கவிஞர் ஆத்மாநாம், தனது இறுதிநாட்களில் படித்த நூல் ஏ. கே. ராமானுஜன் மொழிபெயர்த்த ‘ SPEAKING OF SHIVA ’. கவிஞர் பிரம்மராஜன் எழுதிய சிறு வாழ்க்கைக் குறிப்பில் தெரியவரும் தகவல் இது. பசவண்ணர், அல்லமப்பிரபு, அக்கமகாதேவி போன்ற வசன கவிகளின் கவிதைகளை அந்த நூலின் வாயிலாக மொழிபெயர்த்து மேற்குலகுக்கு அறிமுகம் செய்தார் ராமானுஜன். ஆத்மாநாமின் கவிதைகள் பற்றி அவர் இறந்தபின்னர் சில ஆண்டுகள் கழித்து அறிந்துகொண்ட ராமானுஜன், 1991-ல் ‘எனக்கு அவன் அல்லது அவனுக்கு நான்’ என்ற தலைப்பில் ஆங்கிலக் கவிதையை எழுதியிருக்கிறார். இன்னதென்று வரையறுக்க முடியாத ஒரு பிணைப்பு ஆத்மாநாமுடன் இருப்பதாக ராமானுஜன் உணர்ந்ததை கவிதையின் அடிக்குறிப்பு தெரிவிக்கிறது. கவிஞர் ந. ஜயபாஸ்கரன் இந்தக் கவிதையை எனக்கு அறிமுகம் செய்தார். ஒரு தளர்வான மொழிபெயர்ப்பையும் அவர் மேற்கொண்டிருக்கிறார். நான் இதைத் திரும்ப மொழிபெயர்த்திருக்கிறேன். ந ஜயபாஸ்கரனின் கட்டுரை, மொழிபெயர்ப்பைப் படிக்க : https://www.shankarwritings.com/2021/03/blog-post_11.html எனக்கு அவன் அல்லது அவனுக்கு நான் பத்து நூற்றாண்டுக்கு முன்னர்...