Skip to main content

Posts

Showing posts from October, 2023

லட்சியம் நலிவுற்ற வேளையில்…விஷால் ராஜாவின் சிறுகதைகள்

சிறந்த சிறுகதைகளையும் சிறுகதைக் கலைஞர்களையும் கொண்ட தமிழ் மொழியில் அந்தச் சாதனை குறித்த பிரக்ஞையும் அது ஏற்படுத்திய வரம்புகளை நகர்த்திப் பார்க்கும் திடமும் அந்தத் திடம் அளித்த நிறைவான வெற்றிகளும் விஷால் ராஜாவின் ‘திருவருட்செல்வி’ சிறுகதைகள். சிறுகதையோ, கவிதையோ, நாவலோ தமிழில் வந்து சேர்ந்திருக்கும் இடம், அது கடந்த சாதனைகள், அது உடைத்த வரம்புகள் பற்றிய பிரக்ஞை இல்லாமலேயே வெறும் தொழில்நுட்பமாக,வெறும் அலங்காரமாக, வெறும் பகட்டாக, வெறும் கலையாக, படைப்புகள் வார்த்தெடுக்கப்படுகின்றன.  தங்கள் வடிவத்தில் குறிப்பிடத்தகுந்த சாதனைகளைச் செய்த மூத்த எழுத்துக் கலைஞர்களே, தங்கள் சாதனைகளே நகைக்கும்படியாக, உள்ளடக்கத்திலும் பார்வையிலும், நவீன தமிழ் இலக்கியம் வெகுகாலத்துக்கு முன்னர் கடந்த அரதப்பழசான இடங்களை நோக்கி வேகமாகச் செல்கின்றன. இன்றைய சிறுபத்திரிகை மொழியில் மறுபடைப்பு செய்யப்பட்ட பல இளம்படைப்பாளிகளின் கதைகளுக்குள் பழைய விகடன், மாலைமதி, அமுதசுரபி இதழ்களில் வந்த கதைகள் ஒளிந்திருக்கின்றன. அந்தக் கதைகளை நியாயப்படுத்துவதற்கு நமக்கு அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவ விமர்சனக் கருவிகளும் உதவிகரமா

‘நினைவுப் பாதையில் மஞ்சள் பூனை’ வீடியோ

இடது ஓரத்தில் அமர்ந்திருப்பது தி. ஜா. பாண்டியராஜன் கோட்ஸ்டாண்ட் கவிதைகள் தொகுப்பின் வழியாக நகுலன் என்ற மொழியாளுமை எனக்கு அறிமுகமாகியிருந்த காலகட்டத்தில், திருநெல்வேலியில் வேலை எதுவும் இல்லாமல் படிப்பு, நண்பர்களைப் பார்பது என்று இருந்தபோது, பர்வதசிங்கிராஜா தெருவில் அப்போது பெற்றோருடன் வசித்துவந்த காஞ்சனை சீனிவாசன் வழியாகத்தான் கேளிக்கையைத் தாண்டிய வேற்றுமொழித் திரைப்படங்கள் தொடர்பிலான பரிச்சயமும், திரைப்பட இசை அல்லாத இசை வடிவங்களும், புகைப்படக் கலையும் அறிமுகமானது. ஆர் ஆர் சீனிவாசன் என்று தற்போது அறியப்படும் காஞ்சனை சீனிவாசனைப் பார்க்க வெவ்வேறு ஊர்களிலிருந்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் சந்திக்க வருவார்கள். அப்படியாக 1996-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பாண்டியராஜன் தமிழ் சினிமாவில் வேலைசெய்த பரிச்சயத்துடன் எங்களுக்குத் திருநெல்வேலியில் அறிமுகமானார். அன்றோ அதற்கு முந்தினதினமோ திருநெல்வேலி அருணகிரி திரையரங்கில் ரிலீசாகியிருந்த ‘காதல் தேசம்’ திரைப்படத்தை செகண்ட் ஷோ போய்ப் பார்த்தோம். நகுலனின் அழியாத மொழி உருவத்துக்கு இணையாக அவரது எழுத்துகள் உருவாக்கும் அனுபவத்தையொத்த கருப்பு – வெள்ளைப் புகைப்படங்கள

விளையனூர் ராமச்சந்திரன் - நியூரான்களால் நீங்கள் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள்

‘ எல்லாமும் எல்லாவற்றுடனும் தொடர்பில் உள்ளது ’. மூளை நரம்பியலாளர் , நரம்புசார் தத்துவவியலாளர் , நரம்புசார் அழகியலாளர் , கலை விமர்சகர் என்று பல பரிணாமங்கள் கொண்டவரும் நோபல் பரிசு பெறுவதற்கான வாய்ப்புள்ள இந்தியர்களில் ஒருவருமான விளையனூர் எஸ் . ராமச்சந்திரனின் ‘ தி டெல் டேல் ப்ரெய்ன் ’ புத்தகத்தைப் படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட மனப்பதிவு இது ( இந்தப் புத்தகம் தமிழில் ‘ வழிகூறும் மூளை ’ என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது ). ஜனவரி புத்தகக் கண்காட்சியில் தற்செயலாக ஒரு புத்தகக் கடைக்கு முன் விளையனூர் எஸ் . ராமச்சந்திரனைப் பார்த்தபோது அது மேலும் உறுதிப்பட்டது . பரிணாமவியல் அறிஞரும் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளருமான ரிச்சர்ட் டாக்கின்ஸ் இவரை , ‘ நரம்பியலின் மார்க்கோ போலோ ’ என்று குறிப்பிட்டுள்ளார் . சென்னை ஸ்டான்லி கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தவர் ; கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தை நரம்பியல் , உளவியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் விளையனூர் சுப்ரமணியன் ராமச்சந்திரன் அவருடன் மரு