Skip to main content

Posts

Showing posts from November, 2022

கவிஞர் நாரணோ ஜெயராமனுக்கு அஞ்சலி

  வேளச்சேரி  காமாட்சி மருத்துவமனை தாண்டி நாரணோ ஜெயராமன் குடியிருக்கும் நன்மங்கலத்தில் உள்ள இல்லத்துக்கு எப்போதும் தொலைபேசியில் கேட்டுக் கேட்டுச் செல்லும் நான் இன்று கேட்கவில்லை. துக்கம், துல்லியத்தைக் கொடுக்கிறது போல. பல்லாவரம் போகும் சிக்னலில் இடதுபக்கம் திரும்பி, நேரே பயணித்து வலதுபக்கம் திரும்பி நீலவர்ணப் பெருமாள் கோயிலைத் தாண்டும்போது நம்பிக்கை வந்தது. நாரணோ ஜெயராமனின் மகனிடம் ஒருமுறை தொலைபேசியில் கேட்டு உறுதிப்படுத்தி அவர் உடல் இருக்கும் வீட்டை அடைந்தேன். குற்றாலம் தர்மராஜன் தான் வேலி மீறிய கிளை தொகுதியை மேற்கு மாம்பலத்தில் உள்ள பழைய புத்தக கடையிலிருந்து 2003-ம் ஆண்டு வாக்கில் வாங்கித்தந்தார் என்று ஞாபகம். சிகப்புத் துணி அட்டையில், மிக எளிமையான சித்திரத்துடன் ஒல்லியாக, மிக மேன்மையும் ஆரோக்கியமும் கொண்ட கவிதைகளின் தொகுப்பு அது. கலாப்ரியாவும் நாரணோ ஜெயராமனும் ஒரு காலகட்டத்தின் புதுக்குரல்கள். உரையாடல் மொழியிலிருந்து உயரும் சமத்காரம் அவரது குரல்.  பிரமிளின் முன்னுரை இன்னமும் படிப்பதற்கு தீட்சண்யத்தை இழக்காதது. கசடதபற குழுவினருக்கு மிக நெருக்கமாக இருந்தவர். க்ரியா ராமகிருஷ்ணன், ஞானக

டெஸர்ட் ரோஸ் -2

  அவள் ஏன் போனாள் எனக்குத் தெரியவில்லை அன்றிலிருந்து எனது டெசர்ட் ரோஸ் செடி பூக்காத மர்மம் புரியவில்லை ஒரு மரத்தைப் போல அடர்வாக்கி ஒரு வனத்தைப் போல நிறையாக்கி தேன்சிட்டு ஒன்று பூக்காத எனது செடியின் கிளையில் அமர்ந்து நேற்று கொத்தி உலுக்கிக் கொண்டிருந்தது பூக்காத அதன் மேலிருந்த கோபம் எனக்கு ஏனோ தணிந்துவிட்டது என் கோபத்தைத் தணித்தது தெரியாமல் அந்தத் தேன்சிட்டு செடியிலிருந்து விருட்டென்று தவ்வி குடியிருப்பு வீடுகளின் மேல் பறந்து வானமேகி மேகத்தில் நீலத்தில் மறைந்த காட்சியை கழுத்தை உயர்த்தி மடக்கி பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமே எனக்குத் தெரிகிறது.

நீர் உயிரியாக அலையும் எஸ். சண்முகத்தின் ‘ஈர்ப்பின் பெருமலர்’

     கவிஞரும், விமர்சகருமான எஸ். சண்முகத்தின் ‘ஈர்ப்பின் பெருமலர்’ கவிதைகளைப் படித்துக் கொண்டிருக்கும்போது, அந்தக் கவிதைகளின் சொல்லி, மொழிப் பிரக்ஞையையும் கொண்ட ஒரு கடல்வாழ் நீர் உயிர் அலையும் காட்சியைக் கண்டேன். உடலின் எல்லைகள் மலரிதழ்களைப் போல எல்லையில்லாமல் மடங்கிச் சுருங்கும் செதில்கள், சிறகுகள் கொண்ட நீர் உயிர் அது. பரிணாமம் எடுக்காத கண்களின் வழியாக அதியுணர்ச்சியுடன் அந்த நீர் உயிர் தனது, பிறிது எது என்று பிரிந்தும் பிரியாமலும் ஒரு முன்னிலையுடன் கலந்தும் பிரிந்தும் அது மொழியில் அலைகிற கவிதைகள் இவை. அந்த நீர் உயிரியிலிருந்து விடுபட்ட குமிழ், அந்த நீர் உயிரியுடையதா? பிரிதா? எப்போதும் பிரிந்தே மிதந்துகொண்டிருக்கிற நாம் எல்லாரும் இணைவது சண்முகம் சொல்லும் அந்த ஒற்றைப் பொதுக்கணத்தில் தான் போலும். அந்த ஒற்றைப் பொதுக்கணத்தில் தான் எப்போதும் கோடையில் இருக்கும் கடலில் பலவண்ண சமிக்ஞைகள் உயிர்க்கின்றன. இந்த உலகத்தில் அந்த ஒற்றைப் பொதுக்கணம்தான் திரும்பத் திரும்பப் பிறந்துகொண்டிருக்கிறது. அங்கேதான் அந்தக் கடல், பல்லுயிர்கள், தாவரங்களின் ஒளிக்கோளத் தீபாவளியைக் கொள்கிறது. எதிரே முடிவில

ஜெயமோகனின் இன்னொரு நேர்காணல் - தி இந்து, ஞாயிறு இணைப்பு, 2014, நவம்பர் மாதம்

எழுத்தாளர் ஜெயமோகன், வெண்முரசு நாவல் தொடரை எழுத ஆரம்பித்திருந்த போது, 2014-ம் ஆண்டு, தி இந்துவின் இணைப்பிதழ் பணியில் இருந்த நான் அதன் தீபாவளி மலருக்காக, இணைப்பிதழ் ஆசிரியர் அரவிந்தனின் அனுமதி பெற்று செய்த நேர்காணல் இது.  மகாபாரத ம் குறித்த விரிவான நேர்காணலாக தீபாவளி மலரிலும், ஒரு பொது நேர்காணலாக கலை இலக்கிய இணைப்பிலும் இரண்டு பேட்டிகள் வெளிவந்தன. இது நடந்த உண்மை. இணைய வெளியில் இரண்டு நேர்காணல்களும் வாசகர்களின் பார்வைக்கு உள்ளன. மகாபாரதம் தொடர்பிலான இந்த நேர்காணல் ஜெயமோகன் இணையத்தளத்திலேயே உள்ளது. ரஷோமான் சினிமாவைப் போல இந்தப் பிரச்சினை வேறு வேறு வடிவங்கள், வேறு வேறு கதைகளாக, கடந்த சில ஆண்டுகளில் சர்ச்சிக்கப்படும் நிலையில் அந்த இரண்டாவது நேர்காணலைப் பகிரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பிலான சில மின்னஞ்சல் தொடர்புகளும் எனக்கும் ஜெயமோகனுக்கும் நடைபெற்றுள்ளது. இந்த நேர்காணலை நான் எனது தளத்தில் இப்போதாவது வைத்துவிடுவது நல்லது என்று நினைக்கிறேன்.  நேர்காணல் செய்த துல்லியமான தேதி எனக்கு ஞாபகமில்லை. 2014-ம் வருடம் முதல் பாதியாக இருக்கலாம். நேர்காணல் செய்த ஸ்தலம், நாகர்கோவிலில் உள்ள

வெண்முரசு குறித்த ஜெயமோகனின் நேர்காணல் - தி இந்து தீபாவளி மலர், 2014

எழுத்தாளர் ஜெயமோகன், வெண்முரசு நாவல் தொடரை எழுத ஆரம்பித்திருந்த போது, 2014-ம் ஆண்டு, தி இந்துவின் இணைப்பிதழ் பணியில் இருந்த நான் அதன் தீபாவளி மலருக்காக, இணைப்பிதழ் ஆசிரியர் அரவிந்தனின் அனுமதி பெற்று செய்த நேர்காணல் இது.  மகாபாரத ம் குறித்த விரிவான நேர்காணலாக தீபாவளி மலரிலும், ஒரு பொது நேர்காணலாக கலை இலக்கிய இணைப்பிலும் இரண்டு பேட்டிகள் வெளிவந்தன; அந்தப் பொது நேர்காணலிலும்  மகாபாரத ம் தொடர்பான கேள்வி இருந்தது. கிட்டத்தட்ட  மகாபாரத ம் தொடர்பில் தமிழில், இந்திய அளவில் வந்திருக்கும் ஏனைய நூல்கள் வரை அறிமுகம் செய்யும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டு முழுமையாக மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் இது என்று கருதுகிறேன். இது நடந்த உண்மை. இணைய வெளியில் இரண்டு நேர்காணல்களும் வாசகர்களின் பார்வைக்கு உள்ளன. மகாபாரதம் தொடர்பிலான இந்த நேர்காணல் ஜெயமோகன் இணையத்தளத்திலேயே உள்ளது. ரஷோமான் சினிமாவைப் போல இந்தப் பிரச்சினை வேறு வேறு வடிவங்கள், வேறு வேறு கதைகளாக, கடந்த சில ஆண்டுகளில் சர்ச்சிக்கப்படும் நிலையில் அந்த நேர்காணலைப் பகிரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பிலான சில மின்னஞ்சல் தொடர்புகளும் எனக்கும் ஜெ

சுரேஷ்குமார இந்திரஜித்தின் விரித்த கூந்தல்

இருப்பின் ரீங்காரத்தை கவிதை ஒருவகையாகப் பிடிக்கிறது. சிறுகதையில் அந்த ரீங்காரம் இன்னொரு வடிவத்தில் கேட்கிறது. நாவலில் அந்த ரீங்காரம், ஒரு சிம்பொனி ஆக மாறுகிறது என்று தோன்றுகிறது. இந்த மூன்றிலும் உயர்வு, தாழ்வு இல்லை. ஆனால், இலக்கியம் தொடர்பிலான தற்போதைய தொழில் சார் பார்வை உயர்வு, தாழ்வைக் கற்பித்து விட்டது. அந்தப் பார்வை அருமையான கலைஞர்களையும் சேதாரப்படுத்திவிடுகிறது. நேற்று சுரேஷ்குமார இந்திரஜித் நேர்காணல்கள் நூல் எனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அழிசி வெளியீடாக வந்திருக்கிறது. புத்தகத்தைச் சும்மா புரட்டிக் கொண்டிருந்தேன். அந்தப் புத்தகத்தில் கடைசியாக சுரேஷ்குமார இந்திரஜித் எழுதிய இரண்டு கவிதைகளைப் பார்த்தது மிகவும் அதிர்ச்சியையும் வியப்பையும் தந்தது. ஒரு கவிதையை சந்திரகுப்தன் என்ற பெயரில் காலச்சுவடு சிறப்பு மலரில் எழுதியிருந்திருக்கிறார்.  1991-ல் வெளியிடப்பட்ட காலச்சுவடு ஆண்டு மலர் எனது மாணவ நாட்களில் திரும்பத் திரும்ப படித்தது. ஆனாலும் சந்திர குப்தன் என்ற பெயர் அப்போது ஏற்படுத்திய வியப்பு தான் ஞாபகத்தில் இருக்கிறது. கவிதையை நான் படித்தோ படிக்காமலோ கடந்திருக்கிறேன். சுரேஷ் தான்

போய் இருங்கள் டி. பி. ராஜீவன்

சென்னையில் மழை சில நாட்களுக்குள்ளேயே வீட்டையும் மனத்தையும் ஆக்கிரமித்து இந்த வருடத்து நவம்பர் மாதத்தையும் எனக்கு நரகமாக்கியுள்ள நிலையில், ஜெயமோகனின் இணையத்தளம் வழியாகத் தெரிந்துகொண்ட மலையாளக் கவிஞர் டி. பி. ராஜீவனின் மரணச் செய்தி, உள்ளே எங்கோ அறுத்துக் கொண்டே இருக்கிறது. டி. பி. ராஜீவன் தனது மரணப்படுக்கையில் எழுதிய இறுதிக் கவிதை அவரது ஆழமான நகைப்பைத் தவறவிடவில்லை. விடுதலை, மீட்சி என்று நாம் நம்பிய மார்க்கங்கள் அனைத்தும் என் ஜி ஓ தன்மையாக மாறியிருப்பதுதான் இந்த நூற்றாண்டு நமக்குத் தந்த பரிசு. சென்ற நூற்றாண்டின் விடுதலைக் கருத்தியல், இறக்கும்போது ஈன்றுவிட்டுப் போன சவலைக் குழந்தைதான் இந்த என்ஜிஓ ஆக்கம். புற்றுநோய்க்கு தொடு சிகிச்சை செய்ய அந்த நோயாளியின் கையைக் கேட்கும் அவலம் தான் இந்த என்ஜிஓ ஆக்கம். இடதுசாரி அரசியல் தொடங்கி சினிமா, எழுத்து வரை இந்த என் ஜி ஓ ஆக்கத்தின் ஆக்கிரமிப்பே நம்மை அனுதினமும் தோற்கடித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆக்கம் கெட்ட குழந்தையை வைத்துக் கொண்டு நம் மேல் இன்று கவிழத்துடிக்கும் கொடுங்கோன்மையை எதிர்த்துப் போரிடவே முடியாது. அதைத்தான் ‘தூமோர்ணையாக’ப் பார்த்து மரணத்தி