Skip to main content

Posts

Showing posts with the label ஸ்ரீநேசன்

ஸ்ரீ நேசன் ஆட்டும் ஊஞ்சல்

ஒரு நூற்றாண்டைக் காணப்போகும் புதுக்கவிதை, நவீன கவிதை வடிவத்தில் குறிப்பிட்ட சாதனையை நிகழ்த்திய கலைஞர்களின் படைப்புகளை என்னளவில் தொகுத்துக் கொள்ளும்போது அவர்களது மரபையும் சேர்த்துத் தொகுத்துக் கொள்வது அத்தியாவசியமான பணியாகவே தோன்றுகிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தனித்துவத்தையும், அலாதிக் குணத்தையும் தக்க வைத்திருக்கும் ஸ்ரீநேசனின் மூன்று கவிதைத் தொகுப்புகளையும் சேர்த்து வாசிக்கும்போது என்ன மரபில் அவர் கிளைத்திருக்கிறார் என்று மெல்லிசாகத் தெரிய வருகிறது. நகுலன், ஆனந்த், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், அபி ஆகியோர் உருவாக்கிய சாரமான ஒரு கவிதை மரபின் தொடர்ச்சி என்று சொல்ல முடிகிறது. நகுலனில், ஆனந்தில் காலம் ஒரு அரூபப் பொருளாக, தொட முடியாத ஒன்றாகத் தோற்றம் கொள்கிறது. வாசகனால் அதைக் கைக்குள் வைத்திருக்க முடியாது. தொண்ணூறுகளின் துவக்கத்தில் ஒரு புதிய பண்பாட்டை உருவாக்கிய கவிஞர்களில் ஒருவராக எழுதத் தொடங்கிய ஸ்ரீநேசன், காலத்தை இயற்கையாக, காலத்தை மலையாக, காலத்தை ஏரியாகத் தொட்டுக் கவிதைகளாக்கும் போது இங்குள்ள பிராந்தியம் மற்றும் ஊர்களின் சுவைகளை, மூலிகை மணங்களைக் கொண்டதாக மாறுகிறது. சென்னைப...

ஸ்ரீநேசனின் சொல் சில்பங்களான கவிதைகள்

  ஸ்ரீநேசனின் மொழி ஏரிக்கு அருகில் செல்லும்போதும், மலையில் ஏறும்போதும் பாடலின் சந்தத்தையும் தாளகதியையும் அடைகிறது. அந்த அடிப்படையில் சொல் சில்பங்களென அனுபவங்காணும் கவிதைகளாக ஓர் இலைச்சருகு, காணாமல் போகும் மலைகள், சொல், சொல் சில்பம், இயற்கைப் புணர்ச்சி, வெயிற்சுவை, சூரியனுடன் வருவேன் ஆகிய கவிதைகளைச் சொல்வேன். பொருளெல்லாம் நிழலாவதும், நிழலே அடுத்து வந்து குந்தும் பொருளாகவும் ‘சொல் சில்பம்’ கவிதையில் மாறுகிறது. நிழலோடு கல் இருப்பது போல பொருளோடு இருளையும் வைத்திருக்கும் கல்லாக சொல் இங்கே தொனிக்கிறது. சிலையுமாக மலையுமாக அதன் ஆதியடக்கத்தில் கல்லாகவும் சொல்லாகவும் இருப்பதை முதலில் தொட்டுப் பார்க்கும் பூர்வகுடியைப் போலத் தொட்டு இந்தக் கவிதைகளை எழுதியுள்ளதால் ஸ்ரீநேசனின் இந்தக் கவிதைகள் மொழியின் அபூர்வ எழில் சூடியவை. அந்த அலாதி கதியில் தான் ‘ஒரு துண்டு சிவந்த வெயிலை மிளகோயோடு’ வாயிலிடும் சிறுவனாக மாறுகிறான் கவிஞன். ஒளி, மொழியில் சுவையான பருப்பொருளாக மாற்றப்படுகிறது. ஸ்ரீநேசனிடன் தொழிற்பட்ட சொல்சில்பக் கவிதைகளில் உச்சமும் இழைவும் கொள்ளும் கவிதையென இறுதிக் கவிதை ‘சூரியனோடு வருவேன்’ கவிதையைச...

தோன்றாத பறவையை என்ன பெயர் சொல்லி அழைப்பது நக்கீராஆஆஆஆஆஆஆ?

  ஸ்ரீநேசனின் ‘மூன்று பாட்டிகள்’ தொகுதியில் உள்ள ‘பட்சி கானம்’ கவிதை, கவிஞனுக்கு ஐம்பதாண்டுகளாகியும் தெரியவராத ஒரு பட்சியின் கானத்தைப் பற்றிப் பேசுகிறது. தமிழ் வாழ்க்கையும் தமிழறிவும் சேகரித்த பறவைகளின் பெயர்களை எல்லாம் ஒப்பிட்டு, அதுவல்ல அதுவல்ல என்று விலக்கி விலக்கி கவிஞன், காணாத முகத்தை, காணாத உடலைக் கொண்ட அந்தப் பறவையை நெருங்கி அந்தத் தோன்றாத பறவையின் குரல் இனிப்பை வியக்கிறான். கவிஞர் இசையின் சமீபத்திய தொகுப்பான 'உடைந்து எழும் நறுமணம்' தொகுதியில் 'ஒரு பாடலில் பாடுவது எது' என்று நுஸ்ரத் பதே அலிகான் பாடலை முன்வைத்து எழுதியிருப்பார். எது பாடுகிறது என்று விசாரித்து சலித்துக் கொண்டே போகும். நஸ்ரத் அலிகான்  தன் ஒற்றைக் கரத்தால்  வானத்தை அளாவிக் கொண்டிருக்கும் படம் வெகு பிரசித்தம்   எனக்குத் தெரியும்  அந்த வானம்தான் பாடுகிறது  ஒருவர் காலியிடமொன்றை  உற்றுப்பார்த்தபடி பாடிக் கொண்டிருக்கிறார் .   அங்கு என்னென்னவோ  தோன்றித் தோன்றி மறைகின்றன . எனக்குத் தெரியும்  காலியில் நிரம்பி வழிபவை எவையோ  அவைதான் பாடுகின்றன . ...

ஸ்ரீநேசனின் பெருமாத்தம்மாள், கன்னியம்மாள், ஜடசியம்மாள்

  ஸ்ரீநேசனின் ஏரிக்கரையில் வசிப்பவன் தொகுதியில் உள்ள முதல் கவிதையில் வரும் இளந்துடி கொண்ட ‘ஏரிக்கரை அம்மன்’ தான் ஸ்ரீநேசனின் புதிய இத்தொகுதியில் ‘மூன்று பாட்டிகள்’ ஆக மாறியுள்ளனர். பெருமாத்தம்மாள், கன்னியம்மாள், ஜடசியம்மாள் மூவரும் அம்மாவை ஏந்தியிருக்கிறார்கள். பண்பாட்டின் நிழலும் இருட்டும் சுரந்துகொண்டிருக்கும் அம்மைகள் அவர்கள். கன்னியம்மாள் என்ற பெயர் மட்டும் வடதமிழகத்தில் புழங்கும் பெயர். பெருமாத்தம்மாள், ஜடசியம்மாள் இருவர் பெயரும் புனைந்தவையாக இருக்கலாம். ஆனால் இந்தப் பெயர்களை உச்சரிக்கும் போது ஒரு நிலம் அதிர்கிறது. இந்தப் பெயர்கள் கவிதையில் வரும் பாட்டிகளின் பெயர்கள் அல்ல. ஸ்ரீநேசன் என்ற கவி, தனது கவிதைக்குள் வந்த அம்மாள்களுக்குச் சூட்டியிருக்கும் பெயர்கள் அவை. மூன்று பேரும் பேருந்தில் வேறு வேறு சூழல்களில் பயணிப்பவர்கள். பாட்டி ஒன்று : பெருமாத்தம்மாள்    படிக்கட்டோர இருக்கையில் ஒரு பாட்டி  எதையோ தவறவிட்டதான முகபாவம்  சுமக்க முடியாத புத்தக மூட்டையை  யாரோ ஒரு சிறுமி  அவள் மடியில் இறக்குகிறாள்  என்னவொரு மிடுக்கு கிழவிக்கு இப்போது  த...

ஸ்ரீநேசனின் ‘ஆண்டன் செக்காவ்வை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாசிப்பது’

  அரிய, அபூர்வ தமிழ்க்குணம் கொண்ட கவிதைகளைப் படைத்த ஸ்ரீநேசனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘மூன்று பாட்டிகள்’. மொழியை வதைக்கும் போது வரும் ரத்த வாடையும் வெற்றுப்பூடகத்தின் புகைமூட்டமும் மலிந்திருக்கும் நவீன கவிதைச் சூழலில், ஒரு கவிதைத் தொகுப்புக்கு ‘மூன்று பாட்டிகள்’ என்ற தலைப்பு இருப்பதே ஆசுவாசத்தைத் தருகிறது. தன்னியல்பின் கம்பீரத்துடன் சுயமுகத்துடன் திகழும் ஸ்ரீ நேசனின் கவிதைகள் மூலிகை இலைகளை வாயில் சுவைக்கும் போது உணரும் குணமூட்டுதலைத் தருபவை. மிக நீண்ட இடைவெளிகளில் வெளிவந்த காலத்தின் முன் ஒரு செடி, ஏரிக்கரையில் வசிப்பவன் தொகுப்புகளுக்குப் பிறகு மூன்று பாட்டிகளை வாசிக்கும் போது, ஸ்ரீ நேசன், தனது புராதனத் தன்மையைத் தக்கவைத்துக் கொண்டே இரண்டாம் பருவத்துக்குள் நுழைந்துவிட்டிருக்கிறான் என்ற முதல்பதிவு என்னுள் ஏற்பட்டது. அப்புறம் ஒரு சுயசரிதைத் தன்மை இந்த ‘மூன்று பாட்டிகள்’ கவிதைகளில் கூடியிருக்கிறது. ஏரிக்கரையில் வசிப்பவனில் தென்பட்ட ஒரு விரைப்பும், விமர்சனக் கூர்மையும் இலகுவாகி ஒரு கனிவை அடைந்திருக்கிறார் ஸ்ரீநேசன். கனிவு, வண்ணதாசன் வகையறா சேதாரங்களையும் ஸ்ரீநேசனுக்கு அளித்துள்ளத...

அந்தக் குருவி யார் ஸ்ரீநேசன்

  கவிஞர் ஸ்ரீநேசன் நேற்று தன் வீட்டு ஜன்னலுக்கு வந்த குருவி ஒன்றின் வீடியோவை வாட்சப்பில் அனுப்பியிருந்தார். ஜன்னலில் அடிக்கப்பட்டிருந்த வலை அந்த வீடியோவை விசேஷமாக்கியது. அந்தக் குருவி முதல் பார்வைக்கு மைனா போல எனக்குத் தென்பட்டது. மிகச் சிறிய உடலைக் கொண்ட குருவி என்றாலும் ஸ்ரீநேசனின் கவிதைகளை விட உரத்துச் சத்தமெழுப்பும் குருவி அது. எதையோ ஸ்ரீ நேசனுக்குச் சொல்வதற்கு வந்த மாதிரி இருந்தது. எழுது, தொடர்ந்து எழுது, நகுலன் கட்டுரை ஞாபகம் இருக்கிறதா, எழுந்து எழுது என்று திருப்பள்ளியெழுச்சியைப் போல உடல் முழுவதும் திரட்டிக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறது. குருவிக்குப் பின்னால் தூரத்தில் வயல், அதையொட்டிய பாதையில் ஒரு சிறுவன் கன்றுக்குட்டி ஒன்றைத் துரத்திக் கொண்டு போகிறான். கரும்பழுப்புக் கன்றுக்குட்டி ஓடி மறைந்தது.  குருவி எதையோ சொல்ல வந்தது போல, சொல்லிவிட்டு செல்ல வேண்டுமென்று காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்ட பரபரப்பில் இருந்து சொல்லிக் கொண்டே இருந்தது. கண்டராதித்தனின் அடையாளமாக எனக்கு, அவர் வீட்டில் வளர்த்த தேன்சிட்டு இருக்கும். ஸ்ரீ நேசனின் அடையாங்களில் ஒன்றாக இந்தக் குருவி சேர்ந்திருக்கிற...

இப்படித்தான் கடக்கிறோம் ஸ்ரீநேசன்

      ஷங்கர்ராமசுப்ரமணியன்   தமிழ் நவீன இலக்கியத்தில்  ‘பெருஞ்சக்தி’யாக, ஒரு ஏகாதிபத்தியமாக புனைவெழுத்தாளர்கள், இலக்கிய விமர்சகர்கள், கோட்பாட்டாளர்கள், இதழியலாளர்கள், இளம்தலைமுறை வாசகர்கள் வரை பெரும் தாக்கத்தையும் செல்வாக்கையும் ஏற்படுத்தியவர் என்று எழுத்தாளர் ஜெயமோகனைச் சொல்லலாம். அவர் எழுதிய விஷ்ணுபுரத்திற்குப் பிறகுதான், தமிழ் நாவலாசிரியர்களுக்கான காகிதக் கொள்முதல் கூடியது. சுந்தர ராமசாமி, தனது ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலை, வீட்டின் எடைத்தராசில் வைத்து திரும்பத்திரும்ப நிறுத்துப் பார்த்து, விஷ்ணுபுரத்தை விடக் கூடுதலாக ஐம்பது கிராம் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  தமிழ் நவீன இலக்கியத்திற்குள் வரும் எழுத்தாளச் சிறுவர்கள், ஆயிரம் பக்கத்தில் ஒரு ஐநூறு வருட வரலாற்றை எழுதப்போகிறேன் என்று சொல்லத் தொடங்கினர். வாழ்நாள் முழுக்க எழுதியிருந்தாலும் முன்னூறு பக்கத்தைத் தாண்டி எழுதுவதற்கு வாய்ப்பில்லாதவர்கள் வருடம் தோறும் ஸ்பைனாக் சாப்பிட்டு பத்து பத்து என்று பஸ்கி எடுக்க வேண்டியிருந்தது. ‘முடியலை’ என்று எழுத்தாளர்கள் தனியறையில் புலம்ப வேண்...