Skip to main content

Posts

Showing posts from 2014

ஞானக்கூத்தன் நேர்காணல் இடிபாடுகளுக்கிடையே எனது கவிதை இருக்கிறது

எள்ளல் மற்றும் சிரிப்பை தமிழ் புதுக்கவிதைக்குத் தந்தவர் அரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் ஞானக்கூத்தன். புதுக்கவிதை வடிவத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடனும், உற்சாகத்துடனும் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவருபவர். விஷ்ணுபுரம் விருது   அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் இது.. தி இந்து கலை இலக்கியம் இணைப்பிதழில் வெளியான நேர்காணலின் எடிட் செய்யப்படாத வடிவம் இது.. உங்களது சமீபத்திய பென்சில் படங்கள் கவிதை நூலில் உங்களது குழந்தைப்பருவம் மற்றும் இளம்பிராயத்து சித்திரங்கள் நிறைய இடம்பெறுகின்றன.. ஆறு, கடல், மரங்கள், விலங்குகள், கோவில்கள் எல்லாமே ஒரு குழந்தைக்கு முதல் முறையாக அறிமுகமாகிறது. அவைதான் மனதில் ஆழமாகப் பதிகிறது. அதிலிருந்து தான் உலகத்தை ஒரு குழந்தை புரிந்துகொள்கிறது. வளர வளர இன்னொரு உலகம் அந்தக் குழந்தைக்கு அறிமுகமாகிறது. ஏற்கனவே மனதில் இருக்கும் உலகத்தை ஒப்பிட்டுப் பார்த்து அது இன்னொரு உலகத்தைப் புரிந்துகொள்கிறது. வாலிப வயதில்  எதிர்பாலினம்,குடும்பம், அதைக் கட்டுப்படுத்தற சமூகம், சமூகத்தைக் கட்டுப்படுத்தற நாடு,மொழி எல்லாம் பற்றிய அறிவு ஏற

மிச்சம் உள்ள ஆவி

 ஷங்கர்ராமசுப்ரமணியன்  திருநெல்வேலி   டவுணில்   சந்திப்பிள்ளையார் முக்கின்   இடதுபுறம்  உள்ளடங்கி இருக்கும்   கல்லூர் பிள்ளைக் கடையில்   பின்னரவில்   பரிமாறப்படும்   இட்லியை விள்ளும்போது   ஆவி இப்போதும் வெளியேறுகிறது   இட்லியில் ஆவியைப் பார்த்து   ரொம்ப நாளாகி விட்டது   ஆவிகள் என்று சொன்னால்   அர்த்தம் விபரீதமாகி விடும்   இருந்தும்   திருநெல்வேலியின்   ஆவி   இட்லியில் மிச்சம் இருப்பதாகச்   சொல்லிக் கொள்ளலாம். 

அந்த மனிதர்கள்

ஷங்கர்ராமசுப்ரமணியன் ஏன் அவர்கள் ரயிலடிகளில் பொதுக்கழிப்பறைகளில் நடைபாதைகளில் சாலைகளில் சுவர் மூலைகளில் புகையிலை எச்சிலைத் துப்பித் துப்பி இந்த அழகிய மாநகரத்தை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் உங்கள் ஆசுவாசமான பயணத்தின் நடுவில் சிக்னல் முனையில் காத்திருக்கும் போது ஏன் அவர்களின் குழந்தைகள் கிடைக்கும் சிறு அவகாசத்தில் அல்பப் பொருட்களின் பயன்பாட்டை உங்களுக்குக் காட்டி விற்று யாசகம் கேட்டு உங்கள் மென்மையான மனதைப் பிசைந்தெடுக்கிறார்கள் அவர்கள் ஏன் சாலையோரத்தில் உறங்கும்போது காவல் நிலையத்தில் மோதல்சாவுகளில் செத்துத் தொலைக்கிறார்கள்

நான் பார்க்க வேண்டும்

 ஷங்கர்ராமசுப்ரமணியன்   கழிமுகத்தில் தேங்கிநிற்கும் கருப்பு நீர் ஆடியின் மேல் பறக்கும் பறவையின் பிம்பத்தை அது கரையைக் கடக்குமுன் நான் பார்க்க வேண்டும்

இப்போதெல்லாம்

 ஷங்கர்ராமசுப்ரமணியன்   குற்றம் என்னும் காகத்தை காமத்தைத் தன் பெயராகச் சூடிய புறாவை வேங்கையை மீனை இப்போதெல்லாம் காணவே முடியவில்லை

வேறு புறாக்கள்

 ஷங்கர்ராமசுப்ரமணியன் பறக்கும் ரயில் நிலையத்தின் தண்டவாள இடுக்கில் நிற்கிறது ஒரு புறா ரயில் கடந்துசென்ற பிறகு மெதுவாக  தண்டவாளக் கட்டைகளிடையே நடக்கிறது முதுமையோ நோயோ தெரியவில்லை இனி அதனால் பறக்க இயலாது ரயில் தண்டவாளத்தின் கருத்த மசித்தடங்கள் வழியாக குறைவான வெளிச்சத்தில் மெதுவாக நடக்கிறது கழுத்தில் கண்களில் அலகில் சிறகில் எந்தத் துடிப்பும் இல்லை இன்னும் சில தப்படிகள் தூரத்தில் ஜன்னல்கள் நிர்மலமான நீலவானம் கடல் வெளிச்சம் எல்லாம் இருக்கிறது அவை இன்று வேறு புறாக்களால் நிரப்பப்பட்டு விட்டன இந்தப் புறா தன் வாழ்வில் நோயைத் தவிர வேறு எந்த ஒரு குற்றமும் இழைக்கவில்லை ஆனாலும் அது தன் வாழ்க்கையின் மகத்தான குற்றமூலையில் நிற்கிறது

திருட்டுக் காக்கை

  ஷங்கர்ராமசுப்ரமணியன் அந்தரத்தின் படிக்கட்டில் ஏறி என் வீட்டு சமையலறை ஜன்னலுக்கு சோறுண்ண வந்தது ஒரு காகம் அது என்னைப் போல ஒரு திருட்டுக் காகம்

எறும்புகள்

பாகிஸ்தானியக் கவிஞர் சைதுதீன் இந்த பூமியில் எத்தனை மைல்கள் எறும்புகள் நடக்கின்றன எத்தனை எறும்புகள் நம் பாதங்களின் கீழே நசுக்கப்படுகின்றன அவை எண்ணமுடியாதவை ஆனால் நமது உடலின் மீது எறும்புகள் ஊரும்போது நம்மால் அவற்றை எண்ணமுடியும் அவற்றின் பயணங்களைப் பற்றி  ஓரளவு மதிப்பீட்டைச் செய்யமுடியும் உங்கள் உடலிலிருந்து ஒரு கடிக்கும் எறும்பை எப்படி அகற்றுவீர்கள் அதை ஒரு எறும்போ அல்லது அதன் முறிந்த உறுப்புகளோ சொல்வதற்கு முடியலாம் எறும்புகளின் வீடுகள் பற்றி  வேறு எதுவும் உங்களுக்குத் தெரிந்திருக்காது அவை கதவுகளின் இடைவெளிகளில் வசிக்கின்றன அல்லது சுவர் விரிசல்களில் அல்லது இரவு முழுவதும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் அவை எங்கே கூடுகின்றன என்பதையும் ரகசியக் கூட்டங்களை நடத்தும் இடம் பற்றியும் உங்களால் அறிய இயலாது. ஆனால் நீங்கள் விரும்பும் தேன் சர்க்கரை சீசா அல்லது ஒரு இறைச்சித் துண்டு அவற்றின் உணவு சேமிப்பாக மாறிவிடும் எண்ணமுடியாத அளவில் அவை கூடிவிடும் உங்களை எண்ணற்றத் துண்டுகளாக்கி தங்களுக்குள் பிரித்துக்கொள்ளும் அத்து

யவனிகா ஸ்ரீராம் நேர்காணல்

வர்க்கமும் வறுமையும் அழகியல்தானே சந்திப்பு: ஷங்கர்ராமசுப்ரமணியன் தமிழ் கவிதைச் சூழலில் 90-களின் ஆரம்பத்தில் ‘இரவு என்பது உறங்க அல்ல’ கவிதைத் தொகுதி வாயிலாக ஒரு அரசியல் கவிஞராக வாசகர்களை ஈர்த்தவர் யவனிகா ஸ்ரீராம். உலகமயமாதல் காரணமாக மூன்றாம் உலக நாடுகளின் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களை அழகியல் உணர்வுடன் பதிவுசெய்த கவிதைகள் இவருடையவை. சொற்கள் உறங்கும் நூலகம், தலைமறைவுக் காலம் போன்றவை இவருடைய முக்கியமான கவிதைத்தொகுதிகள். நிறுவனங்களின் கடவுள் என்ற கட்டுரைத் தொகுதியும் வெளிவந்துள்ளது...தி இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்த நேர்காணலின் விரிவான பகுதி இது... உங்களைப் பாதித்த கவிதைகளைச் சொல்லுங்கள்… பாரதிதாசன் வழிவந்த வானம்பாடிக் கவிதைகள்தான் எனக்கு முதலில் அறிமுகமானது. நா.காமரசான், அப்துல் ரகுமான், அபி ஆகியோரை வாசித்தேன். திராவிட இயக்கத்தின் கருத்துகளும், மார்க்சிய கோஷங்களும் சேர்ந்த உணர்வுபூர்வமான கவிதைகளாக அவை இருந்தன. ஆனால் அந்தக் கவிதைகளுக்கும் யதார்த்தத்துக்கும் தொடர்பில்லை. தமிழ்நாடு முழுக்க வானம்பாடிகள் பரவிக்கொண்டிருந்தனர். இப்படியான சூழ

எங்கும் மௌனம்

ஷங்கர்ராமசுப்ரமணியன் எங்கும் குளிர் கொஞ்சம் மிச்சம் இருக்கும் வேளையாக இந்த விடியல் இருக்கிறது உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் வீடுகள் சோம்பல் முறிக்கின்றன நடுவயதுக்காரர்களின் காலைநடை ஓசைகள் குழந்தைகளைக் குளியலறைக்கு விரைவுபடுத்தும் அம்மாக்களின் வசைகளைத் தவிர காற்றில் வேறு எந்த மாசும் கலக்காத புனிதவேளை அது மாடிப்படிகள் இலைகள் பாத்திரங்கள் நமது செயல்கள் மீது இன்னும் இருட்டும் மௌனமும் சூழ்ந்திருக்கிறது முதியவர்கள் மட்டும் நுரையீரல் மீது வெயில் அடிப்பதற்காக பால்கனிகளில் காத்திருக்கின்றனர்.