம்

  உலகின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலின் தீர்மானகரமான அத்தியாயம் 'தி க்ராண்ட் இன்க்விஸிட்டர்’(The Grand Inquisitor) என்று அழைக்கப்படும் 'விசாரணை அதிகாரி'. நவீன இலக்கிய வரலாற்றில் அதிகபட்சமாக வாசகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய வசனங்களைக்கொண்ட காவியத்தை உள்ளடக்கிய அத்தியாயம் இது. கரமசோவ் சகோதர்கள் நாவலின் பிரதானக் கதாபாத்திரங்களில் ஒன்றும் தந்தையார் கரமசோவின் இரண்டாவது மகனுமான இவான் கரமசோவ் தனது தம்பியும் இளந்துறவியுமான அல்யோஷாவிடம் பகிர்ந்து கொள்ளும் காவியம் இது.   அல்யோஷாவின் சிறு சிறு இடையீடுகள் வழியே இந்தக் காவியம் இவானால் ஒரு உணவு விடுதியில் சொல்லப்படுகிறது இது. இந்தக் காவியத்தில் கிறிஸ்து மீண்டும், பதினைந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அவிசுவாசிகள் விசாரிக்கப்பட்டு தண்டனை கொடுக்கப்படும் காலத்தில் செவைல் நகரத்துக்கு வருகிறார். முன்பைப் போலவே சில அற்புதங்களையும் செய்கிறார். செவைல் நகரத்துத் தேவாலயத்தின் முன்பு இயேசுவைப் பார்க்கும் மதகுரு, தன் காவலாளிகளை அழைத்து அவரைக் கைது செய்ய உத்தரவிடுகிறார். அன்றிரவு, அந்த