Skip to main content

Posts

Showing posts from January, 2020

சக்தியை வணங்குவதே எண்ணம்

தமிழ் நவீன கவிதையில் அதிக வாசகர்கள் நினைவில் மனப்பாடமாகச் சொல்லக்கூடிய வரிகளை எழுதிய மக்கள் கவிஞர் என்ற வரையறைக்கு அருகில் வரக்கூடிய கவிஞர் விக்ரமாதித்யன் . கு றுந்தொகை   தொடங்கி   தமிழ்   மரபிலக்கியத்தில்   தேர்ந்த அறிவும் அதன் செழுமையான தாக்கத்தையும் பெற்ற அரிதான தமிழ் கவிஞர்களில் ஒருவர் . அவரிடம் இந்து தமிழ் திசைக்காக எடுத்த பேட்டியின் முழுவடிவம் இது ... கவிதையின் இன்றியமையாத அம்சம் , தேவை என்னவென்று சொல்லுங்கள் ? கவிதைதான் மொழியின் கொடுமுடி . அதில்தான் உச்சபட்சமும் சாத்தியம் . லண்டன் மெட்ரோ ரயிலில் இடம்பெற்ற ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ என்று தொடங்கும் குறுந்தொகை கவிதை ஏ . கே . ராமானுஜத்தின் மொழிபெயர்ப்பாக , ஒரு உலகப்பொதுவான விஷயத்தை அழகுபடப் பேசுகிறது . அத்தனை நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அது புதிதாகவும் உள்ளது . ‘ சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கிவள் / உயிர்தவச் சிறிதே காமமோ நனிபெரிதே’ என்று ஈரடிகளில் பெண்ணொருத்தியின் நிலையைக் காண்பிக்க முடியும் . எல்லாவற்றுக்கும் மேலாக , கவிதை தோன்றுவது ; தோன்றுவது என்பதனாலேயே உயர்வானது . சங்கத்திலிருந்து தனிப்பா

அருண் கோலாட்கர் கவிதைகள்

திரும்புதல் பாம்பே என்னை யாசகனாக்கியது ஒரு கவளம் வெல்லத்தை நக்கத் தந்தது கல்யாண் ஒரு சின்ன கிராமம் அங்கே ஒரு அருவி ஆனால் அதற்கோ பேரில்லை எனது போர்வையை விற்க ஒருவன் கிடைத்தான் அத்துடன் வெறும் தண்ணீரைக் குடித்து விருந்தாடினேன் எனது பல்லுக்கிடையே அரசமர இலைகளின் துணுக்கோடு நான் நாசிக் வந்துசேர்ந்தேன் அங்கே கொஞ்சம் ரொட்டிக்காகவும் கொத்துக்கறி வாங்கவும் எனது துக்காராமை விற்றேன் . ஆக்ரா சாலையைக் கடந்தபோது எனது செருப்புகளில் ஒன்று பழுதாகிப் போனது . சிறிய ஓடை ஒன்றில் நன்றாகக் குளித்தேன் . பார்த்த முதல் கதவைத் தட்டி யாசகம் கேட்டு அந்தக் கிராமத்தை விட்டு நீங்கினேன் . ஒரு மரத்தினடியில் அமர்ந்தேன் , பசியே இல்லை இப்படியொரு தாகத்தில் நான் தவித்ததே இல்லை . யாசகர்களை அறவே வெறுக்கும் துக்காராமின் பெயரை அறிந்திருந்த மாட்டுவண்டி மனிதனிடம் என் பெயரையும் இன்னபிறவற்றையும் சொன்னேன் ஆனால் அவன் நாங்கள் பண்ணைக்குப் போய்ச் சேர்ந்த பின்னர் குளிர்ந்த நீரைக் கொடுக்குமளவு பரிவு காட்டினான் . அப்புறம் ரோட்காவ் வந்தது அங்கே எனக்குக்

கானாங்கோழி

எனக்கு நாற்பத்தி இரண்டு   வயது   ஆகியிருந்தது. பொதிகை மலையில் செண்பகாதேவி அருவிக்குப் போகும் பாதையில் கானாங்கோழியைப் பார்த்தேன். காட்டுக்கோழி வகையினம் நான் பார்த்தபோது பறக்கவில்லை. என் நண்பர் அதைப் பெயர் சொல்லி அறிமுகப்படுத்திய நொடியில் ஓட அரம்பித்தது. பக்கவாட்டில் மரம் செடி சருகுகள் அடர்ந்த புதருக்குள் நூல் போல தன் வழியை நீட்டி ஊசியாய் போய் காட்டுக்குள் செருகிக் கொண்டது கானாங்கோழி. ஒளிவேகத்துக்குக் குறைவுதான் ஓடும்போது கானாங்கோழியின் உருவத்தைப் பார்த்தது போலத் தான் பார்த்தேன் ஒரு ஆப்பிரிக்க தடகள வீரனையும் 38 உறவுக்காரர்கள் குழந்தைகளை வளர்த்து   பாடுபார்த்து மறைந்த என் ஒல்லிக்குச்சியுடல் பெரியம்மாவையும் ஞாபகப்படுத்தியது அந்தக் கானாங்கோழி காட்டுக்கென்று பிரத்யேகமான ஆபரணங்கள் எதையும் இயற்கை அதற்குச் சூட்டவில்லை சரசரசரவென்று ஒலியாக மட்டுமே மாறி மறையும்போது அதற்கு உடலும் இல்லை என் மகள் எப்போது ஒரு கானாங்கோழியைப் பார்க்கப் போகிறாள்? ஊரிலும் நகரத்திலும் காணப்படும் கோழி இல்லை அதுவென்று அவளுக்கு நான் அந்தப் பறவையை