Skip to main content

Posts

Showing posts from February, 2018

களங்கமின்மையே போய் வா

மிகத் தாமதமாக , 1991- ல் எனது ப்ளஸ் டூ கணித இறுதித் தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்ரீதேவி , விஜி என்ற கதாபாத்திரமாக என்றைக்குமான தோழியாக அறிமுகமானார் . பாடமாக மட்டுமின்றி வாழ்க்கையின் கணிதமும் குழம்பத் தொடங்கியிருந்த நாட்களில் தோல்வி உறுதி என்ற உள்ளுணர்வு வந்திருந்தது . அந்த உள்ளுணர்வே படிப்படியாக ஒரு சாகச உணர்வையும் தைரியத்தையும் கொடுக்கத் தொடங்கியிருந்தது . பாலகுமாரன் , சுஜாதா , சரோஜாதேவி கதைகள் என ரகசியக் கனிகள் எனக்குத் திறந்துகொண்டே இருந்த காலம் . சிறப்பு வகுப்புக்குப் போவதாக வீட்டில் சொல்லிவிட்டு , ஒரு சனிக்கிழமையில் ரத்னா திரையங்கரங்கில் மறு மறு வெளியீட்டில் காலைக் காட்சியாக ‘ மூன்றாம் பிறை ’ பார்த்தேன் .                                       வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட ... சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம் .... என அப்படத்தில் ஸ்ரீதேவி அறிமுகமாகும் பாடலும் அதன் காட்சிகளும் ஒரு கல்மிஷமற்ற காலத்தின் மாலைச் சூரிய ஒளியால் நிரம்பியது . அந்தப் பொன்னொளி தன் முகத்தில்

ராம் கோபால் வர்மாவின் ஸ்ரீதேவி

தமிழில்: ஷங்கர்   விஜயவாடாவில் நான் பொறியியல் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த போது , ஸ்ரீதேவி நடித்த புதிய படம் வெளியாகும் போதெல்லாம் டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருக்கும்போது திரையரங்கின் வெளியே உள்ள விளம்பரத்தட்டிகளில் அவரது படத்தை அண்ணாந்து ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருப்பேன். அவரது அழகும் கவர்ச்சியும் மிக வலிமையானது. அவரிடம் இருந்த நடிகையை பார்வையாளர்களும் திரையுலகமும் தெரிந்து கண்டு உணர்வதற்கு நிறைய நிறைய வருடங்களும் படங்களும் தேவைப்பட்டன. என்னைப் பொறுத்தவரையில் அவரிடம் உள்ள நடிகையை மிகச்சரியான முறையில் மிஸ்டர் இந்தியா திரைப்படத்தின் மூலம் சேகர் கபூர் தான் வெளிப்படுத்தினார். அவர் ஆரம்பகாலங்களில் நடித்த படங்களிலேயே அவரது நடிப்புத்திறன் நன்கு வெளிப்பட்டிருக்கும். மிஸ்டர் இந்தியா திரைப்படத்தின் மூலம் பார்வையாளர்கள் புதிய ஸ்ரீதேவியை அடையாளம் கண்டனர். சேகர் கபூரின் அழகியல் , அவரது அபாரமான அழகு மற்றும் நம்பமுடியாத நடிப்புத்திறன் இரண்டையுமே வெளிக்கொண்டு வந்தது. நான் எனது முதல்படமான சிவா(உதயம்) திரைப்படத்துக்கான வேலையில் இருந்தபோது ஸ்ரீதேவியுடனான எனது பயணம்

தமிழின் பெருமிதம் பாலசரஸ்வதி

ஷங்கர்ராமசுப்ரமணியன் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிறந்து , உலக அளவில் சிறந்த நிகழ்த்துக் கலைஞர்களில் ஒருவராகப் புகழ்பெற்ற பரதக் கலைஞர் பாலசரஸ்வதியின் இந்த வாழ்க்கை சரிதம் , அவருடையதும் அவருடைய சாதனைகளுமுடைய தொகுப்பு மட்டுமல்ல ; தமிழகமும் , இந்தியாவும் நவீனமடைந்த கதையும் இதில் உள்ளது. ஒரு காலகட்டத்தில் கிராமங்களின் தொகுதியாக இருந்து , தென்னகத்தின் பண்பாட்டுத் தலைநகரமாக உருவான சென்னையின் வளர்ச்சி ஒரு கோட்டுச் சித்திரமாகத் துலங்குகிறது. உயிர்ப்புமிக்க பாரம்பரிய அறிவுச் சேகரத்தைத் தக்கவைக்க ஒரு மரபு புதுமையோடும் மாற்றத்தோடும் நடத்திய போராட்டத்தைத் துல்லியமாகப் படம்பிடிக்கும் வரலாறு இந்த நூலில் உள்ளது. இப்படியான பல பரிணாமங்களைக் கொண்ட முன்னுதாரணமான வாழ்க்கைச் சரிதை நூல் இது. பல்வேறு புறக்கணிப்புகள் மற்றும் தனிப்பட்ட இடர்ப்பாடுகளுக்கு இடையில் தனித்துவம் வாய்ந்த ஒரு கலை மரபை சர்வதேச அளவில் உயிர் கொடுத்து நிறுவியவர் பாலசரஸ்வதி. பழமைக்கும் புதுமைக்கும் நடுவேயுள்ள பெரும் பிளவில் பழங் கதையாக மறைந்திருக்க வேண்டிய ஒரு மரபுக்கு உயிர் கொடுப்பதற்குப் பெரும் மேதமை அவசியம். பரத நாட்ட