Skip to main content

Posts

Showing posts from May, 2019

ராணியென்று தன்னையறியாத ராணி

மலைச்சரிவிலுள்ள அந்தச் சிறுவீட்டின் வாசல்படியில் கன்னத்தில் கைபதித்து மென்சோகத்துடன் காத்திருக்கிறாள் ராணியென்று தன்னையறியாத ராணி 000 மரணம் எதுவென ராணியிடம் கேட்டேன். புலன்களின் ஜன்னல்களை ஒவ்வொன்றாகச் சாத்தி ஒளிகசியும் துளைகள் அனைத்தையும் மெழுகினால் அடைத்து கடைசியில் உன்னைச் சூழும் இருள் என்று சொல்லி அவசர அவசரமாய் நீங்கிப் போனாள். நானும் சரிதான் சரிதான் என்றேன்.

அறியாததன் மகத்துவம்

ஜே. கிருஷ்ணமூர்த்தி பனைகளுக்கு அப்பால் தூரத்தில் நிம்மதியற்ற கொடூரமான கடல்; அது அமைதியற்று, முரட்டு அலைகளோடு வலுத்த சுழிப்புடன் திகழ்ந்தது. இரவின் மௌனத்தில் அதன் ஆர்ப்பரிப்பு தூரத்திலிலுள்ள ஒரு தீவிலும் கேட்கக்கூடியதாக இருப்பதோடு அதன் ஆங்காரத்தில் ஒரு எச்சரிக்கை, அச்சுறுத்தல் இருந்தது. ஆனால் இங்கோ, பனைகளுக்கு நடுவே, ஆழ்ந்த நிழல்களும் மோனமும் இருந்தன. அன்று முழுநிலவு. கிட்டத்தட்ட பகல்போல ஒளிர்ந்தது. அனலோ கண்ணைக் கூசும் ஒளியோ இல்லை. காற்றிலாடும் பனைகள் மேல் விழும் ஒளி, மிருதுவாக எழில்மிக்கதாக இருந்தது. பனைகள் மீது விழும் நிலவொளி மட்டுமல்ல, அவற்றின் நிழல்களும், வட்டமான கிளைகளும், மின்னும் நீரும் வளமான பூமியும், எல்லாமும். பூமி, வானம், நடக்கும் மனிதன், கத்தும் தவளைகள், தூரத்து ரயிலின் சீழ்க்கையொலி என அனைத்தும் மனத்தால் அளக்க இயலாத ஒரு உயிர்ப்பொருள். மனம் என்பது அற்புதமான ஒரு கருவி; அத்தனை சிக்கலான, நுண்ணிய, எண்ணிலாத அத்தனை சாத்தியங்களையுடையதாக மனிதன் படைத்த எந்த இயந்திரமும் இல்லை. நமக்குத் தெரிவது மனத்தின் மேலோட்டமான மட்டங்களைப் பற்றி மட்டுமே; அதன் மேல் தளத்திலேயே நமது இருப்பைத்

மனம் எங்கே உறைந்திருக்கிறது

ஜே . கிருஷ்ணமூர்த்தி தூரத்து மலைகளின் பின்னால் சூரியன் சரிந்து, பள்ளத்தாக்கில் நிழல்களை நீண்டதாகவும் இருட்டாகவும் ஆக்கியிருந்தது. கடலிலிருந்து குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்த அமைதியான மாலைப்பொழுது அது. வரிசையாக நின்றிருந்த ஆரஞ்சு மரங்கள் கிட்டத்தட்ட கருப்பாகத் தெரிந்தன. பள்ளத்தாக்கில் நீளும் நெடிய சாலையில் நகரும் வாகனங்களில் அஸ்தமனச் சூரியனின் ஒளி பட்டு ஒளிர்ந்தது. வசீகரமும் அமைதியும் கொண்ட சாயங்காலம் அது. எல்லையற்று விரியும் வெளியையும், முடியாத தொலைவையும் மனம் நிறைப்பது போல முடிவேயில்லாமல் மனம் விரிவது போல இருந்தது. மனத்துக்குப் பின்னரும் அப்பாலும் எல்லா விஷயங்களையும் ஏதோவொன்று கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. மனம் தன்னுடையதல்லாத ஒன்றைப் புரிந்துகொள்ளவும் நினைவுபடுத்தவும் முயன்று இலக்கில்லாமல் போராடிக் கொண்டிருந்தது. அதனால்தானோ என்னவோ, அது தனது வழக்கமான செயல்பாட்டையும் நிறுத்திவிட்டது. ஆனால் தனது இயற்கையோடு இல்லாத ஒன்றை அதனால் உள்வாங்கமுடியாத நிலையில், சூழலின் ஆழ்மைக்குள் மனமும் புதைந்துவிட்டது. மாலை இருளடர்ந்துவிட்டது, அத்துடன் தூரத்தில் நாய்களின் குரைப்பொலிகள் எந

கேம் ஆப் த்ரோன்ஸ்

உலகில் உள்ளது எல்லாமும் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ வலைத்தொடரில் உண்டு. காவியங்களுக்கே உரிய படைப்பம்சம்தான். காதல் உண்டா? உண்டு. உக்கிரமான சண்டை உண்டா? உண்டு. உறங்கிய பிறகும் ஆழ்மனத்தில் ஓசையிடும் வாள்களின் சத்தமும் குதிரைகளின் குளம்பொலிகளும் உண்டு. வெறுப்பு, சதி, எதிர்பாரா திருப்பங்கள், பழிவாங்கல்கள் உண்டு. வாழ்க்கையை விசாரிக்கும் அடிப்படைக் கேள்விகளும், புத்திசாலித்தனமும், இதற்கெல்லாம் அப்பால் காலம்காலமாக சந்தேகத்துடன் விசாரித்துவரும் பேய்கள், பில்லி சூன்யம், ஜோம்பிகளின் நடமாட்டமும் உண்டு. ‘இருள் சூழ்ந்திருக்கிறது; முற்றிலும் பயங்கரங்கள்’ என்ற வசனம் ‘கேம் ஆப் த்ரோன்’ஸுக்கு முழுக்கப் பொருந்தும். அத்தனை பயங்கரங்களும் பார்வையாளனை வசீகரிக்கின்றன. அவர்கள் வாழும் உலகுக்கு இணையான பிரமாண்டத்தை நிகர் உலகத்துக்கு நகர்த்துகின்றன. இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய கலைவடிவமான சினிமாவின் சாத்தியங்களுக்கு அப்பாற்பட்ட சாத்தியம் ஒன்றுண்டு என்பதை ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ மெய்ப்பிக்கிறது. சினிமாவைச் சிறுகதையின் வரையறையைக் கொண்டது என்றும், கதைத் தொடரை நாவல் என்றும் வகைப்படுத்தலாம். ‘கேம் ஆப்த்ரோன்ஸ்’

முதலைகள் எடுக்காத செல்ஃபி

கடும் வெயிலுக்குப் பழக்கமான சென்னைவாசிகளே பகலில் பதங்கமாகி , அலுவலகக் குளிர்சாதன வசதியிலும் மாலைக் கடற்காற்றிலும்தான் தங்களை மீண்டும் சேகரித்துக்கொள்ளும் நாட்கள் இவை . இப்படிப்பட்ட ஒரு நாளில் முட்டுக்காடு முதலைப் பண்ணைக்கு ஏன் சென்றேன் ? வெயிலுக்கு எதிராகப் போரிடும் ஏதோ ஒன்றுதான் , ‘ மெட்ராஸ் முதலைப் பண்ணை ’ யில் தண்ணீரில் இருக்கும் முதலைகளை நோக்கி ஈர்த்திருக்க வேண்டும் . சென்னையிலிருந்து 40 கிமீ தொலைவிலுள்ள இப்பண்ணை ஆசியாவின் முதல் முதலை இனப்பெருக்க மையம் . தோலுக்காகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் முதலைகள் வேட்டையாடப்படத் தொடங்கிய நிலையில் , அருகிவந்த முதலை இனங்களைப் பாதுகாக்கவும் அவைகுறித்து ஆராய்வதற்காகவும் தொடங்கப்பட்டது இது .   குழந்தைகளை ஈர்க்கும் வண்ணங்கள் , சித்திரங்களுடன் வழிகாட்டுத் தகவல் பலகைகள் , அடிக்கத் தொடங்கிவிட்ட வெயிலையும் தாண்டிப் பசிய மரங்களின் நிழலும் நீரின் சத்தமும் மெத்தென்ற மணலும் ஆறுதலைத் தருகின்றன . அழியாமைக்கு அருகே இருப்பவை கற்கள் ; அந்தக் கற்களின் முதல் குழந

ஐயா, எது ஆகவும் முயற்சிக்காதீர்கள்

ஜே. கிருஷ்ணமூர்த்தி முழுநிலவு நதியின் மேல் அப்போதுதான் எழுந்துகொண்டிருந்தது; புழுதித் திரை நிலவைச் சிவப்பாக்கியிருந்தது. குளிருக்காக எழுப்பப்பட்ட நெருப்பு பல கிராமங்களிலிருந்து புகையாக எழும்பிக் கொண்டிருந்தது. நதியில் ஒரு சலனமும் இல்லை. ஆனால் ஆழ்ந்து வலுவாக மறைந்து அதன் ஓட்டம் இருந்தது. தகைவிலான் பறவைகள் தாழ்ந்து பறந்து கொண்டிருந்தன. அதன் சிறகின் நுனிகள் தண்ணீரைத் தீண்டியபோது, அமைதியாக இருக்கும் நீரின் மேல்பரப்பைக் கொஞ்சமே தொந்தரவு செய்யமுடிந்தது. நதியின் மேலே, மாலை நட்சத்திரம் தூரத்திலுள்ள சந்தடி மிக்க நகரத்தின் மசூதி மேல் அப்போதுதான் துலங்கத் தொடங்கியது. கிளிகள் மனிதர்கள் வசிக்குமிடத்துக்கு அருகே வந்து சேர்ந்துகொண்டிருந்தன, அவற்றின் பறத்தலோ ஒருபோதும் நேர்கோட்டில் இல்லை. கிரீச்சிட்டபடி அவை இறங்குகின்றன. ஒரு தானியத்தை எடுத்துக் கொண்டு பக்கவாட்டாகப் பறக்கின்றன. ஆனால் அவை பசிய மரத்தைத் தேடி முன்னே பறந்துகொண்டே இருக்கின்றன. அங்கே அவை நூற்றுக்கணக்கில் கூடுகின்றன. அடைக்கலாகும் மரத்துக்குப் போய் சேருவதற்காக மீண்டும் பறக்கின்றன. இருள் வரும்போது அங்கே மௌனம் இருக்கிறது. மரங்களின