Skip to main content

Posts

ஓவியர் நடேஷ் மறைந்தார்

(நடேஷின்கோட்டுச்சித்திரங்கள் குறித்த கட்டுரைக்கான இணைப்பு https://www.shankarwritings.com/2021/10/eggu.html ) 1990களில் பிற்பகுதியில் படிப்பை முடித்து சென்னையில் வேலைகளில் சேருவதும் விடுபடுவதுமாக இருந்த காலகட்டத்தில் நவீன ஓவியனாய், தன் கலை ரீதியான சிந்தனையின் நீட்சியாகவே பார்ப்பவர்களிடமும் உடனடியாக மோதி உரையாடல் நிகழ்த்தும்  கலைஞனாக, நண்பராக கொந்தளிப்பும் உற்சாகமுமாய் அறிமுகமானவர் நடேஷ். நண்பர் சி. மோகனுக்கு பிரியத்துக்குரிய வட்டத்தில் நானும் இருந்த நிலையில் அவருக்கு ஏற்கெனவே செல்லமாக இருந்தவர் நடேஷ். 1999 காலகட்டத்தில் என் கோடம்பாக்கம் அறைக்கு வருமளவுக்கு நடேஷ் நெருக்கமாகிவிட்டார்.  புலி, பூனை, நாய் எல்லாமே நேச்சுரலான யோகா மாஸ்டர்ஸ் மாமு, மனுஷனோட பரிணாமத்தில் சீக்கிரம் மூக்கில் ஸ்ட்ரா வளர்ந்துவிடும், நிலத்தடி நீர் எல்லாம் கீழ போய்க்கிட்டிருக்கு என்பது போன்ற கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியபடியேதான் அறைக்குள் நுழைவார்.  அலியான்ஸ் பிரான்சேஸ் கலாசார மையத்தின் நுழைவுக் கூரையில் நடேஷ் பிரமாண்டமாக வரைந்த யானை ஓவியம் பல ஆண்டுகளாக அங்கே பாதுகாக்கப்பட்டு வந்தது. சைக்கிள் ஓட்டும் யானை என்று ஞாபகம்.

யார்க் கடற்கரையில் - சார்லஸ் சிமிக்

  டிசம்பரின் குளிர்ந்த சாயங்காலத்தில் மகிழ்ச்சியற்றுப் போன ஒரு காதல் ஜோடியை மூழ்கடித்ததைப் பற்றி பொருட்டே இல்லாதது போல இந்த முரட்டு அலைகள் கடுமை காட்டுகின்றன.

குட்டி ஆந்தையே, அலறு - சார்லஸ் சிமிக்

நீ அங்கேதான் இருக்கிறாயா? அங்கு என்ற ஒன்று நிஜமாகவே அங்குள்ளதா என்ன? உன் விருப்பப்படி அலறு அல்லது அமைதியாய் இரு. இருள்சூழ்ந்துள்ளது  இரவு இங்கே நாம் இருப்பதைப் பார்த்து பெரும் ஆச்சரியம் கொள்ள தாமதமாக நட்சத்திரங்கள் வரலாம் அங்கே.

பனி – சார்லஸ் சிமிக்

  யாரொருவரையும் எழுப்பிவிடக்கூடாதென்ற நிச்சயத்துடன் ஒவ்வொரு செதில் மீதும் மென்மையாக  அழுந்தி விழும் பனியைவிட வேறெதுவும் இத்தனை அமைதியாக இருக்க இயலாது.

காலையில் முதல் வேலையாய் - சார்லஸ் சிமிக்

காலையின் முதல் வேலையாய் உனது புழக்கடையில் கிசுகிசுத்துக் கொண்டிருக்கும் பறவைகளை நீ ஒட்டுக்கேட்கிறாய். உன்னைப் பற்றி அவை என்ன சொல்கின்றனவென்று தெரிந்துகொள்ளும் ஆசையுடன்.

ஒரு பகல், ஒரு இரவு அல்ல. நித்தியம் காத்திருக்கிறது யவனிகா

  யவனிகா ஸ்ரீ ராமின் கவிதைகளைப் பற்றித் தொடர்ந்து பேசி , எழுதி வருபவன் என்ற வகையில் , அவனது கவிதைகள் பற்றி சிந்திக்க எண்ணும்போதெல்லாம் இதன் மரபு என்ன ? இதன் வார்படம் என்ன என்ற கேள்வி வருவது பிரதானமானது . 1990- களின் துவக்கத்தில் ‘ இரவு என்பது உறங்க அல்ல ’ தொகுதியின் வழியாக அறிமுகமான யவனிகா ஸ்ரீ ராமின் கவிதைகளை , போர்ஹேயின் சிறுகதைகளைப் பற்றிச் சொல்வதைப் போன்றே ஹைப்ரிட் கவிதைகள் என்று கூறலாம் . கட்டுரையின் த்வனியிலேயே வெளிப்படும் தனித்துவமான கலப்பினக் கவிதைகள் தான் யவனிகா ஸ்ரீ ராமின் தனித்துவம் . யவனிகாவுக்கு முன்னால் தமிழ் புதுக்கவிதையின் முன்னோடியான க . நா . சு . இந்தக் கட்டுரைத் தன்மை கொண்ட கவிதைகளை முயற்சி செய்து பார்த்திருக்கிறார் . அது சோதனை வடிவங்களே தவிர , கலையும் சிந்தனையும் சேர்ந்து வாசகனிடம் திகைப்பை ஏற்படுத்தும் அனுபவத்தைத் தரவல்லவை அல்ல . யவனிகா ஸ்ரீ ராமின் தனித்துவமான நவீன கவிதை வெளிப்பாட்டுக்கு புதுக்கவிதையில் மரபு இருக்கிறதா என்று கேள்விக்குப் பதில் க . நா . சுவின் சோதனைகளில் நின