Skip to main content

Posts

Showing posts from March, 2020

சடலம் உண்மையை மட்டுமே பேசும்

காவல் மரணங்கள், மோதல் சாவுகள், வரதட்சணைக் கொலைகள், பாலியல் குற்ற மரணங்கள்,  பள்ளிகள் மற்றும் பணியிட மரணங்களுக்குப் பின்னால் உள்ள எத்தனையோ புதிர்களைத் தீர்க்கக்கூடிய இடம் பிரேதப் பரிசோதனை அறை. பெருநகர அரசு மருத்துவமனைகளில் நடக்கும் பிரேதப் பரிசோதனைகளே பத்தோடு பதினொன்றாக செய்யப்படும் நிலையில் கிராம மருத்துவமனைகளில் ஒரு சந்தேகத்துக்குரிய மரணம் எப்படி தீர்க்கப்படும்? ஒரு கிராமத்தில் நிகழும் மரணத்துக்குப் பின்னால் உள்ள சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளும் உரிமை இங்கே மறுக்கப்படுகிறது என்கிறார் சட்டம் சார்ந்த சிறப்பு மருத்துவர்  டிகால்.  வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்துள்ளார். தற்போது தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றியில் இணைத் தடயவயில் மருத்துவப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இதுவரை 2000 சட்டம்சார்ந்த பிரேதப் பரிசோதனைகளைச் செய்துள்ளார். குற்றவியல் வழக்குகளில் நிபுணர் சாட்சியாக பங்கேற்று பல்வேறு வழக்குகளில் தீர்வுகளை அளிப்பவராகவும் இருக்கிறார். 2 ஜி வழக்கில் சர்ச்சைக்குரிய முறையில் தற்கொலை செய்துகொண்டதாகக் கருதப

பூனைச் சித்திரங்களில் பூனையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்

ஓவியரும் ஓவியத்தைப் பற்றி எழுதும் மொழியைக் கொண்டவருமான கணபதி சுப்பிரமணியம் சுயமுயற்சியில் ஓவியம் பயின்றவர். உருவப் படங்கள், நிலக்காட்சிகள், சித்திரக்கதை, அனிமேஷன் என்று தொடங்கி மெய்சாரா ஓவியங்களில் நிலைகொண்டு தற்போது பூனைகளில் பூனைத் தன்மையை நீர்வண்ணங்களில் கீற்றி வருகிறார். ஓவியம் சார்ந்து பேசத் தொடங்கி அது வேறு வேறு புலங்களுக்கு இயல்பாகப் பயணிக்கும் உரையாடல் இவருடையது. இவர் எழுதி சமீபத்தில் வெளிவந்த ஓவியம் தேடல்கள், புரிதல்கள் ஓவிய மாணவர்களுக்கும் ஓவிய ரசனையை வளர்த்துக் கொள்ள விரும்புவபர்களுக்கும் முக்கியமானது...இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான நேர்காணலின் முழுமையான வடிவம் இது... ஓவியம், அதுசார்ந்த கல்வியை நோக்கி எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்? குழந்தைப் பருவத்தில் படித்த ‘பூந்தளிர்’, ‘அம்புலிமாமா’, ‘பாலமித்ரா’, ‘ரத்னபாலா’ புத்தகங்களிலிருந்த அற்புதமான ஓவியங்களும் ‘நியூ செஞ்சுரி’, ‘ராதுகா’ சிறுவர் கதைப் புத்தகங்களின் சின்னச் சின்ன நீர்வண்ண ஓவியங்களும் வேறொரு உலகமாக இருந்தது எனக்கு. ‘குமுதம்’, ‘விகடன்’ இதழ்களில் வந்த மாருதி, ஜெயராஜ் ஓவியங்களும் தனியான தாக்கமாக இருந்தது. அமெரிக்க

கண்டராதித்தன் மலை வீடு

எது நவீனம்; எது பழமை? இந்தக் கேள்வி தீவிரமாக ஆக்கிரமித்திருக்கும் நாட்கள் இவை. நவீனம், பழமை தொடர்பில் நான் திட்டவட்டமாகக் கொண்டிருந்த கருத்துகள் மீண்டும் குழம்பியிருக்கின்றன. இதன் அடிப்படையில் மீண்டும் எழுந்திருக்கும் கேள்விகள் அவை. சமீபத்தில் ஓவியர் கணபதி சுப்பிரமணியனிடம் ஒரு ஓவியமோ ஒரு சிற்பமோ அது நவீனம், அது பழையது என்று எப்படிக் கூறமுடியும்? மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் அம்மன் சன்னிதிக்கு அருகிலுள்ள கல்புடைப்பில் உள்ள மரமும் இலைகளும் என்னை ஒரு நவீன சிற்பம் போலவே ஈர்க்கின்றதே என்று கேட்டேன். எதுவெல்லாம் செம்மையாகவும் கண்களை மகிழ்விப்பதாகவும் இருக்கிறதோ அதுவெல்லாம் நவீனம் தான் என்றார் கணபதி சுப்பிரமணியன். எனக்கு அவரது பதில் ஒரு அமைதியைத் தந்தது. இந்தப் பின்னணியில் தான் கவிஞர் கண்டராதித்தனைப் பார்க்க விழுப்புரம் கண்டாச்சிபுரத்துக்கு நானும் சபரிநாதனும் கிளம்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், தற்செயலாக ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’ பாடலைத் தொலைக்காட்சியில் பார்த்தேன்.    அந்தப் பாடலின் தொடக்கத்தில், கடற்கரையில் நிற்கும் மெலிந்த இலைகளற்ற ஒரு மரத்தைச் சுற்றி ஆணு

யூமா வாசுகி நேர்காணல் - “சகலமும் கவித்துவமாகவே இருக்கின்றன”

லட்சியவாதத்துக்கும், மேன்மையான குணங்களுக்கும் இனி இடமில்லை என்று கருதப்படும் காலத்தில், மேன்மையான வாழ்க்கைக்கான அழைப்பையும் எத்தனங்களையும் கொண்டவை யூமா.வாசுகியின் கவிதைகள். இவர் கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் பயின்றவர். இவர் எழுதிய ரத்த உறவு நாவல் தமிழக அரசின் பரிசு பெற்றது. மலையாளம் வாயிலாக குழந்தைகள் இலக்கிய நூல்களை மொழிபெயர்த்துவருகிறார். தற்போது சுதந்திர ஓவியனின் தனியறைக் குறிப்புகள் என்ற நாவலை எழுதிவருகிறார். முகப்பேரில் அவரது வீட்டில் சந்தித்து உரையாடியபோது...2013-ம் ஆண்டு இந்து தமிழ் திசை நாளிதழுக்காக எடுக்கப்பட்ட நேர்காணல் இது.... நீங்கள் ஓவியராகவும், எழுத்தாளராகவும் ஆனதற்கான பின்னணி பற்றி கூறுங்கள்? என்னுடைய அம்மாவின் அண்ணன் நாடகக் கலைஞர். அவர் சாஸ்திரிய சங்கீத வித்வானும் கூட. பள்ளியில் ஓவிய ஆசிரியராக இருந்தார். அவர் பள்ளிக் குழந்தைகளுக்காகவும் நாடகங்கள் போடுவார். அதில் ஒரு நாடகத்தின் பெயர் பாலைவனத்து ஒளிவிளக்கு. அந்தக் காலகட்டத்துக்கு ஏற்ற புரட்சிகரத் தன்மையுடன் அந்த நாடகங்கள் இருக்கும். ஓவியம், நாடகம், இசை மூன்றும் சேர்ந்த ஆளுமையாக அவர் இருந்தார். அந்த தாக்கம் எனக்கு இ

நிலம் பூத்து மலர்ந்த நாள்

சங்கக் கவிதைகளை மிகச் சமீபத்தில்தான் ஈடுபாட்டுடன் வாசிக்கத் தொடங்கியுள்ளேன். ஒரு தமிழ்க் கவிஞனாக, தமிழனாக அந்தக் கவிதைகளின் உள்ளடக்கமும் உயிரும் சாரமும் என் வழியாகவும் கடந்துகொண்டிருப்பதை உணர்கிறேன். அந்நிலையிலிருந்து, சங்க காலக் கவிதைகளில் வரும் நிலத்தை வாழ்வை பிராணிகளை பறவைகளை ஒரு அன்றாட எதார்த்தமாக கிடைமட்டத்தில் ஒரு பாயைப் போல உரைநடை கதையில் விரிக்க முடியாது என்பதே எனது இதுவரையிலான எண்ணமாக இருந்து வந்துள்ளது. மலையாளக் கவிஞர், எழுத்தாளர் மனோஜ் குரூர் எழுதி, கே. வி. ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவலை வாசித்த போது அது ஒரு கற்பிதம் என்று புரிந்தது. வள்ளல் வேள்பாரி, மூவேந்தர்கள் சதியால் கொல்லப்படும் சம்பவத்தை மையமாகக் கொண்டு ஒரு சுவாரசியமான திரில்லர் நாவல் வடிவத்தை மனோஜ் குரூர் தேர்ந்துள்ளார் எனினும் அது நாவலின் மேல் ஓடு மட்டுமே. ஆயிரம் ஆண்டுகளாக மாறியும் மாறாமலும் இருக்கும் தமிழ் மனநிலப் பரப்பின் வரைகோடுகளை நோக்கி மனோஜ் குரூர் நெருங்கியிருப்பது தான் நாவலின் ஆச்சரியம். பாணர் சிறுமியான சீரை, தங்கியிருக்கும் இடத்திலிருந்து காணாமல் போய் வெள்ளை ஆம்பல்கள் பூத்தி

தாங்க முடியாத சுமைகொண்ட மெல்லிறகு

( பள்ளிப்பருவத்திலிருந்து எனது முதல் தொகுதி வருவதற்கு முந்தைய காலம் வரையில் என்னைப் பாதித்த கவிதைகளை ,  அது பாதித்திருந்த போது இருந்த உணர்வுகளைச் சென்று பார்ப்பதுதான்  ' நான் பிறந்த க - வி - தை '  தொடரின் நோக்கம் . அத்துடன் கவிதை சார்ந்து இப்போதிருக்கும் எனது எண்ணங்களையும் ஒவ்வொரு கட்டுரையிலும் பகிர்ந்துகொள்ளவும் செய்வேன் .  குறுந்தொகையிலிருந்து இத்தொடரைத் தொடங்குகிறேன் . அம்ருதா மாத இதழில் மாதம்தோறும் வெளியாகும் . ) ஒரு அனுபவம் ஒரு உணர்வு சொல்லப்படும் வாய்ப்பை மொழியில் பெறும்போது இரட்டைத் தன்மையை அடைந்துவிடுகிறது. நிறைவு என்று சொல்லிவிடும்போதே நிறைவின்மையும் மகிழ்ச்சி என்று சொல்லும்போதே துக்கமும் மொழியில் எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. பாற்கடலில் அமிர்தம் கடையும்போது வினையின் கனம் சேர்ந்து நஞ்சு இப்படித்தான் சேர்கிறது. மொழிதல் என்னும் அனுபவத்தில் அமிர்தத்தோடு நஞ்சு சேர்வது தவிர்க்க முடியாமல் தான் உள்ளது. மொழி வெளிப்பாடு அடையும் இரட்டை நிலையை அதிகபட்சமாக கவிதை உணர்கிறது. இந்த இரட்டை நிலையை மொழி வழியாகக் கடக்கவும் கவிதையும் கவிஞனும் தொடர்ந்து முயன்று மொழிக்குச் சிறிது வ

உடம்புதான் தீராத ஈர்ப்பாக உள்ளது

இலக்கியம் உள்ளிட்ட அனைத்து கலைவெளிப்பாடுகள் மட்டுமல்ல; எல்லா செயல்பாடுகளுக்கும் உடம்புக்கும் இடையிலான தொடர்பை, இன்றியமையாத இணைப்பை, அது குறித்த ஓர்மையை என்னிடம் உருவாக்கியவர் சந்திரலேகா. எந்தக் காரணத்துக்காக அவருடன் அறிமுகமானேன் என்று எனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லை.  2004-ம் ஆண்டு மத்தியில் ஆரம்பித்து அவரது மரணம் வரை, பெசண்ட் நகரில் அவரது வீட்டில் நடந்த சில சந்திப்புகளும் குறைந்த அவகாசத்தில் நடந்த உரையாடல்களும் அதை எனக்கு உணர்த்தின. அவர் வீடும் தோட்டமும் அதில் அவர் அமைத்திருந்த அரங்கும் இன்றும் என்னை ஈர்ப்பவையாக உள்ளன. அப்போது எனக்கு வயது 30. 2006-ம் ஆண்டு இறுதியில் அவர் காலமானார்.  உடம்பு தொடர்பான கவனம், உடம்பின் ஆற்றல், ஆரோக்கியத்துக்கும் மனத்தின் ஆரோக்கியம், ஆற்றலுக்கும் உள்ள உறவு அப்போதுதான் எனக்குத் தெரியத் தொடங்கியது. உடம்பு தான் வெளியாக இயற்கையாக பிரபஞ்சமாக விரிந்திருக்கிறது என்பதை அறியும் கல்வியை என்னிடம் தொடங்கி வைத்தவர் சந்திரலேகா. கால்பந்தாட்டத்தைப் பார்ப்பதில் மிகவும் ஈடுபாடுடையவர் சந்திரலேகா. சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சில குறிப்புகள் நூலுக்கு அவர் வடிவமைத்த அட்