Skip to main content

Posts

Showing posts from June, 2019

பா. வெங்கடேசனின் வாராணசி

முதல் செல்ஃபி புள்ள   அஸ்வமேத யாகத்துக்கு அரைக்குதிரையாவது வேண்டும் தேச வரலாறு, கலாச்சாரம், பொருள்சார் பண்பாடுகள், நாகரிகங்களின் உரையாடல், அரசியல் என்ற அகண்ட திரையின் பின்னணியில் தனிமனிதர்களை வைத்து, வாசகனின் முயற்சியையும் வேண்டும் எழுத்தைக் கொண்ட தனித்துவமான கதைசொல்லி பா.வெங்கடேசன். தமிழில் மட்டுமல்ல; சர்வதேச இலக்கியப் பின்னணியிலும் அழுத்தமாக வைக்கப்பட்ட தமிழ்ச்சுவடாக வெங்கடேசனின் முந்தைய நாவல்களான ‘தாண்டவராயன் கதை’, ‘பாகீரதியின் மதியம்’ ஆகியவை விமர்சகர்களால் கொண்டாடப்பட்டன. மூதறிஞர் ராஜாஜியின் ஊரான ஓசூரைக் களனாகக் கொண்ட மூன்று சகோதரிகளின் குடும்பத்துக் கதையே வெங்கடேசனின் மூன்றாவது நாவலான ‘வாராணசி’யின் ஓரடுக்காகும். இந்த நூற்றாண்டுக்கு முந்தைய அந்த அடுக்கில் பெண்களின் பகல் கனவுகளும், இன்னொரு அடுக்கில் அதே காலகட்டத்திய ஆண்களின் ரகசிய வடிகாலாக இருந்த சரசப் புத்தகக் கதைகளில் இடம்பெறும் பாலியல் சாகசக் கதையின் உள்ளடக்கமும் ஊடிழையாகப் புனையப்பட்டுள்ளது. வாராணசி என்ற அதீதத்தின் நிலத்தில் நிர்வாணம் எனும் அதீதத்தை வைத்து  பா.வெங்கடேசன் எடுத்திருக்கும் புகைப்படமே ‘வாராணசி’ என்று சொல்லி

தாவர மகளே

சிப்பி விரிவது போல் என் முத்தத்துக்கு உன் இதழ்களைப் பகிர்கிறாய் உன் குழந்தைமை உன் பிராயம் இரண்டுமே ருசிக்கின்றது உன் வாய் நீர் பருகும் போழ்து பருவம் உடலில் மின்னத் தொடங்கியிருக்கும் தாவர மகளே உனக்கென் காமம் சமர்ப்பணம்

பயம் பயம் பயம்

நிலவு ஒளிரும் ஒரு இரவில் யாருமற்ற சாலையில் முல்லா நடந்து சென்றுகொண்டிருந்த போது, அவர் குறட்டையொலியைக் காலடிக்கு மிக அருகில் கேட்டார். உடனடியாக அவரை பயம் பீடிக்க, ஓடத் தொடங்கினார். தரையில் குழிதோண்டி தவத்தில் இருந்த ஒரு துறவியின் மீது கால்பட்டு தடுக்கிவிழுந்தார். ‘நீங்கள் யார்?’ என்று முல்லா நாக்கு குளரக் கேட்டார். ‘நான் ஒரு துறவி, இதுதான் என்னுடைய தவம் செய்யும் இடம்.’ ‘ அப்படியா, உங்கள் குறட்டையைக் கண்டுதான் அலறிப் போனேன். உங்கள் இடத்தை எனக்கும் பகிருங்கள். என்னால் இனிமேலும் பயணத்தைத் தொடரமுடியாது. பயமாக இருக்கிறது.’ என்றார் முல்லா. துறவி, முல்லாவிடம் தனது போர்வையின் மறுபகுதியைக் கொடுத்து அதைப் போர்த்தி உறங்குமாறு சொன்னார். நஸ்ரூதீன் உறங்கிப் போனார். அவருக்கு விழிப்பு வந்தபோது, மிகுந்த தாகமாய் இருந்தது. துறவியிடம் தனது தாகத்தைத் தெரியப்படுத்தினார். ‘இதே சாலையில் வந்த வழியிலேயே நடந்து செல். அங்கே ஒரு ஓடை வரும்.’ ‘என்னால் முடியவே முடியாது. எனக்கு பயம் போகவேயில்லை.’ என்றார் முல்லா. முல்லாவுக்குப் பதிலாகத் தானே தண்ணீரை எடுத்துவந்து உதவுவதாக துறவி எழ

இனிப்பான தேநீர் இந்தியா வந்த கதை

அரூப் கே. சாட்டர்ஜி ஆங்கிலேயரின் முதல் தேநீர் சுவைப்பு அனுபவம் மிகவும் தாமதமானது. ஆனால், சீனர்கள் 2000 ஆண்டுகளாகத் தேநீரைச் சுவைத்துவந்திருந்தனர். ஆங்கிலேயத் தினசரிதையாளர் சாமுவேல் பெப்பிஸ், 1600 செப்டம்பர் 25 அன்று, தான் எழுதிய டைரிக்குறிப்பில் ‘ச்சா’(Tcha) என்று குறிப்பிட்டு, “மருத்துவர்கள் அங்கீகரித்ததும் பிரமாதமான சுவையுள்ளதுமான சீன பானம்” என்று குறிப்பிட்டுள்ளார்.  1635-லிருந்து அரைக் கிலோ தேயிலை ஆறு முதல் பத்து பவுண்டுக்கு விற்கப்பட்டுள்ளது. அன்றைய விலைவாசியுடன் ஒப்பிடும்போது இது மிகவும் உயர்ந்த தொகை. 1662-ம் ஆண்டு இரண்டாம் சார்லஸ் மன்னர், போர்த்துக்கீசிய இளவரசி கேத்தரினை மணமுடித்த போது, ஒரு பெட்டகம் அளவுக்குத் தேயிலையையும் வரதட்சிணையாகப் பெற்றார்! அத்துடன் வருடாந்திரக் குத்தகைத் தொகையாக வெறும் பத்து பவுண்டுக்கு பாம்பே தீவையும் வரதட்சிணையாகப் பெற்றார். அந்தக் குத்தகைத் தொகை, அன்றைய இங்கிலாந்தில் அரைக் கிலோ தேயிலைக்கான விலை! போர்த்துக்கீசிய அரசவையில் மாலையில் தேநீர் பருகும் வழக்கம் கேத்தரினுக்கு இருந்தது. இங்கிலாந்தில் தனது முதல் மிடறுத் தேநீரை அவர் 1662 மே மாதம் பருகி