Skip to main content

Posts

Showing posts from July, 2014

சிரிக்கிறார் நகுலன்

ஷங்கர்ராமசுப்ரமணியன்         ஓவியம்: நரேந்திரன், புனைகளம் இதழின் பின்னட்டை என்னுடைய புத்தக அலமாரியில் தான் வேறெங்கும் போக வாய்ப்பில்லை இருப்பினும் நகுலன் மறைந்து கொண்டார் ‘லிங்கப் பிரதிஷ்டை குகை ஞானம் ’ என்ற வார்த்தை மனதைப் படுத்தியெடுக்க தூக்கம் வராமல் புத்தகங்களுக்குள் புதைந்து தேடினேன் வெகுநேரத்திற்குப் பிறகு ‘உட்சென்று வெளியிலவுமொறு வித்தையாக ’ கீழ் அடுக்கில்   செக்கச்சிவப்பாக முதுகைத் திருப்பி அலமாரியில் கிடந்தார் நகுலன். கிடைத்த பின் சிரிக்கிறார் நகுலன் என்றும் நீ தான் என் காதலன் என்றேன் பத்திரம் பத்திரம் என்று சொல்லி சிரிசிரியென்று சிரிக்கிறார் நகுலன்

யவனிகா ஸ்ரீராமின் தலைமறைவுக் காலம் - மனமே உடலாக

ஷங்கர்ராமசுப்ரமணியன் யவனிகா ஸ்ரீராமின் முதல் தொகுப்பான ‘இரவு என்பது உறங்க அல்ல ’ தொகுப்பில் உள்ள கவிதைகளைப் படித்த காலத்திலிருந்தே இவனது கவிதைகள் எங்கேயிருந்து தோற்றம் கொள்கின்றன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. யவனிகா ஸ்ரீராமை சீரியசாக வாசிப்பவர்கள் எல்லாருக்கும் எழும் பொதுவினாவாகவும் இக்கேள்வி இருத்தல் கூடும். அதுதான் யவனிகா நவீன கவிதையில் உருவாக்கிய இடையீடு என்றும் கருதுகிறேன்.  யவனிகாவின் கவிதை போர்ஹே உருவாக்காமல் போன கற்பனை விலங்குகளின் உடலை ஒத்தனவாக இருக்கின்றன. பல கலாச்சார அடையாளத்தை சுமக்கும் உறுப்புகள் ஒட்டிப் பிறந்த, உலகளாவியத் தன்மை  கொண்ட உயிர்கள் அவை. சீரற்ற உடல், தீர்ந்த காமம், தொலைந்த பூர்வநினைவுகளை கந்தல்பையாய் சோகத்துடன் சுமந்து திரியும் மூன்றாம் உலகைச் சேர்ந்த அரசியல் உயிரியின் நாடோடிப் பாடல் என்று யவனிகா ஸ்ரீராமின் கவிதைகளை அடையாளம் காணலாம்.  யவனிகாவின் கவிதைகள் தமிழ் புதுக்கவிதை மரபில் உருவானவை அல்ல. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ரஷ்ய இலக்கியங்கள், அபுனைவுகள், கல்கி, சுஜாதா போன்றவர்களின் எழுத்துகள், 90-களில் நடந்த கோட்பாட்டு விவாதங்களையொட்டி வெளியான

ஆத்மாநாம் நினைவுதினக் கட்டுரை

சூரியனைத் தொட முயன்ற வண்ணத்துப்பூச்சி ஷங்கர்ராமசுப்ரமணியன்                        கோட்டுச்சித்திரம் :   ஆதிமூலம் ஆத்மாநாம் மறைந்து முப்பது ஆண்டுகள் ஆகப்போகிறது . நிறைவாழ்வு வாழ்ந்து பெரும் அனுபவப்பரப்பை உட்கொண்ட படைப்புலகம் அல்ல அவருடையது . 33 வயதில் அகாலமாக மரணமடைந்த ஒரு கவிஞனிடம் அதை எதிர்பார்க்கவும் முடியாது . ஆனால் ,  தான் முற்றுமுழுக்க ஒரு கவிஞன் என்ற ஓர்மையோடு , தனது பிரதான வெளிப்பாட்டு வடிவாக ஏற்றுக்கொண்ட ஒரு ஆளுமையின் வெற்றிகளும் தோல்விகளுமாக 147 கவிதைகள் நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன . பழந்தமிழ் இலக்கிய மரபின் தளைகளோ , செல்வாக்கோ அவர் கவிதைகளில் இல்லை.     உலகம் முழுக்க அவர் காலகட்டத்தில் நடைபெற்ற அரசியல் மற்றும் கலை இயக்கங்களுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து எதிர்வினைகளும் ஆற்றியிருக்கிறார் . அவரது மொழிபெயர்ப்புகள் , சிற்றிதழ் செயல்பாடுகள் மற்றும் நட்புறவுகள் மூலம் அவற்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது . இந்திய நிலத்தில் கால்பதித்திருந்த   பெருநகர் கவிஞன் அவர்.   ஆழ்ந்த சமூகப் பொறுப்புணர்வு கொண்ட , அக்காலகட்டத்திய

வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திய எழுத்தாளர்

ஷங்கர் விளாதிமிர் நபகோவ், ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல நாவலாசிரியர். லோலிதா, பேல் ஃபயர் போன்ற பிரபல நாவல்களை எழுதியவர். உலகம் அதிகம் அறியாத இன்னொரு பரிணாமமும் நபகோவுக்கு உண்டு. அவர் ஒரு பூச்சியியல் வல்லுநர். உலகெங்கும் பயணம் செய்து வண்ணத்துப்பூச்சிகளின் பல்வேறு வகைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒப்பாய்வு உயிரியல் அருங்காட்சியகத்தில் செதில் இறக்கை இனப் பிரிவின் காப்பாளராக இருந்தபோது,வண்ணத்துப்பூச்சி வகையினங்களைப் பற்றி விரிவான குறிப்புகளை நபகோவ் வெளியிட்டார். பாலிமேட்டஸ் புளூஸ் என்னும் நீல வண்ணத்துப்பூச்சி வகை பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது சர்ச்சைக்குரிய ஒரு முடிவை வெளியிட்டார். அந்த வகை வண்ணத்துப்பூச்சிகள் ஆதியில் ஆசியாவைத் தாய்வீடாகக் கொண்டவை. ஆசியாவிலிருந்து காற்றலைகளின் வழியாக நகர்ந்து படிப்படியாகப் பரிணாமம் பெற்று லட்சக்கணக்கான ஆண்டுகளின் காலவெளியில் தென்அமெரிக்கக் கண்டத்துக்கு வந்தவை என்பதே அவரது முடிவு. இந்தக் கணிப்பை அவர் வெளியிட்ட ஆண்டு 1945. அவரது காலத்தில் இருந்த தொழில்முறை செதில் இறக்கை பூச்சியியல் வல்லுநர்கள்