Skip to main content

Posts

Showing posts from January, 2023

ஹிட்லரிலிருந்து மோடி வரை மக்களை மயக்கி இறுக்கும் பிம்பங்கள்

  ஜார்ஜ் ஆர்வெல் நினைவு தினத்தையொட்டி, ஹிட்லரின் மெய்ன் காம்புக்கு அவர் எழுதிய மதிப்புரையை ‘தி வயர்’ உள்ளிட்ட இணையத்தளங்கள் கவனப்படுத்தியிருந்தன. ஹிட்லர், ஸ்டாலின் ஆகியோர் மேற்கொண்ட சர்வாதிகார நடைமுறைகளை, அவை உச்சபட்ச துயரங்களைத் தந்தாலும் ‘மேலான நன்மை’ என்ற பெயரால், கடவுளர்களின் சோதனையாக விரும்பி, வெகுமக்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்பதை ஜார்ஜ் ஆர்வெல் இந்த மதிப்புரையில் ஆராய்கிறார். ஹிட்லரின் ஆளுமையும் அவர் ஏற்படுத்திய பிம்பமும், வலிய விதியை எதிர்த்துப் போராடும் துயர நாயகனின் சாயலைக் கொண்டது என்கிறார். ஒரு எலியை எதிர்த்துக் கொல்வதாக இருந்தாலும் ஹிட்லர் போன்றவர்கள், அந்த எலியை முதலில் ஒரு டிராகன் போன்று பிரமாண்டமான எதிரியாக கதையாகக் கட்டமைத்து விடுவார்கள் என்கிறார் ஜார்ஜ் ஆர்வெல். கரோனோ போன்ற வைரசை, கருப்புப் பணத்தை, சிறுபான்மையினரை, எதிர்கட்சியினரை, பாகிஸ்தானை, போராடும் விவசாயிகளை பிரமாண்டமான எதிரிகளாகச் சித்தரித்துவிடும் மோடி ஞாபகத்துக்கு வருகிறார். ‘அச்சே தின்’ என்ற பெயரால் நல்ல தினங்கள் வரப்போகின்றன என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த மோடி மக்கள் மேல் சுமத்திய அடுக்கடுக்கான துய

தி க்ராண்ட் இன்க்விஸிட்டர் - மானுட நிலைமை குறித்த மாபெரும் ஆவணம்

  உலகின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலின் தீர்மானகரமான அத்தியாயம் 'தி க்ராண்ட் இன்க்விஸிட்டர்’(The Grand Inquisitor) என்று அழைக்கப்படும் 'விசாரணை அதிகாரி'. நவீன இலக்கிய வரலாற்றில் அதிகபட்சமாக வாசகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய வசனங்களைக்கொண்ட காவியத்தை உள்ளடக்கிய அத்தியாயம் இது. கரமசோவ் சகோதர்கள் நாவலின் பிரதானக் கதாபாத்திரங்களில் ஒன்றும் தந்தையார் கரமசோவின் இரண்டாவது மகனுமான இவான் கரமசோவ் தனது தம்பியும் இளந்துறவியுமான அல்யோஷாவிடம் பகிர்ந்து கொள்ளும் காவியம் இது.   அல்யோஷாவின் சிறு சிறு இடையீடுகள் வழியே இந்தக் காவியம் இவானால் ஒரு உணவு விடுதியில் சொல்லப்படுகிறது இது. இந்தக் காவியத்தில் கிறிஸ்து மீண்டும், பதினைந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அவிசுவாசிகள் விசாரிக்கப்பட்டு தண்டனை கொடுக்கப்படும் காலத்தில் செவைல் நகரத்துக்கு வருகிறார். முன்பைப் போலவே சில அற்புதங்களையும் செய்கிறார். செவைல் நகரத்துத் தேவாலயத்தின் முன்பு இயேசுவைப் பார்க்கும் மதகுரு, தன் காவலாளிகளை அழைத்து அவரைக் கைது செய்ய உத்தரவிடுகிறார். அன்றிரவு, அந்த