Skip to main content

Posts

Showing posts from February, 2020

பீஃப் உணவு திருவிழாவாகும் கவிதைகள்

மாட்டுக்கறி உணவாக ஆகும்போது, அது உயிர்களை நீட்டிக்க உதவுகிறது. உழைப்பும் உற்பத்தியும் குழந்தைகளும் அதன் வழியாக நீளும் பண்பாடும் உயிர்கள் நீட்டிக்கப்படுவதாலேயே உருவாகின்றன. உயிரை நீட்டிக்க முடிந்த எந்த உணவும் தனித்ததல்ல, விலக்கப்பட்டதல்ல. அதனால், நம்மை வாழ்விக்கும் எல்லா உணவுகளும் உயிர்த்தன்மை கொண்டவையே. அதனாலேயே அவை பொதுப் பண்பாட்டின் உயிரங்கமாகவும் ஆகிவிடுகின்றன. அந்த உயிர்த்தன்மை கலை ஆகும், கவிதை ஆகும் எழில் பச்சோந்தி எழுதிய ‘பீஃப் கவிதைகள்’ தொகுப்பில் நடந்துள்ளது. தமிழகம், கேரளத்தின் வேறு வேறு பிராந்தியங்களில் உள்ள மாட்டுக்கறிப் பண்பாட்டினூடாகச் செய்த யாத்திரை மூலம் இந்தக் கவிதைகளை அவர் அடைந்துள்ளார். உலகெங்கும் பெரும்பான்மை மனிதர்களின் உணவாதாரமாகவும், இந்தியாவில் ஆறில் ஒரு பகுதிக்கும் மேலான மக்களின் புரதச்சத்தை உறுதிசெய்யும் உயிராதாரமாகவும் உள்ள மாட்டுக் கறி தொடர்பிலான அரிதான பண்பாட்டுத் தரவுகள்தான் ‘பீஃப் கவிதைகள்’. பச்சோந்தியின் கவிதைகளில் குழந்தைகளுக்கு விளையாட்டுத் தோழனாக மாடு இருக்கிறது; அது குழந்தைப் பருவத்து நினைவின் ஒரு பகுதியாக ஆகிறது; அவர்களுக்கே அல்வாவாகவும் கனி

ஆரோகணம்

இறைஞ்சுதல் ஓங்காரம் பிரார்த்தனையின் ஆரோகணிப்பில் எவரோ ஒருவரின் முகம் உதடுகள் வானத்தை நோக்கிக் கைகூப்பலைப் போலக் குவிந்தது அப்போது அவை கோபுரங்களாக மினாரெட்களாகக் கூர்ந்து நீண்டன அடையும் விழைவில் படிகள் முளைத்தன எவரையோ எழுப்ப எவரையோ அசைக்க எழுப்பப்பட்ட அந்த உச்ச ஒலியை நிலத்தில் உறங்கியவர்களும் பகிர்ந்துகொண்டு விழித்தனர் ஓட்டகங்கள் தமது மினாரெட் கழுத்தைத் தூக்கிப் பார்த்த போது ஒரு கணம் அதன் உலோபிச் சிரிப்பு மறைந்துபோனது கோபுரங்களிலும் மினாரெட்களிலும் முகட்டுக்கும் கூம்புக்கும் ஓங்கி ஒலிப்பவன் செல்வதற்கு படிகள் இருந்ததைப் போல் ஆரோக்கியமான நுரையீரலுக்கு நாசிகளென்று இலைகள் மலர்கள் ஜியோமிதி வடிவங்களில் ஜன்னல்களும் திறப்புகளும் வடிவமைக்கப்பட்டன உடலுறவின் முனகலையொத்த புறாக்களின் முனகலும் சிறகுகளின் படபடப்பும் அங்கே தொடங்கின பெருநகரங்களில் அதிகாலை இருளில் பச்சையாய் ஜொலிக்கும் செங்குத்து மினாரெட்கள் இன்றும் உண்டு மெய்நிகர் தோற்றமோ என்று இன்னும் நாம் ஏமாறாமல் இருக்க புறாக்களின் சிறகுப் படபடப்பும் முனகலும் கோபுரங்களில் உண்டு பொந்துகளெங்கும் இறகுகளும் எச்சங்களு

என் படைப்பில் இயேசுநாதர் துயர்படுபவர் அல்ல

கல்கத்தா, மும்பையை மையமாகக் கொண்டு உருவான இந்தியக் கலை மரபின் தொடர்ச்சியில் சுதந்திரத்துக்குப் பிறகு தன் சுயமரபிலிருந்து எழுந்த கலை இயக்கம் மெட்ராஸ் கலை இயக்கம். சென்னை கவின்கலைக் கல்லூரியின் முதல்வராக இருந்த கே. சி. எஸ். பணிக்கர், சிற்பி தனபால் ஆகியோரால் உத்வேகம் பெற்று ஆதிமூலம், சந்தானராஜ், கே. ராமானுஜம் என உருவான கலைமேதைகளின் தொடர்ச்சியில் உருவானவர் சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி. தேசிய  விருதுகளையும் சர்வதேசப் புகழையும் பெற்ற படைப்புகள் இவருடையவை.  கும்பகோணம் கவின்கலை கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வுபெற்றவர். சுவாமிமலை ஸ்தபதிகள் குடும்பப் பாரம்பரியத்தில், 11-ம் நூற்றாண்டிலிருந்து நீளும் சிற்பிகளின் கால்வழி மரபில் வந்த நவீன  சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதியிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் இது... தாத்தா, தாத்தாவுக்கு அப்பா என்ற நீண்ட மரபு கொண்ட சுவாமிலை ஸ்தபதிகள் குடும்பத்தில் பிறந்து  படிக்க வந்தவர் நீங்கள். அந்த அடிப்படையில், மரபு உங்கள் மீது எப்படியான செல்வாக்கைச் செலுத்தியது....சொல்லுங்கள்... 1880-களில் சென்னை கவின்கலைக் கல்லூரியில் முதல்வராக இருந்த இ. பி. ஹெவலின் காலத்தில் உலோக

யார் ஒட்டுண்ணி

கிம் கி டுக்கை அடுத்து தென் கொரியாவிலிருந்து அறியப்பட்டிருக்கும் சினிமா மேதையான பாங்க் ஜோன் ஹு, ஆஸ்கர் வழியாகச் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார். சினிமாவின் பல வகைமைகளை இயல்பாக திரைக்கதையில் கலப்பதில் வல்லவர். நகைச்சுவை, திரில்லர், திகில், ஃபேண்டசி என ஒரே கதையிலேயே இயல்பாகத் தடம் மாறுவதுதான் ‘பேரசைட்’.  ‘கோமாளி இல்லாத நகைச்சுவை, வில்லன்கள் இல்லாத அவலம்’ என்று பேரசைட் திரைப்படத்தைப் பற்றி அதன் இயக்குநர் பாங்க் ஜோன் ஹு சரியாகவே மிகக் குறைந்த வார்த்தைகளில் மதிப்பிட்டிருக்கிறார். பாங்க் ஜோன் ஹு, தன் திரைப்படம் பற்றிச் சொல்வதை நாம் வாழும் இன்றைய வாழ்க்கைக்கும் பொருத்திப் பார்க்க முடியும். நமது ஆசையும் சபலங்களும் நம்மைக் கோமாளிகளாகவும் வில்லன்களாகவும் எப்படி மாற்றுகின்றன என்பதை ஒரு நாவல் போல நிதானமாகத் தனது படைப்பில் பாங்க் ஜோன் ஹு வெளிப்படுத்திவிடுகிறார்.      ஒரு நவீன ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்து நடப்பதைப் போலத் தான் நம் முன்னர் உலகம் பெரும் சந்தையாக விரித்திருக்கிறது. ஒவ்வொரு கடையின் கண்ணாடி வழியாகவும் தேவை, தேவையின்மையைத் தாண்டி பொருட்கள், அளிக்கப்படும் சேவைகள், வசதிகள் நம

அப்பா அம்மா பூனை பறவை

வீட்டின் புழக்கடைக்கு வரும் மைனாக்கள் புறாக்களுக்கு பரிவுடன்தான் சோறு வைத்துப் பழகினார் அப்பா சோற்றைக் கொறிக்க வரும் பறவைகளைக் காத்திருந்து பதுங்கி வேட்டையாடியது பூனை சோற்றுக்கு வரும் பறவைகளை பூனை பிடித்துச் செல்வதால் நமக்குத் தான் பாவம் நிறுத்துங்கள் என்கிறாள் அம்மா சோறு கொடுப்பதோடு என் வேலை முடிந்தது பூனையிடம் இறப்பது பறவையின் தலைவிதி என்கிறார் அப்பா இங்கே தான் நானும் ஒரு மர்மக் கொலையாளியும் நுழைகிறோம் பறவைகளின் இடத்தில் அம்மா இருக்கிறாள் பூனையின் இடத்தில் அப்பா இருக்கிறார் சோற்றை வைக்கும் கரங்கள் யாருடையது? சோற்றுக்குப் பழகிய மனம் யாருடையது?

சினிமாவின் ஆற்றல் '1917'

‘அமெரிக்கன் பியூட்டி’, ‘ஸ்பெக்டெர்’ போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களின் இயக்குநரான சாம் மெண்டிஸின் தாத்தா ஆல்பிரட் மெண்டிஸ் முதல் உலகப் போரில் பங்குபெற்றவர். சேறு சகதியோடு பிணங்களைக் கடந்து ரத்த கோரங்களைப் பார்த்த அனுபவத்தில் அந்தத் தாத்தா வீடு வந்த பிறகும், அடிக்கடி தன் கைகளைக் கழுவிக்கொண்டே இருந்திருக்கிறார். அந்தப் போரின் கசப்பான அனுபவங்கள் அவரை 50 ஆண்டுகளுக்குப் பிறகும் துரத்தியதை சாம் மெண்டிஸ் கதைகளாகக் கேட்டதன் தாக்கமே இந்தப் படம். ‘1917’ படத்தின் ஆரம்பக் காட்சியே நீளமான பதுங்கு குழிகள் வழியாக ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு வடக்கு பிரான்ஸின் இன்னொரு எல்லைக்குச் செல்லும் இரண்டு பிரிட்டிஷ் வீரர்களின் பயணத்திலிருந்துதான் தொடங்குகிறது. நாள் ஏப்ரல் 6, 1917. திரைப்படம் முழுவதுமே ஒரே ஷாட் என்று தோன்றும் வகையில், நாமும் அவர்களுடன் அதே கால அளவில் பயணிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. மொத்த சினிமாவிலும் ஒரு நீர்மத்தன்மையை உணரமுடிகிறது. ஜெர்மானியர் விரித்த பொறிக்குள், அது பொறியென்று தெரியாமல் நுழையவிருக்கும் 1,600 வீரர்களைக் காப்பாற்றுவதற்கான பயணம் அது. லான்ஸ் கார்ப்போரல்களாகக் குழந்தைத் த

எல்லாருடைய வாழ்வின் விதியாக இருக்க விரும்புகிறேன்

கோணங்கி,   தமிழ் சொல்கதை மரபின் லட்சணங்கள் அனைத்தையும் சூடிக்கொண்ட நவீன கதை சொல்லி . ‘ மதினிமார்கள் கதை’ மூலம் கரிசலின் உணர்வு மூட்டங்களை மந்திர மொழியில் சொன்ன சிறுகதைக் கலைஞர் . பாழி , பிதிரா , த என்ற மூன்று நாவல்களைத் தொடர்ந்து ‘நீர் வளரி’ என்னும் நாவலை எழுதி வெளியிட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்தப் பேட்டி எடுக்கப்பட்டது . இந்து தமிழ் திசை நாளிதழில் வெளிவந்த இந்த நேர்காணலின் விரிவான வடிவம் இது... ஒரு கதைசொல்லியை உங்களிடம் கண்டுகொண்ட பின்னணி , காலத்தைச் சொல்லுங்கள்... விளாத்திகுளத்திலிருந்து வந்த ச . ஜோதிவிநாயகத்தின் தேடல் சிற்றிதழில் ‘கருப்பு ரயில்’ சிறுகதை பிரசுரமானது . அப்போது என் வயது இருபது . அதைப் படித்து உற்சாகமான எழுத்தாளர் வண்ணநிலவன் , ஜோதிக்கு எழுதிய கடிதத்திலிருந்து சிறுகதைக்கான தீவிரமான சுழற்சியை உள்ளுணர்வாகப் பெற்றேன் . மெல்ல நாடோடியாய்ச் சுற்ற ஆரம்பித்த என்னை வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ கதை கட்டிப்போட்டது . அதிலுள்ள இருட்டைத் தொட்டு ‘இருட்டு’ கதையை எழுதினேன் . இப்படி இழுத்துச் சென்றதில் எல்லாம் பெரும் சுழற்சியாய் கதைகள் பல்வேறாக உள்ளே சுழலத் தொடங்கிவிட்ட

ரேமண்ட் கார்வரின் ‘இறகுகள்’

பிப்ரவரி மாத காலச்சுவடு இதழில் வெளியாகியுள்ள ரேமண்ட் கார்வரின் ‘இறகுகள்’ , சிறுகதை என்னும் வடிவம் இன்னும் கொண்டிருக்கும் புதுமையையும் வசீகரத்தையும் நினைவூட்டுவதாக இருந்தது . ஒரு நிகழ்ச்சியை அல்லது ஒரு அனுபவத்தை அசுவாரசியமானதாக , இனிமையற்றதாக , சங்கடத்துக்குரியதாக நாம் உணர்கிறோம் . அல்லது அப்படி ஒன்றாக நம் மனம் ஒரு நிகழ்ச்சியை மொழிபெயர்க்கிறது . ஆனால் , அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியே ஒரு திருப்பத்துக்கு வழிவகுத்துவிடுகிறது . அது இனிமையானதாகவோ மோசமானதாகவோ இருக்கலாம் . ஆனால் இன்றியமையாத திருப்பமாக அது உள்ளது . ஜி . குப்புசாமி மொழிபெயர்த்திருக்கும் இந்தக் கதை அமெரிக்காவில் நிகழ்கிறது . சமீபத்தில் குழந்தை பிறந்த அலுவலக நண்பன் பட்டின் வீட்டுக்கு மனைவியோடு இரவு விருந்துக்குச் செல்லும் ஜேக்கின் பார்வையில் சொல்லப்படும் கதை இது . பட்டின் வீட்டில் வளர்க்கப்படும் ஜோயி என்ற மயிலும் , பட் - ஓலா தம்பதியினரின் அழகேயற்ற குண்டுக் குழந்தையும் தான் இந்தக் கதையின் மையம் . இந்தக் கதையில் மயில் அறிமுகமானவுடன் இந்தக் கதை ஒரு இந்தியக் கதை ஆகிவிடுகிறது .  ஜோயி என்ற ப

தன்னை மறக்கும் கவிதை

  ( பள்ளிப்பருவத்திலிருந்து எனது முதல் தொகுதி வருவதற்கு முந்தைய காலம் வரையில் என்னைப் பாதித்த கவிதைகளை ,  அது பாதித்திருந்த போது இருந்த உணர்வுகளைச் சென்று பார்ப்பதுதான் ' நான் பிறந்த க - வி - தை ' தொடரின் நோக்கம் . அத்துடன் கவிதை சார்ந்து இப்போதிருக்கும் எனது எண்ணங்களையும் ஒவ்வொரு கட்டுரையிலும் பகிர்ந்துகொள்ளவும் செய்வேன் .  குறுந்தொகையிலிருந்து இத்தொடரைத் தொடங்குகிறேன் . அம்ருதா மாத இதழில் மாதம்தோறும் வெளியாகும் .  ) முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக் குவளை உண்கண் குய்ப்புகை கமழத் தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர் இனிது எனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே . -  கூடலூர் கிழார் ,  குறுந்தொகை முற்றிய தயிரைப் பிசைந்த ,  காந்தள் மலரைப் போன்ற ,  மெல்லிய விரலைத் துடைத்துக் கொண்ட ஆடையை ,  துவைக்காமல் உடுத்துக் கொண்டு ,  குவளை மலரைப் போன்ற மையுண்ட கண்களில் ,  தாளிதப் புகை மணப்ப ,  தானே துழாவிச் சமைத்த ,  இனிய புளிச்சுவையை உடைய குழம்பை ,  தலைவன் இனிது என்று உண்பதால் ,  தலைவியின் விளக்கத்தை உடைய நெற்றிய