Skip to main content

Posts

Showing posts with the label பூமா ஈஸ்வரமூர்த்தி

பூமா ஈஸ்வரமூர்த்தியின் காலம் அகாலம்

பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதைகளை அவை வெளிவந்த காலத்துத் தொகுப்புகளை மேய்ந்த போதும், இந்தப் புதிய தொகுப்பின் கவிதைகளைக் கிட்டத்தட்ட முழுமையாகப் படித்துமுடித்தபோதும் இந்தக் கவிதைகளின் காலம் குறித்த கேள்விதான் முதலில் தோன்றியது. கவிதை அகாலத்தில் தானே எழுதப்படுகிறது என்ற எளிய பதிலைக் கொண்டு அந்தக் கேள்வியை முறிக்கப் பார்த்தேன். ஆமாம், அகாலத்தில் எழுதப்பட்டாலும் கவிதையின் பொருத்தப்பாடு என்பது காலத்துடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. கவிதையின் பொருத்தப்பாடும் பின்னணிகளும் மாறும்போது கவிதையைக் காலம் கவ்வுவதற்கு முயன்றபடி இருக்கிறது. காலம் கவ்வாத கவிதைகள் இன்றைக்கும் என்றைக்குமானதாக எப்போதும் பொருத்தப்பாடுடையதாக அகாலத்தின் பொலிவேறி சோபை தழும்ப இருக்கின்றன. ஒவ்வொரு கவிஞனும் தனது காலத்தின் மொழியை எடுத்துக் கொண்டு, தனது தனிச்சாயல் கொண்ட அனுபவங்களைச் சேர்த்து மொழியில் சமைக்கும்போது அவனுடைய ஆற்றல், வேகம், அவனுக்குக் கிடைக்கும் அருள் எல்லாவையும் சேர்ந்து கூடுதலோ குறைவாகவோ தன் சில கவிதைகளை அகாலத்தின் பீடத்துக்குக் கொண்டுபோய் சேர்த்துவிடுகிறான். அருள் என்பதை மேலிருந்து, புலப்படாததிலிருந்து அ...