Skip to main content

Posts

Showing posts from May, 2020

போர்ஹெஸ் என்னும் முடிவற்ற புத்தகம்

தமிழ் நவீன இலக்கிய வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒருவர் ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ். தன் வாழ்க்கையில் ஒரு நாவல்கூட எழுதியிராத போர்ஹெஸ், லத்தீன் அமெரிக்க நாவலின் தந்தை என்று கருதப்படுகிறார். சிறுகதைகளிலேயே நாவலுக்குரிய சம்பவங்களையும் சாத்தியங்களையும் கையாளக்கூடிய போர்ஹெஸ், நாவலின் அனுபவப் பிரம்மாண்டத்தையும் அதன் முடிவின்மையையும் உணரவைப்பதில் வல்லவர். மனிதர்கள் தம் எண்ணங்கள் வழியாகவும், கருத்துருவங்கள் வழியாகவும், கனவுகள் வழியாகவும் வாழும் பாகுபாடற்ற தனிப் பிரபஞ்சங்களை போர்ஹெஸின் புனைவுகளில் பார்க்கலாம். நன்மை, தீமை, மகிழ்ச்சி, துக்கம் முதலியவை அவர் உலகில் தற்செயல்களே. போர்ஹெஸ் ஒன்பது வயதில் ஆஸ்கர் வைல்டின் ‘தி ஹேப்பி பிரின்ஸ்’ படைப்பை மொழிபெயர்த்தவர்; 12 வயதில் ஷேக்ஸ்பியரின் அத்தனை படைப்புகளையும் ஸ்பானிய மொழியிலும் ஆங்கில மொழியிலும் படித்துத் தேர்ந்தவர். ஆயிரக்கணக்கான நூல்கள் கொண்ட தந்தையின் வீட்டு நூலகம்தான் தன் வாழ்வின் முக்கியமான நிகழ்வு என்று போர்ஹெஸ் கூறுகிறார். அந்த நூலகத்திலுள்ள கலைக்களஞ்சியங்களையும் பிரிட்டிஷ், அமெரிக்க இலக்கியங்களையும் வாசித்து, உலகை அளந்த அனுபவம் கொண்டவர்.

சாகிப்கிரானின் தருண புத்தன்

'அரோரா' என்றால் வைகறை என்று அர்த்தம் சொல்கிறது. சூரியனின் மின்னூட்டம் பெற்ற துகள்கள் உயர் வளிமண்டலத்திலிருக்கும் அணுக்களோடு மோதுவதால் வட, தென் துருவப்பகுதிகளில் சிவப்பாகவும் பச்சையாகவும் வானில் ஏற்படுத்தும் கதிர்வீச்சு அரோரா என்று அழைக்கப்படுகிறது. இயற்கையும், அதன் நெறியும் தன்னிடமுள்ள புதிரை அதிசயத்தை, சில வேளைகளில் மாற்று விடைகளை, மனிதன் வழியாக வெளியிடுகிறது. அப்படி வெளியிடும் சிறந்த கலை ஊடகங்களில் ஒன்றாகக் கவிதை இருக்கலாமென்று சாகிப்கிரான் கவிதைகளைப் படிக்கும்போது தோன்றுகிறது. நிகழ்ச்சிகள், அனுபவங்கள், அதன் மாறுதல்களை, தனிச்சுயத்தின் கண்கள் வழி, விளக்கங்கள் வழிப் பகுக்காமல் இயற்கை, வெளி, காலத்தின் நீண்ட வெளியில் வைத்துக் காணும் பார்வை, விளையாட்டு அல்லது ஞானம் இவரது கவிதைகளில் நிகழ்கிறது. அப்படி நிகழும்போது தெரியும் விடியல் அல்லது துருவமுனை சோதியைத் தான் சாகிப்கிரான் அரோரா என்கிறாரோ? சாகிப்கிரான் கவிதையில் நிகழ்ச்சியும் அனுபவமும் தொடர்வதில்லை;  கதையாவதற்கு முன்னரே துண்டிக்கப்படுகிறது. கவிதை என்பது  சொல் ஆல் ஆனது; கவிதை என்பது வார்த்தை ஆல் ஆனது என்பதை சாகிப்கிரான் மற

டிராகனின் முணுமுணுப்பு

“நெறி எது?” என்று ஒரு துறவி ஷியான் யென்னிடம் கேட்டார். “பட்ட மரமொன்றில் டிராகன் முணுமுணுக்கிறது" என்று பதில் கிடைத்தது. துறவி அடுத்த கேள்வியைக் கேட்டார். “நெறியைப் பின்பற்றும் மனிதன் என்னவாக இருக்கிறான்?”. கபாலத்தில் உள்ள விழிக்கோளங்கள் என்று ஞானி பதிலளித்தார். “பட்ட மரத்தில் டிராகனின் முணுமுணுப்புகள் எதைத் தெரிவிக்கின்றன?” என்று அத்துறவி பின்னர் ஒரு நாள், ஷீ ஷுவாங்கிடம் கேட்டார்.  "இன்னும் மகிழ்ச்சி மிச்சமிருப்பதை" என்றார் ஷீ ஷுவாங். கபாலத்தில் இருக்கும் விழிக்கோளங்களின் நிலை பற்றி அந்தத் துறவி கேட்டார். விழிக்கோளங்கள் இன்னும் பிரக்ஞையுடன் உள்ளன என்று ஷீ ஷுவாங்கிடமிருந்து பதில் கிடைத்தது. பட்டமரத்திலிருக்கும் டிராகனின் முணுமுணுப்பு எதைத் தெரிவிக்கின்றன என்று துறவி, ஞானி ஷா ஷன்னிடமும் கேட்டார். அந்தக் கேள்விக்கு, ரத்த ஓட்டம் இன்னும் துண்டிக்கப்படவில்லை என்று பதில் கிடைத்தது. கபாலத்தில் இருக்கும் விழிக்கோளங்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்று துறவி கேட்டார். விழிக்கோளங்கள் இன்னும் உலரவில்லையென்று ஷா ஷன்னிடமிருந்து பதில் கிடைத்தது. டிராகனின் முணுமுணுப்பை யார் கேட்

வீடு என்பது இடம் மட்டும் அல்ல - ஓவியர் மருது நேர்காணல்

வீ டு திரும்புதல் எனும் நிகழ்ச்சியும், வீடு திரும்புதல் என்பதன் பொருளும் புராதன காலத்திலிருந்து எல்லாப் பண்பாடுகளிலும் மதிப்போடு பார்க்கப்படுகிறது. போர்கள், வணிக யாத்திரைகள், ஆன்மிகப் பயணங்கள் என எல்லாவற்றிலும் வீடு வந்து சேருதல் என்பது முழுமையாகவும் பூர்த்தியாகவும் பார்க்கப்படுகிறது. நவீன இந்தியாவின் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு காலாட்படையினராகச் செயல்பட்டுவரும் அந்தப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நமது கார்ப்பரேட் இந்தியா குறைந்தபட்சக் கூலியை இதுவரை உத்திரவாதம் செய்யவில்லை. ஆனால் கரோனாவை முன்னிட்டு அவசர அவசரமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்பில் குறைந்தபட்ச ஆசுவாசத்துடன் ஊர் திரும்பும் கௌரவத்தைக்கூட அவர்களுக்கு அளிக்கத் தவறிவிட்டோம். ஊரடங்கு தொடங்கியதிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வீடு திரும்புவதற்காகப் படும் அல்லல்களைப் பார்த்துப் பார்த்து எதிர்வினையாக ஓவியர் மருது தனது ஸ்கெட்ச் புத்தகத்தில் படங்களை வரைந்துகொண்டிருக்கிறார். ‘எனது கையறு நிலையில் இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?’ என்று கண்ணீரோடு தனது சித்திரங்களைப் பகிர்கிறார். அந்தச் சித்திரங்கள் குறித்து

வினோரா உணர்ந்த ஈரம்

பதினைந்து வயதான போது, வினோரா விடுதியில் தங்கிப் படிப்பதற்காக அனுப்பப்பட்டார். அதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான், அவருக்கும் அவரது சகாக்களுக்கும் பெண் அங்கம் அங்கமாகப் பிரிந்து தெரியத் தொடங்கியிருந்தாள். பெண்ணின் பாலுறுப்புகளைக் குறிக்கும் கெட்ட வார்த்தைகளை அவர்கள் மிட்டாயைப் போல வாயில் சுவைக்கத் தொடங்கியிருந்தனர். அதற்கு முன்பு பெண் என்பவள் வினோராவுக்கு, அவள் முகத்தை மையமாகக் கொண்டவளாகத் தெரிந்தவள். வினோராவுக்குப் பெண் அங்கம் அங்கமாகப் பிரியத் தொடங்கிய போது, அவளது தொப்புளும் முலைகளும் தான் முதலில் அவரை ஈர்த்துப் பாடாய்ப்படுத்தத் தொடங்கியிருந்தது. வினோராவை விடுதிக்கு அனுப்ப வீட்டில் ஆயத்தம் தொடங்கிய போது, மார்பின் பிளவு கோடாகத் தெரியும் நடிகையின் புகைப்படம் வெளிவந்த வெளிவந்த பத்திரிகை ஒன்றைப் பார்த்தார். வினோராவைக் கவர்ந்த அவளது புகைப்படம் வெளிவந்த பக்கத்தை மட்டும் கிழித்து ரகசியமாக வைத்துக் கொண்டார். தன் ரகசிய மூலையில் இருக்கும் முதல் காமரூபத்துடன் கற்பனையில் குடித்தனத்தைத் தொடங்கினார். விடுதிக்கு வந்தபின்னர், தனது அன்னைக்கு தினசரி அழுதுகொண்டே கண்ணீர், காகிதத்தில் வழிய வழிய

தெரிந்த கடல் தெரியாத கடல்

வினோராவுக்கு நினைவில் தெரிந்த கடல் எல்லாம், அம்மாவுடனோ அப்பாவுடனோ பெரியம்மாவுடனோ அண்ணனுடனோ தொடர்புடையது. கடல் அலைகளின் சத்தத்துடன் தங்கைக்கு மொட்டை போட்ட கடலின் ஞாபகம் உண்டு. முழுக்க மனிதத் தலைகளே தெரியும் பண்டிகையோடு தொடர்புடைய கடலை அவனுக்குத் தெரியும். கடலோர விடுதியில் ஒரு விழாவுக்குப் போயிருந்த போது, எல்லாரும் மதிய உறக்கத்தில் இருக்க, அறையிலிருந்து நழுவி, மாமா மகனுடன் கடல்குச்சிகளும் சிப்பிகளும் பொறுக்கிவிட்டு கால்களில் உப்புநீர் எரியத் திரும்பிவந்த கடலைத் தெரியும். இப்படியாகத் தெரிந்த கடல்களின் நினைவுடன் வினோரா, தனது 17 வயதில், வீடு அவனைத் துரத்தத் தொடங்கியிருந்த போது, ஒருநாள், கடற்பகுதி இருக்கும் ஊருக்குப் பேருந்தேறினான். அந்தக் கடற்பகுதி ஊரின் பெயர் மட்டும் தெரியும். போய்த் திரும்புவதற்கான கட்டணம் அவனிடம் இருந்ததும் இன்னொரு காரணம். பேருந்துக்கும் அதுதான் கடைசி நிறுத்தம். வினோரா கடலைச் சந்திக்க விரைந்தோடினான். கடல் எங்கிருக்கிறது என்பதைக் கேட்க வேண்டியதில்லை. ஒரு முட்டையில் இருப்பதைப் போலக் குழிந்து இருந்த கடலைப் பார்த்தவுடன் அதிர்ச்சி. இறங்கி கடலை நோக்கி நடக்கத் தொடங்க

ஆர்தர் ரைம்போவின் நரகம்

பதினாறு வயதுப் பருவத்தில் கவிதைகளில் மேதமை துலங்க எழுதத் தொடங்கியவன்; 21 வயதில் கவிதை எழுதுவதையும் துறந்தவன். கண்டங்கள் தாண்டிய பயணம், உறவுகள், வர்த்தகம் என்று தான் ஈடுபட்ட எல்லாவற்றிலும் சாகசத்தை நாடி, 37 வயதில் எரிநட்சத்திரம்போல இந்த உலகத்தை நீத்த அந்த பிரெஞ்சுக் கவிஞனின் பெயர் ஆர்தர் ரைம்போ. நரக வாழ்க்கையை நோக்கிய ஏக்கம் என்று சொல்லக்கூடிய படைப்பு ரைம்போவின் வசன கவிதை நூலான ‘நரகத்தில் ஒரு பருவகாலம்’. உறவுகள், அன்றாட அனுபவங்களில் மனம் உணரும் வலி, வன்முறை, கசப்பு, துயரம் ஆகியவற்றை வெகுளித்தனம், களங்கமின்மையோடு வெளிப்படையாகச் சொல்லும் படைப்பு இது. சமூக நெறிகளும் சமய நெறிகளும் இருளென்று கருதும், தீமை என்று மூடி வைத்திருக்கும் உணர்ச்சிகளை அதன் மூர்க்கத்தோடு வெளிப்படுத்தியிருக்கும் படைப்பு இது. வலி, வேதனை, ஏக்கங்கள் நொதித்த மதுக்குடுவைகள்தான் ரைம்போவின் படைப்புகள். மனிதனின் இயல்புணர்ச்சிகள் அத்தனையும் திறக்கப்படும் இடமாக அவரது உலகம் உள்ளது. அதற்கு நரகம் என்று இங்கே பெயரிடப்பட்டுள்ளது. நேசம், சகோதரத்துவம், மனிதாபிமானம், மன்னிக்கும் இயல்பு, சேவை ஆகியவற்றால் கட்டப்பட்ட ஒரு நாகரிகத்

எனக்கு சொல்

தேவாலயத்து வளாகத்துக்குள் பிறந்து அதற்குள்ளேயே சுற்றிவரும் குட்டி நாய் அது வேறு விசேஷமொன்றும் அதற்கு  இல்லை தாய்ப்பால் இன்னும் கிடைப்பதால் கொளுகொளுப்பு கோலிக்குண்டு கண்களில் சுடரும் உயிர்ப்பு மடிந்த ஒரு காது கூடுதல் வசீகரம். நாக்கை வெளியே நீட்டியபடி சுற்றிச் சுற்றி வருகிறது அதன் நாக்கு அதன் வாலை விட மற்ற நாய்களின் நாக்கை விட பெரியது இல்லை ஆனால் குட்டிநாயின் கம்பீரம் குறும்பு அதன் வெளியே தொங்கும் நாக்கு என்று சொல்லமுடியும். நாள்கள் சென்றன பிஸ்கெட் நிறம் கொண்ட மிருதுவான கம்பளியொத்த அதன் சருமத்தில் தூசி படரத் தொடங்கிவிட்டது உண்ணிகளும் ஏறியிருக்க வேண்டும். சாயங்காலச் சூரியனின் கிரணங்கள் அந்த மைதானத்தில் அனைத்தையும் பொன்னாக்கும் போது ஏதோ ஒரு தருணத்தில் இந்தக் குட்டிநாய் துள்ளும் குதிரையாகிறது வளாகத்துக்குள்ளும் வாயிலுக்கும் பெரும் கடமையை முடிக்கும் போர்வீரனாய் அரக்கப் பரக்கப் பாய்ந்து ஓடிவிட்டுத் திரும்பும் இரண்டு மடங்கு உயரமுள்ள பெரிய நாய்களையும் சேனாதிபதி போல அப்போது மேய்த்து நிர்வகிக்கும் அதிகாரம் அதனிடம் துலங்கும் அப்போது அதன் வெளித்தொங்கும

வினோராவின் நறுமண பீரோ

தினசரி மரணங்கள் நேரும் ஊர் அது. பற்றாக்குறையும் அஞ்ஞானமும் ஜனங்களாக வாழும் தெருவில் துக்கமும் சலிப்பும் நித்தியமாக வசித்த வீடு வினோராவுடையது. அந்த வீட்டின் கடைசியில் படுக்கையறையின் மூலையில் ஒரு பீரோ இருந்தது. வினோராவின் அப்பா அந்த பீரோவைத் திறக்கும்போதெல்லாம் சிறுவன் வினோரா எட்டிப் பார்ப்பான். அவனுடைய அப்பா அவனை அறையிலிருந்து வெளியே விரட்டி விடுவார். பீரோவிலிருந்து வரும் நறுமணத்தை மட்டும் வினோரா குழந்தையாக உணர்ந்திருக்கிறார். பெரியவராகி விட்ட வினோராவும் படுக்கையறைக்குள் புகுந்து பீரோவைத் திறக்கும் போது குழந்தைகளை அனுமதிப்பதில்லை. அப்போது வரும் உலகில் இல்லாத குணம் கொண்ட கணநேர நறுமணத்தை மட்டும் வீட்டார் அறிவார்கள். வினோரா, பீரோவைத் திறப்பார். உள் அறைச் சாவியை மேல்தட்டிலிருந்து எடுத்துச் சிறிய கதவைத் திறப்பார். மென்பட்டில் செய்யப்பட்ட பூக்கள் வரையப்பட்ட தேனிலவு உள்ளாடை, வேதாந்தத்தின் அத்தனை ரகசியமும் குளிகையாக்கப்பட்டு எழுதப்பட்ட ஒரு தாள் இருக்கும் சிறு பேழை, ரத்தினக் கற்கள் பதுக்கப்பட்ட குழந்தைகளின் கொலுசு ஜோடி, ஒரு சொட்டு பருகினால் போதும், இறவாமையைத் தரும் ஒரு குட்டி நீர்ச்சுனை எ

கவிதை என்பது - ஆக்டோவியா பாஸ்

கவிதை என்பது அறிவு, விமோசனம், ஆற்றல், கைவிடுதல், உலகத்தை மாற்றுவதற்கான வலுவுள்ள நடவடிக்கை, தன் இயல்பில் கவித்துவச் செயல்பாடு புரட்சிகரமானது, கவிதை என்பது ஒரு ஆன்மிகப் பயிற்சி, அக விடுதலைக்கான வழி. இந்த உலகை, கவிதை வெளிப்படுத்துகிறது, இன்னொரு உலகத்தை உருவாக்குகிறது. கவிதை என்பது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான ரொட்டி, சபிக்கப்பட்ட உணவு. கவிதை தனிமைப்படுத்துவது, அது ஒன்றிணைப்பது. கவிதை என்பது பயணத்துக்கான அழைப்பு, தாயகத்துக்கான திரும்புதல். கவிதை என்பது தூண்டுதல், சுவாசித்தல், தசைப் பயிற்சி. கவிதை என்பது பாழுக்குச் செய்யும் பிரார்த்தனை, கவிதை என்பது இல்லாததுடன் நடத்தும் உரையாடல். கவிதை என்பது சோர்வு, வேதனை மற்றும் விரக்தியால் போஷிக்கப்படுவது. கவிதை என்பது பிரார்த்தனை, கவிதை என்பது இறைஞ்சல், கவிதை என்பது புலப்பாடு, கவிதை என்பது தோன்றுதல். கவிதை என்பது மாந்திரீகம், கவிதை என்பது மந்திரித்தல், கவிதை என்பது மாயம். கவிதை என்பது உன்னதமாக்கல், கவிதை என்பது இழப்பீடு, கவிதை என்பது நனவிலியைக் கெட்டிப்படுத்துதல். இனங்கள், தேசங்கள், வர்க்கங்களின் வரலாற்று வெளிப்பாடு. கவிதை என்பது வரலாறை ம

சிறுவனின் சர்க்கஸ்

மாடி வீட்டுத் திண்ணையில் அம்மா லட்சுமி அக்காவை கால்களுக்கிடையே உட்காரவைத்து அவள் கூந்தலைப் பரப்பிச் சிக்கெடுத்து பேன்பார்த்துக் கொண்டிருந்தாள் பின்கட்டிலிருந்த திறந்தவெளியில் கைப்பிடிச்சுவரின் அருகே நின்று அவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். கோடையின் இறுதியில் வரும் மேல்காற்று தென்காசியில் தொடங்கிய நாட்கள் அவை இருபது அடி கீழே கீழ்வீட்டின் வானவெளி முற்றத்தில் ஆற்றுமணலை ஈரத்தோடு குவித்திருந்தார்கள் ராணி மேரி வீடென்று அதற்குப் பெயர் அந்த வீட்டின் நடுவேயிருந்த வானவெளி முற்றத்தில் முக்கோணமாய் குவிந்திருந்த மணல் அவனைக் கூப்பிட்டது யாரும் அங்கே இல்லை முதல்முறையாக கைப்பிடிச்சுவரில் ஏறிக் குதித்தான் கால்கள் நீண்டன காரையில் பூஞ்சைபடர்ந்து கருப்பேறியிருந்த புராதனக் கட்டிடச் சுவர்கள் எல்லாம் துல்லியமாக அவனை விழுங்கத் தொடங்க வயிறு குழைய மணலில் செருகி விழுந்தான் யாருமே பார்க்கவில்லை மணலை உதறி எழுந்தான் ராணி மேரி வீட்டிலிருந்த குகையிருட்டில் சுவரில் மாட்டியிருந்த இயேசு ஜீரோ வாட்ஸ் ஒளியில் மின்னிக்கொண்டிருந்தார் கல் முற்றத்தில் இறங்கி மாடிப்படியேறி வீட்டுக்

நிலவற்ற ஓர் இரவு

கோ வுன் நிலவு உதிக்காத வான் இருப்பினும் உனக்கும் எனக்கும் இடையில் இரவெல்லாம் சுடர்ந்து ஒளிர்கிறது இருநூறு மைல்கள் நாளை இறந்துபோகும் நாய்க்கு இறக்கப் போவது தெரியாது. மூர்க்கமாகக் குரைத்துக் கொண்டிருக்கிறது. 

ஆக்டோவியா பாஸ் கவிதை

காற்றும் நீரும் பாறையும் நீர் பாறையை உள்ளீடற்றதாக்கியது காற்று நீரைத் தூவியது பாறை, காற்றை நிறுத்தியது. நீரும் காற்றும் பாறையும் காற்று, பாறையைச் செதுக்கியது ஒரு குவளை நீர், பாறை நீர் வழிந்து செல்கிறது, காற்றும் பாறையும் காற்றும் நீரும். காற்று தனது திருப்பங்களில் பாடுகிறது நீர் ஓடிச் செல்லும்போது முணுமுணுக்கிறது நகராத கல் அமைதிகாக்கிறது காற்றும் நீரும் பாறையும். ஒன்று, மற்றதுதான் என்பதோடு இரண்டுமே இல்லாதது: அவற்றின் காலிப் பெயர்களினூடாக அவை கடந்து மறைகின்றன, நீரும் பாறையும் காற்றும். 

தொலைத்த அவகாசம் என்னும் கருவூலம்

நாம் வெகுகாலத்துக்குப் பிறகு வீடுகளுக்குள் நீண்ட நாட்கள் வெளியே செல்ல முடியாமல் அடைகாக்கிறோம். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பெரும்பாலான மனிதர்கள் தொலைத்த அவகாசத்தின் கருவூலம் நம் முன்னர் எல்லையற்று இப்போது திறந்து கிடக்கிறது. துரத்தும் நோய் பயம், பொருளாதார நிச்சயமின்மை, மனித துயரங்களுக்கு மத்தியில் இந்த அவகாசம் நம்மை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சற்றுக் கூர்ந்து பார்த்தால் இங்கே நமக்குக் கற்பதற்கான, படிப்பினைக்கான, சுய பரிசீலனைக்கான இடம் இருக்கிறது. ஏனெனில் ஒரு தனிமனிதனும் சரி, ஒரு சமூகமும் சரி ஒரு நெருக்கடியில், ஒரு பேரிடரில், ஒரு துயரத்தில் தான் தன்னைத் திரும்பிப் பார்த்து ஆழமான பரிசீலனையைச் செய்கிறது. எளிமையானதும் சௌகரியமானதுமான இறந்த காலத்தைக் கொண்டவன் ஒரு தனிமனிதனாக இருந்தாலும் சரி, ஒரு சமூகமாக இருந்தாலும் சரி, வலுநிறைந்தது அல்ல. துயரங்கள், தழும்புகளிலிலிருந்தே சமூகம், தனிமனிதரின் தசைகளும் எலும்புகளும் வலுவடைகின்றன. சக மனிதர், சக சமூகங்களைப் பற்றிய புரிதலை மேம்படுத்தி நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு இலக்கியங்கள் உதவுகின்றன. வாழ்க்கை நமக்கு முன்னால் வீசும் இடர்களையும்

காத்திருக்க வேண்டும்

நிலத்தின் மீது உலோகம் அறையும் சத்தம் கேட்கும் இடத்தில் அங்கே ஏற்கெனவே இருந்த ஒரு வாழ்வு மாறுகிறது. அவன் வருகைதராத இடத்தில் அமைதியாக தெள்ளியதாக ஓடிக்கொண்டிருக்கும் ஓடையில் மான் இறங்கித் தண்ணீர் பருகுகிறது. சற்றுத் தள்ளி இருக்கும் குன்றில் நிற்கும் மரத்தின் கிளையில் அமர்ந்து ஆந்தை தியானித்திருக்கிறது. மனிதன், தங்க வேட்டைக்காக பூமியின் கதையில் நடுவில் வருபவன்; நடுவிலேயே அந்த இடத்தை விட்டு நீங்கிவிடுபவனும் கூட. மீண்டும் அதே ஏகாந்தத்தில் நீரோடை தெள்ளியதாக ஓடும். ஆந்தையொன்று அந்தப் பள்ளத்தாக்கை அமைதியாகப் பார்த்து தியானத்தில் இருக்கும். இதுதான் கோயன் சகோதரர்கள் இயக்கிய The Ballad of Buster Scruggs திரைப்படத்தில் வரும் All Gold Canyon அத்தியாயம். செடியாக இருந்தபோது, பாதுகாப்புக்காக வேலியிடப்பட்ட இரும்புக்கம்பியைத் தன் உடலோடு சேர்த்துக் கொண்டு வளர்ந்திருக்கும் மரத்தை இன்றைய காலை நடையில் பார்த்தேன். The Ballad of Buster Scruggs  திரைப்படம் தான் ஞாபகத்துக்கு வந்தது. முதலில் அதைப் பார்த்தவுடன் பழக்கம் சார்ந்த மனம் திடுக்கிடலை அடைந்தது.  மரத்துக்குள் அத்துமீறி ஊடுருவித் துளைத்து நிற்கும